#மாஞ்சோலை எஸ்டேட் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #தோழர் திருமுருகன் காந்தி
#📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழக அப்டேட்🗞️ #தமிழ்நாடு தமிழருக்கே! #தோழர் திருமுருகன் காந்தி
நீலகிரி மாவட்டம் மசினன்குடி பகுதியில் சீகூர் ஓடை ஓடுகிறது அதன் அருகே சலீம் அலியின் மாணவர் டேவிடர் 1964 ல் ஒரு வீட்டைக் கட்டுகிறார் அதற்கு 'சீட்டல் வாக்' என்று பெயர் சூட்டினார். மற்ற வீடுகளைப் போல அதற்கு வேலி போடவில்லை .
யானைகளும் சிறுத்தைகளும் கடந்து போகும் பாதைக்கு நான் ஏன் வேலி போட வேண்டும்?" என்று கேட்டவர் அவர்.
இந்தச் சூழலில்தான் ஒரு குட்டி யானை அந்த வீட்டு வராண்டாவிற்கு அடிக்கடி வரத் தொடங்கியது. அவரோடு நெருங்கியது அவர் அளவில்லாத அன்பினை அதன்மேல் பொழிந்தார் மனிதர்கள் தங்களைத் துன்புறுத்த மாட்டார்கள் என்பதை அந்த யானை அங்கேதான் கற்றுக்கொண்டது. டேவிடரின் மகன் மார்க் , அந்த இளம் யானைக்கு 'ரிவால்டோ' என்று பெயரிட்டார்.
நாளடைவில் அந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் ரிவால்டோ ஒரு 'செல்லப்பிள்ளை' ஆகிப்போனது.
2013-ம் ஆண்டு ரிவால்டோவின் வாழ்வில் ஒரு கருப்பு ஆண்டு. மார்க் டேவிடர் காலமானார். மார்க் இல்லாத அந்த வீட்டில், திறக்கப்படாத வாசலில் ரிவால்டோ பல மணி நேரம் திகைத்து நின்ற காட்சிகள் பார்ப்பவர் கண்களைக் குளமாக்கியது.
அதே காலக்கட்டத்தில், ஒரு வேட்டைக்காரனின் கண்ணியிலோ அல்லது காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட வெடியிலோ ரிவால்டோவின் தும்பிக்கை நுனி துண்டிக்கப்பட்டது. ஒரு யானைக்கு தும்பிக்கைதான் கை, மூக்கு, வாய் எல்லாம். தண்ணீர் குடிக்கவும், கிளைகளை ஒடிக்கவும் ரிவால்டோ பெரும் போராட்டத்தை சந்தித்தது. ஆனாலும், ரிவால்டோ காட்டை விட்டு விலகவில்லை.
தும்பிக்கை காயத்தால் அவதிப்பட்ட ரிவால்டோவுக்கு மக்கள் வாழைப்பழங்களையும் உணவுகளையும் கொடுக்க ஆரம்பித்தனர். 50 வயதைக் கடந்த அந்த முதிய யானை, ஊருக்குள் வந்தாலும் ஒரு குழந்தையைக் கூட மிரட்டியதில்லை. காட்டின் ஆக்ரோஷமான குணம் அவனிடம் இல்லை; மாறாக ஒரு முதிர்ந்த மனிதனின் நிதானம் இருந்தது.
வயது முதிர்வு மற்றும் சக யானைகளுடன் ஏற்பட்ட மோதலால் உடல் நலிவுற்ற ரிவால்டோ, கடந்த சில நாட்களாக நடக்க முடியாமல் போனது. வாழைத்தோட்டம் கிராமத்தில் படுத்த படுக்கையாக இருந்த ரிவால்டோவுக்கு
வனத்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. இன்று காலை , நீலகிரி மலைகளின் காற்றோடு ரிவால்டோவின் மூச்சுக்காற்று கலந்துபோனது .
