#📺அரசியல் 360🔴 #📷நினைவுகள் #தமிழ்த்தேசியம் #📰தமிழக அப்டேட்🗞️ #தமிழ்நாடு தமிழருக்கே!
தமிழரிடத்தில் தாய்த்தெய்வ வழிபாடுகள் மிகப்பழமையானது. இதன் நீட்சி இன்றும் தமிழரிடத்தில் உள்ளது. அம்மன் கோவில் திருவிழாக்களில், தமிழர் திருமணஙகளில் முளைப்பாரி போடுதல் ஒரு பண்பாடாக இன்றும் தொடர்கிறது. இது தாய்த்தெய்வ வழிபாட்டின் நீட்சியாக 'வளமைப் பண்பாடாக' இயஙகுகிறது.
'கிராம தேவதைகளான காளி, மாரி, பத்திரகாளி முதலான பெண் தெய்வஙகளை நோக்கி முற்றிலும் பெண்களால் நடத்தப்படும் ஒரு சடங்கு முளைப்பாரி ஆகும்.. தமிழ்நாட்டில் இப்பண்பாடு மிகப்பழமையானது என்பார் ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்கள்.
"..ஆரியரது வருகைக்கு முந்தைய தொன்மங்கள் 'வளமைப்பண்பாட்டை' அடிப்படையாகக் கொண்டவை. 'அணங்கு', 'முதுமகள்,' மூத்தோள்' என்பது இவற்றில் சில. இவை தமிழர் தொன்மங்கள். ஆரியரது தொன்மங்கள் வேதபுராணங்களை சார்ந்தவை. ஆரியரது கடவுள்கள் அரசவை சார்ந்தவையாக இயங்கின. இவை அரசன்-அரசவையின் வேள்விமுறை குறித்தவையாக இருந்தன, அதாவது அதிகாரத்திற்கான சடங்குகளாக இயங்கியவை எனலாம். அதனால் தான் ஆரியர்களின் கடவுள் தொன்மங்கள் வேதம்(வைதிக மரபு சார்ந்த) சார்ந்து அரசர்களுக்கான பாடல்களில் காணப்படுகின்றன.." என்கிறார் ஆய்வாளர் தேவ.பேரின்பன். அதாவது தமிழர்களின் தொன்மங்கள் பெண்களை முன்னிறுத்திய தாய்தெய்வ வழிபாட்டின் நீட்சியாகவும், இவற்றிற்கு முற்றிலும் வேறாக ஆரியர் தொன்மங்கள் வேத சடங்குகள்-வேள்விச் சடங்குகளாக அரசனுக்குரியதாக இயங்கின என்கிறார். எளியோர்களின் பண்பாடே இன்றுவரை தொடர்வதை காணலாம் என்பதே இதன் அடித்தளம்..
தமிழர் மரபில் தாய்த்தெய்வ வழிபாடு குறித்து பெரியரியவாதியும், தமிழ்த்தேசிய ஆய்வாளருமாம சி.ஆரோக்கியசாமி அவர்கள் இச்சிந்தனைகளை தொகுத்து நூலை வெளியிட்டுள்ளார்..
இவ்வாறாக தமிழர்களின் வழிபாட்டு முறையும், பண்பாட்டு முறையும் தனித்துவமானதாக, சமத்துவம் கொண்டவையாக இயங்கின. இவற்றை தின்று செரிக்கும் வகையிலன ஆதிக்கத்தையே ஆரிய-வழிபாட்டுக் கூறுகள் இருக்கின்றன.
இவ்வாறாக ஆரிய-வேதத்தால் (வைதீகம்) ஆக்கிரமிக்கப்பட்டு சுவீகரிக்கப்பட்ட தமிழரின் தொல் தெய்வஙகள் இன்றும் பெருந்தெய்வக் கோயில் கருவறைகளுக்கு வெளியே தூண்களிலும், கோபுரங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் பல தெய்வங்கள் எளிய மக்கள் வழிபட்டு வந்தவை அல்லது இன்றும் வழிபடக்கூடியவை. ஆசீவக சாத்தனார்கள், ஐயனார்கள் இவ்வாறாக மாற்றப்பட்டனர் என்பார் சி.ஆரோக்கியசாமி அவர்கள்.
இவ்வாறாக தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றையும், அதன் பின்புலத்தையும், அதன் நீட்சிகளையும் அறிந்து கொள்ளவே மே17 இயக்கத்தால் 'தமிழ்த்தேசியப் பெருவிழா' கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இவ்வாண்டும் மார்ச் 07, 08 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநாடு நடக்க இருக்கிறது.
தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்ள விரும்பும் அனைவரையும் அழைக்கிறோம். போலிகளை விரட்டியடித்து, ஆரியத்தை அழித்தொழித்து, தமிழ்த்தேசியத்தின் கொடி உயர்த்துவோம்.
