Jayakannan
ShareChat
click to see wallet page
@2687067730
2687067730
Jayakannan
@2687067730
I Love Sharechat :)
ஒருவர் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்து வாழ்வில் முன்னேற போகிறார் என்றால்... அதற்கு அறிகுறியாக அவர் .. பரபரப்பு மிகுந்த நகரத்தின் மையப் பகுதியில் வாழ்வார். அல்லது வெளியூர் வெளி மாநிலம் வெளிநாட்டில் இருப்பார். அதேபோல கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்து வாழ்வில் முன்னேற போகிறார் என்றால்.? அதற்கு அறிகுறியாக அவர்... பரபரப்பு இல்லாத நகரத்தை தாண்டிய ஒதுக்குப்புறத்தில் வாழ்வார். அல்லது வெளியூர் வெளிமாநிலம் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தனிமையில் இருப்பார். மேலும்.. பொதுவாக.. ராகு ஆதிக்கத்தில் பிறந்தவர் சிவ வழிபாடும். கேது ஆதிக்கத்தில் பிறந்தவர் விநாயகர் வழிபாடும் செய்வார்கள். மேலும்... ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவராக இருந்தாலும். கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவராக இருந்தாலும். இவர்கள் வசிப்பிடத்திற்க்கு அருகில் பாம்பு புற்று இருக்கும். இல்லாத பட்சத்தில்.. பாம்பு புற்று இருக்கும் இடத்தை நோக்கி தினந்தோறும் செல்வார்கள். அல்லது செல்லக்கூடிய வாய்ப்பு அல்லது சூழ்நிலை அமையும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628
✡️ஜோதிட பரிகாரங்கள் - ShareChat
ஜாதகம் இல்லாதவர்கள். ராசி நட்சத்திரம் கூட தெரியாதவர்கள். எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.. பொதுவாக... இறைவனை வணங்குவதற்கு ஜாதகமோ ராசி நட்சத்திரமோ தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஜாதகம் இருப்பவருக்கு ஆயிரம் கவலை. ஜாதகம் இல்லாதவருக்கு ஜாதகம் இல்லையே என்கிற ஒரே கவலை. அந்த வகையில்... பொதுவாக... இறைவனை வழிபடுவதற்கு தூய்மையான பக்தி மட்டும் இருந்தால் போதும். இருப்பினும் ... அவரவர்களுக்கு ஏற்பட்ட ... ஏற்பட்டுக் கொண்டிருக்கிற ... மன வேதனையினாலும் குழப்பத்தினாலும் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருக்கக்கூடிய நிலையினாளும். இப்படிப்பட்ட கேள்விகள் எழுகின்றன. அந்த நிலையில் இருக்கக்கூடிய அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில். பிரம்ம முகூர்த்தத்தில் படைத்த பிரம்மனை.... ஓம் பிரம்ம தேவனே போற்றி என பிரம்மனை போற்றி வணங்குதல். கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரிய பகவானை சூரிய உதயத்தில் வணங்குதல். மூன்றாம் பிறை சந்திரனை தரிசனம் செய்து வணங்குதல். பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல முடிந்தவர்கள் செல்லலாம்.. முடியாத பட்சத்தில் வீட்டு மொட்டை மாடியில் பௌர்ணமி சந்திரனுக்கு சர்க்கரைப் பொங்கல் படையல் வைத்து தாயாருடனும் மனைவியுடனும் சேர்ந்து வழிபடுவதால் பொன்னும் பொருளும் சேர்வதுடன் மன நிம்மதியும் கிடைக்கும். சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்று தியானம் மற்றும் வழிபாடு செய்தல். அனைத்திற்கும் மேலாக சனிக்கிழமை வரக்கூடிய சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ வழிபாடும். சனிக்கிழமை வரக்கூடிய பெருமாளுக்கு உரிய ஏகாதசி வழிபாடும். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் வரக்கூடிய சஷ்டி வழிபாடு. போன்றவற்றை செய்து வந்தால்... பிரார்த்தனைகள் நிறைவேறி நன்மைகள் நடந்து வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு விடையும் கிடைத்து... வழியும் பிறக்கும். எது எப்படி இருந்தாலும் எதைத்தொடர்ந்தாலும்.. அதற்கு முன்... தினசரி விநாயகர் வழிபாடு மிக மிக முக்கியம். ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
