
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
♦️காரடையான் நோன்பு.
🌹சாவித்திரி பெற்ற வரம்
மன்னன், நாரதர் மூலமாக “சத்தியவான் ஒரு இளவரசன். ஆனால், குறைந்த ஆயுள் கொண்டவன்” என்பதை அறிந்தான். சத்தியவானின் உயிரை கவர்ந்துச் சென்ற எமதர்மரை பின் தொடர்ந்தாள், சாவித்திரி.
மாசி மாதம் முடியும் நேரமும், பங்குனி மாதம் மாதம் பிறக்கும் தருணமும் கூடும் நேரத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதம், 'காரடையான் நோன்பு' ஆகும். இந்த விரதத்தை 'சாவித்திரி விரதம்' என்றும், அழைக்கிறார்கள்.
திருமணமான பெண்கள், தங்கள் மாங்கல்ய பலத்தை பெருக்குவதற்காக இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.
சாளுவ தேசத்தை ஆட்சி செய்த துயமத் சேனன் என்ற மன்னனுக்கு சத்தியவான் என்ற மகன் இருந்தான். சிறப்பாக ஆட்சி செய்த மன்னன், வயது முதிர்வு காரண மாக கண் பார்வையை இழந்தான்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட எதிரிகள், மன்னனிடம் இருந்து நாட்டை கைப்பற்றினர். இதையடுத்து, சத்தியவானுக்கு தன் பெற்றோருடன் காட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது.
ஒரு முறை அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி, காட்டிற்கு சென்ற போது, சத்தியவான் தன் பெற்றோருக்கு பணிவிடை செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சத்தியவானை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
இதுப்பற்றி தன் தந்தையிடம் சாவித்திரி கூறினாள். மன்னன், நாரதர் மூலமாக "சத்தியவான் ஒரு இளவரசன். ஆனால், குறைந்த ஆயுள் கொண்டவன்" என்பதை அறிந்தான்.
இதனால் வருத்தம் அடைந்த மன்னன், சத்தியவானுக்கு தன் மகளை திருமணம் செய்துகொடுக்க தயங்கினான். ஆனால் சாவித்திரி, சத்தியவானை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தாள்.
மன்னன் வேறு வழியில்லாமல், சத்திய வானுக்கே சாவித்திரியை திருமணம் செய்து கொடுத்தான். இதையடுத்து, சத்தியவானும், சாவித்திரியும் காட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
சத்தியவானுக்கு குறைந்த ஆயுள் என்பதை அறிந்த சாவித்திரி, நாரதரின் அறிவுரைபடி சில விரதங்களை மேற்கொண்டு வந்தாள்.
ஒரு வருடம் முடிந்த நிலையில், ஒரு நாள் சாவித்திரியின் மடியில் படுத்திருந்த நிலையிலேயே சத்தியவானின் உயிர் பிரிந்தது. அப்போது சத்தியவான் உயிரை எடுத்துச்செல்ல வந்த எமதர்மர், கற்புக்கரசியான சாவித்திரியின் கண்ணுக்கு தென்பட்டார்.
சத்தியவானின் உயிரை கவர்ந்துச் சென்ற எமதர்மரை பின் தொடர்ந்தாள், சாவித்திரி. இதைப் பார்த்த எமதர்மர், "எதற்காக என்னை பின்தொடர்கிறாய்" என்று கேட்டார்.
ஆனால் சாவித்திரி எந்த பதிலும் சொல் லாமல் எமதர்மரை பின்தொடர்ந்தார்.
உடனே எமதர்மர், "உன் கணவன் உயிரை திருப்பி கொடுக்கவே, பின்தொடர்கிறாய் என்பதை அறிவேன். ஆனால், பிரிந்த உயிர் திரும்புவது என்பது முடியாத காரியம். எனவே வேறு ஏதாவது வரம் கேள்" என்றார்.
எமதர்மர் கேட்டதும் சாதுர்யமாக, "எனக்கு பிறக்கும் நூறு குழந்தைகளை, நான் மடியில் வைத்து கொஞ்சுவதை, என் மாமனார் கண்குளிர காண வேண்டும்" என்று கேட்டாள்.
உடனே சற்றும் யோசிக்காமல் "அப்படியே ஆகட்டும்" என்று வரம் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
எமதர்மரை தடுத்த சாவித்திரி, "தாங்கள் கொடுத்த வரத்தின்படி, என்னுடைய கணவன் உயிரை திருப்பி தாருங்கள்" என்று கேட்டார்.
அதன்பின்பு தான், எப்பேர்பட்ட வரத்தை அளித்தேன் என்பதை எமதர்மர் உணர்ந் தார். கொடுத்த வரத்தை மீற முடியாது என்பதால் சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார், எமதர்மர்.
சாவித்திரியின் வரத்தின்படி, சத்தியவான் உயிர் பெற்றதோடு, சாவித்திரியின் மாமனாருக்கும் கண் பார்வை கிடைத்தது. இதையடுத்து இழந்த ராஜ்ஜியத்தை மீட்டனர்.
சத்தியவானும், சாவித்திரியும் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். சத்தியவானின் உயிரை மீட்பதற்கு உதவியாக இருந்தது, அவள் கடைப்பிடித்து வந்த 'காரடையான் நோன்பு'.
இதனால் தான் இது 'சாவித்திரி நோன்பு' என்றும் அழைக்கப்படுகிறது. காமாட்சி அம்மனும் இந்த விரதத்தை கடைப்பிடி த்த காரணத்தால் 'காமாட்சி விரதம்' என்றும் பெயர் பெற்றது.
காரடையான் நோன்பு இருக்கும் பெண்கள், அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பின்பு, பூஜை அறையில் கோலம் இட்டு, அம்மன் படம் வைத்து விளக்கேற்ற வேண்டும்.
கோலத்தின் மீது கும்பம் ஒன்றை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூ சூட வேண்டும். ஒரு நூலில் மஞ்சள் தடவி நோன்பு கயிறு தயார் செய்து, அதை கும்பத்தின் மீது கட்ட வேண்டும்.
அரிசி மாவு, காராமணி சேர்த்து காரடை செய்து, நைவேத்தியமாக படைக்கலாம். அம்மனுக்குரிய பாடல்களை பாடி வழிபட வேண்டும். பின்பு, கணவன் கையால் நோன்பு கயிற்றை கழுத்திலோ, கையிலோ கட்டிக் கொள்ளலாம்.
இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும், திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவன் அமைவார், குடும்பம் மகிழ்ச்சியோடு நடைபெறும் என்பது நம்பிக்கை.
🌹14.03.2026... நேசமுடன் விஜயராகவன்.... #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏அம்மன் துணை🔱
அன்னை மகாலட்சுமியின் 40 சிறப்புகள்
***************************************************
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.
மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.
----------------------------------------------------------------------------------
1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.
2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.
3. அவளுக்கு பிரியமான பூ 'செவ்வந்தி' எனப்படும் சாமந்திப்பூ.
4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.
5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத் திரம் பாடி பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.
6. மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் அதை மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வ த்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.
7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.
8. மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.
9.வாழை, மாவிலை, எலுமி ச்சம்பழம் ஆகி யவை களிலும் மகா லட்சுமி வாசம் செய்கி றாள். அதனா ல்தான் சுபகாரியங்களில் இவை பயன்படு த்தப்படு கின்றன.
10. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.
11. தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.
12. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.
13. ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் 'ஸ்ரீஸ்துதி' என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.
14. ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.
15. நம்மாழ்வார் 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்ற கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.
16. திரு மழிசையாழ் வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.
17. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக் கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
18. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.
19. வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்குஅனு பவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.
20. மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்கள் அவளுக்கு உண்டு.
21. லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறம்.
22. லட்சுமிக்கு உலூ கம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம்.
23. மகா லட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கி ரனின் அதி தேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கி ழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள்தரும்.
24. லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை - குேபர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.
25. லட்சுமியின் திருக்கரங்கள் 'ஸ்வர்ண ஹஸ்தம்' எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத சஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள்.
26. லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி, அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.
27. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.
28. லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் வளரும்.
29. புதுக்கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.
30. வருத்தத்தால் மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது.
31. மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.
32. அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
33. இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை ேபசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள்.
34. கோமாதா (பசு)வை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.
35. லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை.
36. லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர்.
37.மகாலட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் பூஜிக்கிறார்.
38.பிரம்ம தேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியில் பூஜிக்கிறார்.
39.மனுதேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசில மாத சங்கராந்தியிலும் பூஜிக்கிறார்.