விரைவில் மாநாட்டின் விவரங்கள் வெளியிடப்படும். தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட தோழர்கள் அவசியம் பங்கேற்று பயனடைய வேண்டுகிறோம்.
#💪 மே17 இயக்கம் #🚨கற்றது அரசியல் ✌️
#தமிழ்த்தேசியம்
வி.புலிகளின் மீதான இந்திய அரசின் தடையை எதிர்த்து அய்யா வைகோ அவர்கள் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இம்மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்திய நீதிமன்றங்களின் கேலிக்கூத்தை இந்த வழக்கு எளிமையாக விளக்கும்.
2013ம் ஆண்டில் வி.பு மீதான தடை நீட்டிப்பு ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இந்த மனுவை எதிர்த்து அய்யா.வைகோ ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். வி.பு இயக்கத்தவர், ஆதரவாளர், அனுதாபி என எவரும் இந்த தடையாணைக்கு எதிராக வாதிடலாம் எனும் வகையில் தடை ஆணை மீதான விசாரணைக்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. '..நான் வி.பு தீவிர வாழ்நாள் ஆதரவாளன் என்பதால் ரிட் மனுவை தாக்கல் செய்கிறேன்..' என வழக்கை 2013ல் பதிவு செய்திருந்தார். 2014ம் ஆண்டு தடை நீட்டிக்கப்பட்டது. 1992ம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வி.பு மீதான தடை விசாரணைக்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்தது. தனி ஆணையம் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, எவ்வித ஆதாரங்களையும் கணக்கில் எடுக்காமல், உரிய சட்ட விளக்கங்களை கொடுக்காமல் விசாரணை நடத்தப்பட்டு வி.பு மீதான தடை நீட்டிக்கப்படும்.
வி.பு மீதான தடைக்கு மிக முக்கிய காரணியாக இந்திய அரசால் முன்வைக்கப்பட்டது என்பது ராஜீவ் வழக்கு அல்ல. ஏனெனில் 1992ல் ராஜீவ் வழக்கு விசாரணை முடியவில்லை என்பதால் வி.பு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் இருந்தது. வி.பு மீதான தடைக்கு பொய்யான காரணத்தை பார்ப்பனர்கள் கட்டமைத்தனர்.
அதாவது '...வி.பு இந்தியாவிற்குள்ளாக இருக்கும் தமிழ்நாட்டையும் பிரித்து ஈ..ழத்தோடு இணைத்துகொள்ள திட்டமிடுகின்றனர், இதற்காக போர் புரிகின்றனர்,.. ஆகையால், இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் தடை செய்ய வேண்டும்..' என..' வாதத்தை கட்டியெழுப்பினர். இதை வலுப்படுத்த தொடர்ந்து கட்டுரைகளை குருமூர்த்தியின் குருநாதர் சோ ராமசாமி எழுதித்தள்ளினார். இதை சு.சாமி உள்ளிட்ட 'பார்ப்பன கடப்பாரைகள்' எழுதியதை ஆதாரமாக வைத்து வழக்குகள் புனையப்பட்டன. பொய் வழக்குகள் புனையப்பட்டு தமிழர்கள் கைதாவார்கள், பொய்யாக செய்திகள் எழுதப்படும், அவை வாதத்திற்கு எடுக்கப்படும்.
இப்படியாக 2014 வரையில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டது. வி.பு தடை செய்யப்பட்டதால், அவர்கள் தரப்பில் இருந்து ஒருவரும் நேரடியாக விசாரணை ஆணையத்திற்கு வர இயலாமல் தடுக்கப்படுவார்கள். இதை முன்வைத்து வி.பு நேரடியாக தனது தடைக்கு எதிராக வழக்கு நடத்தவில்லை என்பதை காரணம் காட்டி, வி.பு ஆதரவாளர்கள் மனுவை கணக்கில் எடுக்காமல் தடை நீட்டிக்கப்படும்.. இதை நடைமுறைப்படுத்த தடைமீதான விசாரணைக்கு சற்று முன்பாக தமிழ்நாட்டில் சில உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு பொய் வழக்கு போடப்படும். ஈழத்தமிழர்களும் கைதாவார்கள். சிறப்பு முகாம் இதற்காகவே வலுப்பெற செய்யப்பட்டது. இந்த தடையை காரணம் காட்டி பெரியாரிய தோழர்கள், ஈழ ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். முத்த தலைவர்கள் அய்யா வைகோ, பழ.நெடுமாறன், கோவை இராமகிருட்டிணன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் தடா, பொடா வழக்குகளில் நீண்டகாலம் சிறைப்பட்டனர்.