🚹உளவியல் சிந்தனை - a Ca a Ca - ShareChat
#✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
✡️ஜோதிட பரிகாரங்கள் - ShareChat
00:29
துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமியை.மாதம் ஒருமுறை சென்று வணங்க. சகல செல்வங்களும் கிடைக்கும். ஏனெனில்... சுவாதி என்பது ராகு நட்சத்திரம். ராகு வெளி மாநிலம் வெளிநாட்டை குறிக்கும். சுக்கிரன் சயன கோலத்தில் இருக்கும் அரங்கனை குறிக்கும். எனவே வெளிமாநிலத்தில் உள்ள பத்மநாப ஸ்வாமியை வழிபட. பொன்னும் பொருளும் தன சேர்க்கையும் ராகுவினாலும் சுக்கிரனாலும் இரட்டிப்பாக கிடைக்கும். இதுபோன்று ஒவ்வொரு ராசியில் இருக்கக்கூடிய அவரவர் நட்சத்திரத்திற்குறிய தெய்வத்தை வழிபட . திக்கு திசை தெரியாமல் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்களின் வாழ்வு மேன்மை அடையும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan call or WhatsApp 78100 22628 #astrology #tamil #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
🚹உளவியல் சிந்தனை - சுவாதி நட்சத்திரத்தில்  துலாம் Tns] பிறந்தவர்கள் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமியை மாதம் ஒருமுறை சென்று வணங்க சகல செல்வங்களும் கிடைக்கும் பெனில் சுவாதி என்பது ராகு நட்சத்திரம் ராகு வெளி மாநிலம் வெளிநாட்டை குறிக்கும் சுக்கிரன் சயன கோலத்தில் இருக்கும் அரங்கனை குறிக்கும் எனவே வெளிமாநிலத்தில் 6IT6TT பத்மறாப ஸ்வாமியை வழிபட பொன்னும் பொருளும் தன சேர்க்கையும் ராகுவினாலும் சுக்கிரனாலும் பிடை இரட்டிப்பாக ககும் ஜோதிடர் Jaya Kannan call or WhatsApp 78100 22628 சுவாதி நட்சத்திரத்தில்  துலாம் Tns] பிறந்தவர்கள் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமியை மாதம் ஒருமுறை சென்று வணங்க சகல செல்வங்களும் கிடைக்கும் பெனில் சுவாதி என்பது ராகு நட்சத்திரம் ராகு வெளி மாநிலம் வெளிநாட்டை குறிக்கும் சுக்கிரன் சயன கோலத்தில் இருக்கும் அரங்கனை குறிக்கும் எனவே வெளிமாநிலத்தில் 6IT6TT பத்மறாப ஸ்வாமியை வழிபட பொன்னும் பொருளும் தன சேர்க்கையும் ராகுவினாலும் சுக்கிரனாலும் பிடை இரட்டிப்பாக ககும் ஜோதிடர் Jaya Kannan call or WhatsApp 78100 22628 - ShareChat
கோச்சாரத்தில் சந்திரன் 11இல் இருப்பது போல... அதே கோச்சாரத்தில் சூரியன் 11 இல் இருக்கும்போதும் நற் பலன்களை வாரி வழங்குவார்... அதேபோல...... குறிப்பாக..... ஒரு நாளில் வரக்கூடிய லக்னம் என்பது .... உங்களுடைய லக்னத்திற்கு பதினொன்றாவது லக்னமாக வரும்போது... வெற்றி மேல் வெற்றி தரும். லாபம் மேல் லாபம் தரும். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்... நாளை... அதாவது 2026 சித்திரை மாதம் . மேஷ லக்னம்: அதிகாலை 05:09 AM முதல் 06:45 AM வரை. நீங்கள் மிதுன லக்னக்காரர்கள் எனில் நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி அடையும் நேரம் இது.. இதேபோன்று.... ரிஷப லக்னம்: காலை 06:45 AM முதல் 08:40 AM வரை. நீங்கள் கடக லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம். மிதுன லக்னம்: காலை 08:40 AM முதல் 10:55 AM வரை. நீங்கள் சிம்ம லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம். கடக லக்னம்: காலை 10:55 AM முதல் 01:15 PM வரை. நீங்கள் கன்னி லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம். சிம்ம லக்னம்: மதியம் 01:15 PM முதல் 03:32 PM வரை. நீங்கள் துலா லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம். கன்னி லக்னம்: மாலை 03:32 PM முதல் 05:49 PM