திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி திருமேனியின் ரகசியம்
திருவாரூரில் பிறக்க முக்கி என்பது ஆன்றோர் வாக்கு சைவசமயத்தினருக்கு கோவில் என்று குறிப்பிட்டால்
அது சிதம்பரம் நடராஜர் கோயிலை குறிக்கும் அதுபோல பெரிய கோயில் பூங்கோயில் திரு மூலட்டானம் என்று குறிப்பிட்டார் அது திருவாரூர் தியாகராஜ சாமி கோயிலைக் குறிக்கும் திரு மூலட்டானம் என்றால் இறைவன் உறையும் இடம் என்று பொருள்
திருமால் ஈசனை நோக்கி தவம் செய்ய அகம் மகிழ்ந்த சிவன் உமையவளுடன் தோன்றியபோது திருமால் சிவனை மட்டும் வணங்கினார் கோபமடைந்த உமையவள் சாபம் விட கலங்கி நின்ற திருமால் மீண்டும் ஈசனே வழிபட்டு வந்தார் மீண்டும் உமையவளுடன் ஈசன் தோன்றியபோது உரிய முறையில் திருமால் வழங்க மகிழ்ந்த உமையவள் சாபத்துக்கான விடை தந்தால் அது கண்டு மகிழ்ந்த திருமால் சோமாஸ்கந்த் திருக்கோளத்தில் எழுந்தருள வேண்டி தன் நெஞ்சு கோயிலில் நிறுத்திக் கொண்டால் திருமாலின் உச்சிவாசித்தால் மூச்சுக்காற்றை முன்நிறுத்தாலும் வெளிவிடுதலும் பெருமானோம் அசைந்தபடி ஆனந்தம் கொண்டு திருமாலுக்கு திருவருள் தந்தார் இதுவே அஜபா நடனம் ஆகும் இது ஒரு மந்திரத்தின் பெயர் ஜெபா என்றால் ஜெபித்தல் அஜபா என்றால் ஜெபிக்காத இருத்தல் என்று பொருள் அஜபா நடனம் ஆடும் போது மந்திரங்கள் வாய்விட்டு உச்சரிக்கப்படுவதில்லை
தியாகராஜர் கோவிலின் அர்த்த மண்டபத்தில் சிம்மாசனத்தில் அமைந்தபடி தியாகராஜர் காட்சியளிக்கிறார் சிதம்பர ரகசியம் என்பது போல் திருவாருர் ரகசியம் என்பது
தியாகராஜன் சுவாமியின் திருமேனியாகும்
இதை சோம குல ரகசியம் என்பார்கள் தியாகராஜரின் திரு மார்பை ஸ்ரீ சக்கரம் அலங்கரிப்பதால் அவரது முழு திருமேனியை யாராலும் எப்போதும் காண முடியாது எனவே நம்மால் அவரது திருமுகத்தையும் அருகே உள்ள தேவியின் திருமுகத்தையும் மட்டுமே காண முடியும் மற்ற அங்கங்கள் அனைத்தும் ஆபரணங்களால் மூடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன அபிஷேகத்தின் போது கழுத்தின் ஒரு பகுதியையும் மார்கழி திருவாதிரையில் இடது பாதத்தையும் பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும்
தியாகராஜ பெருமாள் திருமுடியை தலைசீரா என்னும் ஒருவகை அணி அலங்கரிக்கின்றது சதுர வடிவிலான இந்த அணிகலன் உயர்ந்த வகை ஜாதி கற்களால் பதிக்கப்பெற்றது சூளாமணி என்ற ஒரு பெயரும் இந்த அணிகலனுக்கு உண்டு இந்த சூளாமணி அணிகலனை திருநாவுக்கரசர் நமது தேவார பதிப்பகத்தில் குறிப்பிட்டுள்ளார்
எந்த ஒரு சிவதலத்திற்கு இல்லாத தனி சிறப்பு திருவாரூர் தளத்திற்கு உண்டு கோயில் குளம் உள்ளது தேர் திருவிழா ஆகியவற்றை பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பை பெற்றுள்ள தலம் இது ஒன்றே ஆகும் திருவாரூர் கோயில் சிதம்பரம் கோயிலை விட பழமையானது என்பது ஆகும் #ஆன்மீகம்
சோக நோய் சித்தபிரம்மை நீக்கும் கஞ்சனூர் திருக்கோயில்
தஞ்சை மண்ணில் வடகரையில் அமைந்துள்ள அற்புத தலம் கஞ்சனூர்
கிரகங்களில் சுகபோக வாழ்வு தரும் சுக்கிர பகவானுக்குரிய இந்த தலம் ஆகும்
ஆன்மீக ரீதியாகவும் மருத்துவர் ரீதியாகவும் பல அதிசயங்களை கொண்டதாகும்
அக்கினி பகவானுக்கு ஏற்பட்ட சோகை நோயை பரசுரர் முனிவருக்கு ஏற்பட்ட சித்தபிரம்மை நோயை நீக்கி அருளியவர் இத்தல அக்னிஸ்வரர் இன்றும் உடல்பணி மனநல பாதிப்புகள் மற்றும் தீராத நோய்களால் அவதிப்படுபவர் இங்கு வந்து வழிபட்டால் நலம் பெறுவதாக நம்பிக்கை
சுக்கிர வழிபட்ட தலம் என்பதால் ஜாதகத்தில் சுக்கிர தோஷம் உள்ளவர்கள்
செல்வம் பெருகவும் கலைகளில் சிறந்து விளங்கவும் திருமணத்தடை நீங்கவும் இங்கு வந்து அகிலேஸ்வரனை வழிபட அனைத்தும் நன்மைகள் முடியும்
பிரம்மனுக்கு திருமண கோலத்தை காட்டிய தலம் எனவேதான் இங்கே அன்னைகற்பகாம்பாள் ஈசனின் வலது புறம் இருந்து அருள் புரிகிறாள்
இங்குள்ள நடராஜர் முக்திதாண்டவ மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்