2014 வரையில் இப்படியாக இரு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தபப்ட்ட வழக்குகள், அதன்பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிப்பு என மாற்றினர். இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து அய்யா வைகோ தாக்கல் செய்த ரிட் மனு 13 ஆண்டுகளுக்கு பின்னர் இம்மாதம் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மூன்று முறை விசாரணைக்கு நீதிமன்றம் கூடியது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஒன்றிய மோடி அரசு வி.பு மீதான தடையை நீட்டிக்க வேண்டும், இந்த வழக்கை நடத்த அய்யா வைகோ அவர்களுக்கு சட்டரீதியான வலு இல்லை என்பதாக முன்வைத்தார். 2013-14கால தடை ஆணையில் வி.பு ஆதரவாளர்கள் (supporters, sympathiser) வழக்கில் பங்குபெற்று தடையை எதிர்க்கலாம் என குறிப்பிடப்பட்டதை சுட்டிக்காட்டி '...நான் வி.பு தீவிர ஆதரவாளன், வி.பு ஆதரித்ததற்காக 18 மாதங்கள் சிறைபப்ட்டிருக்கிறேன், சர்வதேச மன்றங்களில் வி.புலிகளுக்காக உரையாற்றி இருக்கிறேன், தனித்தமி..ழீழம் வேண்டி பொதுவாக்கெடுப்பு கோரி உள்ளேன்
இதே கோரிக்கையை தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. ஐ.நா அவை இலங்கையின் குற்றம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது...' போன்ற விவரங்களை அடுக்கினார். பின்னர் "..தடைக்கு காரணமாக இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழ்நாட்டை பிரிக்க வேண்டுமென இந்திய அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மையல்ல, இதற்கான ஆதாரம் எதையும் இந்திய அரசு சொல்லவில்லை. ஆனால் வி.பு இப்படியான கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்த தடையின் அடிப்படை இந்த பொய் குற்றச்சாட்டில் தான் உள்ளது. ஆகவே இதை அம்பலப்படுத்தினால் தடை நீக்கமென்பது சாத்தியமாகுமென்பது மட்டுமல்ல, இந்த குற்றச்சாட்டில் தமிழ்நாடு என குறிப்பிடப்படுவதால், தமிழ்நாட்டை சார்ந்த எனக்கு இதற்கு பதிலளிக்கும் பொறுப்புண்டு என்பதால் நீதிமன்றத்தை நாடியுள்ளேன்..' என்றார்.
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் திருமதி அனிதா சுமந்த் அவர்கள்..' ... நீங்கள் சொல்லும் காரணங்கள் உண்மையாக இருக்கலாம், ஆனால் இந்த வழக்கை நடத்துவதற்கான முகாந்திரம் maintainability இருக்கிறதா..' எனக்கேட்டார்்.. .
'இந்த தடை 2014ல் கொண்டுவரப்பட்டு 2019, 2024 ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது..ஆகவே காரணங்கள் அப்படியே உள்ளதால்.இந்த வழக்கை விசாரிக்கலாம்' என அய்யா வைகோ
வாதத்தை முன்வைத்தார்.
'... வி.பு மீதான தடை 2013-14ல் கொடுக்கப்பட்ட உத்தரவை தற்போது காரணமாக வைத்து தற்போது வழக்கு விசாரணை செய்ய இயலாது. ஏனெனில் 2019,2024 ஆகிய ஆண்டுகளில் புதிய தடையாணைகள் பிறப்பிக்கப்பட்டதால், 2014 ம் ஆண்டு தடையாணை காலாவதியாகிவிட்டது. இவ்வாறு காலாவதியாகிய ஆணையின் மீது விசாரணை நடத்த இயலாததால், இந்த வ்ழக்கை நிதிமன்றம் தள்ளுபடி செய்கிறது...' என்று சொல்லி அய்யா வைகோ அவர்களின் வழக்கை தள்ளுபடி செய்தார். இந்திய நீதிமன்றத்தையும், மோடி அரசின் வழக்கறிஞரையும் பார்த்து எள்ளலான புன்சிரிப்புடன் பார்த்துவிட்டு வெளியேறினார்
அதாவது 2013ல் போடப்பட்ட வழக்கை 13 ஆண்டுகாலம் கழித்து விசாரணைக்கு எடுத்துவிட்டு, காலதாமதம் ஆகியதால் காலாவதியாகிவிட்டதை சுட்டிக்காட்டி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
"உயிரை காத்திடுங்கள்" என ஒருவர் நீதிமன்றத்தை நாடினால், அவர் சாகும்வரை காத்திருந்துவிட்டு, அவர் இறந்த பின்னர், ' வழக்கு தொடுத்தவர் இறந்துவிட்டார் ஆகவே வழக்கிற்கு முகாந்திரம் இல்லை' எனச் சொல்லி நீதியை காக்கும் வழிமுறையை இந்திய நீதிமன்றங்கள் திறம்பட செய்கின்றன.
