வறுமை வாட்டி வதைத்ததால் மூன்று வேளை சோறு கூட போட முடியாத இயலாமையால் மூன்று உயிர்கள் பறிபோனதன் பகீர் பின்னணி என்ன?
தோசை வாங்கித் தருகிறேன் என்று தந்தை கூறியதும், ஆபத்தை உணராமல் ஒன்றும் அறியாத சிறுமிகள் ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளனர். திடீரென குளத்தின் அருகே ஆட்டோவை நிறுத்திய தந்தை, ஒவ்வொரு குழந்தையாக உள்ளே தள்ளிவிட்டு அரை மணி நேரம் அங்கேயே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். தண்ணீருக்குள் மூழ்கிய குழந்தைகள் தங்களது மூச்சை நிறுத்தியதும் ஒன்றும் தெரியாதது போல தந்தை வீடு திரும்பியுள்ளார்… நடந்தது என்ன?
தெலங்கானா மாநிலம் காமா ரெட்டி நகரைச் சேர்ந்தவர் இஸ்மாயில். அவருடைய மனைவி சபீனா. 8 வயதில் ஷீபாத், 7 வயது அயத் மற்றும் 5 வயதில் மரியம் என்ற மூன்று பெண் பிள்ளைகள் இருந்தனர். இஸ்மாயில் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், குடும்ப தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு அவருக்கு வருமானம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவரது மனைவி சபீனா வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் தனது மூன்று குழந்தைகளுடன் ஆட்டோவில் வெளியே சென்ற இஸ்மாயில், வீடு திரும்பியபோது தனியாக வந்துள்ளார். அவரிடம், குழந்தைகள் எங்கே? என்று மனைவி சபீனா கேட்டுள்ளார். அதற்கு, இஸ்மாயில் சரியாக பதில் கூறாமல் தட்டிக்கழித்துள்ளார். இதையடுத்து, சபீனா தனது மூன்று மகள்களையும் காணவில்லை என்று காமா ரெட்டி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஊர் முழுவதும் சல்லடை போட்டு சிறுமிகளை தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
பின்னர், தந்தை இஸ்மாயில் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வறுமையின் பிடியில் சிக்கிய இஸ்மாயில், தனது குடும்ப தேவைகளுக்காக 5 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும், அதற்கு வட்டி கூட கட்ட முடியாமலும் தவித்து வந்துள்ளார்.
வறுமை கழுத்தை நெரித்ததால் குழந்தைகளுக்கு மூன்று வேளையும் சரியாக உணவு கூட வழங்க முடியாமல் திண்டாடியுள்ளார். தனது இயலாமையால் இஸ்மாயில் கடும் மனவேதனையில் இருந்துள்ளார். இந்த சூழலில்தான், தனது மகள்களுக்கு வெளியே சென்று ஓட்டலில் தோசை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதைக் கேட்டதும் உற்சாகமான சிறுமிகள், தந்தையுடன் ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளனர். ஓட்டல் வரும் என்று பார்த்த நிலையில் ஊருக்கு வெளியே உள்ள குளத்திற்கு அருகே ஆட்டோ நிறுத்தப்பட்டுள்ளது.
: சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு ஸ்கெட்ச்... காவல் ஆய்வாளரை வெட்ட முயன்ற ரவுடி... துப்பாக்கியால் சுட்ட போலீஸ்...
பின்னர், ஆட்டோவில் இருந்து குழந்தைகளை வெளியே இறக்கிய இஸ்மாயில், ஈவு இரக்கமின்றி ஒவ்வொருவரையும் பிடித்து குளத்திற்குள் தள்ளிவிட்டுள்ளார். அனைவரும் 5 முதல் 8 வயதுடைய சிறுமிகள் என்பதால் நீச்சல் தெரியாமல் குளத்தில் தத்தளித்தவாறு உயிருக்குப் போராடியுள்ளனர். பெற்ற தந்தை வெளியே இருந்தபடி அரை மணி நேரமாக குளத்தையே வேடிக்கை பார்த்துள்ளார். மூன்று குழந்தைகளும் மூச்சடக்கி உயிரிழந்ததை உறுதி செய்ததும் அங்கிருந்து இஸ்மாயில் கிளம்பியுள்ளார்.
: சிகிச்சையில் இருந்த கைதி உயிரிழப்பு... உறவினர்கள் மறியலால் பதற்றம்... போலீஸ் நடவடிக்கை என்ன...?
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், தீயணைப்புத் துறையினருடன் சென்று குளத்தில் தேடுதல் பணியில் இறங்கினர். அதில், 2 சிறுமிகளின் உடலை கைப்பற்றிய நிலையில், மூத்த குழந்தையின் உடலை தேடும் பணி தொடர்கிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இஸ்மாயிலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐந்து லட்சம் ரூபாய் கடன் நெருக்கடி, குடும்ப வறுமை, சாப்பாட்டுக்கே வழி இல்லாத காரணத்தால், 3 பெண் குழந்தைகளை பெற்ற தந்தையே, குளத்திற்குள் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது #📢மார்ச் 8 முக்கிய தகவல் 🫠


