ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை
சுந்தரகாண்டம் முழுவதும் ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் மஹிமையை வர்ணிப்பது தான். முதல் ஸர்கத்தில் மஹேந்திரமலை மேல் ஏறி மிகப்பெரிய உருவத்தை எடுத்துக்கொண்டும், கர்ஜனை செய்துகொண்டும், மலைகளைக் கால்களால் மிதித்ததில் மலைப்பாறைகள் நொறுங்கி நாலா பக்கங்களும் சிதறிற்று.
ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் திருவடிகளை பூஜிப்பவர்களுக்கு மலைபோல கஷ்டங்கள் வந்தாலும், மலை நொறுங்குவது போல உடனடியாக நீங்கிவிடும் என்பதைக் காட்டுகிறது.
5ராமபாணம் போல் ஆஞ்ஜநேயர் சமுத்திரத்தின் மேல் போகிறார் என்று வால்மீகி முனிவர் சொல்வதிலிருந்து ராமபாணம் எப்படிக் குறி தப்பாதோ அப்படிச் சுலபமாக சமுத்திரத்தைத் தாண்டி அக்கரை போய்ச்சேர்வார்.
பாணத்தை ஒருவர் குறிவைத்து நாண்கயிறு ஏற்றினால் தானே போகும்! அதேபோல் தானாகப் போகவில்லை; ஸ்ரீராமரின் க்ருபையால் தான் இந்த அகண்ட சமுத்திரத்தை என்னால் தாண்ட முடியும் என்று ஆஞ்ஜநேயர் எண்ணினார்.
தான் செய்கிறோம் என்ற கர்வமில்லாமல் வினயத்துடன் இருப்பவர்களால் தான் பெரிய காரியங்களை சாதிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
சமுத்திர ராஜன் இக்ஷ்வாகு வம்ச அரசனான சகரனால் உண்டாக்கப் பட்டதால், ஸ்ரீராமருடைய காரியமாய் வரும் ஹனுமாருக்கு உதவி புரிய நினைத்து கடலில் மூழ்கியிருக்கும், மைனாக மலையைத் தூண்டிவிட்டு, மேலே எழும்பி வரும்படிச் செய்து, ஆஞ்ஜநேயரை மலைமேல் உட்கார்ந்து இளைப்பாறச் செய்து, கிழங்குகள் பழங்கள் முதலியன அவருக்குக் கொடுத்து ஸத்கரிக்கும்படி சொன்னார்.
மைனாக மலையும் மேலே எழும்பிவந்து, ஹனுமாரை இளைப்பாறி விட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டது. வாயு பகவானால், மைனாக மலை இந்திரனிடமிருந்து காப்பாற்றப் பட்டதால், வாயு குமாரருக்கு உதவி செய்ய தானும் கடமைப்பட்டிருப்பதாக மைனாக மலையும் நினைத்தது.
ஆனாலும் ஸ்ரீ ஹனுமார் என்ன நினைத்தார் தெரியுமா?
ராம பாணத்தை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்கிற காரணத்தினால் மைனாக மலை மேல் தான் இளைப்பாறக்கூடாது. ராம பாணம் குறி தப்பாது. அதன் வேகத்தை மைனாக மலை தடுக்க முயற்சி செய்கிற மாதிரி ஆகிவிடும். ராமபாணத்தின் மதிப்பையும் குறைப்பதாக ஆகி விடும். உப்புக்கடலின் நடுவே பலவிதமான கிழங்குகளும் பழங்களும் கிடைப்பது ஒரு பெரிய ஆச்சர்யம் தான்.
நம் போன்றவர்கள் ஏதாவது உபாசனம் செய்து வரும்போது ஸித்திகள் வரும். அதில் நாம் மனதை வைத்துவிடக்கூடாது. அவ்வாறு மனதை வைத்துவிட்டால் நமக்கு பகவத் அனுபவம் கிடைக்காமல் போய் விடும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பகவத் க்ருபைக்குப் பாத்திரமானவர்களை மனைவி, புத்திரர், உறவினர் ரூபத்தினாலும், ஸித்திகள் மூலமாகவும் தொந்தரவு கொடுத்து, மேலே ஏறி வரவிடாமல் இருப்பதற்கு, தேவதைகள் பெரிதும் முயற்சிப்பார்கள்.
ராம பக்தனுக்கு, சமுத்திர ராஜன் தூண்டுதலில், மைனாகமலை ஸ்ரீ ஹனுமனைத் தன்னிடம் ஸத்கரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்கே, இந்திரன் தன் சாபத்தை விலக்கிக்கொண்டு, தன்னிடம் இனிமேல் பயம் இல்லாமல் சுதந்திரமாக எங்கும் சஞ்சரிக்கலாம் என்று மைனாக மலைக்கு வரம் கொடுத்து விட்டார்.
இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது:
ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அனந்தஜிதே நமஹ (Ananthajithe namaha)
ஊழிக் காலத்தில் உண்டாகும் ஊழிக் கடல் வெள்ளத்தில் இருந்து உலகங்களையும் உயிர்களையும் காக்க வேண்டி ஆலிலைக் கண்ணனாக வந்த திருமால், உலகங்களையும் உயிர்களையும் எல்லாம் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காத்தார். இந்த அவதாரக் காட்சியை மார்க்கண்டேய முனிவருக்குக் காட்டினார் திருமால்.ஆலிலைக் கண்ணனின் அவதாரத்தையும் செயல்களையும் கண்ட மார்க்கண்டேயர், “முள்ளை முள்ளால் எடுப்பது போல், கடலில் இருந்து காப்பதற்காக நீயே கடல் போல் வந்துள்ளாயே!” என்று ஆலிலைக் கண்ணனைத் துதித்தார்.
ஆலிலைக் கண்ணன் மார்க்கண்டேயரைப் பார்த்து, “சிறிய வடிவத்துடன் வந்திருக்கும் என்னை ஏன் கடலோடு ஒப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு மார்க்கண்டேயர், “கண்ணா! கடலை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. கடற்கரைக்கு அருகில் வாழ்பவர்கள் தினந்தோறும் கடற்கரைக்குச் சென்று ஆனந்தமாக அந்தக் கடலைக் கண்டு ரசித்து விட்டு வருவார்கள். அதுபோலத் தான் உன்னையும் எத்தனை முறை பார்த்தாலும் மனதில் அலுப்பு ஏற்படாது. அப்போதைக்கு அப்போது நீ ஆராவமுதமாக இருக்கிறாய்.
மழை பொழிந்து தான் கடலுக்குத் தண்ணீர் வர வேண்டும் என்று அவசியம் இல்லை. அது எப்போதுமே தன்னிறைவோடு இருக்கும். அதுபோலத் தான் நாங்கள் தொண்டு செய்வதால் தான் உனக்குப் புதிதாகப் பெருமை வரவேண்டும் என்பதில்லை. நீ எப்போதுமே ஆனந்தமே வடிவெடுத்தவனாய் இருக்கிறாய்.கடல் தேவர்களுக்கு அமுதத்தைக்கொடுத்தது. நீயோ உன் அடியார்களுக்கு உன்னையே ஆராவமுதமாகத் தந்து விடுகிறாய்.
மதியைக் (சந்திரனை) கண்டால் கடல் பொங்குகிறது. நீ மதி (ஞானம்) மிக்க ஞானியர்களைக் கண்டால் மகிழ்ச்சியால் பொங்குகிறாய்.கடலை எத்தனை பேர் வேண்டுமானாலும் வேடிக்கை பார்க்கலாம். ஆனால் எல்லோராலும் கடலுக்குள் மூழ்கி முத்தெடுத்து வர இயலாது. அது போலத் தான் உன்னைத் தூரத்தில் இருந்து எத்தனையோ பேர் காண்கிறார்கள். ஆனால் உனது பெருமைகளின் ஆழத்தையும், நீ யார் என்பதையும் யாராலும் முழுமையாக அறிய முடியாது.
முக்கியமாக, கண்ணா! கடலுக்கும் எல்லை இல்லை! உனக்கும் எல்லை இல்லை. தூரத்தில் இருந்து நாம் பார்க்கையில், ஏதோ கடலுக்கு எல்லை இருப்பது போல் கூடச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் கடலில் இறங்கிப் பயணிக்கப் பயணிக்க, அதன் எல்லையைக் காணவே முடியாது என்பதை உணர்வார்கள்.
அதுபோலத் தான் நீ பார்ப்பதற்குச் சிறு குழந்தை போலத் தெரிகிறாய். ஆனால் நானும் உனது வாய்க்குள்ளே நுழைந்து உனது திருமேனி முழுவதும் நூறு ஆண்டுகளுக்கு மேல் தேடிப் பார்த்தேன். வெளியிலிருந்து பார்க்கும் போது குழந்தையாகத் தோன்றும் உனது திருமேனிக்கு உண்மையில் உள்ளே எல்லை என்பதே இல்லை என அறிந்து கொண்டேன்.
அந்த: சரீரே தஸ்யாஹம் வர்ஷணாம் அதிகம் சதம்
ந ஹி பச்யாமி தஸ்யாஹம் அந்தம் தேவஸ்ய கர்ஹிசித்
ஆஸாதயாமி நைவாந்தம் தஸ்ய ராஜன் மஹாத்மன:”
என்று விடையளித்தார் மார்க்கண்டேயர்.
ஆல மர விதை சிறியதாக இருந்தாலும், அந்தச் சிறிய விதைக்குள் பெரிய ஆல மரமே அடங்கி இருக்கும் அல்லவா? அதுபோல ஆலிலைக் கண்ணனின் தோற்றம் சிறு குழந்தை போலத் தெரிந்தாலும், அத்தனை உலகங்களும் அந்தச் சிறு வடிவத்துக்குள் அடங்கி இருக்கிறது. உண்மையில் அவரது மகிமைக்கு எல்லை என்பதே இல்லை.
‘அந்தம்’ என்றால் எல்லை என்று பொருள். ‘அனந்தம்’ என்றால் எல்லையற்றது என்று பொருள். யாராலும் எல்லை காண முடியாத
படியான உயர்ந்த மகிமை கொண்டவராகத் திருமால் திகழ்வதால், ‘அனந்தஜித்’ என்று அவர் போற்றப்படுகிறார். ‘அனந்தஜித்’ என்றால் எல்லையில்லாத மகிமை பெற்றவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 308-வது திருநாமம்.
“அனந்தஜிதே நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் சிறந்த
மகிமைகளும் திறமைகளும் பெருமைகளும் கிடைக்கும்படி திருமால் அருள்புரிவார்.
ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏
ஸ்ரீராமானுஜர் நூற்றந்தாதி🙏
ஸ்ரீராமானுஜர்🙏
💥 மோட்சம் தரும் "ஓம் நமோ நாராயணாய" மந்திரத்தை உலகுக்கு சொன்ன ஸ்ரீ ராமானுஜர் 💥
🍁🌺திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில், கோயிலுக்கு அருகில் வசித்து வந்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. இவரிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யரான ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு நடந்தே இங்கு வந்தார்.
🍁🌺நம்பியின் வீட்டு வாசலில் நின்று கொண்டு அழைத்தார் ராமானுஜர்.
🍁🌺திருக்கோஷ்டியூர் நம்பி, ‘யார்?’ என்று கேட்டார்.
🍁🌺‘நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்’ என்றார்.
🍁🌺நம்பி வீட்டிற்குள்ளிருந்தபடியே, நான் செத்து வா! என்றார்.
🍁🌺இதைப் புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார்.
🍁🌺இப்படியாக, தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலைச் சொன்னார். பார்க்கக்கூட இல்லாமல் திருப்பி அனுப்பினார்.
🍁🌺அடுத்த முறை சென்ற ராமானுஜர் அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். அப்போதுதான் அவரை உள்ளே அழைத்தார் நம்பி.
🍁🌺 ஓம் நமோ நாராயணாய என்ற மந்திர உபதேசத்தை ராமானுஜருக்கு அருளினார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று கட்டளையிட்டார். மீறி எவருக்கேனும் சொன்னால் உனக்கு நரகம் கிடைக்கும் என்றும் எச்சரித்தார்.
