தனக்குப்தன் என்ற வணிகனின் மனைவி ரத்னாவதி கருவுற்றிருந்தால் தனது பிரசவத்திற்காக தாயின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் ஆனால் காவிரியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கினால் பத்மாவின் தாயார் ஆற்றை கடந்து வர முடியவில்லை
தனிமையில் பிரசவ வழியா துடித்த ரத்னாவதி ஈசனிடம் முறையிட்டால் பக்தியின் பெயர் துடைக்க ஈசன் ரத்னாவதியின் தாய் வடிவிலேயே நேரில் தோன்றி அவளுக்கு பிரசவம் பார்த்து ஒரு வாரம் வரை உடனிருந்து கவனித்துக் கொண்டார் வெள்ளம் வடிந்த பிறகு நிஜத்தாய் வர அங்கு இரண்டு தாய்கள் இருப்பதை கண்டு வியந்தனர் அப்போது சிவன் தனது சுய ரூபத்தைக் காட்டி அருள் புரிந்தார் தாயும் ஆனவர் என்பதால் இத்தால இறைவனுக்கு தாயுமானவர் என்ற பெயர் ஏற்பட்டது
இத்தலம் மகப்பேறு மற்றும் சுகப்பிரசவத்திற்கு மிகவும் விசேஷமானது கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் துர்க்கைக்கு 21 கொழுக்கட்டைகள் 21 அப்பம் படைத்து ஒரு துணியில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் கட்டி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர் இதனால் சுகப்பிரசவம் அமையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை
சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாளில் ரத்னாவதிக்கு சிவன் பிரசவம் பார்க்கும் வைபவம் கோலாகலமாக நடக்கும் அன்று பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்து தைலமே பிரசாதமாக வாங்கப்படுகிறது இதனை அருந்தும் பெண்களுக்கு பிரசவம் எளிதாகும் என்பது ஐதீகம்
மட்டுவார் குடல் என்பதற்கு வாசனை உடைய கூந்தலை உடையவள் என்று பொருள் இத்தாலத்தில் அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது
திருச்சி மலைக்கோட்டை சென்று தாயாக வந்து அருளும் தயாபரணி தரிசித்து வாழ்வில் எல்லா பலன்களையும் ஈசன் அருளால் அடையலாம் #ஆன்மீகம்
25 தலைகள் 50 கைகள்
மகாசதாசிவ மூர்த்தியின் அறிய தரிசனம் அதன் மகத்துவமும்
சிவபெருமான் என்றாலே நம் நினைவுக்கு வருவது நெற்றி கண்ணும் கையில் இருக்கும் திரிசூலம் ஆகும் ஆனால் சிவபெருமானின் வடிவங்கள் எண்ணற்றவை அதில் மிக உயரிய மிக பிரமாண்டமான ஒரு வடிவம் உண்டு என்றால் மகா சவாசிவ மூர்த்தி வடிவமே சிவபெருமானின் 64 உருவங்களில் மிகவும் சக்தி வாய்ந்தாக கருதப்படுகிறது மகாசவாசிவமூர்த்தி
பொதுவாக சிவனுக்கு5முகங்கள் ஆனால் இந்த மகா சதாசிவ மூர்த்தியே 25 முகங்களையும் 50 திருக்கரங்களையும் கொண்டவர் இவர் கைலாயத்தின் உயர்ந்த நிலையில் வீற்றிருப்பவர் புராணங்களின்படி மகா கைலாயத்தில் அமர்ந்து கொண்டு அதில் உலகத்தையும் அனைத்து உயிர்களையும் காற்று அருள் புரிகிறார்
சிவபெருமானின் ஐந்து முக்கிய முகங்களின் விரிவான வடிவங்களாகும் ஒவ்வொரு முகமும் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தையும் சக்தியையும் குறிக்கிறது இந்த 50 கரங்களிலும் மழு சூலம் வால் கேடயம் அம்பு வில் அங்குசம் என பல்வேறு ஆயுதங்களையும் அபயவரத முத்திரைகளையும் தாங்கி நிற்கிறார்
படைத்தல் காய்ச்சல் அழித்தல் மறைத்தல் அருளல் என ஐந்து தொழில்களையும் செய்பவர் என்றாலும் இவரை புராணங்கள் அனுக்கிரக மூர்த்தி என்று போட்டிருக்கின்றனர் இவர் அனைத்து உயிர்களிடத்தும் கருணைக் கொண்டு அருள் பாலிப்பவர்
கைலாயத்தில் மகாசதாசிவமூர்த்தி தனித்திருப்பதில்லை எப்போதும் 25 மகேஸ்வரமூர்த்திகள் இருப்பார்கள் அது மட்டுமல்லாமல் அஷ்டருத்ரர்கள் சித்தர்கள் முனிவர்கள் மற்றும் தேவர்கள் என அனைவரும் இவரை சூழ்ந்து நின்று இடைவிடாமல் வணங்கி கொண்டிருப்பார்கள் சிவபெருமான் தனது பரப்பிரம்மா நிலையிலிருந்து சதாசிவ நிலைக்கு வந்த பின் அங்கிருந்து மற்ற உருவங்களை எடுக்கிறார் என்பது சைவ சித்தாந்தத்தின் சாரமாகும் இவரை அனைத்து வித்தைகளுக்கும் கலைகளுக்கும் மூல ஆதாரமாக விளங்குகிறார் இத்தகைய பிரமாண்டமான உருவத்தை நாம் சிலைகளில் வடிப்பது என்பது மிகவும் கடினம் எனவே பல கோயில்களில் இவரை கருவறை சிலையாக காண்பது மிக அரிது தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சுரகரேஸ்வரர் கோயில் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த கோயிலின் கருவறையில் இவரை பார்க்க முடியாது என்றாலும் கோயில் விமானத்தில் மிக நுணுக்கமான சுதேசிப்பமாக மகா சதாசிவ மூர்த்தியை சசிக்கலாம் பல்லவர் காலகட்டிடகலைக்கு சான்றாக விளங்கும் இக்கோயிலில் சிவபெருமானின் இந்த அரிய கோலத்தை நாம் கண்டு மகிழலாம்
