Rationalist
ShareChat
click to see wallet page
@332020744
332020744
Rationalist
@332020744
பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை
#✍️மே17 இயக்கக் குரல் #📺அரசியல் 360🔴 #தமிழ்த்தேசியம் #தமிழ்நாடு தமிழருக்கே! #தோழர் திருமுருகன் காந்தி
✍️மே17 இயக்கக் குரல் - 1965-ஆம் ஆண்டு மொழிப்போரில் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர் அண்ணாமலைப் மொழிப்போர் ஈகியர் இராசேந்திரன் அவர்களுக்கு E Lo sl  வீரவணக்கம் செலுத்தும் விதமாக ஆதிக்க இந்தியை அழிக்கும் போராட்டம்! இந்திமொழி ஆதிக்கத்தை அழிக்க அணிதிரள்வீர் 01 [IL8, 2026 ஞாயிற்றுக்கிழமை, காலை 10. 00மணி சிதம்பரம் ரயில் நிலையம் சிதம்பரம் CHIDAMBARAM 008001 6 மே பதினேழு இயக்கம் u 17 ALuul 9884864010 9444327010 1965-ஆம் ஆண்டு மொழிப்போரில் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர் அண்ணாமலைப் மொழிப்போர் ஈகியர் இராசேந்திரன் அவர்களுக்கு E Lo sl  வீரவணக்கம் செலுத்தும் விதமாக ஆதிக்க இந்தியை அழிக்கும் போராட்டம்! இந்திமொழி ஆதிக்கத்தை அழிக்க அணிதிரள்வீர் 01 [IL8, 2026 ஞாயிற்றுக்கிழமை, காலை 10. 00மணி சிதம்பரம் ரயில் நிலையம் சிதம்பரம் CHIDAMBARAM 008001 6 மே பதினேழு இயக்கம் u 17 ALuul 9884864010 9444327010 - ShareChat
#📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #✍️மே17 இயக்கக் குரல் #தோழர் திருமுருகன் காந்தி
📺அரசியல் 360🔴 - ShareChat
00:21
தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து... 40க்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகளை ஏவுகணையால கொலை செய்து போரை தொடங்கியிருக்கிறது இசுரேலும் அமெரிக்காவும். இந்த போர் தொடங்குவதற்கு முன்பாக இசுரேல் பிரதமர் சந்தித்த வெளிநாட்டு பிரமுகர் மோடி. போரின் தொடக்கம் தெரிந்தே இசுரேலுக்கான ஆதரவை மோடி வழங்கியுள்ளார். அமெரிக்காவின் பெட்ரோலிய நெருக்கடியில் இந்தியா வீழ்ந்துவிடாமல் காக்கும் வகையில் கச்சா எண்ணையை இந்தியாவிற்கு கொடுத்து கைகொடுத்த ஈரானுக்கு துரோகம் செய்ய வெட்கப்படவில்லை பாஜக-மோடி அரசு. ஈரான் மீதான் போர் என்பது 45 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் நீண்ட நாள் விருப்பம். மத்திய ஆசியாவிற்குள்ளாக கால்பதித்து, ஆசியாவை காலனியாக்க நுழைவாயிலாக ஈரானை அது கருதுகிறது. ஈரான் நிலப்பரப்பு அமெரிக்காவின் கைகளுக்குச் சென்றால் ஒட்டுமொத்த மேற்கு, மத்திய ஆசொயாவையும், தெற்காசியாவையும் கட்டுப்படுத்திவிட முடியுமெனில் கச்சா எண்ணை முதல் கனிமம் வரையில் கொள்ளையடிக்கலாம். சந்தைகளை கட்டுப்படுத்தலாம். ரசியா, சீனா முதலாக இந்தியா வரையில் அனைத்தையும் கைகளுக்குள்ளாக ஆங்கிலப்பேரரசு போல கட்டுபப்டுத்திவிடுவார்கள். இத்தகய போருக்கு ஏதுவாக பல நகர்வுகளை அமெரிக்கா கடந்த 30 ஆண்டுகளில், சோவியத் உடைவிற்கு பின்பு செய்தது. ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான போரில் கப்பற்படை தளத்தின் போதாமையை உணர்ந்த சமயத்தில் ஈழத்தின் திருகோணமலை அவர்களுக்கு தேவையாய் அமைந்தது. இதன்பொருட்டு சிங்களத்தினை தனது ஏவல்நாயாக வளர்த்து புலிகளை அழித்து திருகோணமலை மீதான ஒப்பந்தங்களை போட்டார்கள். அமெரிக்காவுடனான ராணுவ உறவை தவிர்த்த இந்தியா, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது நிலைப்பாட்டை மாற்றியது. திருகொக்ணமலையை விட்டுத்தர முடிவெடுத்தது. இதனால் இலங்கை, இந்தியா, அமெரிக்காவின் பொது எதிரியாக புலிகள் அறியப்பட்டனர். மூவரும் சேர்ந்து ஈழத்தை அழித்தார்கள். மீண்டுமொரு போராட்ட அமைப்பு எழாத வண்ணம், சாமானிய மக்களையும் கொன்றழித்தார்கள். ஈரான் மீதான போர் தேவைக்காக ஈழம் அழிக்கப்படும் வகையில் அமெரிக்கா தாக்கும் என மேதகு பிரபாகரன், ஈழ ஆய்வாளர் தராகி சிவராம் ஆகியோர் எச்சரித்தவற்றை நாம் மறக்க இயலாது. இதை சொன்னதற்காகவே தராகி சிவராம் கடத்தி செல்லப்பட்டு படுகொ+லை செய்யபப்ட்டார். இப்படியான அறிவுப்பூர்வமான மக்கள் சார்பு ஆய்வாளர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடையாது. ஆமைக்கறி கதை சொல்லியிடம் சிக்கிய போலி-தமிழ்த்தேசியம், இந்த புவிசார் அரசியலை மக்களிடம் சேர்க்காமல் தடுத்தது. அனைத்தும் கைவசமான பின்னர் மேற்காசியாவில் லெபனான், சிரியா, யேமன் என அனைத்தையும் தாக்கி பலவீனபப்டுத்தினார்கள். ஈரான் தன்மீதான போரை தவிர்க்க உருவாக்கிய போராளிக்குழுக்களாக இருந்த ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுத்தீஸ் ஆகியோரை பலவீனப்படுத்தியது இசுரேல்-அமெரிக்கா. பின்னர் ஈரானின் மீதான வான் தாக்குதலுக்கு ஏதுவாக ஈரான் அருகே இருந்த சிரியாவை கைப்பற்றினார்கள். தற்போது முழுமையான தயாரிப்புடன் தாக்குதலை தொடுக்க அணியமாகிறார்கள். இந்நிலையில், அமெரிக்கா-இசுரேலுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக சீனா-ரசியா இயங்கால் இருக்க இயலாது. ஏனெனில் ஈரான் வீழ்ந்தால் சீனா-ரசியா மீது நெருக்கடி மத்திய ஆசியாவில் உருவாகும். ஈரானுக்கு வடக்கே அமெரிக்காவிற்கான தளங்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்நிலையில் சவுதி, பாகிஸ்தான், துருக்கி கூட்டமைப்பு சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் எடுப்பார்கள். ஆனால் என்னிலையிலும் இந்தியா ஆதரவாக இயங்கவோ, இசுரேலுக்கு வெளிப்படையான ஆதரவு நிலையோ எடுக்க மாட்டார்கள். ஆக ஆசியாவில் பெரும்பாலான நாடுகள் தம்மைப்பாதுகாத்துக்கொள்ளும் நிலையில் இயங்குவார்கள். போரில் நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுக்காமல் பின்னரங்கில் இயங்குவார்கள். ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவின், அரபு நாடுகளில் இருக்கும் இராணுவதளங்கள் மீது தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் மீதான இந்தியாவின் சிந்தூர் தாக்குதலில் சீனா ராணுவம் பாகிஸ்தானுக்கு துணையாக இயங்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவின் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலின் போது வாய்மூடி மெளனியாக மோடி மாறியதை இந்தியாவின் ராணுவதளபதி புத்தகமாகவே எழுதி விட்டார். இவ்வாறான சூழலில் வலியச் சென்று இசுரேலுக்கு ஆதரவளித்துள்ளார் மோடி. இதன் மூலம் பாகிஸ்தான், ஈரான், சீனா ஆகிய நாடுகளுக்கு எதிரியாக தம்மை நிறுத்தியுள்ளார் மோடி. போர்ச்சூழலில் தீவிரமடைந்து, போர் விரிவடையுமென்றால் தெற்காசியாவில் பதட்டம் உருவாகும். இந்தியப்பெருங்கடல் போரின் மையமாக மாறும் பொழுது, இந்தியாவின் மோடி அரசு தென்னிந்தியாவை இந்த போர் சூழலுக்குள் கொண்டு சென்று நிறுத்தும். சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் அமெரிக்க கடற்படை ராணுவ பயன்பாட்டிற்கு வரும் ஒபப்ந்தத்தின் அடிப்படையில் இயங்க ஆரம்பித்தால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் இணைத்தே தமிழர்கள் யோசிக்க வேண்டும். மே17 இயக்கம் கடந்த 17 ஆண்டுகளாக இந்தவகையான புவிசார் அரசியல் குறித்து தீவிரமாக இயங்கியும், பேசியும், புத்தகங்கள்- கட்டுரைகளை வெளியிட்டும் வருகிறது. இவை பிய கட்சிகளால் கவனமெடுக்கப்படவும் இல்லை. மே17 இயக்கம் முன்வைத்த விவாதங்கள் விரிவடையும் வகையில் சிந்தனையாளர்கள் உரையாடலை உருவாக்கவும் இல்லை எனும் கவலை எமக்குண்டு. ஈரான் தாக்கப்படும் இச்சமயத்தில், தமிழர்கள் புவிசார் அரசியலாகவும், அமெரிக்க-இசுரேல் எதிர்ப்பாகவும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. மே17 இயக்கம் எக்காலத்திலும் தனது ஆய்வை கைவிடாது. எமது இதழான 'குரல்' இதழில் இதுகுறித்து நீண்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளோம். தொடர்ந்து செயல்படுவோம். தோழர் திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம் பிப்ரவரி 28, 2026 #📺அரசியல் 360🔴 #geopolitics #🚨கற்றது அரசியல் ✌️ #தோழர் திருமுருகன் காந்தி #✍️மே17 இயக்கக் குரல்
📺அரசியல் 360🔴 - ShareChat
#🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் யார் இந்த பீளமேடு தண்டபாணி? கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் மாரியப்பன் - மாரியம்மாள் இருவரின் இளைய மகனாக 1944இல் பிறந்தவர் தண்டபாணி.பூளைமேட்டில் (இன்றைய பீளமேடு) பொறியியல் மாணவராக விடுதியில் தங்கிப் படித்து வந்தார். மகன் பொறியாளரானதும் வறுமை மாறும் எனக் குடும்பம் கனவு கண்டது. இந்தித் திணிப்பை எதிர்த்து இளைஞர்கள் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மாண்ட செய்திகள் தண்டபாணிக்குக் கவலை தந்தன. மாணவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிக் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகும் நிகழ்ச்சிகள் அவர் கவலையைக் கூடுதலாக்கின. தமிழுக்கு வாழ்வைத் தேடிய அவர் மனம், தன் வாழ்வைப் பொருட்படுத்த மறுத்தது. 'உயிர்தமிழுக்கு! உடல் மண்ணுக்கு! என்று, தன் இறப்பின் காரணத்தைக் கடிதமாக எழுதி வைத்தார் தண்டபாணி. தமிழ் பெற்ற தான் பெற்ற துயரமாக எண்ணிய அவர் 2.3.1965 ஆம் நாள் பூளைமேடு (பீளமேடு) கல்லூரி விடுதி அறையிலேயே நஞ்சுண்டு மயங்கினார். கோவை அரசு மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. தமிழுக்காக தன்னுயிரை ஈகம் செய்த பீளமேடு தண்டபாணி போன்று 20க்கும் மேற்பட்டோர் ஆகியோர் ஆகியுள்ளனர். மொழிக்காக மாண்ட வரலாறு தமிழினத்தில் மட்டுமே அரங்கேறியுள்ளது. ஆதிக்கம் எந்த வழியில் வந்தாலும் தமிழன் அஞ்சாநெஞ்சோடு எதிர்த்திட தயங்கமாட்டான் என்பது வெறும் வாக்கியமல்ல வரலாறு இதோ எங்கள் புரட்சி கவி பாடும் இந்தி எதிர்ப்பு போர் பாடல்.. முந்துவட ஆரியத்தை முறித்த வர்யாம் மூவேந்தர் மரபுவழி வந்த வர்யாம் இந்தியநாட் டரசியலை ஒப்ப வில்லை இந்திமொழி பொதுவாக்கல் விரும்ப வில்லை அந்தஇழி செயல்செய்ய அடிமைக் கூட்டம் ஆளுவோர் பக்கத்தில் இருப்ப துண்மை வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வேலை வேண்டாம். விடுதலையால் கெடுதலையா? தீமை! தீமை! - பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 17 பக்கம்: 247) வடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய் - எதிர் வரக்காணில் காறிநீ உமிழ்வாய்! - பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 15 பக்கம்: 132) புரட்சி கவி வரிகளுக்கு மேலும் வலுசேர்த்திட இன்றைய சூழலில் பீளமேடு தண்டபாணி நினைவாக தமிழ் மொழிக்கு இன்னல் விளைவிக்கும் ஆதிக்க இந்தியை அழித்திடுவதே ஒவ்வொரு தமிழனின் கடமை. எனவே திரண்டிடுவோம். கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்! நாள் : மார்ச் 01 ஞாயிறு இடம்: கோவை ரயில் நிலையம். ஆதிக்க இந்தி ஒழிக தமிழ் வாழ்க! #கோவை #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு தமிழருக்கே!
🚨கற்றது அரசியல் ✌️ - 1965-ஆம் ஆண்டு மொழிப்போரில் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு எழுதி வைத்துவிட்டு கடிதம் நஞ்சுண்டு தன் உயிரை ஈகம் செய்த C1L Irೊu கோவை பூ சாகோ தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் மொழிப்போர் ஈகியர் பீளமேடு தண்டபாணி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக ஆதிக்க இந்தியை அழிக்கும் போராடடம்! இந்தி மொழி ஆதிக்கத்தை அழிக்க அணிதிரள்வீர் இராமகிருட்டிணன் தோழர் கோவை கு பொதுச்செயலாளர் , தந்தை பெரியார்திராவிடர்கழகம் திருமுருகன் காந்தி தோழர் ஒருங்கிணைப்பாளர் மேபதினேழு இயக்கம் 01 மாi்சு, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணி ரயில் நிலையம் கோவை கோயம்புத்தூர்சந்திப்பு COIMBATORE JUNCTION மே பதினேழு இயக்கம் [117 Bllinu 9884864010 9444327010 1965-ஆம் ஆண்டு மொழிப்போரில் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு எழுதி வைத்துவிட்டு கடிதம் நஞ்சுண்டு தன் உயிரை ஈகம் செய்த C1L Irೊu கோவை பூ சாகோ தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் மொழிப்போர் ஈகியர் பீளமேடு தண்டபாணி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக ஆதிக்க இந்தியை அழிக்கும் போராடடம்! இந்தி மொழி ஆதிக்கத்தை அழிக்க அணிதிரள்வீர் இராமகிருட்டிணன் தோழர் கோவை கு பொதுச்செயலாளர் , தந்தை பெரியார்திராவிடர்கழகம் திருமுருகன் காந்தி தோழர் ஒருங்கிணைப்பாளர் மேபதினேழு இயக்கம் 01 மாi்சு, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணி ரயில் நிலையம் கோவை கோயம்புத்தூர்சந்திப்பு COIMBATORE JUNCTION மே பதினேழு இயக்கம் [117 Bllinu 9884864010 9444327010 - ShareChat
இரண்டு நாட்களுக்கு முன் மோடி இஸ்ரேல் சென்றார். கிட்டத்தட்ட 17 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகி இருக்கிறது. விவசாயத்துறை, உற்பத்தி கடல் வாணிபம், பண்பாடு, செயற்கை நுண்ணறிவு, கல்வி, தொழில்நுட்பம் போன்றவை இவற்றில் அடக்கம். எல்லாமுமே சிக்கலான துறைகள் என்பதும் அவற்றுள் இஸ்ரேல் வருவது எத்தகைய ஆபத்து கொண்டிருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்ரேல் பயணத்தின்போது மோடியை பிரபல யாத்வஷேம் காட்சியகத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார் நெதன்யாகு. ஹிட்லர் நடத்திய இனவழிப்பை நினைவுகூர அமைக்கப்பட்ட இந்த காட்சியகத்தில் நெருப்பையும் பூக்களையும் பார்த்ததும் வழக்கம் போல் நம்மாள் அவற்றருகே சென்று கைகூப்பி வணங்கிய செய்த performance உலகளவில் சிரித்து வைக்கப்பட்ட நிலையில், இன்று ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்க தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்காவுக்காக இஸ்ரேலுக்கு தூது சென்றார் மோடி என்பதை நக்கலாக ‘நாம் சொன்னபடி மோடி இஸ்ரேலுக்கு சென்று அமெரிக்காவுக்காக பாடி ஆடியிருக்கிறார்’ என மின்னஞ்சலில் எப்ஸ்டீன் தெரிவித்திருந்தது வெளியாகியிருந்தது. வெளிநாட்டு பயணங்களில் மோடி வெறுமனே ஒப்பந்தம் மற்றும் வணிகம் மட்டும் மேற்கொள்ள செல்லாமல், உலக அரசியலை நிர்ணயிக்க வல்லரசுகளுக்கு இடையில் தூது அல்லது தரகு வேலையையும் செய்ய சென்றிருக்கிறார் என்பது தெரிய வந்த பின்னணியில்தான் மோடி தற்போது இஸ்ரேலுக்கு சென்று வந்ததையும் ஈரான் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதையும் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கும் ஈரானுக்கும் ஐம்பது வருடங்களுக்கும் மேலான உறவு இருந்து வந்திருக்கிறது. எண்ணெய் மற்றும் எரிபொருள் வழங்குவதில் ஈரான், இந்தியாவுக்கு உறுதுணையாக இருந்து வந்த நாடு. ஆனால் ட்ரம்ப் வந்த பிறகு, இஸ்ரேலின் ஆட்டத்தை வளர்த்து விடும் நோக்கில், ஈரானை தனிமைப்படுத்த இந்தியாவுக்கு ட்ரம்ப் அழுத்தம் தந்தபோது மோடியும் பணிந்தார். மத்தியக்கிழக்கை நோக்கியும் குறிப்பாக ஈரான் நாட்டை நோக்கியும் அமெரிக்காவும் அமெரிக்க ஆதரவு தன்னார்வ கூட்டங்களும் எப்போதும் செயலாற்றி வந்திருக்கின்றன. அந்த கூட்டங்களின் ஏவல் நாயாகதான் இஸ்ரேல் செயல்பட்டு வந்தது. தற்போது இஸ்ரேலின் ஏவல் நாயாக அமெரிக்கா செயல்படுகிறது. ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதற்கான அச்சத்தில் இருந்துதான் அமெரிக்கா மொத்தத்தையும் இயக்கி வருகிறது. பல வருடங்களாக ஈரானுடன் நடந்து வரும் அணு ஆயுத பேச்சுவார்த்தையில் சமீபமாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில்தான் இப்போது இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் யுரேனியம் உள்ளிட்ட அணு ஆற்றல்களை சேமித்து வைக்க மாட்டோமென ஈரான் உறுதி அளித்தும் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. தாக்குதலை தொடுத்த பிறகு, ஈரானின் தலைவரை அகற்றி விடுவோம் என்றும் மக்கள் அங்கு ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்தி பல்லாண்டு கால ஆசையான தங்களுக்கான ஆட்சியை உருவாக்கிக் கொள்ளும்படியும் ட்ரம்ப் அறைகூவல் விடுத்திருக்கிறார். அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தின் மீது தன்னாட்சி உரிமை கொண்டிருந்த நாடுகளாக இருந்தவற்றில் ஈராக்கின் தலைமை முதலில் காலி செய்யப்பட்டது. அடுத்ததாக மிஞ்சி இருக்கும் ஈரான் நாட்டு தலைமையை காலி செய்யும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அணு ஆயுத பேச்சுவார்த்தை என பேசப்படுவதெல்லாம் வெற்றுப் பேச்சுகள். தாக்குதலை குறித்து பேசுகையில் “ஈரான் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியதில்லை. ஈரானைதான் எல்லாரும் தாக்கியிருக்கிறார்கள். யார் குற்றவாளி என்பது மொத்த உலகத்துக்கும் தெரியும். அமெரிக்காவின் திட்டம்தான் இது. உலகத்தில் அவர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தவே இதை செய்து கொண்டிருக்கிறார்கள்’ எனக் கூறியிருக்கிறார் ஈரான் நாட்டின் ஷியா மதகுரு. சீனா கட்டி வரும் புதிய உலக ஒழுங்கை அச்சுறுத்தி தன்னுடைய அதிகாரத்தை மீட்டெடுக்கும் அமெரிக்காவின் முயற்சி, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் தொடங்கியது. அந்த தாக்குதல் இனப்படுகொலையில் முடிந்தது. ஈழம்தான் அதற்கான அச்சுமாதிரி! அடுத்தடுத்தென விரிந்த சர்வதேச அரசியல் சம்பவங்கள் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டின் அழிச்சாட்டியமாக உருப்பெற்று கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டு, இதர மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என விரிவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவும் அந்த விரிவாக்கத்தில் இருக்கலாம். குறிப்பாக இஸ்ரேலின் குரூரம் என்னவென்பதை புரிந்துகொள்ளுங்கள். எப்போதும் இஸ்லாமிய நாடுகளின் மீதான தாக்குதலை அவர்களின் புனித மாதத்தில்தான் நடத்தும். ஈரானில் தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல், போராகவும் பல நாடுகளின் மோதலாகவும் விரிவடைய நேரலாம். இஸ்ரேலுக்கு சென்று மோடி திரும்பியதும் நடந்திருக்கும் இந்த தாக்குதல், ’இந்தியாவும் உங்களுக்கு துணை நிற்காது’ என இஸ்ரேல் ஈரானை எச்சரிக்கும் வெளிப்பாடாகவே புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு யாத்வஷேத்தை உருவாக்க நெதன்யாகுவும் ட்ரம்ப்பும் முனைந்திருக்கிறார்கள். மோடி சென்று அவர்களை வணங்கி வந்திருக்கிறார். #iran & us war / ஈரான் & அமெரிக்க போர் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #geopolitics #💪 மே17 இயக்கம்
iran &  us war / ஈரான் & அமெரிக்க போர் - ShareChat
#தமிழ்நாடு தமிழருக்கே! #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம் #தமிழின எதிரி RSS-பாஜக
தமிழ்நாடு தமிழருக்கே! - 1965-ஆம் ஆண்டு எொழிப்போரில் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு எழுதி வைத்துவிட்டு நஞ்சுண்டு கடிதம் உயிரை ஈகம் செய்த தன் ndot கல்லூரி மாணவர் கோவை பூ சாகோ தொழில் நுட்பக்  மொழிப்போர் ஈகியர் பீளமேடு தண்டபாணி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக ஆதிக்க இந்தியை அழிக்கும் போராட்டம்! இந்தி மொழி ஆதிக்கத்தை அழிக்க அணிதிரள்வீர் 01 மார்சு, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணி நிலையம் ரயில் கோவை கோயம்புத்தூர்சந்திப்பு COIMBATOREJUNCTION மே பதினேழு இயக்கம் Ul 17 Ei 9884884010 9444327010 1965-ஆம் ஆண்டு எொழிப்போரில் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு எழுதி வைத்துவிட்டு நஞ்சுண்டு கடிதம் உயிரை ஈகம் செய்த தன் ndot கல்லூரி மாணவர் கோவை பூ சாகோ தொழில் நுட்பக்  மொழிப்போர் ஈகியர் பீளமேடு தண்டபாணி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக ஆதிக்க இந்தியை அழிக்கும் போராட்டம்! இந்தி மொழி ஆதிக்கத்தை அழிக்க அணிதிரள்வீர் 01 மார்சு, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணி நிலையம் ரயில் கோவை கோயம்புத்தூர்சந்திப்பு COIMBATOREJUNCTION மே பதினேழு இயக்கம் Ul 17 Ei 9884884010 9444327010 - ShareChat
வி.புலிகளின் மீதான இந்திய அரசின் தடையை எதிர்த்து அய்யா வைகோ அவர்கள் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இம்மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்திய நீதிமன்றங்களின் கேலிக்கூத்தை இந்த வழக்கு எளிமையாக விளக்கும். 2013ம் ஆண்டில் வி.பு மீதான தடை நீட்டிப்பு ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இந்த மனுவை எதிர்த்து அய்யா.வைகோ ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். வி.பு இயக்கத்தவர், ஆதரவாளர், அனுதாபி என எவரும் இந்த தடையாணைக்கு எதிராக வாதிடலாம் எனும் வகையில் தடை ஆணை மீதான விசாரணைக்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. '..நான் வி.பு தீவிர வாழ்நாள் ஆதரவாளன் என்பதால் ரிட் மனுவை தாக்கல் செய்கிறேன்..' என வழக்கை 2013ல் பதிவு செய்திருந்தார். 2014ம் ஆண்டு தடை நீட்டிக்கப்பட்டது. 1992ம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வி.பு மீதான தடை விசாரணைக்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்தது. தனி ஆணையம் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, எவ்வித ஆதாரங்களையும் கணக்கில் எடுக்காமல், உரிய சட்ட விளக்கங்களை கொடுக்காமல் விசாரணை நடத்தப்பட்டு வி.பு மீதான தடை நீட்டிக்கப்படும். வி.பு மீதான தடைக்கு மிக முக்கிய காரணியாக இந்திய அரசால் முன்வைக்கப்பட்டது என்பது ராஜீவ் வழக்கு அல்ல. ஏனெனில் 1992ல் ராஜீவ் வழக்கு விசாரணை முடியவில்லை என்பதால் வி.பு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் இருந்தது. வி.பு மீதான தடைக்கு பொய்யான காரணத்தை பார்ப்பனர்கள் கட்டமைத்தனர். அதாவது '...வி.பு இந்தியாவிற்குள்ளாக இருக்கும் தமிழ்நாட்டையும் பிரித்து ஈ..ழத்தோடு இணைத்துகொள்ள திட்டமிடுகின்றனர், இதற்காக போர் புரிகின்றனர்,.. ஆகையால், இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் தடை செய்ய வேண்டும்..' என..' வாதத்தை கட்டியெழுப்பினர். இதை வலுப்படுத்த தொடர்ந்து கட்டுரைகளை குருமூர்த்தியின் குருநாதர் சோ ராமசாமி எழுதித்தள்ளினார். இதை சு.சாமி உள்ளிட்ட 'பார்ப்பன கடப்பாரைகள்' எழுதியதை ஆதாரமாக வைத்து வழக்குகள் புனையப்பட்டன. பொய் வழக்குகள் புனையப்பட்டு தமிழர்கள் கைதாவார்கள், பொய்யாக செய்திகள் எழுதப்படும், அவை வாதத்திற்கு எடுக்கப்படும். இப்படியாக 2014 வரையில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டது. வி.பு தடை செய்யப்பட்டதால், அவர்கள் தரப்பில் இருந்து ஒருவரும் நேரடியாக விசாரணை ஆணையத்திற்கு வர இயலாமல் தடுக்கப்படுவார்கள். இதை முன்வைத்து வி.பு நேரடியாக தனது தடைக்கு எதிராக வழக்கு நடத்தவில்லை என்பதை காரணம் காட்டி, வி.பு ஆதரவாளர்கள் மனுவை கணக்கில் எடுக்காமல் தடை நீட்டிக்கப்படும்.. இதை நடைமுறைப்படுத்த தடைமீதான விசாரணைக்கு சற்று முன்பாக தமிழ்நாட்டில் சில உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு பொய் வழக்கு போடப்படும். ஈழத்தமிழர்களும் கைதாவார்கள். சிறப்பு முகாம் இதற்காகவே வலுப்பெற செய்யப்பட்டது. இந்த தடையை காரணம் காட்டி பெரியாரிய தோழர்கள், ஈழ ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். முத்த தலைவர்கள் அய்யா வைகோ, பழ.நெடுமாறன், கோவை இராமகிருட்டிணன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் தடா, பொடா வழக்குகளில் நீண்டகாலம் சிறைப்பட்டனர். 2014 வரையில் இப்படியாக இரு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தபப்ட்ட வழக்குகள், அதன்பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிப்பு என மாற்றினர். இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து அய்யா வைகோ தாக்கல் செய்த ரிட் மனு 13 ஆண்டுகளுக்கு பின்னர் இம்மாதம் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மூன்று முறை விசாரணைக்கு நீதிமன்றம் கூடியது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒன்றிய மோடி அரசு வி.பு மீதான தடையை நீட்டிக்க வேண்டும், இந்த வழக்கை நடத்த அய்யா வைகோ அவர்களுக்கு சட்டரீதியான வலு இல்லை என்பதாக முன்வைத்தார். 2013-14கால தடை ஆணையில் வி.பு ஆதரவாளர்கள் (supporters, sympathiser) வழக்கில் பங்குபெற்று தடையை எதிர்க்கலாம் என குறிப்பிடப்பட்டதை சுட்டிக்காட்டி '...நான் வி.பு தீவிர ஆதரவாளன், வி.பு ஆதரித்ததற்காக 18 மாதங்கள் சிறைபப்ட்டிருக்கிறேன், சர்வதேச மன்றங்களில் வி.புலிகளுக்காக உரையாற்றி இருக்கிறேன், தனித்தமி..ழீழம் வேண்டி பொதுவாக்கெடுப்பு கோரி உள்ளேன் இதே கோரிக்கையை தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. ஐ.நா அவை இலங்கையின் குற்றம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது...' போன்ற விவரங்களை அடுக்கினார். பின்னர் "..தடைக்கு காரணமாக இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழ்நாட்டை பிரிக்க வேண்டுமென இந்திய அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மையல்ல, இதற்கான ஆதாரம் எதையும் இந்திய அரசு சொல்லவில்லை. ஆனால் வி.பு இப்படியான கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்த தடையின் அடிப்படை இந்த பொய் குற்றச்சாட்டில் தான் உள்ளது. ஆகவே இதை அம்பலப்படுத்தினால் தடை நீக்கமென்பது சாத்தியமாகுமென்பது மட்டுமல்ல, இந்த குற்றச்சாட்டில் தமிழ்நாடு என குறிப்பிடப்படுவதால், தமிழ்நாட்டை சார்ந்த எனக்கு இதற்கு பதிலளிக்கும் பொறுப்புண்டு என்பதால் நீதிமன்றத்தை நாடியுள்ளேன்..' என்றார். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் திருமதி அனிதா சுமந்த் அவர்கள்..' ... நீங்கள் சொல்லும் காரணங்கள் உண்மையாக இருக்கலாம், ஆனால் இந்த வழக்கை நடத்துவதற்கான முகாந்திரம் maintainability இருக்கிறதா..' எனக்கேட்டார்்.. . 'இந்த தடை 2014ல் கொண்டுவரப்பட்டு 2019, 2024 ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது..ஆகவே காரணங்கள் அப்படியே உள்ளதால்.இந்த வழக்கை விசாரிக்கலாம்' என அய்யா வைகோ வாதத்தை முன்வைத்தார். '... வி.பு மீதான தடை 2013-14ல் கொடுக்கப்பட்ட உத்தரவை தற்போது காரணமாக வைத்து தற்போது வழக்கு விசாரணை செய்ய இயலாது. ஏனெனில் 2019,2024 ஆகிய ஆண்டுகளில் புதிய தடையாணைகள் பிறப்பிக்கப்பட்டதால், 2014 ம் ஆண்டு தடையாணை காலாவதியாகிவிட்டது. இவ்வாறு காலாவதியாகிய ஆணையின் மீது விசாரணை நடத்த இயலாததால், இந்த வ்ழக்கை நிதிமன்றம் தள்ளுபடி செய்கிறது...' என்று சொல்லி அய்யா வைகோ அவர்களின் வழக்கை தள்ளுபடி செய்தார். இந்திய நீதிமன்றத்தையும், மோடி அரசின் வழக்கறிஞரையும் பார்த்து எள்ளலான புன்சிரிப்புடன் பார்த்துவிட்டு வெளியேறினார் அதாவது 2013ல் போடப்பட்ட வழக்கை 13 ஆண்டுகாலம் கழித்து விசாரணைக்கு எடுத்துவிட்டு, காலதாமதம் ஆகியதால் காலாவதியாகிவிட்டதை சுட்டிக்காட்டி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. "உயிரை காத்திடுங்கள்" என ஒருவர் நீதிமன்றத்தை நாடினால், அவர் சாகும்வரை காத்திருந்துவிட்டு, அவர் இறந்த பின்னர், ' வழக்கு தொடுத்தவர் இறந்துவிட்டார் ஆகவே வழக்கிற்கு முகாந்திரம் இல்லை' எனச் சொல்லி நீதியை காக்கும் வழிமுறையை இந்திய நீதிமன்றங்கள் திறம்பட செய்கின்றன. இதே நேரத்தில், தீபம் ஏற்றுவதற்கு பலமுறை தடை செய்யபப்ட்ட வழக்கை தூசிதட்டி எடுத்து, பொய்யான ஒருவரை பக்தர் என சொல்லி வழக்கை பதிந்து, உடனே விசாரணைக்கு எடுத்து, ஆதாரங்களை புறம்தள்ளி, புராணங்களையும், பொய்களையும் சாட்சியமாக்கி நேரடி கள ஆய்வு செய்ததாக நாடகமாடி, கலவரம் செய்பவர்களுக்கு சாதகமாக தீர்ப்பை கொடுத்து நீதி வழங்குவதாக நாடகம் செய்வது பார்ப்பன கடப்பாரைகளுக்கு எளிமையானது. பார்ப்பன கடப்பாரையை தூக்குவேன் என்பவனெல்லாம் தனது பாலியல் வழக்கிற்காக ஆயிரம் தொண்டர்களை திரட்டி கொண்டாடி, இதுதான் தமிழ்த்தேசியமென கொக்கரிக்கும் கோமாளிகளையும் நாம் பார்க்கிறோம். வி.பு இடம் சோறு தின்னவன், சாப்பிட்ட நன்றிக்கடனுக்காக கூட வழக்கு நடத்தவோ, போராடவோ முன்வரவில்லை. இவனை போராளியென கொண்டாடி ஒரு தண்டச்சோறு கூட்டம் அலைகிறது. போலிகளின் பின்னே தமிழினம் சிக்கியுள்ளதை மீட்டாக வேண்டும். பார்ப்பன கடப்பாரைகள் இடிக்க விரும்புவது திராவிடத்தை மட்டுமல்ல, போராளி தமிழ்த்தேசத்தையே என்பதை நேற்றய வழக்கின் போக்கு மீண்டும்எடுத்து சொல்லியது. வி.பு தடைக்கு எதிராக மக்களை, மாணவர்களை திரட்டி மீண்டும் போராட்ட களத்திற்கு வருவோம் என்று நீதிமன்ற வாயிலில் அய்யா வைகோ உறுதிபட தெரிவித்தார். அவரது அயராத முயற்சிக்கு துணையாக மே17 இயக்கம் இயங்கும். வி.பு மீதான நேர்மையற்ற தடையை உடைக்கும் பொறுப்பு தமிழ்நாட்டு தமிழர்களுக்கு உண்டு. இப்பொறுப்பில் கட்சி கடந்து செயலாற்றுவோம் இந்த வழக்கின் விசாரணைக்காக மதிமுக வழக்கறிஞர் அணி அயராது உழைத்தது. இந்த வழக்கிற்காக தமிழ்நாட்டின் பலபகுதிகளில் இருந்து மதிமுக தோழர்கள் பங்கெடுத்தனர். ஈரோட்டிலிருந்து தோழர் பொன்னையன். வே அவர்களும் பங்கெடுத்தார். உடன் மே17 இயக்கத் தோழர்கள் சார்பாக பங்கெடுத்தோம். தமிழர்களின் தாகம் தமி.ழீ.ழ தாயகம். #🚨கற்றது அரசியல் ✌️ # தமிழீழம் #வைகோ #தோழர் திருமுருகன் காந்தி #தமிழ்த்தேசியம்
🚨கற்றது அரசியல் ✌️ - " ~றழை Lio 00 ~ 3 - 0 HONHCAE ٥  a a ~றழை Lio 00 ~ 3 - 0 HONHCAE ٥  a a - ShareChat
“விருதுநகரில் டெக்ஸ்டைல் பார்க் – 1000 பேருக்கு வேலை!”ன்னு பாஜக இப்போது பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறது. கேக்க நல்லாதான் இருக்கு… ஆனா உண்மை என்ன? நன்றாக ஓடிக்கிட்டிருந்த பல டெக்ஸ்டைல் மில்களை மூடி, விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் நேரடியாக 18,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை மண்ணில புதைத்த கும்பல் பாஜக. அந்த உண்மையெல்லாம் மக்களுக்கு தெரியாது என்ற திமிர்ல, இப்போ “1000 பேருக்கு வேலை”ன்னு பொய் விளம்பரம்! அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரத்தை எடுத்துக்கோங்க. ஒரு காலத்தில் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருந்த ஜெயவிலாஸ் குழும மில்கள் கிட்டத்தட்ட எல்லாம் மூடப்பட்டுடுச்சு. பல டெக்ஸ்டைல் மில்கள் இன்று விற்பனைக்கே வைத்தாலும் வாங்க ஆள் இல்ல.அவ்வளவு மோசமான நிலை. இந்த மில்களை நம்பி வாழ்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று “நாளை என்ன செய்வது?”ன்னு திக்குத்தெரியாம நிக்கிறாங்க. இதெல்லாம் பற்றி ஒரு வார்த்தை பேசாத பாஜக, இப்போ “டெக்ஸ்டைல் பார்க் – வேலை வாய்ப்பு”ன்னு நாடகம் ஆடுது. வட இந்திய பணக்காரர்களுக்கும், மார்வாடி–குஜராத் சேட்டுகளுக்கும் பிரச்சனை வந்தா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா என நாடு நாடாக ஓடி ஓடி ஒப்பந்தம் போடும் மோடி, ஆனா திருப்பூர், கோவை, விருதுநகர் மாதிரி இந்திய டெக்ஸ்டைல் துறையின் முதுகெலும்பான பகுதிகளுக்காக குறைந்த விலையில் நூல் கிடைக்க வழி செய்ய ஒரு நடவடிக்கையும் இல்லை! மாறாக, வங்கதேசத்திலிருந்து மிகக் குறைந்த விலையில் துணிகளை இறக்குமதி செய்து உள்நாட்டு உற்பத்தியை நாசம் பண்ணினார் மோடி அவருக்கு நன்றாக தெரியும் வங்கதேசத்திலிருந்து மிக குறைந்த அளவில் ஜவுளி பொருட்களை இறக்குமதி செய்தால் இதனால் தமிழ்நாடு மிக மோசமாக பாதிப்படையும் என்று ஆனால் பாதிப்படையப் போவது தமிழர்கள் தானே என்று ஒப்பந்தம் போட்டார். அதோடு பருத்திக்கு வரி உயர்வு – இதுதான் மோடியின் “டெக்ஸ்டைல் கொலை” திட்டம். இதன் விளைவு என்ன? கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுக்க 3000+ டெக்ஸ்டைல் மில்கள் மூடல். தமிழகத்திலேயே 800க்கும் மேற்பட்ட டெக்ஸ்டைல் மில்களுக்கு பூட்டு. 2 லட்சம் பேருக்கு நேரடியாகவே தொழில் இழப்பு. சமீப காலத்தில மட்டும் 300 மில்கள் மூடப்பட்டுவிட்டது. https://www.thehindu.com/news/national/tamil-nadu/over-300-textile-mills-shut-in-tamil-nadu-in-last-few-years-says-report/article70664034.ece இவ்வளவு பேருடைய வாழ்க்கையை சீரழித்து விட்டு, அதே விருதுநகர் மாவட்ட மக்களிடம் டெக்ஸ்டைல் பார்க் போடுவோம் – 1000 பேருக்கு வேலைன்னு சொல்றதுக்கு இது பொய்யா? இல்ல மக்களை முட்டாள்னு நினைக்கிற அகங்காரமா? “தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம்”ன்னு நினைக்கிற இந்த பாஜக திமிரை தமிழ்நாடு தான் அடக்கணும், அடக்கும். ஒருபக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை அழிச்சிட்டு, மறுபக்கம் மத பிரச்சனையில மக்களை மூழ்கடிக்க முயற்சி பண்ணுற இந்த கும்பலை அரசியலா தோற்கடிக்கறதுதான் விருதுநகர் மக்களின் முதல் கடமை. வேலை கொடுத்தவங்க யார்? வேலை பறிச்சவங்க யார்? இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சா, இந்த “டெக்ஸ்டைல் பார்க்” நாடகம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலைன்னு புரியும். #கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி #தமிழின எதிரி RSS-பாஜக #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #✍️மே17 இயக்கக் குரல்
கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி - Textile Park in Virudhunagar 1000 Jobs'? A HUGE LIE! Over १८,OOOWorkers CLOSED | Buried Jayavilas Mills  Closed Down! 50+ Villagersin Despair Scenario: Textile Sector Destruction; | 800+ Mills Shuttered 300 Mills Closed Recently Cheap Foreign Cloth Imports! High Cotton Duties! Boot the BJP OUTI Textile Park in Virudhunagar 1000 Jobs'? A HUGE LIE! Over १८,OOOWorkers CLOSED | Buried Jayavilas Mills  Closed Down! 50+ Villagersin Despair Scenario: Textile Sector Destruction; | 800+ Mills Shuttered 300 Mills Closed Recently Cheap Foreign Cloth Imports! High Cotton Duties! Boot the BJP OUTI - ShareChat
திருச்சியில் சீமான் நடத்திய மாநாட்டின் பெயர் 'மாற்றத்திற்கான மாநாடு'. என்ன மாற்றம் என்று பல பேர் குழம்பி இருப்பீர்கள். அது வேறு ஒன்றும் இல்லை முற்றும் முழுதாக பிராமண கடப்பாரையை கவ்வி விட்டேன் என்கிற மாற்றத்தை அறிவிக்கும் மாநாடு தான் அது. ஏற்கனவே பெரியாரை இகழ்ந்து, பாரதியை தூக்கி பிடித்து, ஆர்எஸ்எஸ் புகழ் பாடி தான் ஒரு பிராமண அடி வருடி என்பதை நிரூபித்து விட்டார் என்றாலும், இந்த மாநாட்டின் வழியாக ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் அறிவித்திருக்கிறார் உதாரணத்திற்கு இரண்டு செய்திகள். 1. தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு நீதிக்கட்சி, காமராஜர் எம்ஜிஆர் இப்போதைய திமுக அரசு என காலை உணவு, மதிய உணவு கொடுத்து அனைவரையும் படிக்க வைத்தார்கள். ஆனால் இந்த பிராமண கடப்பாறை சீமான் அதை நிறுத்தி விடுவாராம். இது முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் இன் குரல் இல்லையா? 2. தமிழ் சமூகத்தின் மேன்மைக்காக போராடிய அனைத்து தலைவர்களையும் பெரியாரோடு ஒப்பிட்டு சமூகத்தை இரண்டாக பிளக்கும் வேலையை செய்த சீமான். இப்போது அயோத்திதாசரா அம்பேத்கரா என்கிற ஒரு கேடுகெட்ட வேலையை இந்த மாநாட்டின் வழி செய்திருக்கிறார். நாம் ஆரம்பத்திலேயே சொன்னது தான் பெரியாரை சாதிய வட்டத்துக்குள் அடைக்கும் சீமான். இதோடு நிற்கப் போவதில்லை அடுத்து யாரெல்லாம் ஆதிக்கத்திற்கு எதிராக தத்துவங்களை பேசினார்களோ அவர்கள் மீது அவதூறு பரப்புவார் என்று அந்த வகையில் இப்போது அம்பேத்கர் அவர்களை அயோத்திதாசர் ரோடு ஒப்பிட்டு அயோத்திதாசர் தமிழர் அம்பேத்கர் தமிழர் இல்லை என்கிற ஒரு கேடுகெட்ட வேலையை செய்ய தொடங்கி இருக்கிறார். அடுத்து மார்க்சை நோக்கி தான் இந்த சோம்பி சீமான் கூட்டம் வரும். சீமானின் நோக்கம் அனைவரையும் தமிழ் சமூகத்திலிருந்து அவர்களின் தத்துவத்தை நீக்கிவிட்டு பிராமண தத்துவத்தை தமிழ் மக்களின் மீது திணிக்கும் வேலைதான் இது. இதைத்தான் குருமூர்த்தியின் ஏற்பாட்டால் மிகத் தாராளமாக செலவு செய்து இந்த மாற்றத்திற்கான மாநாட்டில் செய்திருக்கிறார். ஆனால் இது எதைப் பற்றியும் தெரியாமல் விசில் அடிச்சான் குஞ்சுகளாகவும், தற்குறிகளாகவும் பார்த்தீர்களா எங்கள் மாநாட்டில் கொடி கம்பம் எவ்வளவு உயரத்தில் கட்டி இருக்கிறோம். மேடை அலங்காரத்தை பார்த்தீர்களா? தண்ணீர் பாட்டல் ஒன்று கூட தொலையவில்லை என்று தற்குறி தம்பிகள் புலங்காயிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். தம்பிகளே அன்னார்ந்து நீங்கள் விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் உங்கள் சட்டப்பைக்குள் கையை விட்டு பணத்தை திருடும் திருடனை கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்களே! இப்போது சொல்லுங்கள் விஜய்யின் ரசிகர்கள் தற்குறிகளா அல்லது நீங்களா? #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழின எதிரி RSS-பாஜக #கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி #தமிழ்நாடு தமிழருக்கே!
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat
இந்திக்குத் தமிழ் நாட்டில் ஆதிக்கமாம் நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே செந்தமிழுக்குத் தீமை வந்த பின்னும் இந்த தேகம் இருந்தொரு லாபமுண்டோ என்று பாடினான் புரட்சி பாவலன் பாவேந்தர் பாரதிதாசன் உலகத்தில் எந்த தேசிய இனமும் தன்னுடைய மொழியைகாக்க இத்தனை உயிர்களை ஈகம் செய்திருக்குமா என்றால் இல்லை... அப்படி ஒரு வீரியமான போராட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள். அப்படிபட்ட தமிழர் நிலத்தில் இன்று இந்தியின் ஆதிக்கம் தலைதூக்குவதை தமிழர்கள் அனுமதிக்கமுடியாது.. மீண்டும் மொழிப்போரை மே பதினேழு இயக்கம் தொடங்கி வைத்துள்ளது. உலக தாய்மொழி நாளன்று எழும்பூர் இரயில் நிலையத்தில் மே பதினேழு இயக்கத்தின் இந்தி அழிப்பு போராட்டம் ஒரு துவக்கப்புள்ளி தமிழ்நாடெங்கும் தீ பரவட்டும் 🔥🔥 #தமிழ்வாழ்க #may17movement #💪 மே17 இயக்கம் #தமிழ்த்தேசியம் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு தமிழருக்கே!
💪 மே17 இயக்கம் - Tl'! இந்திி lit E ;1 எழுஇயக்கம் MAY 00 04 ON தமிம்ாி  సశసని , ENT 600 எழும்பூர் சென்ை தவித்த அந்தியை م7  சுமக்குற் U   பாதச் -=1= வேண்டிய பத 5் இந்தயெனும் ணத்திற்கு அலங்காரம் செய்து வேடிக்கை பார்க்க EGMORE இயலுமா? CHENNAI மே பதினேழு இயக்கம் ٥7 Tl'! இந்திி lit E ;1 எழுஇயக்கம் MAY 00 04 ON தமிம்ாி  సశసని , ENT 600 எழும்பூர் சென்ை தவித்த அந்தியை م7  சுமக்குற் U   பாதச் -=1= வேண்டிய பத 5் இந்தயெனும் ணத்திற்கு அலங்காரம் செய்து வேடிக்கை பார்க்க EGMORE இயலுமா? CHENNAI மே பதினேழு இயக்கம் ٥7 - ShareChat