#✍️மே17 இயக்கக் குரல் #📺அரசியல் 360🔴 #தமிழ்த்தேசியம் #தமிழ்நாடு தமிழருக்கே! #தோழர் திருமுருகன் காந்தி
#📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #✍️மே17 இயக்கக் குரல் #தோழர் திருமுருகன் காந்தி
தமிழ் மொழி உரிமைப் போரில் ஆதிக்க இந்தியை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் நினைவாக, மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த "ஆதிக்க இந்தியை அழிக்கும்" போராட்டம் சிதம்பரத்தில் இன்று (மார்ச் 01, 2026 ஞாயிறு) சிதம்பரம் ரயில் நிலையத்தின் முன்பாக நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் மே 17 இயக்கத் தோழர்கள் இந்திக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு சிதம்பரம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, இந்தி எழுத்துக்களை அழிக்க முற்பட்ட போது காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010 #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💪 மே17 இயக்கம் #✍️மே17 இயக்கக் குரல்
1965ம் ஆண்டு மொழிப்போரில் "உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" என கடிதம் எழுதி நஞ்சுண்டு, தன்னுயிரை ஈகம் செய்த கல்லூரி மாணவர் மொழிப்போர் ஈகியர் பீளமேடு தண்டபாணி நினைவாக,
மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த "ஆதிக்க இந்தியை அழிக்கும்" போராட்டம் கோவையில் மார்ச் 01, 2026 ஞாயிறு அன்று மத்திய ரயில் நிலையம் முன்பாக நடைபெற்றது.
போராட்டத்தின் தலைமை சிறப்புரை:
தோழர் கு.ராமகிருட்டிணன்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தோழர் திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
கண்டன உரை:
தோழர் சுசி கலையரசன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
தோழர் அ.சேதுபதி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
தோழர் ராவணன்
ஆதித்தமிழர் பேரவை
தோழர் நேருதாஸ்
திராவிடர் சுயமரியாதை கழகம்
தோழர் அன்பு மகேஷ்
திராவிடர் விடுதலைக் கட்சி
முன்னிலை:
தோழர் கணபதி செல்வராஜ்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
தோழர் கௌசல்யா
சமூக செயற்பாட்டாளர்
தோழர் உமர் ஷெரீப்
எஸ்டிபிஐ
தோழர் பார்த்திபன்
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்
தோழர் மாறன்
மக்கள் அதிகாரக் கழகம்
தோழர் ராஜன்
மக்கள் அதிகாரக் கழகம்
தோழர் ஆனந்தி
விடுதலை தமிழ்ப் புலிகள்
தோழர் ராஜீவ் காந்தி
மக்கள் விடுதலை முன்னணி
மற்றும் மே17 இயக்கம் உள்ளிட்ட தோழமை இயக்க தலைவர்கள் தோழர்கள் தமிழின உணர்வாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் இந்தி அழிப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010 #கோவை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #தமிழ்த்தேசியம் #🚨கற்றது அரசியல் ✌️ #தோழர் திருமுருகன் காந்தி
'தமிழ்த்தேசியப்பெருவிழா 2026'
மாரியம்மனோ, முருகனோ, அய்யனாரோ, ஆசிவகமோ, சேயோன்-மாயோன் என எந்த நம்பிக்கையாக இருந்தாலும், பெளத்தமோ, சமணமோ, வைதீகமோ, சைவமோ, வைணவமோ, இசுலாமோ, கிருத்துவமோ என எம்மதமாக அல்லது மார்க்கமாக இருந்தாலும் அவை தமிழர் மீது உருவாக்கிய தாக்கங்கள் இன்றளவும் நம்முடைய சமகால அரசியல்-சமூக வாழ்வை பாதிக்கின்றன.
இவற்றில் எது வாழ்ந்தது? எது வீழ்ந்தது? என நாம் அறிய வேண்டும்.
எது உதவியது? எது சுரண்டியது? என நாம் அறிந்தாக வேண்டும்.
இன்று எது வருகிறது? எது விரட்டப்படுகிறது? என்பதை நாம் புரிந்தாக வேண்டும்.
எது நம்பிக்கை? எது மூடநம்பிக்கை? என தெளிந்தாக வேண்டும்.