இதே நேரத்தில், தீபம் ஏற்றுவதற்கு பலமுறை தடை செய்யபப்ட்ட வழக்கை தூசிதட்டி எடுத்து, பொய்யான ஒருவரை பக்தர் என சொல்லி வழக்கை பதிந்து, உடனே விசாரணைக்கு எடுத்து, ஆதாரங்களை புறம்தள்ளி, புராணங்களையும், பொய்களையும் சாட்சியமாக்கி நேரடி கள ஆய்வு செய்ததாக நாடகமாடி, கலவரம் செய்பவர்களுக்கு சாதகமாக தீர்ப்பை கொடுத்து நீதி வழங்குவதாக நாடகம் செய்வது பார்ப்பன கடப்பாரைகளுக்கு எளிமையானது.
பார்ப்பன கடப்பாரையை தூக்குவேன் என்பவனெல்லாம் தனது பாலியல் வழக்கிற்காக ஆயிரம் தொண்டர்களை திரட்டி கொண்டாடி, இதுதான் தமிழ்த்தேசியமென கொக்கரிக்கும் கோமாளிகளையும் நாம் பார்க்கிறோம். வி.பு இடம் சோறு தின்னவன், சாப்பிட்ட நன்றிக்கடனுக்காக கூட வழக்கு நடத்தவோ, போராடவோ முன்வரவில்லை. இவனை போராளியென கொண்டாடி ஒரு தண்டச்சோறு கூட்டம் அலைகிறது. போலிகளின் பின்னே தமிழினம் சிக்கியுள்ளதை மீட்டாக வேண்டும். பார்ப்பன கடப்பாரைகள் இடிக்க விரும்புவது திராவிடத்தை மட்டுமல்ல, போராளி தமிழ்த்தேசத்தையே என்பதை நேற்றய வழக்கின் போக்கு மீண்டும்எடுத்து சொல்லியது.
வி.பு தடைக்கு எதிராக மக்களை, மாணவர்களை திரட்டி மீண்டும் போராட்ட களத்திற்கு வருவோம் என்று நீதிமன்ற வாயிலில் அய்யா வைகோ உறுதிபட தெரிவித்தார். அவரது அயராத முயற்சிக்கு துணையாக மே17 இயக்கம் இயங்கும். வி.பு மீதான நேர்மையற்ற தடையை உடைக்கும் பொறுப்பு தமிழ்நாட்டு தமிழர்களுக்கு உண்டு. இப்பொறுப்பில் கட்சி கடந்து செயலாற்றுவோம்
இந்த வழக்கின் விசாரணைக்காக மதிமுக வழக்கறிஞர் அணி அயராது உழைத்தது. இந்த வழக்கிற்காக தமிழ்நாட்டின் பலபகுதிகளில் இருந்து மதிமுக தோழர்கள் பங்கெடுத்தனர். ஈரோட்டிலிருந்து தோழர் பொன்னையன். வே அவர்களும் பங்கெடுத்தார். உடன் மே17 இயக்கத் தோழர்கள் சார்பாக பங்கெடுத்தோம்.
தமிழர்களின் தாகம் தமி.ழீ.ழ தாயகம். #🚨கற்றது அரசியல் ✌️ # தமிழீழம் #வைகோ #தோழர் திருமுருகன் காந்தி #தமிழ்த்தேசியம்
“விருதுநகரில் டெக்ஸ்டைல் பார்க் – 1000 பேருக்கு வேலை!”ன்னு பாஜக இப்போது பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறது.
கேக்க நல்லாதான் இருக்கு… ஆனா உண்மை என்ன?
நன்றாக ஓடிக்கிட்டிருந்த பல டெக்ஸ்டைல் மில்களை மூடி, விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் நேரடியாக 18,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை மண்ணில புதைத்த கும்பல் பாஜக. அந்த உண்மையெல்லாம் மக்களுக்கு தெரியாது என்ற திமிர்ல, இப்போ “1000 பேருக்கு வேலை”ன்னு பொய் விளம்பரம்!
அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரத்தை எடுத்துக்கோங்க.
ஒரு காலத்தில் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருந்த ஜெயவிலாஸ் குழும மில்கள் கிட்டத்தட்ட எல்லாம் மூடப்பட்டுடுச்சு.
பல டெக்ஸ்டைல் மில்கள் இன்று விற்பனைக்கே வைத்தாலும் வாங்க ஆள் இல்ல.அவ்வளவு மோசமான நிலை.
இந்த மில்களை நம்பி வாழ்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று “நாளை என்ன செய்வது?”ன்னு திக்குத்தெரியாம நிக்கிறாங்க. இதெல்லாம் பற்றி ஒரு வார்த்தை பேசாத பாஜக, இப்போ “டெக்ஸ்டைல் பார்க் – வேலை வாய்ப்பு”ன்னு நாடகம் ஆடுது.