வரை. நீங்கள் விருச்சிக லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம். துலாம் லக்னம்: மாலை 05:49 PM முதல் 08:08 PM வரை. நீங்கள் தனுஷ் லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம். விருச்சிக லக்னம்: இரவு 08:08 PM முதல் 10:27 PM வரை. நீங்கள் மகர லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம். தனுசு லக்னம்: இரவு 10:27 PM முதல் 12:31 AM (ஏப்ரல் 28) வரை. நீங்கள் கும்ப லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம். மகர லக்னம்: நள்ளிரவு 12:31 AM முதல் 02:13 AM (ஏப்ரல் 28) வரை. நீங்கள் மீன லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம். கும்ப லக்னம்: அதிகாலை 02:13 AM முதல் 03:40 AM (ஏப்ரல் 28) வரை. நீங்கள் மேஷ லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம். மீன லக்னம்: அதிகாலை 03:40 AM முதல் 05:05 AM (ஏப்ரல் 28) வரை. நீங்கள் ரிஷப லக்னக்காரர்கள் எனில் வெற்றி அடையும் நேரம். உங்கள் ஜாதக #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628
✡️ஜோதிட பரிகாரங்கள் - +74099 +74099 - ShareChat
வறுமை என்பது லட்சம் பாம்புகளின் நஞ்சை விட கொடியது.... ஒருவருக்கு பாம்பு கடித்தால்.. ரத்தம் உறைந்த நிலைக்குச் சென்று.. மூளை செயல் இழந்து.. இருதய துடிப்பை நிறுத்தி இறுதியில் மரணிக்க வைக்கும். ஆனால் வறுமை பீடித்தால்.. ரத்தம் உரையாது மூளை சீராக செயல்படும் இருதயத் துடிப்பும் நன்றாக இருக்கும் ஆனாலும் அவர். வாழ்ந்தே ஆக வேண்டிய நடமாடும் பிணமாக இருப்பார். அந்த அளவிற்கு வறுமை கொடியது. முடிந்தவரை ஒருவர் மற்றொருவரின் வறுமையை போக்க முயற்சிக்கும் பட்சத்தில்.... முப்பத்து முக்கோடி தேவர்களில் யாரேனும் ஒருவரின் கடைக்கண் பார்வையை பெறுவதற்கு தகுதியுடையவராகிறார். இதை நான் கூறவில்லை... கொடிது கொடிது வறுமை கொடிது அதைவிட கொடிது இளமையில் வறுமை கொடிது என முழங்கிய ஔவை பாட்டி முதல் வறுமை ஒரு சமூக கொடுமை அதை நீக்குவதே ஒவ்வொருவரின் ஆன்மீக கடமை ....என்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் வீர கர்ஜனை வழியாக.... நம்மிடைய வாழ்ந்த என்று சொல்வதை விட... இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம். என்று சொல்வதில் பெருமையும் புலகாங்கிதமும் கொஞ்சம் கர்வமும் அடைய வைத்த.... இந்திய தாயின் செல்ல குழந்தை. குழந்தை மனம் படைத்தவர். கள்ளம் கபடம் இல்லாதவர். ஒவ்வொரு இந்தியர்களிடமும் தந்தைக்கு நிகராக மரியாதையை பெற்றிருக்கக் கூடியவர். கடின உழைப்பாளி. அதைவிட படிப்பாளி. மாணவர்களின் நேசன். குழந்தைகளின் சினேகிதன். ஒவ்வொரு இந்தியர்களையும் தன் பிள்ளைகளாக நினைத்தவர். கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் இந்திய திருநாட்டிற்காக உழைத்துச்சென்ற உத்தமர். நம்மிடையே வாழ்ந்து உறக்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் அக்னி சிறகுகளால் அன்பாக எழுப்பிய மகான் அவர்கள் கூறியது. மேலும்...ஐயா அவர்களால் அருளப்பட்ட பொன்மொழியானது. மகனே, உனது வாழ்வில் துன்பத்தில் துவழும். யாராவது ஒருவரின் வாழ்வில். நீ ஏதேனும் ஒரு வகையில் மாற்றத்தை உருவாக்கி... அவரை துன்பத்திலிருந்து மீட்டெடுத்து. முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால்... நீ மனிதனாக பிறந்ததன் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும்.. மேலும்...கடவுள் எப்பொழுதும் உனக்கு அருள் செய்வார்... இதை இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்... பேரன்பும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய... முன்னாள் இந்திய குடியரசு தலைவர். டாக்டர். திரு APJ. அப்துல் கலாம் அவர்கள் அருளியது. #jayakannanastrologer #ShareThisPost #help #poorpeople #Godgrace #humanity #tamil #தமிழ் #ஔவைபாட்டி #SwamiVivekananda #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