இது தவிர பல பழமையான சிவாலயங்களின் விமானங்களிலும் கோபுரங்களிலும் மகா சதாசிவர் மூர்த்தியின் சிற்பங்கள் அமையப்பெற்றிருக்கும் உற்று கவனித்தால் இந்த அறிவு உருவத்தை நாம் அடையாளம் காண முடியும் உடலை வாட்டும் கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் மகா சதாசிவ மூர்த்தி மனதார நினைத்து அவருக்கு கரும்பு சாரார் அபிஷேகம் செய்த வேண்டிக் கொண்டால் காய்ச்சல் நீங்கி உடல் ஆரோக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம்
மகா சராசிவமூர்த்தியை வழிபடுவோம் ஐஸ்வர்யம் பெறுவோம் #ஆன்மீகம்
திருச்சி அருகே கொள்ளிடம் கரையில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற திருத்தலம் அன்பில் இங்கு எழுந்து உள்ளார்
அருள்மிகு சத்திய வாகீஸ்வரர் மற்றும் செவி சாய்த்தவிநாயகர் இக்கோயிலின் மிக முக்கியமான அம்சம் திருஞானசம்பந்தர் கொள்ளிடத்தில் அக்கறையிலிருந்து இத்தளத்தில் இறைவனை பாடினார் அப்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அவரால் கோவிலுக்கு வர முடியவில்லை
தூரத்தில் இருந்தபடியே சம்பந்தபாடிய தேவார பாடல்களை சிவபெருமானின் மூத்த பிள்ளையான விநாயகர் தனது யானை காதுகளை சாய்த்து ஒரு காலை மடக்கி அமர்ந்து மிக ஆர்வமாக கேட்டாராம் என்றும் அந்த விநாயகர் சிலையில் ஒரு காது சாய்ந்து பாட்டை கேட்கும் அழகை தோற்றத்தை காணலாம்
இத்தால இறைவன்
சத்தியவாகீஸ்வரர் ஒரு சுயம்புலிங்கம் ஆகும் பிரம்மா வழிபட்டதால் இவருக்கு
பிரம்மபுரி ஈஸ்வரர் என்ற பெயரும் உண்டு
முதலில் மாட கோயிலாக இருந்தது சோழன் காலத்தில் கற்கோயிலாக மாற்றப்பட்டது சிவாலயங்களில் இது 57 ஆவது தேவார தலம் ஆகும் சம்பந்த மற்றும் அப்பர் பெருமானார் பாடல் பெற்ற ஸ்தலம்
இங்குள்ள சப்த மாதர் பிச்சாடனர் பிரம்ம வழிபட்ட சிற்பங்கள் மிகவும் நுணுக்கமானவை
செவி குறைபாடு நீங்கி காது கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்கள் அல்லது காது தொடர்பான நோய்களால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள செவி சாய்த்த விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபட குணமாகும் என்பது ஐதீகம்
காலை 6:00 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடை திறந்திருக்கும்
அருள்மிகு சத்திய வாக்கீஸ்வரர் திருக்கோயில்
அன்பில்
லால்குடி வட்டம்
திருச்சி மாவட்டம் #ஆன்மீகம்
சொந்த மனை நிலம் சொத்துக்கள் மீது ஏற்படும் பிரச்சனைகள் நீங்க மந்திரம்
ஒவ்வொருவருக்கும் வசிப்பதற்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதை பேராசை என்று கூறும் அளவிற்கு காலத்தில் உலகத்தின் நிலைமை இருக்கிறது அதிலும் பலரும் தங்களுக்கென்று சொத்தாக சிறு நிலத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் இந்த நிலம் சம்பந்தமான சொத்துக்களில் உறவினர்கள் எதிரிகள் என அனைவரும் பாக சண்டைக்கு வருகின்றனர் இப்படிப்பட்ட பிரச்சினைகளால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்ரீ பரசுராமர் மந்திரம்
ஓம் ராம் ராம் ஓம் ராம் ராம்
ஓம் பரிசு அஸ்திராய நம
இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் ஆண்டாள் கருடன் ஆஞ்சநேயர் வழங்கிய பின் தெற்கு நோக்கி அமர்ந்து 108 தடவைகள் இந்த மஞ்சள் சொல்ல வேண்டும் பின்னர் வீட்டிற்கு வந்ததும் இந்த மந்திரத்தை 48 தடவை சொல்ல வேண்டும் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நில அபகரிப்பு பிரச்சினைகள் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்
இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் சொல்ல வேண்டும் #ஆன்மீகம்