வட இந்திய பணக்காரர்களுக்கும், மார்வாடி–குஜராத் சேட்டுகளுக்கும் பிரச்சனை வந்தா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா என நாடு நாடாக ஓடி ஓடி ஒப்பந்தம் போடும் மோடி,
ஆனா திருப்பூர், கோவை, விருதுநகர் மாதிரி இந்திய டெக்ஸ்டைல் துறையின் முதுகெலும்பான பகுதிகளுக்காக குறைந்த விலையில் நூல் கிடைக்க வழி செய்ய ஒரு நடவடிக்கையும் இல்லை!
மாறாக,
வங்கதேசத்திலிருந்து மிகக் குறைந்த விலையில் துணிகளை இறக்குமதி செய்து உள்நாட்டு உற்பத்தியை நாசம் பண்ணினார் மோடி அவருக்கு நன்றாக தெரியும் வங்கதேசத்திலிருந்து மிக குறைந்த அளவில் ஜவுளி பொருட்களை இறக்குமதி செய்தால் இதனால் தமிழ்நாடு மிக மோசமாக பாதிப்படையும் என்று ஆனால் பாதிப்படையப் போவது தமிழர்கள் தானே என்று ஒப்பந்தம் போட்டார்.
அதோடு பருத்திக்கு வரி உயர்வு – இதுதான் மோடியின் “டெக்ஸ்டைல் கொலை” திட்டம்.
இதன் விளைவு என்ன?
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுக்க 3000+ டெக்ஸ்டைல் மில்கள் மூடல்.
தமிழகத்திலேயே 800க்கும் மேற்பட்ட டெக்ஸ்டைல் மில்களுக்கு பூட்டு. 2 லட்சம் பேருக்கு நேரடியாகவே தொழில் இழப்பு.
சமீப காலத்தில மட்டும் 300 மில்கள் மூடப்பட்டுவிட்டது. https://www.thehindu.com/news/national/tamil-nadu/over-300-textile-mills-shut-in-tamil-nadu-in-last-few-years-says-report/article70664034.ece
இவ்வளவு பேருடைய வாழ்க்கையை சீரழித்து விட்டு, அதே விருதுநகர் மாவட்ட மக்களிடம் டெக்ஸ்டைல் பார்க் போடுவோம் – 1000 பேருக்கு வேலைன்னு சொல்றதுக்கு இது பொய்யா? இல்ல மக்களை முட்டாள்னு நினைக்கிற அகங்காரமா?
“தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம்”ன்னு நினைக்கிற இந்த பாஜக திமிரை தமிழ்நாடு தான் அடக்கணும், அடக்கும்.
ஒருபக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை அழிச்சிட்டு, மறுபக்கம் மத பிரச்சனையில மக்களை மூழ்கடிக்க முயற்சி பண்ணுற இந்த கும்பலை அரசியலா தோற்கடிக்கறதுதான் விருதுநகர் மக்களின் முதல் கடமை.
வேலை கொடுத்தவங்க யார்? வேலை பறிச்சவங்க யார்? இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சா, இந்த “டெக்ஸ்டைல் பார்க்” நாடகம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலைன்னு புரியும். #கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி #தமிழின எதிரி RSS-பாஜக #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #✍️மே17 இயக்கக் குரல்
திருச்சியில் சீமான் நடத்திய மாநாட்டின் பெயர் 'மாற்றத்திற்கான மாநாடு'. என்ன மாற்றம் என்று பல பேர் குழம்பி இருப்பீர்கள். அது வேறு ஒன்றும் இல்லை முற்றும் முழுதாக பிராமண கடப்பாரையை கவ்வி விட்டேன் என்கிற மாற்றத்தை அறிவிக்கும் மாநாடு தான் அது.
ஏற்கனவே பெரியாரை இகழ்ந்து, பாரதியை தூக்கி பிடித்து, ஆர்எஸ்எஸ் புகழ் பாடி தான் ஒரு பிராமண அடி வருடி என்பதை நிரூபித்து விட்டார் என்றாலும், இந்த மாநாட்டின் வழியாக ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் அறிவித்திருக்கிறார் உதாரணத்திற்கு இரண்டு செய்திகள்.
1. தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு நீதிக்கட்சி, காமராஜர் எம்ஜிஆர் இப்போதைய திமுக அரசு என காலை உணவு, மதிய உணவு கொடுத்து அனைவரையும் படிக்க வைத்தார்கள். ஆனால் இந்த பிராமண கடப்பாறை சீமான் அதை நிறுத்தி விடுவாராம். இது முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் இன் குரல் இல்லையா?