ரிவால்டோவின் மரணம் ஒரு யானையின் இறப்பு மட்டுமல்ல. மனிதன் நினைத்தால் ஒரு காட்டு விலங்குடன் கூட அன்பால் பிணைக்கப்பட முடியும் என்பதற்கு ரிவால்டோ ஒரு வாழும் சாட்சியாக இருந்தது. மாவனல்லா மற்றும் பொக்காபுரம் காடுகள் இனி ரிவால்டோவின் கம்பீரமான பிளிறலைக் கேட்க முடியாது, ஆனால் ரிவால்டோ விட்டுச் சென்ற அந்த 'அமைதி' என்றும் அந்தப் பாதைகளில் உலவிக்கொண்டிருக்கும்.யான #🐘யானைகள்🐘 #சுற்றுச்சூழல் #📷நினைவுகள்
தமிழரிடத்தில் தாய்த்தெய்வ வழிபாடுகள் மிகப்பழமையானது. இதன் நீட்சி இன்றும் தமிழரிடத்தில் உள்ளது. அம்மன் கோவில் திருவிழாக்களில், தமிழர் திருமணஙகளில் முளைப்பாரி போடுதல் ஒரு பண்பாடாக இன்றும் தொடர்கிறது. இது தாய்த்தெய்வ வழிபாட்டின் நீட்சியாக 'வளமைப் பண்பாடாக' இயஙகுகிறது.
'கிராம தேவதைகளான காளி, மாரி, பத்திரகாளி முதலான பெண் தெய்வஙகளை நோக்கி முற்றிலும் பெண்களால் நடத்தப்படும் ஒரு சடங்கு முளைப்பாரி ஆகும்.. தமிழ்நாட்டில் இப்பண்பாடு மிகப்பழமையானது என்பார் ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்கள்.
"..ஆரியரது வருகைக்கு முந்தைய தொன்மங்கள் 'வளமைப்பண்பாட்டை' அடிப்படையாகக் கொண்டவை. 'அணங்கு', 'முதுமகள்,' மூத்தோள்' என்பது இவற்றில் சில. இவை தமிழர் தொன்மங்கள். ஆரியரது தொன்மங்கள் வேதபுராணங்களை சார்ந்தவை. ஆரியரது கடவுள்கள் அரசவை சார்ந்தவையாக இயங்கின. இவை அரசன்-அரசவையின் வேள்விமுறை குறித்தவையாக இருந்தன, அதாவது அதிகாரத்திற்கான சடங்குகளாக இயங்கியவை எனலாம். அதனால் தான் ஆரியர்களின் கடவுள் தொன்மங்கள் வேதம்(வைதிக மரபு சார்ந்த) சார்ந்து அரசர்களுக்கான பாடல்களில் காணப்படுகின்றன.." என்கிறார் ஆய்வாளர் தேவ.பேரின்பன். அதாவது தமிழர்களின் தொன்மங்கள் பெண்களை முன்னிறுத்திய தாய்தெய்வ வழிபாட்டின் நீட்சியாகவும், இவற்றிற்கு முற்றிலும் வேறாக ஆரியர் தொன்மங்கள் வேத சடங்குகள்-வேள்விச் சடங்குகளாக அரசனுக்குரியதாக இயங்கின என்கிறார். எளியோர்களின் பண்பாடே இன்றுவரை தொடர்வதை காணலாம் என்பதே இதன் அடித்தளம்..
தமிழர் மரபில் தாய்த்தெய்வ வழிபாடு குறித்து பெரியரியவாதியும், தமிழ்த்தேசிய ஆய்வாளருமாம சி.ஆரோக்கியசாமி அவர்கள் இச்சிந்தனைகளை தொகுத்து நூலை வெளியிட்டுள்ளார்..
இவ்வாறாக தமிழர்களின் வழிபாட்டு முறையும், பண்பாட்டு முறையும் தனித்துவமானதாக, சமத்துவம் கொண்டவையாக இயங்கின. இவற்றை தின்று செரிக்கும் வகையிலன ஆதிக்கத்தையே ஆரிய-வழிபாட்டுக் கூறுகள் இருக்கின்றன.
இவ்வாறாக ஆரிய-வேதத்தால் (வைதீகம்) ஆக்கிரமிக்கப்பட்டு சுவீகரிக்கப்பட்ட தமிழரின் தொல் தெய்வஙகள் இன்றும் பெருந்தெய்வக் கோயில் கருவறைகளுக்கு வெளியே தூண்களிலும், கோபுரங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் பல தெய்வங்கள் எளிய மக்கள் வழிபட்டு வந்தவை அல்லது இன்றும் வழிபடக்கூடியவை. ஆசீவக சாத்தனார்கள், ஐயனார்கள் இவ்வாறாக மாற்றப்பட்டனர் என்பார் சி.ஆரோக்கியசாமி அவர்கள்.
இவ்வாறாக தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றையும், அதன் பின்புலத்தையும், அதன் நீட்சிகளையும் அறிந்து கொள்ளவே மே17 இயக்கத்தால் 'தமிழ்த்தேசியப் பெருவிழா' கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இவ்வாண்டும் மார்ச் 07, 08 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநாடு நடக்க இருக்கிறது.
தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்ள விரும்பும் அனைவரையும் அழைக்கிறோம். போலிகளை விரட்டியடித்து, ஆரியத்தை அழித்தொழித்து, தமிழ்த்தேசியத்தின் கொடி உயர்த்துவோம்.
விரைவில் மாநாட்டின் விவரங்கள் வெளியிடப்படும். தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட தோழர்கள் அவசியம் பங்கேற்று பயனடைய வேண்டுகிறோம்.
#💪 மே17 இயக்கம் #🚨கற்றது அரசியல் ✌️
#தமிழ்த்தேசியம்
நாங்கள் மனிதர்களை நேசிக்கின்றோம், இயற்கையை நேசிக்கின்றோம் அதனால் போராடுகின்றோம்!!!
#may17movement #ThirumuruganGandhi #valentinesday #காதல் #❤️எங்கேயும் காதல் #💗காதலர் தின வாழ்த்துக்கள்💕 #💪 மே17 இயக்கம் #தோழர் திருமுருகன் காந்தி
#🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #தோழர் திருமுருகன் காந்தி #💪 மே17 இயக்கம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
இன்று 2.2.2026 மாலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் தோழமைகள் சந்தித்தோம்.
இன்று, 2.2.2026 முற்பகலில் மயிலாடுதுறை மாவட்ட பகுதியில், இரண்டு முறை குண்டுகள் வெடிப்பது போன்று பலத்த ஓசை கேட்டது. இந்த அதிர்வில் பல இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன. சில வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கிவிட்டன. சில வீடுகளில் கதவுகளில் வீறல் ஏற்பட்டுவிட்டன. இத்தகைய பலத்த ஓசை அவ்வப்போது கேட்டு வருகிறது.
மேற்படி குண்டு வெடிப்பு சத்தம் ONGC நிறுவனத்தின் நில அதிர்வு சோதனை காரணமாக எழுவதாகக் கருதுகிறோம். சிலர் அது ஜெட் விமானம் செல்வதில் Air Release காரணம் என்று அவரவர் கற்பனைக்கு ஏற்ப பதில் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து எங்களுக்கு தெளிவுபடுத்துமாறு கோரினோம் .
மேலும், பலருடைய வீட்டுச் சுவர்கள் வெடிப்பு ஏற்பட்டதற்கும், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததற்கும் இந்திய விமானப்படை ஜெட் காரணமானாலும் சரி, ஓ.என்.ஜி.சி.யின் நில அதிரிவு சோதனை காரணமானாலும் சரி, சம்பந்தப்பட்டவர்களால் முறையாக நட்ட ஈடு தரப்பட வேண்டும். நட்ட ஈட்டை எப்படிப் பெறுவது என்பது குறித்தும் தெளிவுபடுத்த மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினோம்.
மாவட்ட ஆட்சியருக்கும் பலத்த ஓசை எழுந்தது குறித்து அலுவலகத்தில் கூறி இருந்திருக்கிறார்கள். எங்கள் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் எந்தப் பகுதியில் அப்படிப்பட்ட சத்தம் எழுந்தது என்பது குறித்து விசாரித்தறிவதாகக் கூறியிருக்கிறார். ஜன்னல், கதவுகள் பாதிப்புகள் குறித்த பதிவுகளை அளிக்குமாறும, சம்பந்தப்பட்ட மக்கள் நேரில் சந்திக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார். இப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை காண இயலும் என்று நம்புகிறோம்.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம், தமுமுக, விசிக, மக்கள் நீதி மய்யம், மதிமுக, ம.ம.க உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் சந்திப்பில் பங்கேற்றார்கள்.
Perasiriyar Jayaraman
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
02.02.2026 #மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு #பேராசிரியர் ஜெயராமன் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு
#📺அரசியல் 360🔴 மிக கடுமையான உளைச்சலை Epstein-ன் ஆவணங்கள் ஏற்படுத்துகிறது.