40.தேவேந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார்.
➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️
#📸பக்தி படம் #🙏பெருமாள் #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💵மகாலக்ஷ்மி
விபத்து பயம் மற்றும் எம பயம் நீங்க அருள்புரியும் சாந்தமான நரசிம்மர்! 🙏✨
ஆன்மீக அன்பர்களே, பொதுவாக 'நரசிம்மர்' என்றாலே நம் நினைவுக்கு வருவது இரணியனை வதம் செய்த அந்த உக்கிரமான கோலம்தான். ஆனால், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வீற்றிருக்கும் நரசிம்ம பெருமாள் முற்றிலும் மாறுபட்டவர். பெயரில் நரசிம்மர் என்றாலும், குணத்தில் அவர் கருணை ததும்பும் "சாந்தமானவர்".
இந்தக் கோயிலின் தனித்துவமான சிறப்புகளைப் பற்றி இங்கே காண்போம்:
🛡️ விபத்து மற்றும் எம பயம் போக்கும் தலம்
வாழ்க்கையில் எதிர்பாராத விபத்துக்கள் நேருமோ என்ற பயம் இருப்பவர்கள் மற்றும் ஜாதக ரீதியாக ஆயுள் பயம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் இது. இங்கே மனமுருகி வேண்டிக் கொண்டால், தீய சக்திகள் விலகி, நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
🕉️ ஹரியும் சிவனும் இணைந்த அற்புத காட்சி
இந்த ஆலயத்தின் மிகப்பெரிய சிறப்பு, ஒரே நேரத்தில் பெருமாளையும் சிவனையும் தரிசிக்க முடிவதுதான். பெருமாள் சன்னதிக்கு முன்புள்ள மண்டபத்தில் சிவலிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது. அரியையும் அரனையும் ஒரே இடத்தில் காண்பது மனதிற்குப் பேரமைதியைத் தருகிறது.
🌊 உத்தரவாகினி குடகனாறு
புண்ணிய நதிகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வதை 'உத்தரவாகினி' என்பார்கள். காசியைப் போலவே, இங்கும் குடகனாறு வடக்கு நோக்கிப் பாய்வது பெரும் விசேஷம். ஆற்றின் கிழக்கு கரையில் கோயில் அமைந்துள்ளதால், இயற்கையான சூழலில் தெய்வீகம் கமழ்கிறது.
🚩 இதர சிறப்புகள்:
சவுகந்தி மலர் ஆஞ்சநேயர்: இக்கோயில் பிரகாரத்தில் இருக்கும் வீர ஆஞ்சநேயர் கையில் 'சவுகந்தி' மலருடன் காட்சி தருகிறார். இது மிகவும் அரிய கோலமாகும்.
திருமணத் தடைகள் நீங்க:
திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், விரைவில் சுபகாரியங்கள் கைகூடும் என்பது அனுபவ உண்மை.
சாந்த வடிவம்:
சங்கு, சக்கரம் ஏந்தி, அபய மற்றும் வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக பெருமாள் அருள்பாலிக்கிறார்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
⏰ காலை 7:30 - 12:00 மணி
⏰ மாலை 4:00 - இரவு 8:00 மணி
அமைவிடம்:
அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில், வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம். (திண்டுக்கல்லில் இருந்து 15 கி.மீ தொலைவு).
இந்த வார இறுதியில் உங்கள் குடும்பத்தோடு இந்தச் சாந்தமான நரசிம்மரைத் தரிசித்து, எல்லாப் பயங்களும் நீங்கி வளமான வாழ்வு பெற வேண்டிக்கொள்ளுங்கள்!
#🙏ஜெய் ஆஞ்சநேயா #📸பக்தி படம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
விபத்து பயம் மற்றும் எம பயம் நீங்க அருள்புரியும் சாந்தமான நரசிம்மர்! 🙏✨
ஆன்மீக அன்பர்களே, பொதுவாக 'நரசிம்மர்' என்றாலே நம் நினைவுக்கு வருவது இரணியனை வதம் செய்த அந்த உக்கிரமான கோலம்தான். ஆனால், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வீற்றிருக்கும் நரசிம்ம பெருமாள் முற்றிலும் மாறுபட்டவர். பெயரில் நரசிம்மர் என்றாலும், குணத்தில் அவர் கருணை ததும்பும் "சாந்தமானவர்".