2. தமிழ் சமூகத்தின் மேன்மைக்காக போராடிய அனைத்து தலைவர்களையும் பெரியாரோடு ஒப்பிட்டு சமூகத்தை இரண்டாக பிளக்கும் வேலையை செய்த சீமான். இப்போது அயோத்திதாசரா அம்பேத்கரா என்கிற ஒரு கேடுகெட்ட வேலையை இந்த மாநாட்டின் வழி செய்திருக்கிறார்.
நாம் ஆரம்பத்திலேயே சொன்னது தான் பெரியாரை சாதிய வட்டத்துக்குள் அடைக்கும் சீமான். இதோடு நிற்கப் போவதில்லை அடுத்து யாரெல்லாம் ஆதிக்கத்திற்கு எதிராக தத்துவங்களை பேசினார்களோ அவர்கள் மீது அவதூறு பரப்புவார் என்று அந்த வகையில் இப்போது அம்பேத்கர் அவர்களை அயோத்திதாசர் ரோடு ஒப்பிட்டு அயோத்திதாசர் தமிழர் அம்பேத்கர் தமிழர் இல்லை என்கிற ஒரு கேடுகெட்ட வேலையை செய்ய தொடங்கி இருக்கிறார். அடுத்து மார்க்சை நோக்கி தான் இந்த சோம்பி சீமான் கூட்டம் வரும். சீமானின் நோக்கம் அனைவரையும் தமிழ் சமூகத்திலிருந்து அவர்களின் தத்துவத்தை நீக்கிவிட்டு பிராமண தத்துவத்தை தமிழ் மக்களின் மீது திணிக்கும் வேலைதான் இது. இதைத்தான் குருமூர்த்தியின் ஏற்பாட்டால் மிகத் தாராளமாக செலவு செய்து இந்த மாற்றத்திற்கான மாநாட்டில் செய்திருக்கிறார்.
ஆனால் இது எதைப் பற்றியும் தெரியாமல் விசில் அடிச்சான் குஞ்சுகளாகவும், தற்குறிகளாகவும் பார்த்தீர்களா எங்கள் மாநாட்டில் கொடி கம்பம் எவ்வளவு உயரத்தில் கட்டி இருக்கிறோம். மேடை அலங்காரத்தை பார்த்தீர்களா? தண்ணீர் பாட்டல் ஒன்று கூட தொலையவில்லை என்று தற்குறி தம்பிகள் புலங்காயிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
தம்பிகளே அன்னார்ந்து நீங்கள் விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் உங்கள் சட்டப்பைக்குள் கையை விட்டு பணத்தை திருடும் திருடனை கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்களே! இப்போது சொல்லுங்கள் விஜய்யின் ரசிகர்கள் தற்குறிகளா அல்லது நீங்களா? #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழின எதிரி RSS-பாஜக #கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி #தமிழ்நாடு தமிழருக்கே!
இந்திக்குத் தமிழ் நாட்டில் ஆதிக்கமாம் நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே செந்தமிழுக்குத் தீமை வந்த பின்னும்
இந்த தேகம் இருந்தொரு லாபமுண்டோ என்று பாடினான்
புரட்சி பாவலன் பாவேந்தர் பாரதிதாசன்
உலகத்தில் எந்த தேசிய இனமும் தன்னுடைய மொழியைகாக்க இத்தனை உயிர்களை ஈகம் செய்திருக்குமா என்றால் இல்லை...
அப்படி ஒரு வீரியமான போராட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள்.
அப்படிபட்ட தமிழர் நிலத்தில் இன்று இந்தியின் ஆதிக்கம் தலைதூக்குவதை தமிழர்கள் அனுமதிக்கமுடியாது..
மீண்டும் மொழிப்போரை மே பதினேழு இயக்கம் தொடங்கி வைத்துள்ளது.
உலக தாய்மொழி நாளன்று எழும்பூர் இரயில் நிலையத்தில் மே பதினேழு இயக்கத்தின் இந்தி அழிப்பு போராட்டம் ஒரு துவக்கப்புள்ளி தமிழ்நாடெங்கும்
தீ பரவட்டும் 🔥🔥
#தமிழ்வாழ்க
#may17movement
#💪 மே17 இயக்கம் #தமிழ்த்தேசியம் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு தமிழருக்கே!
நேற்று மே 17 இயக்கத்தின் சார்பாக நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்திற்காக காத்துக் கொண்டு இருந்த நேரம் அருகில் இருக்கிற தேநீர் கடையில் தேனீர் அருந்த நானும் தோழர் ஒருவரும் சென்றிருந்தோம். அப்போது அங்கே காவலுக்காக வந்திருந்த காவலர்களில் இருவர் தேநீர் அருந்த வந்தார்கள். எங்களைப் பார்த்ததும் எதுக்கு சார் இந்த போராட்டம் என்று கேட்டார்கள். காவலுக்காக வந்திருக்கிறீர்கள் என்ன போராட்டம் என்று எல்லாம் உங்களுக்கு சொல்ல மாட்டார்களா என்று கேட்டேன். இல்லை சார். திருமுருகன் காந்தி சார் வருகிறார் என்று மட்டும் தான் தெரியும். போராட்டம் எதற்கு என்னவென்று எல்லாம் சொல்ல மாட்டார்கள் என்று சொன்னார்.
