மார்பு தரிசனம் தரும் மாயவன் திருவல்லல்வாழ் திருவாழ்மார்பன் திருத்தலம்
கேரளாவில் பந்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள திரு வல்லவாழ் திருவல்லபஷேத்திரம்
108 திவ்ய தேசங்களில் எழுபதாவது தளம் ஆகும் தலத்தின் மிக முக்கிய அம்சம் மார்பு தரிசனம் சங்கர மங்கலத்தம்மையார் என்ற பக்தியை காக்க பெருமாள் பிரம்மச்சாரி கோலத்தில் அதாவது மேலாடை இன்றி மார்பில் அன்னை மகாலட்சுமி குடி கொண்டிருப்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் காட்சி தருவதால் இவருக்கு திருவாழ்மார்பன் என்று பெயர்
பெருமாள் இங்கு நிஸ்ட்டை பெற்ற பிரம்மச்சாரி விரதத்தை அனுஷ்டிப்பதால் கருவறை பகுதிக்குள் பெண்கள் அனுமதி இல்லை இருப்பினும் மார்கழி திருவாதிரை மற்றும் சித்திரை விஷூ ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் இந்த அபூர்வ மார்பு தரிசனத்தை காண அனுமதிக்கப்படுகிறார்கள்
50 அடி உயர கல தூணின் மேல்
கருடாழ்வார் எப்போதும் புறப்பட தயாரான அதாவது பறக்கும் நிலையில் காட்சியளிக்கிறார்
பெருமாள் அன்று விரும்பி சாப்பிட்ட உப்பு மாங்காய் மற்றும் சாதம் என்றும் வாக்கு இலையில் நைய்வேத்தியமாக படைக்கப்படுகிறது
கேரள வைணவ தலங்களில் சந்தனத்துடன் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுவது இத்தலத்தின் தனி சிறப்பு
காலை நாலு மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்
ஆழ்வார்களால் மங்கள சாசனம் செய்யப்பட்ட இந்த திருவாழ்மார்பனை தரிசித்து #ஆன்மீகம் அவனது அருளை பெறுவோம்
அகத்தியர் என்பவர் இந்து தர்மத்தின் சப்த ரிஷிகளில் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தின் தலைமை சித்தர் சிவபெருமானின் அருளை பெற்ற தமிழ் மொழியின் தந்தை சிவபெருமான் மற்றும் பார்வதிதேவி திருமணத்தின்போது உலக சமநிலைப்படுத்த அகத்தியர் தெற்கு நோக்கி சிவனால் அனுப்பப்பட்டார் அப்போது சிவபெருமானிடமிருந்து
தமிழைப் பெற்று உலகிற்கு தந்தவர் முதல் தமிழ் இலக்கண நூல் அகத்தியம் என்று இவரது பெயராலேயே விளங்குகிறது இவர் பல இடங்களில் சென்று சிவபெருமானுக்கு லிங்கப்பிரதிஸ்டை செய்து வழிபட்டு இருக்கிறார் அது சில கோயில்களை பார்ப்போம்
ஸ்ரீ லோகமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம் அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில்
திருவெற்றியூர் சென்னை
அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
வில்லிவாக்கம்
கடப்பாக்கம் அருகில்
சென்னை பாண்டிச்சேரி சாலை
அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
புத்திரன் கோட்டை
செய்யார் வட்டம் காஞ்சிபுரம்
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
சாலவேடு
வந்தவாசி மாவட்டம் திருவண்ணாமலை
அருள்மிகு அஞ்சனாச்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் சோமூர்
கரூர் மாவட்டம்
அருள்மிகு பாடகவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுணை
மதுரை திருச்சி சாலை
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
நெமிலிச்சேரி
குரோம்பேட்டை அருகில் சென்னை
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
மேலக்காட்டூர்
திருப்பனந்தாள் அருகில் தஞ்சாவூர்
அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பூந்தோட்டம்
மயிலாடுதுறை பே #ஆன்மீகம் ரளம் சாலை
பொதுவாக பெருமாள் கோயிலுக்கு சென்றால் தான் நமக்கு துளசி தீர்த்தம் கொடுத்து தலையில் சடாரி வைத்து ஆசி வழங்குவார்கள் ஆனால் ஒரு சிவன் கோவிலில் பெருமாள் கோயில் நடைமுறையில் தீர்த்தமும் சடாரியும் வழங்கப்படுகிறது இந்த அதிசயம் நிகழும் இடம் சென்னை போரூரில் உள்ள அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயிலாகும்
சீதையை தேடி சென்ற ராமர் இத்தலத்தில் லிங்க வடிவில் இருந்த சிவபெருமானை 42 நாட்கள் தவம் செய்து வழிபட்டார் சிவனை தனது குருவாக ஏற்று இராமர் வழிபட்டதால் இங்கே சிவபெருமானே குருவாக கருதப்படுகிறார்
குருவான சிவபெருமானை வழிபட வந்த சீடரான ராமபிரானுக்கு மரியாதை செய்யும் விதமாக திருக்கோயிலில் இன்றும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி சடாரி வைத்து ஆசி வழங்கப்படுகிறது சைவமும் வைணவமும் இணையும் அற்புத தலமாகும்
மிகச்சிறந்த ஒரு பரிகார தலமாகும் வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு பதில் இங்கு மூலவர் ராமநாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன குரு தோஷம் உள்ளவர்கள் இங்குவந்து வழிபடுவது விசேஷம்
இங்குள்ள இறைவனுக்கு திராட்சை மாலை சாத்தி வழிபடுவது மிகவும் பிரபலம் திருமண தடை உத்திர பாக்கிய தடை இவர்கள் நீங்கி திருமணம் புத்திர பாக்கியம் போன்றவை ஈசன் அருளால் கிடைக்கும்
இங்குள்ள நவக்கிரகங்கள் அனைத்தும் தங்களது தேவியருடன் தம்பதி சகிதமாக காட்சி தருவது தரிசிக்க வேண்டிய ஒன்று
சிவன் கோயிலில் பெருமாளுக்கு வழிபாட்டை நேரில் காணலாம் ராமபிரான் வழிபட்ட ஈசன் அவர்களை பெறவும் கோயிலுக்கு சென்று வழிபடுவது ஈசன் அருள் கிட்டும் காலை ஆறு மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும் #ஆன்மீகம்








