ShareChat
click to see wallet page
search
கிரகங்களில் முழு வலிமையானது கேது கிரகம் மட்டுமே..... எனென்றால் அது சன்னியாசி கிரகம். சன்னியாசி என்றால்.? சாமியாராக போவது அல்ல. ஒருவர் தான் வாழும் வாழ்வில் எது நடந்தாலும் பரவாயில்லை என நினைக்க வைக்கும் பக்குவஞானம் அடைந்தவர். கேது பகவான் நவக்கிரகங்களில் முதன்மையானவர்.. புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவே பலம் வாய்ந்தவர். குணத்தில்.... வஞ்சகம் சூழ்ச்சி தற்பெருமை சூதுவாது தெரியாத சாத்வீக குணங்களை தருகின்ற சாது கிரகம். சித்தர்களை குறிப்பதும் கேது தான். சித்தன் போக்கு சிவன் போக்கு என்று இருக்க வைப்பவரும் கேதுதான். எனவே.. கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். இவர்கள் இப்படி சாதுவாக இருப்பதினாலேயே,, ஒருசில குடும்பங்களில் பல பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.. கேதுவின் அருள்பார்வை அவ்வளவு எளிதில் ஒரு ஜாதகருக்கு கிடைக்காது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை. அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை. என்பதற்கேற்ப கேதுவின் அருள்பார்வை கிடைப்பது கடவுள் வரமளிப்பது போன்றதற்க்கு சமம். கேது தரும் தெளிந்த ஞானத்தையும், கேது கற்றுக் கொடுக்கும் படிப்பினையும் கேது கொடுக்க்கூடிய எதையும்...... எந்த கிரகத்தாலும் தட்டி பறிக்க முடியாது எனும் ரீதியில் ஜாதகரை சிந்திக்க வைக்கும். எனவே.. கேது பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில் ஜாதகர் பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் வாழ்க்கையில் உயரிய நிலைக்கு வந்தாலும் அடக்கத்துடனும் அமைதியுடனும் இருந்து.. ஆர்ப்பாட்டம் இல்லாமல் தன்னடக்கத்துடன் இருப்பார்கள். ஏனெனில்... கேது எனும் நிழல் கிரகத்திற்க்கு அதி தேவதையாக வருபவர்.... கடவுள்களின் முதல்வனான வெற்றியின் சொரூபமான பிள்ளை எம்பெருமானான அடக்கம் அமைதியின் முழு உருவமான கடவுள் கணபதி என்பதால். ஜாதகர்.... தனிமை விரும்பிகளாகவும் சாந்த சொரூபிகளாகவும் கடவுள் தன்னுடன் இருப்பதைப் போன்ற ஒரு உயரிய உணர்வுடன் இருப்பார்கள். ___________________________________________ உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628
🚹உளவியல் சிந்தனை - ShareChat