சரியென்று நான் வேறு ஒன்றும் இல்லைங்க 80 வருடமாக தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள். நாமும் ஒவ்வொரு முறையும் எதிர்க்கிறோம். ஆனாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல அவர்களை திருத்த முடியவில்லை. இப்போது தென்னக ரயில்வேயில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் இந்திக்கு முதன்மை கொடுத்து தமிழை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்கள். அதனால் இந்தி எழுத்தை அழிக்கும் போராட்டத்தை தான் இன்னைக்கி முன்னெடுக்கிறோம். தமிழ்நாட்டில் எதற்கு இந்தி என்று சொன்னேன்.
அவர் பாமரருக்கு உரிய பதிலான நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். தமிழ் வேண்டும் தான் சார். ஆனா நார்த் இந்தியாவில் வேலைக்கு போகும் போது இந்தி தெரியாமல் சிரமப்படுகிறோமே என்று கேட்டார். அதனால் வேலை கிடைக்காமல் போகிறதே சார் என்று அவருக்குள்ள அறியாமையால் இந்த கேள்வியை கேட்டார்.
நான் சொன்னேன் அதற்காகத்தான் சார் இந்த போராட்டம் என்று சொன்னேன். அவருக்கு புரியவில்லை என்னவென்று கேட்டார். பட்டியலில் உள்ள 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளையும் ஏற்றுக் கொண்டு விட்டால் எல்லா மொழிகளிலும் தேர்வு நடக்கும். அப்படி நடக்கும் போது எல்லா மொழி பேசுபவர்களும் போட்டி போட முடியும் யாருக்கு திறமை இருக்கிறதோ அவர்கள் முன்னே வரலாமே ஏன் இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அந்த மொழியை மட்டும் எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்தி தான் இந்தியா என்றால் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மராத்தி குஜராத்தி இவர்களெல்லாம் இந்தியாவில் யார் என்று கேட்டேன்.
ஐரோப்பிய யூனியன் மொத்தம் 27நாடுகளைக் கொண்டது. அதில் 24 மொழிகளையும் அரசின் அலுவல் மொழியாக வைத்திருக்கிறார்கள். அவர்களால் அது முடியும் என்கிற பொழுது இந்தியாவால் ஏன் முடியவில்லை? இவர்களின் நோக்கம் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுப்பது அல்ல, இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதன் மூலம் சமஸ்கிருதத்தை அனைவரும் படிக்கச் செய்து அதன் மூலம் பார்ப்பனர்களின் மொழி தான் சிறந்தது என்றும், அவர்களே சிறந்தவர்கள் என்றும் நம்மை நம்ப வைப்பதற்காக தான் இதை செய்கிறார்கள் என்றேன்.
அதனால் தான் இந்திக்காரர்களை பார்த்து பார்த்து தமிழ்நாட்டுக்கு அனுப்புகிறார்களோ போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாடு இந்திக்காரர்களின் நாடு ஆகிவிடும் போல இருக்கு சார். இங்க காவலுக்கு வந்த பிறகு தான் தெரிகிறது ஒரு நாளைக்கு எக்கச்சக்கம்பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள் சார் என்று சொல்லிவிட்டு, பையா எனக்கு ஒரு சாயா கொடு என்று சொன்னார். உடனே அருகில் இருந்த இன்னொரு காவலர் பாருங்கள் சார் எங்கள் வாயாலேயே சாயா என்று சொல்ல வைத்து விட்டார்கள். இப்படியே போனால் தமிழுக்குப் பதில் இந்தி தான் பேசணும் போல இருக்கு தமிழ்நாட்டிலேயே என்று வருத்தப்பட்டு விட்டு நாங்களும் நிறைய தெரிஞ்சுக்கணும் போல, இல்லன்னா என் வாயாலேயே தமிழ் எதற்கு அப்படின்னு சொல்ல வச்சிருவாங்க போல இருக்கு அப்படின்னு சொல்லிட்டு சரி சார் நான் கிளம்புறேன் என்று போய்விட்டார்.
