ShareChat
click to see wallet page
search
வறுமை என்பது லட்சம் பாம்புகளின் நஞ்சை விட கொடியது.... ஒருவருக்கு பாம்பு கடித்தால்.. ரத்தம் உறைந்த நிலைக்குச் சென்று.. மூளை செயல் இழந்து.. இருதய துடிப்பை நிறுத்தி இறுதியில் மரணிக்க வைக்கும். ஆனால் வறுமை பீடித்தால்.. ரத்தம் உரையாது மூளை சீராக செயல்படும் இருதயத் துடிப்பும் நன்றாக இருக்கும் ஆனாலும் அவர். வாழ்ந்தே ஆக வேண்டிய நடமாடும் பிணமாக இருப்பார். அந்த அளவிற்கு வறுமை கொடியது. முடிந்தவரை ஒருவர் மற்றொருவரின் வறுமையை போக்க முயற்சிக்கும் பட்சத்தில்.... முப்பத்து முக்கோடி தேவர்களில் யாரேனும் ஒருவரின் கடைக்கண் பார்வையை பெறுவதற்கு தகுதியுடையவராகிறார். இதை நான் கூறவில்லை... கொடிது கொடிது வறுமை கொடிது அதைவிட கொடிது இளமையில் வறுமை கொடிது என முழங்கிய ஔவை பாட்டி முதல் வறுமை ஒரு சமூக கொடுமை அதை நீக்குவதே ஒவ்வொருவரின் ஆன்மீக கடமை ....என்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் வீர கர்ஜனை வழியாக.... நம்மிடைய வாழ்ந்த என்று சொல்வதை விட... இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம். என்று சொல்வதில் பெருமையும் புலகாங்கிதமும் கொஞ்சம் கர்வமும் அடைய வைத்த.... இந்திய தாயின் செல்ல குழந்தை. குழந்தை மனம் படைத்தவர். கள்ளம் கபடம் இல்லாதவர். ஒவ்வொரு இந்தியர்களிடமும் தந்தைக்கு நிகராக மரியாதையை பெற்றிருக்கக் கூடியவர். கடின உழைப்பாளி. அதைவிட படிப்பாளி. மாணவர்களின் நேசன். குழந்தைகளின் சினேகிதன். ஒவ்வொரு இந்தியர்களையும் தன் பிள்ளைகளாக நினைத்தவர். கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் இந்திய திருநாட்டிற்காக உழைத்துச்சென்ற உத்தமர். நம்மிடையே வாழ்ந்து உறக்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் அக்னி சிறகுகளால் அன்பாக எழுப்பிய மகான் அவர்கள் கூறியது. மேலும்...ஐயா அவர்களால் அருளப்பட்ட பொன்மொழியானது. மகனே, உனது வாழ்வில் துன்பத்தில் துவழும். யாராவது ஒருவரின் வாழ்வில். நீ ஏதேனும் ஒரு வகையில் மாற்றத்தை உருவாக்கி... அவரை துன்பத்திலிருந்து மீட்டெடுத்து. முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால்... நீ மனிதனாக பிறந்ததன் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும்.. மேலும்...கடவுள் எப்பொழுதும் உனக்கு அருள் செய்வார்... இதை இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்... பேரன்பும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய... முன்னாள் இந்திய குடியரசு தலைவர். டாக்டர். திரு APJ. அப்துல் கலாம் அவர்கள் அருளியது. #jayakannanastrologer #ShareThisPost #help #poorpeople #Godgrace #humanity #tamil #தமிழ் #ஔவைபாட்டி #SwamiVivekananda #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
🚹உளவியல் சிந்தனை - ShareChat