🚹உளவியல் சிந்தனை - ShareChat
கிரகங்களில் முழு வலிமையானது கேது கிரகம் மட்டுமே..... எனென்றால் அது சன்னியாசி கிரகம். சன்னியாசி என்றால்.? சாமியாராக போவது அல்ல. ஒருவர் தான் வாழும் வாழ்வில் எது நடந்தாலும் பரவாயில்லை என நினைக்க வைக்கும் பக்குவஞானம் அடைந்தவர். கேது பகவான் நவக்கிரகங்களில் முதன்மையானவர்.. புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவே பலம் வாய்ந்தவர். குணத்தில்.... வஞ்சகம் சூழ்ச்சி தற்பெருமை சூதுவாது தெரியாத சாத்வீக குணங்களை தருகின்ற சாது கிரகம். சித்தர்களை குறிப்பதும் கேது தான். சித்தன் போக்கு சிவன் போக்கு என்று இருக்க வைப்பவரும் கேதுதான். எனவே.. கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். இவர்கள் இப்படி சாதுவாக இருப்பதினாலேயே,, ஒருசில குடும்பங்களில் பல பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.. கேதுவின் அருள்பார்வை அவ்வளவு எளிதில் ஒரு ஜாதகருக்கு கிடைக்காது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை. அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை. என்பதற்கேற்ப கேதுவின் அருள்பார்வை கிடைப்பது கடவுள் வரமளிப்பது போன்றதற்க்கு சமம். கேது தரும் தெளிந்த ஞானத்தையும், கேது கற்றுக் கொடுக்கும் படிப்பினையும் கேது கொடுக்க்கூடிய எதையும்...... எந்த கிரகத்தாலும் தட்டி பறிக்க முடியாது எனும் ரீதியில் ஜாதகரை சிந்திக்க வைக்கும். எனவே.. கேது பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில் ஜாதகர் பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் வாழ்க்கையில் உயரிய நிலைக்கு வந்தாலும் அடக்கத்துடனும் அமைதியுடனும் இருந்து.. ஆர்ப்பாட்டம் இல்லாமல் தன்னடக்கத்துடன் இருப்பார்கள். ஏனெனில்... கேது எனும் நிழல் கிரகத்திற்க்கு அதி தேவதையாக வருபவர்.... கடவுள்களின் முதல்வனான வெற்றியின் சொரூபமான பிள்ளை எம்பெருமானான அடக்கம் அமைதியின் முழு உருவமான கடவுள் கணபதி என்பதால். ஜாதகர்.... தனிமை விரும்பிகளாகவும் சாந்த சொரூபிகளாகவும் கடவுள் தன்னுடன் இருப்பதைப் போன்ற ஒரு உயரிய உணர்வுடன் இருப்பார்கள். ___________________________________________ உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628
🚹உளவியல் சிந்தனை - ShareChat
P #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை arampurusha
✡️ஜோதிட பரிகாரங்கள் - ShareChat
00:14
புதன் கேது இணைவு பலன் என்ன என்று எளிதாக கேட்டு விடலாம்.. ஆனால் அதற்குள் ஒளிந்திருக்கக் கூடிய ஆழமான சூட்சமம் என்பது வேறு.. ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால்.? புதன் அறிவு காரகன் கேது ஞானகாரகன். புதன் ஜீவாத்மாவை போல நிரந்தரம் இல்லாதது. கேது பரமாத்மாவை போல நிரந்தரமானது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்... கேதுவின் கட்டுப்பாட்டிற்குள் தான் புதன் வர வண்டும். புதனின் கட்டுப்பாட்டிற்குள் கேது வர மாட்டார். அதாவது.. நிரந்தரமான ஒன்று நிரந்தரம் இல்லாத ஒன்றை எவ்வாறு பெருமைப்படுத்துகிறது எவ்வாறு சிறுமைப்படுத்துகிறது என்பதே புதன்கேது இனைவின் கேள்வியாகும். அந்த வகையில்..... புதன் கேது உடன் இணைந்து புதனை தாண்டிய கேதுவால் புதன் சூட்சம வலுவில் இருக்கும் போது புதனின் காரகத்துவமான கல்விஅறிவை பெருக்குவார். புத்திசாலித்தனத்தை பெருக்குவார். புதன் கேது உடன் இணைந்து புதனை நோக்கி வருகின்ற கேதுவால் அதாவது பதனை கிரகணப்படுத்தும் நோக்கத்தில் வருகின்ற கேதுவால்.