♦️ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்.. 3
***********************************
🚩ராமாயணத்தில் நீங்கள் அறியாத முக்கிய கதைகள்.
ராமாயணம் மற்றும் மகாபாரதம் இவ்விரு காவியங்களும் இந்து புராணங்களின் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
ராமாயாணம் நமக்கு கற்றுத் தரும் பாடமே பேராசையின் விளைவு எவ்வாறு இருக்கு ம் என்பது தான். ராமர் மற்றும் அவரது மனைவி சீதாவைக் காப்பாற்ற இராவண னுக்கு எதிரான காவியப் போர் பற்றிக் கூறுவது தான் ராமாயணம். ராமாயண காவியம்
முனிவர் நாரதரின் அறிவுறுத்தலின் பேரி ல் வால்மீகி முனிவர் எழுதிய புராணம், ‘தர்மம்’, கர்மா, விசுவாசம், பெற்றோர் மீதான பக்தி, குடிமக்கள் மீதான கடமை போன்ற பல மதிப்புமிக்க பாடங்களை ராமாயணத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம்.
பெரும்பாலான இந்துக்கள் இந்த கதை யை சிறு வயதிலிருந்தே அறிந்திருந்தா லும், இந்த கதையின் பல அறியப்படாத உண்மைகளும் உள்ளன.
ராமாயணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளைப் பற்றி பார்க்கலாம்..
🌹10 தலை இராவணன் ஒரு சிவன் பக்தர்
***********************************************
இராவணன் மிகுந்த சிவன் பக்தர் ஆவார் இறைவன் மீது உள்ள பக்தியை நிரூபிப் பதற்காக தன் தலையை அர்ப்பணிப்பார். இராவணன் உண்மையான பக்தர் என்பதால் அவர் தலையை வெட்ட வெட்ட மீண்டும் வளர்ந்துவிடும்.இதுபோல பத்து முறை நிகழ்ந்திருக்கிறது.
இதனால் தான் ராவணனுக்கு பத்து தலை கள் வளர்ந்திருக்கிறது. 6 சாஸ்திரங்களி லும் 4 வேதங்களிலும் தேர்ச்சி பெற்றிருந் தால் ட்டுமே இம்மாதிரியான வரங்களை கடவுள் அருளுவார்.இராவணன் இவை அனைத்திலும் வெற்றி பெற்றவர் ஆவார்.
🌹14 ஆண்டுகள் தூங்காத லக்ஷ்மனன்
********************************************
ராமரையும் சீதையையும் பாதுகாக்கும் முயற்சியில், லக்ஷ்மன் 14 ஆண்டுகளாக தூங்கவே இல்லை! இதனால்தான், அவர் தூக்கத்தை தோற்கடித்த குடகேஷ் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு பதிலாக, அயோத்தாவில் இருந்த லக்ஷ்மனின் மனைவி உர்மிளா 14 ஆண்டுகள் தூங்கிக் கொண்டிருந்தார்.
லக்ஷ்மனின் பங்கையும்சேர்த்து உர்மிளை இருவரின் தூக்கத்தையும் நிறைவு செய் தார். இராமாயணக் கதையில் உர்மிளா அதிகம் அறியப்படாத கதாபாத்திரம் ஆவார்.
🌹சிறந்த மனிதன்
*********************
ராமர் என்பவர் விஷ்ணுவின் 7 வது அவ தாரம் ஆவார்,மற்றும் கிருஷ்ணருக்குப் பிறகு விஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரமாக கருதப்படுவர். ராமர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த மனிதனாகவும், ஒரு முழுமையான மனிதனாகவும் காணப்படுபவர் ஆவார்.
🌹சீதை ஜனகனின் மகள் அல்ல
*************************************
சீதை ஜனக மன்னனின் உண்மையான மகள் அல்ல, உண்மையில் அவர் பூமா தேவி அல்லது பூமி தாயின் மகள் என்று கூறுவார்கள். சீதை வயல் வெளியில் ஜனக மன்னரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்.
சீதை, லட்சுமிதேவியின் அவதாரம் ஆவார் மற்றும் ராமருடனான அவரது காதல் எல்லா காலத்திலும் புகழ்பெற்றது மற்றும் பிரபலமான காதல் கதைகளில் ஒன்றாக நம்பப்படுகிறது.
🌹அனுமனை பஜ்ரங் பாலி என அழைக்க காரணம்?
***********************************************
ஹனுமான் பிரம்மச்சரியத்தையே குறிக் கோளாக கொண்டு வாழ்ந்து வந்தார், அவருக்கு மனைவி குடும்பம் ஏதும் இல் லை என்பதால் அவர் தனது வாழ்க்கை யை ராமரின் பக்திக்கும், தர்மத்தை அடை வதற்கும் அர்ப்பணித்தார்…
அனுமன், ஒரு முறை ராமரைப் பாதுகாப் பதற்காக குங்குமத்தில் அவரை மூடி வைத்துவிட்டார். அனுமனை பஜ்ரங் பாலி என்று அழைக்கப்படுவதற்கு அதுவே காரணம்.
🌹ராவணனை சபித்த நந்தி
********************************
ராவணன் ஒருமுறை சிவபெருமானை பார்ப்பதற்காக கைலாயம் சென்ற போது, அங்கு நுழைவுவாயிலில் நின்றுக் கொ ண்டிருந்த நந்தி ராவணனை உள்ளே அனு மதிக்காமல் தடுத்து நிறுத்தினார்.
அப்போது ராவணன் நந்தியின் தோற்றத் தைப் பார்த்து கேலி செய்தார் அதனால் கோபம் அடைந்த நந்தி , பின்னர் அவர் ராவணனின் ராஜ்யத்தை சபித்தார்.
இலங்கை குரங்குகளால் அழியப்படும் என்று கூறினார். அதே போல் அனுமன், ராமர் மற்றும் அனைத்து வனர சேனை களும் ஒன்று சேர்ந்து போரில் இலங்கை யை அழித்துவிட்டார்கள். நந்தியின் சாபம் நிறைவேறியது.
🌹அங்கதனின் உதவி
**************************
ராமன் மற்றும் அனுமன் தொடுத்த போரில் தான் வெற்றி பெற வேண்டும் என்பதற் காக ராவணன் ஒரு யாகத்தை நடத்தினா ர்.எந்த வகையிலும் தன் கவனத்தை சிதற விடாமல் யாகத்தில் மிகவும் கவனமாக இருந்தார்.
இதை அறிந்த ராமர், ராவணனின் அரண்மனையில் ஒரு குழப்பத்தை உருவாக்க வாலியின் மகன் அங்கதனின் உதவியை நாடினார்.
ராவணனின் மனைவியான மண்டோதரி யின் தலை முடியை பிடித்து இழுக்குமாறு யோசனை கூறினார். அதேப் போல் மண் டோதரியின் தலை முடியை இழுத்ததால் அவள் அலறினாள். ஆனால் முதலில் ராவணன் அதனை கண்டு கொள்ளாமல் யாகத்திலிருந்தார் பின்பு அவர் மனைவி உதவி செய்யக் கேட்டதால் யாகத்தை விட்டு வெளியேறி விட்டார்..
🌹ஜெயராம் ஜெயராம்... ஜெய ஜெய சீதாராம்...
🌹24.03.2026.. நேசமுடன் விஜயராகவன்.... #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏🏼ராமர் பாடல்கள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🙏சீதா ராமர் #🏹ராம நவமி விரைவில்🌸