இவற்றை குறித்த வரலாறை தெளிவுபடுத்த தொல்லியல், மானுடவியல், பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளர்கள் உரையாற்ற மாநாட்டை கூட்டியிருக்கிறோம்.
மூன்றாம் மாநாடாக அறிவர் மாநாடு மார்ச் 07, 08ம் தேதிகளில் கூடுகிறது.
தமிழர் நிலத்தில் நிலவிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் குறித்து அறிஞர் அவையம் கூடுகிறது. 2026ம் ஆண்டின் தமிழ்த்தேசியப் பெருவிழா வரும் வாரத்தில் இரு நாட்களாக நடக்க இருக்கிறது. இதற்கு முன் நடந்த இரண்டு மாநாடுகளின் தொடர்ச்சியாக இம்மாநாடு செழுமையாக திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் நாகரீகம் குறித்து 2024ல் புகழ்பெற்ற அறிஞர்களைக் கொண்டு மாநாடு நடத்தியது மே பதினேழு இயக்கம். இரண்டு நாட்கள் நடந்த மாநாட்டில் புகழ்பெற்ற தொல்லியல், வரலாறு, பண்பாட்டு, மானுடவியல், மொழியியல், கலை, படைப்புத்துறை அறிஞர்கள், பேராசிரியர்கள் என ஆளுமைகள் பங்கெடுத்தனர். தமிழரின் மருத்துவம், இசை, வேளாண்மை, அழகியல், பொருளாதாரம், நாடகம், இலக்கியம், மெய்யியல், மொழியியல், சூழலியல் என பல துறைகள் சார்ந்து உரை நிகழ்த்தினர். காலை முதல் இரவு வரையாக 2024ல் நடந்த முதல் அறிவர் மாநாடு, அறிஞர் அவையமாக எழுச்சியுடன் நடந்தது. அறிவுத்திருவிழாவாக இருநாள் நடந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்தனர். விருது விழா, உரைவீச்சு என தமிழ்த்தேசியப்பெருவிழாவாக அது நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் சமகாலத்தில் இல்லாத அறிவுத் திருவிழாவாக மாறியது.
2025ம் ஆண்டும் இரண்டாம் அறிவர் மாநாட்டை நடத்தினோம். இம்மாநாட்டில் 'தமிழரின் அரசியல் வரலாறு' கருப்பொருளாக முன்னிலைப்படுத்தப்பட்டது. சங்க காலம் முதல், மூவேந்தர் ஆட்சிகள், பிற்கால ஆட்சிகள், காலனிய காலம் என வரலாறை பேசியது இம்மாநாடு. அரசர்களின் வரலாறாக மட்டுமல்லாமல் வெகுமக்கள் வரலாறு பேசுபொருளாக முன்வைக்கப்பட்டது. சமூக-அரசியலோடு பின்னிப்பிணைந்த சமயங்கள் வரலாறும் பேசப்பட்டது. ஆரிய வைதீகத்தின் மீதான தமிழர்களின் எதிர்வினைகளை கோடிட்டுக் காட்டியது. வள்ளுவர் முதல் வள்ளலார் வரையிலும், சங்ககாலம் முதல் பெரியார் வரையிலான வைதீக எதிர்ப்பு போராட்ட வரலாறு விளக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள் மிக விரிவான உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்த்தேசிய அரசியலின் தவிர்க்க இயலா தேவையை இம்மாநாடுகள் மூலமாக மே17 இயக்கம் எடுத்துரைக்கிறது.
தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அறிவை கருவியாய் கைப்பிடிக்க இம்மாநாடு பேருதவியாய் விளங்கும்.
தமிழ்த்தேசியத்தின் மீது ஆர்வம் கொண்டோர், தமிழினத்தின் மீது பற்றுகொண்டோரை அன்புடன் அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கத்தினரின் ஆறுமாத கால உழைப்பின் விளைச்சல், 17 ஆண்டுகால போராட்டத்தின் விதை இம்மாநாடு.
அறிவாயுதம் எந்த வாரீர்.
