ShareChat
click to see wallet page
search
#இரவு வணக்கம் #ரெங்கா! #renga-vamba! #கமல்ஹாசன் ஹிட்ஸ் #விருமாண்டி_விருமாண்டி #பேர_சொல்லவே_வாய்_வரல #21_ஆம்_வருடத்தில்_விருமாண்டி இந்த படத்தை டைரக்ஷன் செய்ய முதலில் தெம்பு வேண்டும்.அதுவும் தன் சொந்த செலவில் படம் எடுக்க நம்பிக்கை வேண்டும்.அந்த இரண்டும் இவரிடம் இருந்ததால் தான் #இன்றுவரை_இவர்_மட்டுமே #உலகநாயகன் சினிமாவில் வந்தவர் கோடி சென்றவர் கோடி சினிமா துறையில் இன்றில்லை நேற்றில்லை சினிமா துறை இருக்கும் வரை இவர் பெயர் நிலைத்திருக்கும். அவ்வளவு தொழில்நுட்பங்களை சினிமா துறையில் புகுத்தியுள்ளார். விருமாண்டி படத்திற்கு முதலில் வைத்த பெயர் சண்டியர். அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் இந்த படத்திற்கு பெயர் மாற்றச் சொல்லி வற்புறுத்தியதால் சண்டியர் என்ற பெயரை விருமாண்டி என்று மாற்றியமைத்தார். அந்தப் படத்திலேயே இதை நக்கலாக சொல்லி இருப்பார். பாலசிங்கம் அவர்கள் சண்டியரே சண்டியரே என்று கூப்பிட தலைவர் அம்மா ஆசையாய் வச்ச பேரு விருமாண்டி இருக்கையிலே என்ன சண்டியர் என்று கூப்பிடுற என்று கேட்க அதற்கு அவர் உனக்கு ஊர் வச்ச பெயர் சண்டியர் தானே என்று சொல்லுவார். #விருமாண்டி_என்பது_அடங்காத #காளை_அது_என்றும்_அப்படித்தான் இந்தப்படத்தில் வரும் பெயர்களும் வித்தியாசமாக அமைந்திருக்கும். விருமாண்டி, அன்னலட்சுமி, கொத்தாளத் தேவர் ,ஏஞ்சலா காத்தமுத்து, நல்லம நாயக்கர். இத்திரைப்படத்தில் அனைத்து கேரக்டர்களும் பேசப்படும் கேரக்டராகவே அமைந்திருக்கும். இந்த படத்தை முதல் தடவை பார்க்கும் போது சற்று புரியாததாகவே தோன்றும்.படத்தை நன்றாக கவனித்தால் கதை புரிய ஆரம்பிக்கும். கொத்தாளத் தேவர் சொல்லும் ஒரு கதை. பின்பு விருமாண்டி சொல்லும் ஒரு கதை. முதலில் விருமாண்டி நமக்கு கெட்டவனாக தோன்றினால் அடுத்து விருமாண்டி சொல்லும்போது முழுமையாக நமக்கு புரியும். #வேற_லெவல்_திரைப்படம் ஜெயிலில் கொத்தாளத் தேவரை பேட்டி எடுக்கும்போது அதான் விருமாண்டி விருமாண்டி பாத்தீங்களா அவன் பேரை சொல்ல வாயை வரல என்று சொல்லி ஆரம்பிக்கும் போதும். விருமாண்டி பேட்டி எடுக்கும்போது நீங்கள் போடும் உள்பாடி சைஸ் என்னவென்று கேட்கும் போதும் படம் என்னடா இப்படி எடுத்து இருக்காங்க வேற லெவல் என்று அப்போதே புரிய ஆரம்பிக்கும். #விருமாண்டி_கதை_சொல்ல #ஆரம்பிக்கும்_போது_தறிகெட்ட_ஒரு_காளை_மாடு_எப்படி_சிக்கி #சீரழிந்தது_விழுந்து_எழுந்து #அனைவரையும்_சிதைத்தது_என்பது_நமக்கு_புரியும் சிங்கப்பூர் மச்சான் ஆக காளையை அடக்கும் விருமாண்டி பின்பு அன்னலட்சுமியை தன் காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்து ஊரை விட்டுப் போகும் அந்தக் காட்சி பின்பு அன்னலட்சுமியை கொத்தாளத் தேவர் அழைத்து வந்து சாக அடிக்கும் அந்த காட்சி எல்லாம் ஈரக் குலையை நடுங்க வைக்கும். நல்லமா நாயகனார் பஞ்சாயத்து காட்சி எல்லாம் வேற லெவல் அங்கு விருமாண்டி வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு பேசும் பேச்சுக்கள் எல்லாம் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கும் என்ன பேசுகிறார் என்றே நாம் காதில் கேட்க முடியாத அளவிற்கு கைதட்டல் விசில் பறக்கும். அப்பாத்தா செத்து குழிதோண்டி அந்த குழியில் ஊற்று தண்ணீர் கிளம்பும்போது விருமாண்டி அதை முகத்தில் பூசிக்கொண்டு பேசும் வசனங்கள் எல்லாம் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதைப்போல் #நம்ம_வீட்ல_ஏது_மாமா_பெருமனுஷங்க என்று சொல்லும் அந்த காட்சி எல்லாம் தலைவர் வேற லெவல். கூட்டிக் கொடுக்கிறதுனா என்ன தெரியுமா என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அந்த பாங்கு தலைவரைத் தவிர வேறு எவரால் பேச முடியும். இங்கு வாயும் பேசும் அருவாளும் பேசும் என்று சும்மா வசனம் வைக்கவில்லை ஒவ்வொரு வெட்டும் வேற லெவல் அதிலும் ஒரு கத்தியால் வெட்டி விட்டு இன்னொரு கத்தி எடுத்து வெட்டுவார் பாருங்க #தலைவா_என்_உலகநாயகா #எங்கப்பா_இவ்வளவு_வித்தைய #கத்துக்கிட்ட இந்தப் படத்தை நான் எழுத வேண்டுமென்றால் என் பதிவுகள் கண்டிப்பாக ஒரு 15 பதிவுகள் தேவைப்படும். ஏனென்றால் ஒவ்வொரு வரியாக அனுபவித்து எழுதலாம் ஒரு காட்சியையும் ரசித்து ரசித்து எழுதலாம். அதற்கு நேரமின்மை காரணமாக மனதில் இருக்கும் அந்த காட்சிகளை மட்டும் நான் உங்களுக்காக எழுதி இருக்கின்றேன். படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் திரு‌இளையராஜா அவர்களின் இசை. படத்தின் டைட்டில் மியூசிக் வித்தியாசமாக இருக்கும். படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும். உன்னைவிட சாங் வேற லெவல். படத்தில் வரும் சின்ன சின்ன பாடல்களும் கலக்கல். படத்தில் எவ்வளவு பேர் நடித்திருந்தாலும், எவ்வளவு இனிமையான பாடல்கள் அமைந்திருந்தாலும் கடைசியில் படம் விட்டு வெளியே வரும்போது நம் ஒவ்வொருவரின் மனதிலும் விருமாண்டியே முழுமையாக ஆட்கொண்டிருப்பார்...... #விருமாண்டி. Thanks & credited goes to john peter FB தரவு
இரவு வணக்கம் - ருமாண்டி லி ருமாண்டி லி - ShareChat