மூலத் திருமேனியிலேயே சிவகாமியுடன் திருவாசிசூழக் காட்சி தருவது தனி சிறப்பு
உடல் சோர்வு மற்றும் சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மன அமைதி இழந்தவர்கள் மற்றும் சித்த பிரம்மை போன்ற மன ரீதியான பாதிப்பு உடையவர்கள் சிக்கல்கள் உடையவர்கள் சுக்கிர திசை நடப்பவர்கள் மற்றும் கலைத்துறை விற்பவர்கள் இங்கு வந்து வழிபட அனைத்திலும் பாதிப்பு நீங்கி முன்னேற்றம் காணப்படும்
கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண்ணாரக் கண்டு வியந்தேன் என்று பாடிய அப்பர் பெருமான் பாடிய தளம் ஈஸ்வரனை வழிபட்டு அருளை பெறுவோம் #ஆன்மீகம்
மதுரைக்கு அருகே உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமோகூர்
அசுரர்களின் கொடுமை தாங்காத தேவர்கள் தங்களை காக்கும்படி முறையிட பாற்கடலுக்கு சென்றனர் அப்போது பெருமாள் யோகநித்திரையில் இருந்தார் அவரை எழுப்ப அஞ்சிய தேவர்கள் ஸ்ரீதேவி பூதேவி அவர்களிடம் சென்று முறையிட்டனர் தேவியர் பெருமாளிடம் பரிந்துரை செய்ய முயன்ற போது அவர் உண்மையில் தூங்கவில்லை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல கள்ள நித்திரையில் இருந்தார்
தன் குழந்தைகள் கஷ்டப்படும் போது அவர்கள் தாயார் மூலமாக தன்னிடம் வந்தால் அந்த பரிந்துரைக்கு அதிக பலன் உண்டு என்பதை காட்டவே பெருமாள் அப்படி நடித்தார் இன்றும் இத்தலத்தில் தேவர் இருவரும் சுவாமி நித்திரையை கலைக்காமல் மனதிற்குள் வேண்டிக்கொள்ளும் அந்த பேரருள் கோலத்தை காணலாம்
இங்குள்ள பெருமாளுக்கு ஆப்தன் என்று பெயர் ஆப்தன் என்றால் நண்பன் என்று பொருள் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு உற்ற நண்பனாக இருந்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வாழ்வின் இறுதி காலம் வரை வழித் துணையாக வருவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது
காளமேகமாய் பொழியும் அருள் கார்மேகம் எப்படி தன்னுல் நீரை சேமித்து வைத்து தாகம் தீர்க்கும் மழையாய் பொழிகிறதோ அதேபோல இத்தல இறைவனும் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு மழையாய் பொழிவதால் காலமேகப்பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்
இங்கிருக்கும் சக்கரத்தாழ்வார் 16 கைகளில் ஆயுதங்களுடன் அக்கினி கிரீடம் சூடி பக்தர்களுக்கு உதவ இதோ ஓடி வருகிறேன் என்று ஒரு காலை முன் வைத்த நிலையில் காட்சியளிக்கிறார் இவரின் திருமேனியில் 154 மந்திரங்களும் 48 அதிதேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன இது உலக புகழ்பெற்ற அதிசயம்
முன்னோர்களுக்கு முக்தி கிடைக்க மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர் தீராத வினைகள் தீரவும் எடுத்த காரியம் வெற்றி பெறவும் சக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பாகும்
திருமோகூர் ஆப்தனை தரிசித்து நிம்மதியாக வாழ்வோம்
அருள்மிகு காளமேகப்பெருமாள்
திருக்கோயில்
திருமோகூர்
மதுரை #ஆன்மீகம்








![செய்தி - நீதிபதிக்குசலாம் குமுதம் KUMUDAM| =8)- இதுஎப்படிஇருக்கு அதிர்ச்சி தீர்ப்பு குழந்தையின் மார்பகங்களை 66] 6olnouri தொடுவதோ, ஆடைகளை கிழிப்பதோ கிடையாது ' பலாத்கார (Wda நீதிபதிக்குசலாம் குமுதம் KUMUDAM| =8)- இதுஎப்படிஇருக்கு அதிர்ச்சி தீர்ப்பு குழந்தையின் மார்பகங்களை 66] 6olnouri தொடுவதோ, ஆடைகளை கிழிப்பதோ கிடையாது ' பலாத்கார (Wda - ShareChat செய்தி - நீதிபதிக்குசலாம் குமுதம் KUMUDAM| =8)- இதுஎப்படிஇருக்கு அதிர்ச்சி தீர்ப்பு குழந்தையின் மார்பகங்களை 66] 6olnouri தொடுவதோ, ஆடைகளை கிழிப்பதோ கிடையாது ' பலாத்கார (Wda நீதிபதிக்குசலாம் குமுதம் KUMUDAM| =8)- இதுஎப்படிஇருக்கு அதிர்ச்சி தீர்ப்பு குழந்தையின் மார்பகங்களை 66] 6olnouri தொடுவதோ, ஆடைகளை கிழிப்பதோ கிடையாது ' பலாத்கார (Wda - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_20032_84777aa_1771347018605_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=605_sc.jpg)