இந்தக் கோயிலின் தனித்துவமான சிறப்புகளைப் பற்றி இங்கே காண்போம்:
🛡️ விபத்து மற்றும் எம பயம் போக்கும் தலம்
வாழ்க்கையில் எதிர்பாராத விபத்துக்கள் நேருமோ என்ற பயம் இருப்பவர்கள் மற்றும் ஜாதக ரீதியாக ஆயுள் பயம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் இது. இங்கே மனமுருகி வேண்டிக் கொண்டால், தீய சக்திகள் விலகி, நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
🕉️ ஹரியும் சிவனும் இணைந்த அற்புத காட்சி
இந்த ஆலயத்தின் மிகப்பெரிய சிறப்பு, ஒரே நேரத்தில் பெருமாளையும் சிவனையும் தரிசிக்க முடிவதுதான். பெருமாள் சன்னதிக்கு முன்புள்ள மண்டபத்தில் சிவலிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது. அரியையும் அரனையும் ஒரே இடத்தில் காண்பது மனதிற்குப் பேரமைதியைத் தருகிறது.
🌊 உத்தரவாகினி குடகனாறு
புண்ணிய நதிகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வதை 'உத்தரவாகினி' என்பார்கள். காசியைப் போலவே, இங்கும் குடகனாறு வடக்கு நோக்கிப் பாய்வது பெரும் விசேஷம். ஆற்றின் கிழக்கு கரையில் கோயில் அமைந்துள்ளதால், இயற்கையான சூழலில் தெய்வீகம் கமழ்கிறது.
🚩 இதர சிறப்புகள்:
சவுகந்தி மலர் ஆஞ்சநேயர்: இக்கோயில் பிரகாரத்தில் இருக்கும் வீர ஆஞ்சநேயர் கையில் 'சவுகந்தி' மலருடன் காட்சி தருகிறார். இது மிகவும் அரிய கோலமாகும்.
திருமணத் தடைகள் நீங்க:
திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், விரைவில் சுபகாரியங்கள் கைகூடும் என்பது அனுபவ உண்மை.
சாந்த வடிவம்:
சங்கு, சக்கரம் ஏந்தி, அபய மற்றும் வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக பெருமாள் அருள்பாலிக்கிறார்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
⏰ காலை 7:30 - 12:00 மணி
⏰ மாலை 4:00 - இரவு 8:00 மணி
அமைவிடம்:
அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில், வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம். (திண்டுக்கல்லில் இருந்து 15 கி.மீ தொலைவு).
இந்த வார இறுதியில் உங்கள் குடும்பத்தோடு இந்தச் சாந்தமான நரசிம்மரைத் தரிசித்து, எல்லாப் பயங்களும் நீங்கி வளமான வாழ்வு பெற வேண்டிக்கொள்ளுங்கள்!
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✨கடவுள் #🙏பெருமாள்
#🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️ராசிபலன் #✨கடவுள்
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼ஓம் நமசிவாய #✨பிரதோஷம்🕉️
#🙏அம்மன் துணை🔱 #📸பக்தி படம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #✡️ஜோதிட பரிகாரங்கள்
#🙏🪔 காரடையான் நோன்பு வாழ்த்துக்கள் 🪔🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
'இன்சொல்லின் இறைவன்'
சித்திரகூட மலையில் மந்தாகினி ஆற்றின் கரையில், அந்த அழகிய மாலை வேளையில், லட்சுமணன் வேய்ந்த சிறிய குடிலொன்றில் விறகு அடுப்பின் புகை மேலே கிளம்புகிறது.
அடுப்படியில் சமைத்துக் கொண்டிருப்பவள் சாதாரணப் பெண் அல்ல; ஜனக மகாராஜனின் திருமகள், அயோத்தியின் மருமகள், லக்ஷ்மி தேவியின் அவதாரம். ஆனால் இன்று அவள் ஒரு இல்லத்தரசி மட்டுமே — கணவனுக்காக அன்போடு சமைக்கும் மனைவி.
சீதாபிராட்டி வியர்வையைத் துடைத்துக்கொண்டாள். காட்டில் கிடைத்த கிழங்குகள், கனிகள், கீரைகள் என எல்லாவற்றையும் அன்போடு சமைத்திருந்தாள்.