தோழர் திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
01-03-2026 #தமிழ்த்தேசியம் #வரலாறு #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💪 மே17 இயக்கம்
ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது. தலைவர்களை கொன்றழித்து விட்டால் மக்கள் குழப்பம் அடைவார்கள் அதன் மூலம் தங்களது அடிமைகளை வைத்து ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விடலாம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் முடிவு செய்து தொடங்கப்பட்ட போர் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
இனி எதிர்பார்த்ததை போலவே ஈரானில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும். அமெரிக்க இஸ்ரேலின் அடிமை நாய்கள் பதவியை பிடிப்பார்கள். ஈரானின் மக்களை அமெரிக்காவுக்கும் ஜியோனிச இஸ்ரேலுக்கும் அந்த அடிமைகள் அடிமையாக்குவார்கள். உலகின் முக்கிய நீர் இணையான ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் இனி அமெரிக்கா இஸ்ரேலின் பக்கம் செல்லும்.
சீனாவிற்கு எரிபொருள் கிடைப்பது இனி திண்டாட்டத்தை உருவாக்கும். ஏற்கனவே சீனாவின் எரிபொருள் சப்ளையில் பெரும் பகுதியை கொடுக்கும் வெனிசுலாவை அமெரிக்கா கைப்பற்றி விட்டது. இப்போது ஈரானையும் அடிமைப்படுத்தி ஸ்ட்ரைட் ஆப் ஹோர்மோஸ் மூடினால் சீனாவிற்கு எரிபொருள் தட்டுப்பாடு வரும். இதை சீனா எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதில் தான் வரும் காலங்கள் இருக்கிறது.
போர் என்பது நாடு பிடிப்பதற்காக மட்டுமல்ல, யார் பெரிய நாடு என்கிற போட்டிகாக்கவும் இன்று போர்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் அப்பாவிகள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். பல தேசிய இனங்கள் கனவுகள் ஈழம் போன்ற பல தேசிய இன மக்களின் கனவுகள் முற்றும் முழுதாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
போர்கள் என்பது ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு இடத்தில் நடக்கிறது என்று நீங்கள் வாய் மூடி மௌனியாக இருக்க முடியாது. எங்கு போர்கள் நடந்தாலும் உலகத்தில் இருக்கிற எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பை கொடுத்துக் கொண்டுதான் இருக்கும்.
ஈழத்தில் இனப்படுகொலை நடக்கும்போது இந்த அரசியல் புரிதல் நமக்கு இருந்திருந்தால் ஈழத்தையும் காத்திருக்கலாம் வல்லாதிக்கங்களின் ஊடுருவலையும் தடுத்திருக்கலாம்.
அமெரிக்கா இஸ்ரேல் உள்ளிட்ட பாசிச வல்லாதிக்கங்களின் அடுத்த குறி ஆசியா என்ன செய்யப் போகிறோம்? #✍️மே17 இயக்கக் குரல் #புவிசார் அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴
தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து...
40க்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகளை ஏவுகணையால கொலை செய்து போரை தொடங்கியிருக்கிறது இசுரேலும் அமெரிக்காவும். இந்த போர் தொடங்குவதற்கு முன்பாக இசுரேல் பிரதமர் சந்தித்த வெளிநாட்டு பிரமுகர் மோடி. போரின் தொடக்கம் தெரிந்தே இசுரேலுக்கான ஆதரவை மோடி வழங்கியுள்ளார். அமெரிக்காவின் பெட்ரோலிய நெருக்கடியில் இந்தியா வீழ்ந்துவிடாமல் காக்கும் வகையில் கச்சா எண்ணையை இந்தியாவிற்கு கொடுத்து கைகொடுத்த ஈரானுக்கு துரோகம் செய்ய வெட்கப்படவில்லை பாஜக-மோடி அரசு.
ஈரான் மீதான் போர் என்பது 45 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் நீண்ட நாள் விருப்பம். மத்திய ஆசியாவிற்குள்ளாக கால்பதித்து, ஆசியாவை காலனியாக்க நுழைவாயிலாக ஈரானை அது கருதுகிறது. ஈரான் நிலப்பரப்பு அமெரிக்காவின் கைகளுக்குச் சென்றால் ஒட்டுமொத்த மேற்கு, மத்திய ஆசொயாவையும், தெற்காசியாவையும் கட்டுப்படுத்திவிட முடியுமெனில் கச்சா எண்ணை முதல் கனிமம் வரையில் கொள்ளையடிக்கலாம். சந்தைகளை கட்டுப்படுத்தலாம். ரசியா, சீனா முதலாக இந்தியா வரையில் அனைத்தையும் கைகளுக்குள்ளாக ஆங்கிலப்பேரரசு போல கட்டுபப்டுத்திவிடுவார்கள்.
