தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மற்றும் முக்கியமான முருகன் தலமாகும் திருவிடைகழி
இங்குள்ள முருகன் கோயில் தெய்வானையுடன் காட்சி தரும் முருகப்பெருமானை வழிபடுவதால் நல்ல திருப்பங்களும் செல்வமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது இந்த தளத்தில் சிவன் சன்னதியும் உள்ளது மேலும் இது விடை கழி என பெயர் பெற்றதற்கு காரணம் தெய்வானை முருகனிடம் விடை கேட்டதும் முருகன் சூரனை வதம் செய்த பாவங்கள் நீக்கியதும் ஆகும்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூருக்கு அருகில் இத்தலம் உள்ளது
முருகப்பெருமான் சிவன் சன்னதியுடன் தனி விமானங்களுடன் அருள் பாலிக்கிறார்
தரித்திரம் விலக செல்வ வளம் ஏற்பட திருமணம் கைகூடி வர குழந்தை பாக்கியம் ஏற்பட தீராத கடன் தீர முருகன் வழிபாடு நன்மையை தரும் என்பது நம்பிக்கையான ஐதிகம்
இது திருமறைகளில் இடம்பெற்றுள்ள ஒரு முருகன் தலமாகும் அறுபடை வீடுகளுக்கு வெளியே முருகன் பாதங்கள் பதித்த தலங்களில் இதுவும் ஒன்று
முருகனை வழிபடுவோம் நல் முன்னேற்றம் அடைவோம் #ஆன்மீகம்
சுந்தரமூர்த்தி நாயனரால் பாடல் பெற்ற பெருமை கொண்ட தலம் கடலூர் மாவட்டம் கீர்த்தனகிரியில் அமைந்துள்ள அருள்மிகு சிவகொழுந்தீஸ்வரர் திருக்கோயில் இந்த ஆலயத்தில் மட்டுமே காணக்கூடிய மிக அற்புதமான மற்றும் அபூர்வமான சிற்பங்களை காணலாம்
இக்கோயிலின் மிக முக்கியமான சிறப்பம்சம் இங்குள்ள நடராஜர் சன்னதியாகும் பொதுவாக நடராஜர் தனித்து ஆடுவது போன்ற சிலைகளையே பார்த்திருப்போம் ஆனால் இங்கே
ஆடவல்லான் ஆனந்த தாண்டவம் ஆட இவருக்கு கீழ் மகாவிஷ்ணு தனது பாஞ்சஜன்ய சங்கினை முழங்குகிறார்
அருகிலேயே நான்முகன் பிரம்மா தனது கரங்களால் மத்தளம் வாசிக்கிறார்
மும்மூர்த்திகளும் ஒன்றிணைந்து நிகழ்த்தும் இந்த தெய்வீக இசை நடனக் காட்சியை காண்பது பெரும் பாக்கியம் நடனம் பயிலும் கலைஞர்கள் கலைகளில் சிறந்து விளங்க இங்கு வந்து விசேஷ பூஜை செய்கின்றனர்
ஆண்டுதோறும் பங்குனி மாதம் 20 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் சூரிய பகவான் தனது ஒளிர் கதிர்களால்
சிவ கொழுந்தீஸ்வரரை தழுவி சூரிய பூஜை செய்யும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது
பழங்காலத்தில் இப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டது அப்போது எம்பெருமான் ஒரு முதியவர் வடிவில் வந்து நிலத்தை உழுது நீர் இறைத்து மக்களின் பசியை போக்கியதாக தல வரலாறு கூறுகிறது இதனால் விவசாயம் செய்வும் விளைச்சல் பெருகவும் விவசாயிகள் இத்தல இறைவனை தங்கள் குல தெய்வமாக போற்றி வணங்குகின்றனர்
மூலவர் இடத்திலிருந்து தானாக தோன்றியவர் ஒப்பில்லா நாயகி மற்றும்
நீலாதாஷி என இரு தேவியர் தனித்தனி சன்னதிகளில் அருள் புரிகின்றனர்
கருவறைக்கு பின்னால் இருக்கும் லிங்கோத்பவர் சிலையில் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனை வழங்கிய கோலத்தில் இருப்பது மிக அரிதான காட்சி
கலைத்திறமை வளரவும் விவசாய வாழ்வு செழிக்கவும் இத்தலம் சென்று ஈசனை வழிபட ஈசன் அருள் கிட்டும்
#ஆன்மீகம்
தனக்குப்தன் என்ற வணிகனின் மனைவி ரத்னாவதி கருவுற்றிருந்தால் தனது பிரசவத்திற்காக தாயின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் ஆனால் காவிரியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கினால் பத்மாவின் தாயார் ஆற்றை கடந்து வர முடியவில்லை
தனிமையில் பிரசவ வழியா துடித்த ரத்னாவதி ஈசனிடம் முறையிட்டால் பக்தியின் பெயர் துடைக்க ஈசன் ரத்னாவதியின் தாய் வடிவிலேயே நேரில் தோன்றி அவளுக்கு பிரசவம் பார்த்து ஒரு வாரம் வரை உடனிருந்து கவனித்துக் கொண்டார் வெள்ளம் வடிந்த பிறகு நிஜத்தாய் வர அங்கு இரண்டு தாய்கள் இருப்பதை கண்டு வியந்தனர் அப்போது சிவன் தனது சுய ரூபத்தைக் காட்டி அருள் புரிந்தார் தாயும் ஆனவர் என்பதால் இத்தால இறைவனுக்கு தாயுமானவர் என்ற பெயர் ஏற்பட்டது
இத்தலம் மகப்பேறு மற்றும் சுகப்பிரசவத்திற்கு மிகவும் விசேஷமானது கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் துர்க்கைக்கு 21 கொழுக்கட்டைகள் 21 அப்பம் படைத்து ஒரு துணியில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் கட்டி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர் இதனால் சுகப்பிரசவம் அமையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை
சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாளில் ரத்னாவதிக்கு சிவன் பிரசவம் பார்க்கும் வைபவம் கோலாகலமாக நடக்கும் அன்று பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்து தைலமே பிரசாதமாக வாங்கப்படுகிறது இதனை அருந்தும் பெண்களுக்கு பிரசவம் எளிதாகும் என்பது ஐதீகம்
மட்டுவார் குடல் என்பதற்கு வாசனை உடைய கூந்தலை உடையவள் என்று பொருள் இத்தாலத்தில் அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது
திருச்சி மலைக்கோட்டை சென்று தாயாக வந்து அருளும் தயாபரணி தரிசித்து வாழ்வில் எல்லா பலன்களையும் ஈசன் அருளால் அடையலாம் #ஆன்மீகம்