"என் கணவர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வந்திருக்கிறார். அயோத்தியில் கிடைத்த அரசு விருந்து இங்கு இல்லை. ஆனால் என் அன்பு குறையாது. என் கைகளால் சமைத்ததை அவர் விரும்பி உண்ண வேண்டும்."
இதுவே அவளின் ஒரே ஆசை. வெளியே இலக்குவன் காவல் நிற்கிறான். உள்ளே ஸ்ரீராமபிரான் தர்ப்பைப் புல்லில் அமர்ந்து வேதம் கற்கிறார்.
"ஆரியபுத்ரா! உணவு தயார்" என்று மெல்லிய குரலில் அழைத்தாள் சீதை. (வால்மீகி இராமாயணத்தில் சீதை இராமரை 'ஆர்யபுத்ர' என்று தான் அழைப்பாள்) அந்த மெல்லிய குரலைக் கேட்டதும் ஒரு புன்னகையுடன் ஸ்ரீராமபிரான் வந்து அமர்ந்தார். இலையில் உணவு பரிமாறினாள் சீதை. கண்கள் நிறைந்த பக்தியுடன் கணவனைக் கவனிக்கிறாள்.
"இது எப்படி இருக்கிறது?"
ஸ்ரீராமபிரான் ஒரு கவளம் உண்டார். கண்கள் மூடினார்; பின் திறந்தார். ஒரு புன்னகை மலர்ந்தது. "சீதே... இது மிகவும் சுவையாக இருக்கிறது. காட்டில் கிடைக்கும் கிழங்கும் கனியும் உன் கைகளில் வந்தவுடன் அவை அமிர்தமாகின்றன."
சீதையின் கண்கள் மகிழ்ச்சியில் மின்னின.
இன்னொரு காய்கறியைப் பரிமாறினாள். "இதுவும் சொல்லுங்கள்" என்று கேட்டாள். ஸ்ரீராமபிரான் சிரித்தார். "இதுவும் நன்றாக இருக்கிறது சீதே. சித்திரகூட மலையின் அருளும் உன் அன்பும் சேர்கின்றன. சுவை இரட்டிப்பாகிறது."
சீதை வெட்கத்துடன் தலை குனிந்தாள். "இவர் எப்படி இப்படிப் பேசுகிறார்? ஒவ்வொரு முறையும் என் மனதை மலரச் செய்கிறார்." என்று தன் மனதிற்குள் பேசிக்கொண்டே அடுத்த உணவை எடுத்தாள்.
அதைப் பார்த்ததும் சீதையின் கைகள் நடுங்கின. அந்த உணவு தீய்ந்திருந்தது. கவனம் சிதறிய ஒரு தருணத்தில், விறகடுப்பின் சூட்டில் அது கருகிப் போயிருந்தது. வெளியே பார்க்கவே வேண்டாம் என்று தோன்றும் நிறம்.
"என்ன செய்வது? இதனை அவருக்குப் பரிமாறிவிட்டால் அவர் மனம் நோகுமோ? பரிமாறாமல் இருந்தால் என்ன சொல்வது?" நெஞ்சு படபடத்தது. ஆனால் அவரிடம் ஒன்றையும் மறைத்ததில்லை சீதை. தயக்கத்துடன், நடுங்கும் கைகளுடன், தலை குனிந்தபடி பரிமாறினாள்.
"இது... இது எப்படி இருக்கிறது?" என்று கேட்டாள். குரல் மிகவும் மெல்லியதாக இருந்தது. கண்கள் தரையைப் பார்த்தன.
ஸ்ரீராமபிரான் உண்மையை மட்டுமே பேசுபவர். வாழ்நாளில் ஒருமுறை கூடப் பொய் சொன்னதில்லை. தர்மம் என்பது அவருக்கு மூச்சு போன்றது. வால்மீகி முனிவர் ஸ்ரீராமபிரானை வர்ணிக்கும்போது "ப்ரியவாதீ" (இனிமையாகப் பேசுபவர்), "வதான்யஸ்ச" (வள்ளல் குணம் உடையவர்), "சத்யவாதீ" (உண்மையே பேசுபவர்) என்கிறார்.
தன்னை மட்டுமே நம்பி, அரண்மனை சுகங்களைத் துறந்து கானகம் வந்த சீதையின் கண்களில் தெரிந்த அந்தப் பயத்தையும் வருத்தத்தையும் ராமரால் காண முடிந்தது. "இவளை மனம் நோகச் செய்யலாமா? ஆனால் பொய் சொல்லலாமா?" சத்தியமும் அன்பும் அங்கே போட்டியிட்டன.
அந்தத் தருணத்தில் ஸ்ரீராமபிரானின் உதடுகளில் ஒரு புன்னகை மலர்ந்தது.
"சீதே..."
அவள் தலை நிமிரவில்லை. "சீதே, என்னைப்பார்." மெல்ல தலை நிமிர்த்தினாள்; கண்களில் கண்ணீர் தளும்பியது.
ஸ்ரீராமபிரான் சிரித்தார். ஆழமான, அன்பான சிரிப்பு. "நீ மிகவும் நன்றாகச் சமைத்திருக்கிறாய். உன்னிடம் குறை இல்லை. ஆனால் இந்த அக்னி பகவான் சற்று அதிகமாகத் தன் வேலையைக் காட்டிவிட்டார் — அவரும் கொஞ்சம் தீய்த்து எனக்கு அளிக்கும் உணவில் சுவை சேர்க்க வேண்டும் என்று நினைத்தார் போலும்!"
சீதை ஒரு கணம் பார்த்தாள். "அப்படியானால்... இது நன்றாக இல்லையா?" என்று பயத்துடன் கேட்டாள்.
ஸ்ரீராமபிரான் அந்த உணவை எடுத்தார். ஒரு கவளம் உண்டார். முகம் மாறவில்லை.
"சீதே, தீய்ந்த உணவு பார்ப்பதற்கு என்னைப்போலவே கருப்பாக (சியாமளம்) இருக்கிறது — அது அழகுதானே? அதைச் சாப்பிடுவதோ ஒரு தனிச்சுவை. எனக்குப் பிடித்திருக்கிறது!"
அந்த வார்த்தைகளைக் கேட்ட சீதையின் இறுக்கமான நெஞ்சு திடீரென மலர்ந்தது. கண்களில் கண்ணீர் நின்றது; உதடுகளில் சிரிப்பு வந்தது. வெட்கம், ஆனந்தம், பக்தி என எல்லாம் ஒருசேரப் பொங்கின.
"இவர் என்ன மனிதர்! தீய்ந்த உணவைக்கூட என் மனம் நோகாமல் பார்க்கிறார். சத்தியத்தையும் விடவில்லை, அன்பையும் விடவில்லை" என வியந்த சீதையின் முகம் வெட்கத்தில் சிவந்தது. கண்கள் நன்றியில் நனைந்தன. அவள் கைகளைக் கூப்பினாள்.
ஸ்ரீராம ஜெயராம் ஜெய ஜெய ராம்! 🙏 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #📸பக்தி படம்
#🙏பெருமாள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #✡️மார்கழி மாத ஜோதிடம்





![🙏ஜெய் ஆஞ்சநேயா - loufube reddiyuraanmigam] விபத்துபயம் மற்றும் பயம் நீங்க அருள்புரியும் OID சாந்தமானநரசிம்மர்! loufube reddiyuraanmigam] விபத்துபயம் மற்றும் பயம் நீங்க அருள்புரியும் OID சாந்தமானநரசிம்மர்! - ShareChat 🙏ஜெய் ஆஞ்சநேயா - loufube reddiyuraanmigam] விபத்துபயம் மற்றும் பயம் நீங்க அருள்புரியும் OID சாந்தமானநரசிம்மர்! loufube reddiyuraanmigam] விபத்துபயம் மற்றும் பயம் நீங்க அருள்புரியும் OID சாந்தமானநரசிம்மர்! - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_906307_281c16c3_1773470024060_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=060_sc.jpg)
![🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - loufube reddiyuraanmigam] விபத்துபயம் மற்றும் பயம் நீங்க அருள்புரியும் OID சாந்தமானநரசிம்மர்! loufube reddiyuraanmigam] விபத்துபயம் மற்றும் பயம் நீங்க அருள்புரியும் OID சாந்தமானநரசிம்மர்! - ShareChat 🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - loufube reddiyuraanmigam] விபத்துபயம் மற்றும் பயம் நீங்க அருள்புரியும் OID சாந்தமானநரசிம்மர்! loufube reddiyuraanmigam] விபத்துபயம் மற்றும் பயம் நீங்க அருள்புரியும் OID சாந்தமானநரசிம்மர்! - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_891789_2dc915c2_1773469997181_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=181_sc.jpg)


