ShareChat
click to see wallet page
search
தஞ்சாவூர் சென்றாள் பெரிய கோயில் மற்றும் பார்த்துவிட்டு வருவதை விட மற்றொரு சக்தி வாய்ந்த அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலையும் காண வேண்டும் தஞ்சை மேல ராஜா வீதி மற்றும் வடக்கு ராஜவீதி சந்திக்கும் மூலையில் அமைந்துள்ளதால் பக்தர்கள் அன்புடன் மூலை அனுமார் என்று அழைக்கப்படுகிறார் இங்கு ஆஞ்சநேயர் சிறு குழந்தையாக தனது தாய் அஞ்சனைதேவியின் மடியில் அமர்ந்திருக்கும் அபூர்வமான சிலையை காணலாம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்ய எண்ணம் ஈடேறும் பாம்பு ஒன்று நிலவை விழுங்க முயல்வது போன்ற ஒரு சிற்பம் உள்ளது இதை தரிசித்தால் ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையான ஐதீகம் கோயிலின் மேற்கூறையில் 12 ராசிகளின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன அவர் அவர் ராசிக்கு நேராக நின்று மனதை உருண்டை படுத்தி மனம் உருகி வேண்டினால் தோஷங்கள் பாதிப்புகள் விலகி வாழ்வில் நிம்மதி மகிழ்ச்சி உண்டாகும் தஞ்சை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்மன் இவரது இஷ்ட தெய்வமாக வழிபட்டதால் போர்க்களத்தில் இவருக்கு துணையாக அனுமன் நின்றதால் பிரதாப வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் பெற்றார் திருமண தடை படிப்பில் மன்றம் உள்ளவர்கள் மூல நட்சத்திரம் அன்று இங்கே வந்து வழிபடுவது சிறப்பு ஆகும் 18 விளக்குகள் ஏற்றி 18 முறை வலம் வந்தால் தீராத துயரங்களும் தீரும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - மூலைஆஞ்சநேயர் என்கிறபிரதாபலீர ஆஞ்சநேயர் மூலைஆஞ்சநேயர் என்கிறபிரதாபலீர ஆஞ்சநேயர் - ShareChat