காமம், வக்கிரம் ஆகியவை ஒருபுறம் என்றால் உலக அதிகார மையங்கள் கொண்டிருக்கும் அருவருப்புகளின் உச்சம் ஒருபுறம் என்றால், மனிதக் கறி உண்ணும் சடங்கு உள்ளிட்ட பல சடங்குகள் இங்கு இருந்திருக்கிறது என்பது ஒருபுறம் என்றால் உலக அரசியலின் முக்கியமான கட்டங்களும் பல நாடுகளின் அரசியலும் இத்தகைய இடங்களில்தான் கட்டமைக்கப்படுகிறது என்பது ஒருபுறம் என்றால் நோம் சாம்ஸ்கி போன்ற அறிஞர்களும் இந்த மானுட அவலத்துக்கு துணையாக இருந்திருப்பது இன்னொரு புற அதிர்ச்சி.
அமெரிக்க தலைமை தன்னை ஏற்க வேண்டுமென மோடி தூது அனுப்பியது இந்தக் கூட்டத்தைதான். மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு தேவைப்படுகிற ஒருங்கிணைப்பை உருவாக்க இஸ்ரேல் சார்பாக அமெரிக்க தரப்புக்கு இந்த கூட்டத்தின் வழியாகதான் மோடி சென்றிருக்கிறார். இவற்றுக்கான அன்பளிப்புகளில் ஒன்றுதான் இஸ்ரேலிடமிருந்து பெற்ற பெகாசஸ் உளவுசெயலி. இந்த உளவுசெயலி மூலமாக இன்றும் சிறையில் வாடும் உமர் காலீத் போன்ற பல செயற்பாட்டாளர்கள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள் என்கிற உண்மைதான், எப்ஸ்டீன் வெறுமனே பாலியல் குற்றவாளியோ தரகனோ மட்டுமில்லை என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
பைசாண்டிய சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம் போன்ற ஆட்சிகளில் உள்ள மேட்டுக்குடிகள் தங்களுக்கென பிரத்யேக பாலுறவு இச்சைகளை உருவாக்கி அவற்றுக்கான பாலின வகைகளையும் உருவாக்கி பாலியியல் அடிமைகள் என்கிற பண்பாட்டை உருவாக வழிவகை செய்தார்கள்.
உலகில் மனிதர்கள் துய்க்கும் அனைத்தையும் துய்க்க முடிகிற சமூக அதிகாரத்தில் இருப்பவர்கள், அவற்றை தாண்டி தங்களின் இச்சைகளை விரிவடைய செய்யும்போது இத்தகைய வக்கிரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் சாமானியர்களுக்கு இருக்கும் வாழ்க்கை மற்றும் வழக்கங்களில் இருந்து முற்றிலும் வேறு வழக்கங்களை தங்களுக்கு உருவாக்கி, தனித்துவம் வாய்ந்தவர்களாகவும் சிறப்பு சலுகை வாய்த்தவர்களாகவும் ஆக்கிக் கொள்கிறார்கள்.
இயற்கையான மற்றும் சமூகப்பூர்வமான மனித வழக்கங்களிலிருந்து வேறு வழக்கங்களை வரித்துக் கொள்வதன் மூலம் சமூகத்துக்கு மேலே, உயரத்தில் அந்தரத்தில் மிதக்கும் சக்தி பெற்றவர்களாக தங்களை வரித்துக் கொள்கிறார்கள். இத்தகைய வரித்துக் கொள்ளுதல் என்பது ஒரு வகை அதிகாரம்தான். இதனால்தான் இவர்கள் எப்போதும் சாமானிய மனிதர்களை விரும்புவதில்லை. ஒடுக்குமுறை அதிர்ச்சியை தருவதில்லை. போர்களும் இவர்களுக்கு அலுப்பதில்லை.
உலக அதிகாரம், வணிகம், அரசியல் யாவும் இந்த அதிகார முற்றங்களில் தீர்மானிக்கப்படும் அவலம்தான் இதிலுள்ள வக்கிரங்களில் எல்லாம் வக்கிரம். இதற்குள் இருந்துதான் தற்கால அறிவுஜீவிகளும் கலைஞர்களும் தங்களுக்கான வெற்றிகளை வடிவமைத்து கொள்ள வேண்டும் என்பது அவர்களையும் இக்குற்றத்தின் பங்குதாரர் ஆக்குகிறது.
சோவியத் யூனியனை கடுமையாக விமர்சிக்கும் நோம் சாம்ஸ்கி, தனக்கான சிறப்பு சலுகைகளை அதிகார மட்டங்களில் பெறவென எப்ஸ்டீனின் ஆதரவாளராக மிஞ்சிப் போன பிறகு, அவரின் வார்த்தைகள் யாவும் அர்த்தமிழக்கின்றன.
இதிலுள்ள அரசியல் பக்கம் என்னவென்றால் இவை யாவும் அமெரிக்காவின் உளவுத்துறைக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. பிரிட்டனின் அரசுக்கும் தெரிந்திருக்கிறது. பில் கேட்ஸ் உள்ளிட்ட உலக பொருளாதார கர்த்தாக்கள் (!) இந்த கூட்டத்தில் இருந்துதான் தங்களின் வளர்ச்சியை பெற்றிருக்கின்றனர். அமெரிக்க உருவாக்கிய சவுதி அரசு தொடங்கி இந்த எப்ஸ்டீனின் இந்த தீவு முழுமையும் ஏதோவொரு வகையில் இஸ்ரேலுக்காக இயங்கி இருக்கிறது. முதலாம் புஷ் தொடங்கி, ஸ்டீபன் ஹாக்கிங், நோம் சாம்ஸ்கி, அமெரிக்க சார்பு அரபு தலைவர்கள் யாவரும் இங்கு உறுப்பினர்கள்.
எப்ஸ்டீன் ஒரு யூதர். அவருடன் இயங்கிய கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் ஓர் அரை யூதர். இவரின் தந்தை மொசாதில் பணிபுரிந்தவர் என சொல்லப்படுகிறது. கடலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட அவர், மொசாத்தால் கொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் சுற்றுகிறது. ஒரு வகையில் எப்ஸ்டீனும் இஸ்ரேலுக்குதான் இயங்கி இருக்கிறார். அவரும் மொசாத்தாக இருக்கலாம். அவருடைய மரணத்திலும் மர்மம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா-இஸ்ரேல்-பிரிட்டன்-ஐரோப்பா என்கிற உலக ஒழுங்கை பொருளாதார ரீதியாக முதலாளித்துவம் இணைத்தாலும் உள்ளூர முதலாளித்துவம் உருவாக்கும் மனித விரோத வக்கிரங்கள் ஒருங்கிணைந்து செயலாற்றி இருக்கின்றன என்பதற்கு எப்ஸ்டீன் குறித்த ஆவணங்கள் மற்றுமோர் உதாரணம்.
உலகம் முழுக்க கடுமையான எதிர்பிரசாரம் செய்யப்படும் சீன அதிபரோ ரஷிய அதிபரோ வடகொரிய கிம்மோ ஈரானின் கமேனியோ ஈராக்கின் சதாமோ லிபியாவி கடாபியோ இந்த கூட்டத்துக்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'வணக்கம் வைக்காத ராணுவத் தளபதியை கண்டதுண்டமாக வெட்டினார் கிம்' என்றும் 'கட்சியில் கேள்வி கேட்டவரை காணாமலடித்த ஜி ஜிங்பிங்' என்றும் மாதத்துக்கு ஒருமுறை கதை கட்டும் சிஐஏவும் அமெரிக்க ஊடகங்களும் அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் எப்ஸ்டீன் இத்தனை காலம் தப்பித்திருக்க முடிந்ததற்கு யாரெல்லாம் காரணம் என்பது பற்றி ஒரு பத்தி கூட வெளியிட்டதில்லை.
முதலாளித்துவம் முன் வைக்கும் நுகர்வு மிகுதி, சிறப்பு சலுகைகள் மற்றும் கட்டற்ற அதிகார வெறி யாவும் மனிதனின் அடி ஆழத்தில் இருக்கும் அற்பங்களை தட்டியெழுப்பி விடுகிறது.
சிக்மண்ட் ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு உயிர்ப்பு கொள்ளும் இருண்ட இடங்கள்தான் எப்ஸ்டீனின் தீவு போன்ற இடங்கள்.
Squid Games தொடரில் காட்டப்படும் கொடூரங்களை காட்டிலும் பெரும் கொடூரங்கள் எப்ஸ்டீனின் தீவில் அரங்கேறி இருக்கிறது. எப்ஸ்டீனை போல மைக்கேல் ஜாக்சனும் ஒரு தீவு வைத்திருந்தார். இன்னும் இது போல் எத்தனை வெளிவராமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன எனத் தெரியவில்லை.
ஆனால் நமக்கு அமெரிக்காதான் சுதந்திரம் போற்றும் நாடு, முதலாளித்துவம்தான் உலகம் உய்வதற்கான தத்துவம், மோடிதான் ஆகச்சிறந்த இந்தியப் பிரதமர்!
Rajasangeethan அவர்களின் பதிவு #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️
#🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #அரசியல் மீம்ஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴










