மதுரைக்கு அருகே உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமோகூர்
அசுரர்களின் கொடுமை தாங்காத தேவர்கள் தங்களை காக்கும்படி முறையிட பாற்கடலுக்கு சென்றனர் அப்போது பெருமாள் யோகநித்திரையில் இருந்தார் அவரை எழுப்ப அஞ்சிய தேவர்கள் ஸ்ரீதேவி பூதேவி அவர்களிடம் சென்று முறையிட்டனர் தேவியர் பெருமாளிடம் பரிந்துரை செய்ய முயன்ற போது அவர் உண்மையில் தூங்கவில்லை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல கள்ள நித்திரையில் இருந்தார்
தன் குழந்தைகள் கஷ்டப்படும் போது அவர்கள் தாயார் மூலமாக தன்னிடம் வந்தால் அந்த பரிந்துரைக்கு அதிக பலன் உண்டு என்பதை காட்டவே பெருமாள் அப்படி நடித்தார் இன்றும் இத்தலத்தில் தேவர் இருவரும் சுவாமி நித்திரையை கலைக்காமல் மனதிற்குள் வேண்டிக்கொள்ளும் அந்த பேரருள் கோலத்தை காணலாம்
இங்குள்ள பெருமாளுக்கு ஆப்தன் என்று பெயர் ஆப்தன் என்றால் நண்பன் என்று பொருள் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு உற்ற நண்பனாக இருந்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வாழ்வின் இறுதி காலம் வரை வழித் துணையாக வருவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது
காளமேகமாய் பொழியும் அருள் கார்மேகம் எப்படி தன்னுல் நீரை சேமித்து வைத்து தாகம் தீர்க்கும் மழையாய் பொழிகிறதோ அதேபோல இத்தல இறைவனும் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு மழையாய் பொழிவதால் காலமேகப்பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்
இங்கிருக்கும் சக்கரத்தாழ்வார் 16 கைகளில் ஆயுதங்களுடன் அக்கினி கிரீடம் சூடி பக்தர்களுக்கு உதவ இதோ ஓடி வருகிறேன் என்று ஒரு காலை முன் வைத்த நிலையில் காட்சியளிக்கிறார் இவரின் திருமேனியில் 154 மந்திரங்களும் 48 அதிதேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன இது உலக புகழ்பெற்ற அதிசயம்
முன்னோர்களுக்கு முக்தி கிடைக்க மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர் தீராத வினைகள் தீரவும் எடுத்த காரியம் வெற்றி பெறவும் சக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பாகும்
திருமோகூர் ஆப்தனை தரிசித்து நிம்மதியாக வாழ்வோம்
அருள்மிகு காளமேகப்பெருமாள்
திருக்கோயில்
திருமோகூர்
மதுரை #ஆன்மீகம்
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மற்றும் முக்கியமான முருகன் தலமாகும் திருவிடைகழி
இங்குள்ள முருகன் கோயில் தெய்வானையுடன் காட்சி தரும் முருகப்பெருமானை வழிபடுவதால் நல்ல திருப்பங்களும் செல்வமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது இந்த தளத்தில் சிவன் சன்னதியும் உள்ளது மேலும் இது விடை கழி என பெயர் பெற்றதற்கு காரணம் தெய்வானை முருகனிடம் விடை கேட்டதும் முருகன் சூரனை வதம் செய்த பாவங்கள் நீக்கியதும் ஆகும்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூருக்கு அருகில் இத்தலம் உள்ளது
முருகப்பெருமான் சிவன் சன்னதியுடன் தனி விமானங்களுடன் அருள் பாலிக்கிறார்
தரித்திரம் விலக செல்வ வளம் ஏற்பட திருமணம் கைகூடி வர குழந்தை பாக்கியம் ஏற்பட தீராத கடன் தீர முருகன் வழிபாடு நன்மையை தரும் என்பது நம்பிக்கையான ஐதிகம்
இது திருமறைகளில் இடம்பெற்றுள்ள ஒரு முருகன் தலமாகும் அறுபடை வீடுகளுக்கு வெளியே முருகன் பாதங்கள் பதித்த தலங்களில் இதுவும் ஒன்று
முருகனை வழிபடுவோம் நல் முன்னேற்றம் அடைவோம் #ஆன்மீகம்




![செய்தி - நீதிபதிக்குசலாம் குமுதம் KUMUDAM| =8)- இதுஎப்படிஇருக்கு அதிர்ச்சி தீர்ப்பு குழந்தையின் மார்பகங்களை 66] 6olnouri தொடுவதோ, ஆடைகளை கிழிப்பதோ கிடையாது ' பலாத்கார (Wda நீதிபதிக்குசலாம் குமுதம் KUMUDAM| =8)- இதுஎப்படிஇருக்கு அதிர்ச்சி தீர்ப்பு குழந்தையின் மார்பகங்களை 66] 6olnouri தொடுவதோ, ஆடைகளை கிழிப்பதோ கிடையாது ' பலாத்கார (Wda - ShareChat செய்தி - நீதிபதிக்குசலாம் குமுதம் KUMUDAM| =8)- இதுஎப்படிஇருக்கு அதிர்ச்சி தீர்ப்பு குழந்தையின் மார்பகங்களை 66] 6olnouri தொடுவதோ, ஆடைகளை கிழிப்பதோ கிடையாது ' பலாத்கார (Wda நீதிபதிக்குசலாம் குமுதம் KUMUDAM| =8)- இதுஎப்படிஇருக்கு அதிர்ச்சி தீர்ப்பு குழந்தையின் மார்பகங்களை 66] 6olnouri தொடுவதோ, ஆடைகளை கிழிப்பதோ கிடையாது ' பலாத்கார (Wda - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_20032_84777aa_1771347018605_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=605_sc.jpg)