இத்தகய போருக்கு ஏதுவாக பல நகர்வுகளை அமெரிக்கா கடந்த 30 ஆண்டுகளில், சோவியத் உடைவிற்கு பின்பு செய்தது. ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான போரில் கப்பற்படை தளத்தின் போதாமையை உணர்ந்த சமயத்தில் ஈழத்தின் திருகோணமலை அவர்களுக்கு தேவையாய் அமைந்தது. இதன்பொருட்டு சிங்களத்தினை தனது ஏவல்நாயாக வளர்த்து புலிகளை அழித்து திருகோணமலை மீதான ஒப்பந்தங்களை போட்டார்கள். அமெரிக்காவுடனான ராணுவ உறவை தவிர்த்த இந்தியா, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது நிலைப்பாட்டை மாற்றியது. திருகொக்ணமலையை விட்டுத்தர முடிவெடுத்தது. இதனால் இலங்கை, இந்தியா, அமெரிக்காவின் பொது எதிரியாக புலிகள் அறியப்பட்டனர். மூவரும் சேர்ந்து ஈழத்தை அழித்தார்கள். மீண்டுமொரு போராட்ட அமைப்பு எழாத வண்ணம், சாமானிய மக்களையும் கொன்றழித்தார்கள். ஈரான் மீதான போர் தேவைக்காக ஈழம் அழிக்கப்படும் வகையில் அமெரிக்கா தாக்கும் என மேதகு பிரபாகரன், ஈழ ஆய்வாளர் தராகி சிவராம் ஆகியோர் எச்சரித்தவற்றை நாம் மறக்க இயலாது. இதை சொன்னதற்காகவே தராகி சிவராம் கடத்தி செல்லப்பட்டு படுகொ+லை செய்யபப்ட்டார். இப்படியான அறிவுப்பூர்வமான மக்கள் சார்பு ஆய்வாளர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடையாது. ஆமைக்கறி கதை சொல்லியிடம் சிக்கிய போலி-தமிழ்த்தேசியம், இந்த புவிசார் அரசியலை மக்களிடம் சேர்க்காமல் தடுத்தது.
அனைத்தும் கைவசமான பின்னர் மேற்காசியாவில் லெபனான், சிரியா, யேமன் என அனைத்தையும் தாக்கி பலவீனபப்டுத்தினார்கள். ஈரான் தன்மீதான போரை தவிர்க்க உருவாக்கிய போராளிக்குழுக்களாக இருந்த ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுத்தீஸ் ஆகியோரை பலவீனப்படுத்தியது இசுரேல்-அமெரிக்கா. பின்னர் ஈரானின் மீதான வான் தாக்குதலுக்கு ஏதுவாக ஈரான் அருகே இருந்த சிரியாவை கைப்பற்றினார்கள். தற்போது முழுமையான தயாரிப்புடன் தாக்குதலை தொடுக்க அணியமாகிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்கா-இசுரேலுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக சீனா-ரசியா இயங்கால் இருக்க இயலாது. ஏனெனில் ஈரான் வீழ்ந்தால் சீனா-ரசியா மீது நெருக்கடி மத்திய ஆசியாவில் உருவாகும். ஈரானுக்கு வடக்கே அமெரிக்காவிற்கான தளங்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்நிலையில் சவுதி, பாகிஸ்தான், துருக்கி கூட்டமைப்பு சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் எடுப்பார்கள். ஆனால் என்னிலையிலும் இந்தியா ஆதரவாக இயங்கவோ, இசுரேலுக்கு வெளிப்படையான ஆதரவு நிலையோ எடுக்க மாட்டார்கள். ஆக ஆசியாவில் பெரும்பாலான நாடுகள் தம்மைப்பாதுகாத்துக்கொள்ளும் நிலையில் இயங்குவார்கள். போரில் நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுக்காமல் பின்னரங்கில் இயங்குவார்கள். ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவின், அரபு நாடுகளில் இருக்கும் இராணுவதளங்கள் மீது தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் மீதான இந்தியாவின் சிந்தூர் தாக்குதலில் சீனா ராணுவம் பாகிஸ்தானுக்கு துணையாக இயங்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவின் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலின் போது வாய்மூடி மெளனியாக மோடி மாறியதை இந்தியாவின் ராணுவதளபதி புத்தகமாகவே எழுதி விட்டார்.
