சம்சாரம் போனால் சகலமும் போச்சு...
இங்கே 'சம்சாரம்' என்பது நாம் வாழும் வாழ்க்கையின் அஸ்திவாரமாகவும் அச்சாணியாகவும் விளங்கக்கூடிய மனைவியை குறிக்கும்.
ஒருவருடைய ஜாதகத்தில் இல்லற வாழ்வு சிறப்பாக அமைந்தால் மட்டுமே மற்ற எல்லா பாக்கியங்களும் யோகங்களும் முழுமை பெறுகின்றன..
அந்த வகையில்...
ஜோதிடத்தில் மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன்.
சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் பலமாக இருந்தால் மட்டுமே 'மகாலட்சுமி கடாட்சம்' கிட்டும்.
சுக்கிரன் பலம் பெற்று இருக்கக்கூடிய ஜாதகத்தில் மனைவி மகிழ்ச்சியாக இருப்பார்.
செல்வமும் சேரும்.
மேலும்...
ஏழாம் பாவகம் களத்திர ஸ்தானம்.
ஜாதகத்தில் 7-ம் இடம் என்பது வாழ்க்கைத்துணையை மட்டுமல்ல,..
நாம் அன்றாடம் சந்திக்கும் மக்கள் ,மற்றும் கூட்டுத் தொழிலையும் , செய்கின்ற வேலையையும், இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர்களையும் குறிக்கும்.
ஒருவருக்கு 7 ஆம் பாவகம் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில்..
அது , அவரது சமூக உறவுகளில் நல்லிணக்கத்தையும் பாதிக்கும்.
மேலும் பொருளாதார கஷ்ட நஷ்டங்களையும் ,இன்ப துன்பங்களையும் இது போன்ற மனதில் உள்ள பாரத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர்களையும் நல்ல முறையில் தர மறுக்கும்.
மேலும் சந்திரன் என்பது தாயை குறிக்க கூடிய கிரகமாக இருந்தாலும்...
பொதுவாக பெண் கிரகம் என்பதாலும்...
தாய்க்குப்பின் தாரம் என்பதாலும்...
ஜாதகத்தில் சந்திரனும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்."
என்கிற சித்தர் பெருமான்களின் கூற்றின் அடிப்படையில்...
ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது என்பது,
அவனது மனதை அவள் அமைதிப்படுத்த முடியும்.
பொதுவாக
வீட்டில் அமைதி இல்லையெனில், சமுதாயத்திடமும்,தொழிலிலும் கவனம் சிதறி சகல விஷயங்களிலும் குழப்பமும் கலக்கமும் அதன் மூலம் நஷ்டமும் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படும்.
எனவேதான்...
ஒரு ஜாதகத்தில் பெண் கிரகங்களான...
சுக்கிரனும் சந்திரனும் மேலும் களத்திர பாவகமான 7 ஆம் இடமும் மிக மிக முக்கியம் என்பதை... பெரியவர்கள் சம்சாரம் போனால் சகலமும் போச்சு என்று
சூசகமாகவும் சூட்சமமாகவும் கூறியுள்ளார்கள்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை


