*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்*
~ ஆசிரியர் அருட்தந்தை மெத்தோடியஸ் அவர்கள்
பாகம்-11
10-வது காட்சி
அன்று பெப்ருவரி 27-ம் நாள். சனிக்கிழமை. காலை 6.30 மணிக்கு பெர்னதெத் கெபிக்கு வருகிறாள். ஏறக்குறைய ஆயிரம் பேர் கூடியிருந்தனர். கால் மணி நேரம் முழந்தாளில் இருந்தபடியே பெர்னதெத் குகைக்கு ஊர்ந்து சென்றாள். பல முறை தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கி எழுந்தாள்.
"பாவிகள் மனம் திரும்புவதற்காக இவ்வாறு தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கு. ஆனால் உனக்கு வெறுப்பும், களைப்பும் இல்லாமல் பார்த்துக் கொள் என்று அன்னை எனக்குச் சொன்னார்” என்றாள் பெர்னதெத்.
பாவிகளின் பாவச் செயல்களுக்குப் பரிகாரமாக மற்றவர்களையும் அவ்வாறு செய்யுமாறு கூட்டத்திலிருந்தவர்களை பெர்னதெத் தூண்டினாள். அவர்களும் இரண்டு முறை அவ்வாறு செய்தனர்.
“இந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்டும்படி குருக்களிடத்தில் சொல்" என்று மீண்டும் அன்னை நினைவுபடுத்தினார்கள்.
11-ம் காட்சி
அன்று பெப்ருவரி 28-ம் நாள். ஞாயிற்றுக்கிழமை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. கடுமையான குளிரும் இருந்தது. அப்படியிருந்தும் 2000 பேருக்கு மேல் அதிகாலையிலேயே வந்து மசாபியேல் குகை அருகே கூடியிருந்தனர்.
பெர்னதெத் சரியாக காலை 7 மணிக்கு கெபிக்கு வந்தாள். வழக்கம் போல் செபமாலை செபிக்கத் தொடங்கினாள், தரையில் முகங்குப்புற விழுந்து எழுந்தாள். அதைப் பார்த்து கூட்டத்திலிருந்தவர்கள் பலர் முகங்குப்புற விழுந்து எழுந்தனர்.
காட்சியின் போது நீண்ட நேரம் அன்னை பெர்னதெத்துடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள் அவளுக்கு வரப்போகும் பல துன்பங்களில் அவள் உறுதியாக இருக்கும்படி அன்னை கேட்டிருக்கலாம் என ஊகிக்கின்றனர்.
அன்று மாலை பெர்னதெத்தை அதிகாரிகள் சிறைக்குக் கொண்டு போய் நீதிபதி முன் நிறுத்தி விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இனைந்திருங்கள்.....
ஆமென்.
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்