இவ்வாறான சூழலில் வலியச் சென்று இசுரேலுக்கு ஆதரவளித்துள்ளார் மோடி. இதன் மூலம் பாகிஸ்தான், ஈரான், சீனா ஆகிய நாடுகளுக்கு எதிரியாக தம்மை நிறுத்தியுள்ளார் மோடி. போர்ச்சூழலில் தீவிரமடைந்து, போர் விரிவடையுமென்றால் தெற்காசியாவில் பதட்டம் உருவாகும். இந்தியப்பெருங்கடல் போரின் மையமாக மாறும் பொழுது, இந்தியாவின் மோடி அரசு தென்னிந்தியாவை இந்த போர் சூழலுக்குள் கொண்டு சென்று நிறுத்தும். சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் அமெரிக்க கடற்படை ராணுவ பயன்பாட்டிற்கு வரும் ஒபப்ந்தத்தின் அடிப்படையில் இயங்க ஆரம்பித்தால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் இணைத்தே தமிழர்கள் யோசிக்க வேண்டும். மே17 இயக்கம் கடந்த 17 ஆண்டுகளாக இந்தவகையான புவிசார் அரசியல் குறித்து தீவிரமாக இயங்கியும், பேசியும், புத்தகங்கள்- கட்டுரைகளை வெளியிட்டும் வருகிறது. இவை பிய கட்சிகளால் கவனமெடுக்கப்படவும் இல்லை. மே17 இயக்கம் முன்வைத்த விவாதங்கள் விரிவடையும் வகையில் சிந்தனையாளர்கள் உரையாடலை உருவாக்கவும் இல்லை எனும் கவலை எமக்குண்டு.
ஈரான் தாக்கப்படும் இச்சமயத்தில், தமிழர்கள் புவிசார் அரசியலாகவும், அமெரிக்க-இசுரேல் எதிர்ப்பாகவும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. மே17 இயக்கம் எக்காலத்திலும் தனது ஆய்வை கைவிடாது. எமது இதழான 'குரல்' இதழில் இதுகுறித்து நீண்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளோம். தொடர்ந்து செயல்படுவோம்.
தோழர் திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
பிப்ரவரி 28, 2026 #📺அரசியல் 360🔴 #geopolitics #🚨கற்றது அரசியல் ✌️ #தோழர் திருமுருகன் காந்தி #✍️மே17 இயக்கக் குரல்
#🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் யார் இந்த பீளமேடு தண்டபாணி?
கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் மாரியப்பன் - மாரியம்மாள் இருவரின் இளைய மகனாக 1944இல் பிறந்தவர் தண்டபாணி.பூளைமேட்டில் (இன்றைய பீளமேடு) பொறியியல் மாணவராக விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.
மகன் பொறியாளரானதும் வறுமை மாறும் எனக் குடும்பம் கனவு கண்டது.
இந்தித் திணிப்பை எதிர்த்து இளைஞர்கள் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மாண்ட செய்திகள் தண்டபாணிக்குக் கவலை தந்தன.
மாணவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிக் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகும் நிகழ்ச்சிகள் அவர் கவலையைக் கூடுதலாக்கின.
தமிழுக்கு வாழ்வைத் தேடிய அவர் மனம், தன் வாழ்வைப் பொருட்படுத்த மறுத்தது.
'உயிர்தமிழுக்கு! உடல் மண்ணுக்கு! என்று, தன் இறப்பின் காரணத்தைக் கடிதமாக எழுதி வைத்தார் தண்டபாணி. தமிழ் பெற்ற தான் பெற்ற துயரமாக எண்ணிய அவர் 2.3.1965 ஆம் நாள் பூளைமேடு (பீளமேடு) கல்லூரி விடுதி அறையிலேயே நஞ்சுண்டு மயங்கினார். கோவை அரசு மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.
தமிழுக்காக தன்னுயிரை ஈகம் செய்த பீளமேடு தண்டபாணி போன்று 20க்கும் மேற்பட்டோர் ஆகியோர் ஆகியுள்ளனர். மொழிக்காக மாண்ட வரலாறு தமிழினத்தில் மட்டுமே அரங்கேறியுள்ளது.
ஆதிக்கம் எந்த வழியில் வந்தாலும் தமிழன் அஞ்சாநெஞ்சோடு எதிர்த்திட தயங்கமாட்டான் என்பது வெறும் வாக்கியமல்ல வரலாறு
இதோ எங்கள் புரட்சி கவி பாடும் இந்தி எதிர்ப்பு போர் பாடல்..
முந்துவட ஆரியத்தை முறித்த வர்யாம்
மூவேந்தர் மரபுவழி வந்த வர்யாம்
இந்தியநாட் டரசியலை ஒப்ப வில்லை
இந்திமொழி பொதுவாக்கல் விரும்ப வில்லை
அந்தஇழி செயல்செய்ய அடிமைக் கூட்டம்
ஆளுவோர் பக்கத்தில் இருப்ப துண்மை
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வேலை வேண்டாம்.
விடுதலையால் கெடுதலையா? தீமை! தீமை!
- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 17 பக்கம்: 247)
வடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய் - எதிர்
வரக்காணில் காறிநீ உமிழ்வாய்!
- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 15 பக்கம்: 132)
புரட்சி கவி வரிகளுக்கு மேலும் வலுசேர்த்திட இன்றைய சூழலில் பீளமேடு தண்டபாணி நினைவாக தமிழ் மொழிக்கு இன்னல் விளைவிக்கும் ஆதிக்க இந்தியை அழித்திடுவதே ஒவ்வொரு தமிழனின் கடமை. எனவே திரண்டிடுவோம். கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்!
நாள் : மார்ச் 01 ஞாயிறு
இடம்: கோவை ரயில் நிலையம்.
ஆதிக்க இந்தி ஒழிக
தமிழ் வாழ்க! #கோவை #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு தமிழருக்கே!
இரண்டு நாட்களுக்கு முன் மோடி இஸ்ரேல் சென்றார். கிட்டத்தட்ட 17 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகி இருக்கிறது. விவசாயத்துறை, உற்பத்தி கடல் வாணிபம், பண்பாடு, செயற்கை நுண்ணறிவு, கல்வி, தொழில்நுட்பம் போன்றவை இவற்றில் அடக்கம். எல்லாமுமே சிக்கலான துறைகள் என்பதும் அவற்றுள் இஸ்ரேல் வருவது எத்தகைய ஆபத்து கொண்டிருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்ரேல் பயணத்தின்போது மோடியை பிரபல யாத்வஷேம் காட்சியகத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார் நெதன்யாகு. ஹிட்லர் நடத்திய இனவழிப்பை நினைவுகூர அமைக்கப்பட்ட இந்த காட்சியகத்தில் நெருப்பையும் பூக்களையும் பார்த்ததும் வழக்கம் போல் நம்மாள் அவற்றருகே சென்று கைகூப்பி வணங்கிய செய்த performance உலகளவில் சிரித்து வைக்கப்பட்ட நிலையில், இன்று ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்க தொடங்கியிருக்கிறது.
