நேற்று மே 17 இயக்கத்தின் சார்பாக நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்திற்காக காத்துக் கொண்டு இருந்த நேரம் அருகில் இருக்கிற தேநீர் கடையில் தேனீர் அருந்த நானும் தோழர் ஒருவரும் சென்றிருந்தோம். அப்போது அங்கே காவலுக்காக வந்திருந்த காவலர்களில் இருவர் தேநீர் அருந்த வந்தார்கள். எங்களைப் பார்த்ததும் எதுக்கு சார் இந்த போராட்டம் என்று கேட்டார்கள். காவலுக்காக வந்திருக்கிறீர்கள் என்ன போராட்டம் என்று எல்லாம் உங்களுக்கு சொல்ல மாட்டார்களா என்று கேட்டேன். இல்லை சார். திருமுருகன் காந்தி சார் வருகிறார் என்று மட்டும் தான் தெரியும். போராட்டம் எதற்கு என்னவென்று எல்லாம் சொல்ல மாட்டார்கள் என்று சொன்னார்.
சரியென்று நான் வேறு ஒன்றும் இல்லைங்க 80 வருடமாக தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள். நாமும் ஒவ்வொரு முறையும் எதிர்க்கிறோம். ஆனாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல அவர்களை திருத்த முடியவில்லை. இப்போது தென்னக ரயில்வேயில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் இந்திக்கு முதன்மை கொடுத்து தமிழை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்கள். அதனால் இந்தி எழுத்தை அழிக்கும் போராட்டத்தை தான் இன்னைக்கி முன்னெடுக்கிறோம். தமிழ்நாட்டில் எதற்கு இந்தி என்று சொன்னேன்.
அவர் பாமரருக்கு உரிய பதிலான நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். தமிழ் வேண்டும் தான் சார். ஆனா நார்த் இந்தியாவில் வேலைக்கு போகும் போது இந்தி தெரியாமல் சிரமப்படுகிறோமே என்று கேட்டார். அதனால் வேலை கிடைக்காமல் போகிறதே சார் என்று அவருக்குள்ள அறியாமையால் இந்த கேள்வியை கேட்டார்.
நான் சொன்னேன் அதற்காகத்தான் சார் இந்த போராட்டம் என்று சொன்னேன். அவருக்கு புரியவில்லை என்னவென்று கேட்டார். பட்டியலில் உள்ள 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளையும் ஏற்றுக் கொண்டு விட்டால் எல்லா மொழிகளிலும் தேர்வு நடக்கும். அப்படி நடக்கும் போது எல்லா மொழி பேசுபவர்களும் போட்டி போட முடியும் யாருக்கு திறமை இருக்கிறதோ அவர்கள் முன்னே வரலாமே ஏன் இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அந்த மொழியை மட்டும் எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்தி தான் இந்தியா என்றால் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மராத்தி குஜராத்தி இவர்களெல்லாம் இந்தியாவில் யார் என்று கேட்டேன்.
ஐரோப்பிய யூனியன் மொத்தம் 27நாடுகளைக் கொண்டது. அதில் 24 மொழிகளையும் அரசின் அலுவல் மொழியாக வைத்திருக்கிறார்கள். அவர்களால் அது முடியும் என்கிற பொழுது இந்தியாவால் ஏன் முடியவில்லை? இவர்களின் நோக்கம் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுப்பது அல்ல, இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதன் மூலம் சமஸ்கிருதத்தை அனைவரும் படிக்கச் செய்து அதன் மூலம் பார்ப்பனர்களின் மொழி தான் சிறந்தது என்றும், அவர்களே சிறந்தவர்கள் என்றும் நம்மை நம்ப வைப்பதற்காக தான் இதை செய்கிறார்கள் என்றேன்.
அதனால் தான் இந்திக்காரர்களை பார்த்து பார்த்து தமிழ்நாட்டுக்கு அனுப்புகிறார்களோ போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாடு இந்திக்காரர்களின் நாடு ஆகிவிடும் போல இருக்கு சார். இங்க காவலுக்கு வந்த பிறகு தான் தெரிகிறது ஒரு நாளைக்கு எக்கச்சக்கம்பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள் சார் என்று சொல்லிவிட்டு, பையா எனக்கு ஒரு சாயா கொடு என்று சொன்னார். உடனே அருகில் இருந்த இன்னொரு காவலர் பாருங்கள் சார் எங்கள் வாயாலேயே சாயா என்று சொல்ல வைத்து விட்டார்கள். இப்படியே போனால் தமிழுக்குப் பதில் இந்தி தான் பேசணும் போல இருக்கு தமிழ்நாட்டிலேயே என்று வருத்தப்பட்டு விட்டு நாங்களும் நிறைய தெரிஞ்சுக்கணும் போல, இல்லன்னா என் வாயாலேயே தமிழ் எதற்கு அப்படின்னு சொல்ல வச்சிருவாங்க போல இருக்கு அப்படின்னு சொல்லிட்டு சரி சார் நான் கிளம்புறேன் என்று போய்விட்டார்.
இப்படி படித்தவர்களுக்கே நிறைய போதாமைகள் இருக்கிறது. இந்த போதாமைகளை பயன்படுத்தி தான் இந்தி என்னும் அரக்கியை தமிழ்நாட்டின் மீது திணிக்கிறது ஒன்றிய அரசு. ஆகவே எப்பாடுபட்டாலும் இந்தி திணிப்பை எதிர்த்தே ஆக வேண்டும். #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #💪 மே17 இயக்கம் #தமிழ்த்தேசியம் #தோழர் திருமுருகன் காந்தி