இப்படி படித்தவர்களுக்கே நிறைய போதாமைகள் இருக்கிறது. இந்த போதாமைகளை பயன்படுத்தி தான் இந்தி என்னும் அரக்கியை தமிழ்நாட்டின் மீது திணிக்கிறது ஒன்றிய அரசு. ஆகவே எப்பாடுபட்டாலும் இந்தி திணிப்பை எதிர்த்தே ஆக வேண்டும். #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #💪 மே17 இயக்கம் #தமிழ்த்தேசியம் #தோழர் திருமுருகன் காந்தி
#🎥Trending வீடியோஸ்📺 #தமிழ்நாடு தமிழருக்கே! #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம் #✍️மே17 இயக்கக் குரல்
"ராமர் கோவிலில் ஏற்றப்பட்டிருக்கும் கொடியில் இடம்பெற்றிருக்கும் முத்திரை என்ன?"
"தாமரை மலரில் அமர்ந்திருக்கும் கடவுளின் பெயர் என்ன?"
கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடந்த NIFT நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் இவை.
இத்தேர்வுக்கு சென்றிருந்த தோழர் ஒருவர்தான் இத்தகவலை சொன்னார்.
கூடுதலாக இத்தேர்வுக்கென ஒதுக்கப்பட்ட தேர்விடம் மிகக் கொடுமையான தேர்விடம். வானகரம் அருகே ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் நடந்த தேர்வுக்கு காலை 8 மணிக்கே செல்ல வேண்டும். மாலை 4 மணி வரை தேர்வு. காற்று வசதி கூட இல்லாத அளவுக்கான ஒரு குடோன் போன்ற இடத்தில் தேர்வு. போதுமான அளவுக்கு குடிநீர் கூட இல்லை. தேர்வு முடிந்த வெளியில் வந்த தோழர் வாந்தி எடுக்குமளவுக்கு புழுக்கம் நிறைந்த ஒரு கொடும் கூடத்தில் தேர்வு நடந்திருக்கிறது.
ஏற்கனவே 2016-ல், பாஜக ஆட்சிக்கு வந்த இரு வருடங்களில் NIFT தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவை சேர்ந்தவருமான சேத்தன் செள்ஹானை நியமித்தது. பேஷன் கல்வி மட்டுமின்றி கல்வித்துறைக்குமே கூட சம்பந்தமற்ற ஒருவரை NIFT-க்கு தலைவராக பாஜக நியமித்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவரும் அதற்கேற்றார்போல 20% மட்டும்தான் NIFT-க்கு பணிபுரிவேன் என திருவாய் மலர்ந்தார்.
கடந்த 2022-ல் சென்னை NIFT தலைவர் அனிதா மீது தலித் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்ட சம்பவம் நடந்தது.
NIFT-ல் அனுமதிக்கப்படுவதற்கு என Domicile என ஒரு பிரிவை வைத்திருக்கின்றனர். State Domicile பிரிவில், சொந்த மாநிலத்திலுள்ள NIFT நிறுவனத்தில் இடம்பெறும் வாய்ப்பை நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணாக்கர் பெற முடியும்.
ஆச்சரியகரமாக பெரும்பாலான மாநிலங்களுக்கு இருக்கும் இந்த State Domicile பிரிவு, தமிழ்நாட்டுக்கு இல்லை.
அதாவது தமிழ்நாட்டில் தேர்வு பெறும் மாணவ மாணவியர் தமிழ்நாட்டு NIFT-ல் சேரும் வாய்ப்பு இல்லை. இவர்களுக்கான இடம் அனைத்து இந்திய மாணவர்கள் பட்டியலில் இருந்து ஒதுக்கப்படும். அது தமிழ் மாணவர்களுக்கு தமிழ்நாடாக இல்லாமல் போகும் வாய்ப்புகளே மிக மிக அதிகம்.
இதற்கு நேரடி அர்த்தம், சென்னை NIFT-ல் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதுதான்.
இன்னும் தெளிவாக சொல்வதெனில் தமிழ் மண்ணுக்குரிய Fashion என்பது, இந்திய Fashion கல்வியில் இருக்காது. இருந்தாலும் அது பார்ப்பனிய fashion ஆக இருக்கும்.
பொதுவாகவே ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்திய தேசிய திணிப்பும் தமிழ் மற்றும் தமிழ்நாடு மீதான பாரபட்சமும் காட்டப்படும் நிலை இருக்கும். ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு கூடுதலாக காவி திணிப்பும் நடந்தேறி வருகிறது.
காவி திணிப்பு என்பது இட ஒதுக்கீடு மறுப்பு, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீதான ஒடுக்குமுறை, பார்ப்பனிய சிந்தை, சாதிய அடுக்குமுறை, சிறுபான்மையினர் வெறுப்பு, தென்னிந்தியா-தமிழ்நாடு மீதான வன்மம் என்பதை அறிக! #கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி #தமிழின எதிரி RSS-பாஜக #தமிழ்த்தேசியம் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴
#தமிழின எதிரி RSS-பாஜக ## மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை😱 #கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி #தமிழ்நாடு தமிழருக்கே!