ஏற்கனவே அமெரிக்காவுக்காக இஸ்ரேலுக்கு தூது சென்றார் மோடி என்பதை நக்கலாக ‘நாம் சொன்னபடி மோடி இஸ்ரேலுக்கு சென்று அமெரிக்காவுக்காக பாடி ஆடியிருக்கிறார்’ என மின்னஞ்சலில் எப்ஸ்டீன் தெரிவித்திருந்தது வெளியாகியிருந்தது. வெளிநாட்டு பயணங்களில் மோடி வெறுமனே ஒப்பந்தம் மற்றும் வணிகம் மட்டும் மேற்கொள்ள செல்லாமல், உலக அரசியலை நிர்ணயிக்க வல்லரசுகளுக்கு இடையில் தூது அல்லது தரகு வேலையையும் செய்ய சென்றிருக்கிறார் என்பது தெரிய வந்த பின்னணியில்தான் மோடி தற்போது இஸ்ரேலுக்கு சென்று வந்ததையும் ஈரான் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதையும் பார்க்க வேண்டும்.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் ஐம்பது வருடங்களுக்கும் மேலான உறவு இருந்து வந்திருக்கிறது. எண்ணெய் மற்றும் எரிபொருள் வழங்குவதில் ஈரான், இந்தியாவுக்கு உறுதுணையாக இருந்து வந்த நாடு. ஆனால் ட்ரம்ப் வந்த பிறகு, இஸ்ரேலின் ஆட்டத்தை வளர்த்து விடும் நோக்கில், ஈரானை தனிமைப்படுத்த இந்தியாவுக்கு ட்ரம்ப் அழுத்தம் தந்தபோது மோடியும் பணிந்தார்.
மத்தியக்கிழக்கை நோக்கியும் குறிப்பாக ஈரான் நாட்டை நோக்கியும் அமெரிக்காவும் அமெரிக்க ஆதரவு தன்னார்வ கூட்டங்களும் எப்போதும் செயலாற்றி வந்திருக்கின்றன. அந்த கூட்டங்களின் ஏவல் நாயாகதான் இஸ்ரேல் செயல்பட்டு வந்தது. தற்போது இஸ்ரேலின் ஏவல் நாயாக அமெரிக்கா செயல்படுகிறது.
ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதற்கான அச்சத்தில் இருந்துதான் அமெரிக்கா மொத்தத்தையும் இயக்கி வருகிறது. பல வருடங்களாக ஈரானுடன் நடந்து வரும் அணு ஆயுத பேச்சுவார்த்தையில் சமீபமாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில்தான் இப்போது இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் யுரேனியம் உள்ளிட்ட அணு ஆற்றல்களை சேமித்து வைக்க மாட்டோமென ஈரான் உறுதி அளித்தும் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.
தாக்குதலை தொடுத்த பிறகு, ஈரானின் தலைவரை அகற்றி விடுவோம் என்றும் மக்கள் அங்கு ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்தி பல்லாண்டு கால ஆசையான தங்களுக்கான ஆட்சியை உருவாக்கிக் கொள்ளும்படியும் ட்ரம்ப் அறைகூவல் விடுத்திருக்கிறார்.
அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தின் மீது தன்னாட்சி உரிமை கொண்டிருந்த நாடுகளாக இருந்தவற்றில் ஈராக்கின் தலைமை முதலில் காலி செய்யப்பட்டது. அடுத்ததாக மிஞ்சி இருக்கும் ஈரான் நாட்டு தலைமையை காலி செய்யும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அணு ஆயுத பேச்சுவார்த்தை என பேசப்படுவதெல்லாம் வெற்றுப் பேச்சுகள்.
தாக்குதலை குறித்து பேசுகையில் “ஈரான் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியதில்லை. ஈரானைதான் எல்லாரும் தாக்கியிருக்கிறார்கள். யார் குற்றவாளி என்பது மொத்த உலகத்துக்கும் தெரியும். அமெரிக்காவின் திட்டம்தான் இது. உலகத்தில் அவர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தவே இதை செய்து கொண்டிருக்கிறார்கள்’ எனக் கூறியிருக்கிறார் ஈரான் நாட்டின் ஷியா மதகுரு.
சீனா கட்டி வரும் புதிய உலக ஒழுங்கை அச்சுறுத்தி தன்னுடைய அதிகாரத்தை மீட்டெடுக்கும் அமெரிக்காவின் முயற்சி, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் தொடங்கியது. அந்த தாக்குதல் இனப்படுகொலையில் முடிந்தது. ஈழம்தான் அதற்கான அச்சுமாதிரி!
அடுத்தடுத்தென விரிந்த சர்வதேச அரசியல் சம்பவங்கள் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டின் அழிச்சாட்டியமாக உருப்பெற்று கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டு, இதர மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என விரிவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவும் அந்த விரிவாக்கத்தில் இருக்கலாம்.