கல்வி அறிவு புத்திசாலித்தனத்தை தரவிடாமல் கேது சுருக்குவார். குறிப்பாக... இந்த இணைவு எந்த பாவகத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை பொருத்தும். சுபத்துவ பாபத்துவ அடிப்படையை பொருத்தும்.. மாறுபடும். அதாவது புதன் கேது இணைவு ஓடு கிரகணத்திலிருந்து... கூடவே நல்ல ஸ்தானங்களில் அமர்ந்திருந்து.. சுபத்துவமும் அடைந்திருந்தால் அளப்பரிய கல்வியை தரும் கல்விக்கு ஏற்ற பணியை தரும் பணிக்கு ஏற்ற மரியாதையையும் புகழையும் தரும். சுருக்கமாக.. கல்வி கற்கும் காலத்திலும் சிறந்த மாணவர் என்கிற புகழ் பெறுவார்கள். கல்வி கற்று பணியில் அமர்ந்த போதிலும் .. இவர்களுடைய புத்திசாலித்தனத்தை பற்றி சிலாகித்து பேசி மகிழ்ந்து. இவர்களுடைய புத்திசாலித்தனத்தினால் கிடைக்கக்கூடிய லாபத்தின் அடிப்படையில் அதற்குரிய மரியாதையையும் தந்து புகழவும் செய்வார்கள். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 7810022628
🚹உளவியல் சிந்தனை - Creativevibes Uma @ Creativevibes Uma @ - ShareChat
சம்சாரம் போனால் சகலமும் போச்சு... இங்கே 'சம்சாரம்' என்பது நாம் வாழும் வாழ்க்கையின் அஸ்திவாரமாகவும் அச்சாணியாகவும் விளங்கக்கூடிய மனைவியை குறிக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் இல்லற வாழ்வு சிறப்பாக அமைந்தால் மட்டுமே மற்ற எல்லா பாக்கியங்களும் யோகங்களும் முழுமை பெறுகின்றன.. அந்த வகையில்... ஜோதிடத்தில் மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன். சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் பலமாக இருந்தால் மட்டுமே 'மகாலட்சுமி கடாட்சம்' கிட்டும். சுக்கிரன் பலம் பெற்று இருக்கக்கூடிய ஜாதகத்தில் மனைவி மகிழ்ச்சியாக இருப்பார். செல்வமும் சேரும். மேலும்... ஏழாம் பாவகம் களத்திர ஸ்தானம். ஜாதகத்தில் 7-ம் இடம் என்பது வாழ்க்கைத்துணையை மட்டுமல்ல,.. நாம் அன்றாடம் சந்திக்கும் மக்கள் ,மற்றும் கூட்டுத் தொழிலையும் , செய்கின்ற வேலையையும், இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர்களையும் குறிக்கும். ஒருவருக்கு 7 ஆம் பாவகம் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில்.. அது , அவரது சமூக உறவுகளில் நல்லிணக்கத்தையும் பாதிக்கும். மேலும் பொருளாதார கஷ்ட நஷ்டங்களையும் ,இன்ப துன்பங்களையும் இது போன்ற மனதில் உள்ள பாரத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர்களையும் நல்ல முறையில் தர மறுக்கும். மேலும் சந்திரன் என்பது தாயை குறிக்க கூடிய கிரகமாக இருந்தாலும்... பொதுவாக பெண் கிரகம் என்பதாலும்... தாய்க்குப்பின் தாரம் என்பதாலும்... ஜாதகத்தில் சந்திரனும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்." என்கிற சித்தர் பெருமான்களின் கூற்றின் அடிப்படையில்... ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது என்பது, அவனது மனதை அவள் அமைதிப்படுத்த முடியும். பொதுவாக வீட்டில் அமைதி இல்லையெனில், சமுதாயத்திடமும்,தொழிலிலும் கவனம் சிதறி சகல விஷயங்களிலும் குழப்பமும் கலக்கமும் அதன் மூலம் நஷ்டமும் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படும். எனவேதான்... ஒரு ஜாதகத்தில் பெண் கிரகங்களான... சுக்கிரனும் சந்திரனும் மேலும் களத்திர பாவகமான 7 ஆம் இடமும் மிக மிக முக்கியம் என்பதை... பெரியவர்கள் சம்சாரம் போனால் சகலமும் போச்சு என்று சூசகமாகவும் சூட்சமமாகவும் கூறியுள்ளார்கள். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
✡️ஜோதிட பரிகாரங்கள் - ShareChat