குறிப்பாக இஸ்ரேலின் குரூரம் என்னவென்பதை புரிந்துகொள்ளுங்கள். எப்போதும் இஸ்லாமிய நாடுகளின் மீதான தாக்குதலை அவர்களின் புனித மாதத்தில்தான் நடத்தும்.
ஈரானில் தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல், போராகவும் பல நாடுகளின் மோதலாகவும் விரிவடைய நேரலாம்.
இஸ்ரேலுக்கு சென்று மோடி திரும்பியதும் நடந்திருக்கும் இந்த தாக்குதல், ’இந்தியாவும் உங்களுக்கு துணை நிற்காது’ என இஸ்ரேல் ஈரானை எச்சரிக்கும் வெளிப்பாடாகவே புரிந்து கொள்ள வேண்டும்.
மீண்டும் ஒரு யாத்வஷேத்தை உருவாக்க நெதன்யாகுவும் ட்ரம்ப்பும் முனைந்திருக்கிறார்கள். மோடி சென்று அவர்களை வணங்கி வந்திருக்கிறார். #iran & us war / ஈரான் & அமெரிக்க போர் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #geopolitics #💪 மே17 இயக்கம்
#தமிழ்நாடு தமிழருக்கே! #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம் #தமிழின எதிரி RSS-பாஜக






![கோவை - 5 37389 ~ న ~+ हिनदी ஊ்பாய ~~ ~ FHGIISH ஆதிக்கஇந்தியை eta உட்கர் 711 ح KH ENO பப்டும 41'[ LH HNDT? हरची ஊய am -01~ ై ஆதிக்க கந்தியை அழிக்கும் போராட்டம்ப கோயம்புத்தூர்சந்திப்பு ` Sde d aemnaemfbrman அந்திசயி UNCTO}] எப்போதும் மசயை பரவட்டும் இடமில்லைம நமிழல் பகினேழு வயக்கம் மே பதிசே எவ்வகையில் தபழம் Rolc` WILe 5 37389 ~ న ~+ हिनदी ஊ்பாய ~~ ~ FHGIISH ஆதிக்கஇந்தியை eta உட்கர் 711 ح KH ENO பப்டும 41'[ LH HNDT? हरची ஊய am -01~ ై ஆதிக்க கந்தியை அழிக்கும் போராட்டம்ப கோயம்புத்தூர்சந்திப்பு ` Sde d aemnaemfbrman அந்திசயி UNCTO}] எப்போதும் மசயை பரவட்டும் இடமில்லைம நமிழல் பகினேழு வயக்கம் மே பதிசே எவ்வகையில் தபழம் Rolc` WILe - ShareChat கோவை - 5 37389 ~ న ~+ हिनदी ஊ்பாய ~~ ~ FHGIISH ஆதிக்கஇந்தியை eta உட்கர் 711 ح KH ENO பப்டும 41'[ LH HNDT? हरची ஊய am -01~ ై ஆதிக்க கந்தியை அழிக்கும் போராட்டம்ப கோயம்புத்தூர்சந்திப்பு ` Sde d aemnaemfbrman அந்திசயி UNCTO}] எப்போதும் மசயை பரவட்டும் இடமில்லைம நமிழல் பகினேழு வயக்கம் மே பதிசே எவ்வகையில் தபழம் Rolc` WILe 5 37389 ~ న ~+ हिनदी ஊ்பாய ~~ ~ FHGIISH ஆதிக்கஇந்தியை eta உட்கர் 711 ح KH ENO பப்டும 41'[ LH HNDT? हरची ஊய am -01~ ై ஆதிக்க கந்தியை அழிக்கும் போராட்டம்ப கோயம்புத்தூர்சந்திப்பு ` Sde d aemnaemfbrman அந்திசயி UNCTO}] எப்போதும் மசயை பரவட்டும் இடமில்லைம நமிழல் பகினேழு வயக்கம் மே பதிசே எவ்வகையில் தபழம் Rolc` WILe - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_183803_11a91750_1772391181496_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=496_sc.jpg)