🍁🌺ஆனால், ராமானுஜரோ *நாராயண மந்திரத்தை எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டும். அதன் வாயிலாக பெருமாளின் திருவடியைச் சரணடைய வேண்டும். எல்லோருக்கும் பரமபதம் கிடைக்க வேண்டும் என எண்ணம் கொண்டார்.
🍁🌺நம்பியின் வீட்டில் இருந்து கிளம்பியவர், விறுவிறுவென கோயிலுக்குள் வந்தார். கோயிலின் விமானத்திற்குள் சென்றார். கோயிலின் உச்சியில் நின்றுகொண்டார். மக்கள் அனைவரையும் குரல் கொடுத்து அழைத்தார்.
🍁🌺 இதோ... நம்மை உய்விக்கும் மந்திரம்... நாராயண மந்திரத்தை எல்லோரும் கேளுங்கள். சொல்லுங்கள். உங்களுக்கு பரமபதம் நிச்சயம். வைகுண்டம் கிடைப்பது உறுதி.
🍁🌺மோட்சத்துக்குச் செல்வீர்கள் என்று மந்திரத்தை பெரும் குரலெடுத்து சொன்னார். மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசித்து அருளினார்.
🍁🌺அவ்வளவுதான். கடும் கோபம் கொண்டார் நம்பி. ராமானுஜரைக் கடிந்து கொண்டார்.
🍁🌺 அவரிடம் ராமானுஜர் பணிவுடன் சொன்னார்... ‘எனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்’ என்றார்.
🍁🌺இதைக் கேட்டு நெகிழ்ந்த நம்பி, ‘நீ என்னிலும் பெரியவன், எம்பெருமானார் என்று சொல்லி கட்டித் தழுவிக்கொண்டார்.
🍁🌺 அத்தகைய புண்ணிய பூமி திருக்கோஷ்டியூர் என்கிறது ஸ்தல புராணம்.
🍁🌺 கோயிலில், திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி
🍁🌺ஸ்ரீமத் ராமானுஜர் திருவடிகளே சரணம்🍁🌺.
ஓம் நமோ நாராயணாய.
,🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
#💐அன்புடன் மதிய வணக்கம் 🤩 #மீனாட்சி_அம்மன் கோவில்
பற்றிய 50 அரிய தகவல்கள்..!!
மீனாட்சி அம்மன் சிலை மரகதகல்லால் ஆனது. மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் #மோட்சம்_கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
றஇந்த தலம் பூலோக கைலாசம் என்று அழைக்கப்படுகிறது.
1. திருநாவுக்கரசரின் 2 பதிகங்களும், திருஞான சம்பந்தரின் 9 பதிகங்களும் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கிறது.
2. அஷ்ட சத்தி மண்டபத்தின் மேல் மாடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மீனாட்சியின் திருவிளையாடல்களை நினைவுபடுத்துவதாக உள்ளது. இந்த மண்டப வாயிலின் மையத்தில் நின்று அம்மன் சன்னதியை நோக்கினால் உள்ளே நடக்கும் கற்பூர ஆரத்தியை பார்க்கலாம்.
3. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில்கிடைத்த #ஸ்படிக_லிங்கம் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.
4. கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் #நவராத்தியின்போது கொலு பொம்மைகள் வைக்கப் பட்டு சிறப்பு வழிபாடு கள் நடக்கும்.
5. கோவிலின் 2-ம் பிரகாரத்தில் #நூற்றுக்கால்_மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் உயர்ந்த பீடத்தில் #நடராஜர் சிலை உள்ளது.
6. பக்தர்கள் மனம் குளிரும் வகையில் ஆலயம் எப்போதும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.
7. ஊஞ்சல் மண்டபம் அருகே மேற்கூரையில் விநாயகர் உள்பட பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் கண்ணை கவரும் வகையில் வரையப்பட்டுள்ளன.
8. சுவாமி சன்னதி கருவறையில் #சுந்தரேசுவரர் சிவலிங்க திருமேனியாக காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். இந்த சிவலிங்கம் மேருமலை, வெள்ளிமலை, திருகேதாரம், வாரனாசி போன்ற பகுதிகளில் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றுக்கும் முன்னதாக தோன்றியதாகும். எனவே இதற்கு மூல லிங்கம் என்ற பெயரும் உண்டு.
9. மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் ஆலயமாகும். வருடம் முழுவதும் மீனாட்சியம்மனுக்கு திருவிழாக்காலம் தான் என்றாலும், #சித்திரைத்_திருவிழாவுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு.
10. மீனாட்சியம்மனுக்கு #ஒருவருடத்தில் கிட்டத்தட்ட #274_நாள்கள் திருவிழா நடைபெறும்.
11. ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் சிவபெரு மானை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானது. ஆண்டுமுழுவதும் நடைபெறும் வீதிஉலாக் களில் மொத்தம் 16 முறை மட்டுமே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந் தருளுகிறார். அந்த வகையில் சித்திரைத் திருவிழாவின் 2 மற்றும் 12-ம் திருநாள்களில் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
12.சித்திரைத் திருவிழா வின் 4-ம் நாளில், சுவாமி, அம்பாளுடன் வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருள்வார். பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் பெருமான், பக்தர்களின் பாவங்களைக் காய்ந்துபோகச் செய்து நிவாரணம் அளிப்ப தால் இது #பாவக்காய்_மண்டபம் எனப் பெயர் பெற்றது.
13. மதுரையில் ஈசன் நிகழ்த் திய திருவிளை யாடல் களான, வேடர்பறி லீலை, வளையல் விற்றது, நரியைப் பரியாக்கியது, #பிட்டுக்கு_மண்_சுமந்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள் #ஆவணி மூலத் திருவிழாவின்போது கொண்டாடப்படும்.
14. முன்பு திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த, திருமலை நாயக்கருக்கு, மண்டைச்சளி என்னும் நோய் வந்து அவரை மிகவும் வருத்தியது. ஒருநாள் அவரின் கனவில் ஒலித்த அசரீரி ஒன்று ‘மதுரைக்குப் போய் திருப்பணிகள் செய்’ என கூறியது. அதன்படி அவர் மதுரையில் திருப்பணி செய்தார். இதனால் அவரை பிடித்திருந்த நோய் நீங்கியது. அதன்பிறகு அவர், மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார். திருமலை நாயக்க மன்னரின் ஆட்சியில் தான் கோயில் விரிவாக்கம் பெற்று, பொலிவுபெற்றது என, அங்குள்ள ஓலைசுவடிகள் தெரிவிக்கின்றன.
15. திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்புவரை, மீனாட்சி சுந்தரேசுவரருக்குத் தைப்பூசத்தில் திருக்கல்யாண உற்சவமும் மாசிமாதத்தில் தேரோட்டமும், மாசிமகத்தன்று ‘#மீனாட்சி_பட்டாபிஷேகமும்’ நடைபெறும் வழக்கம் இருந்ததாம்.
16. மீனாட்சியம்மன், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் #குலதெய்வம் என்பதால், பாண்டிய மன்னர்களின் பூவான ‘#வேப்பம்பூ’ மாலையானது பட்டாபிஷே கத்தின் போது சூட்டப்படுகிறது.
17. மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆடி வீதியில் கல்லில் இசை வெளியிடும் #5_இசை_தூண்களும், #ஆயிரங்_கால்_மண்டபத்தில்2 இசை தூண்களும் உள்ளன.
18. மதுரை மாநகரின் அடையாளமாக ராஜகோபுரங்கள் விளங்கி வருகின்றன. தூரத்தில் நின்று பார்த்தால் கூட கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த கோபுரங்களை பக்தர்கள் தொலைவில் நின்று வணங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
19. மீனாட்சி அம்மன் சிலை மரகதகல்லால் ஆனது. மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தலம் #பூலோக_கைலாசம் என்று அழைக்கப்படுகிறது.
20. சுவாமி சன்னதியில் நுழையும்போது வலது புரத்தில் இருக்கும் நடராஜர் மற்ற கோவில்களில் இருப்பதுபோல் இல்லாமல் இடது காலுக்கு பதில் #வலது_கால்_தூக்கி_நடனம் ஆடுவதுபோல் உள்ளது.
21. இந்த கோவிலில் உள்ள சிலைகள் அமைப்பு இயல், இசை, நாடகம் என்ற மூன்றை யும் விவரிக்கும் வகையில் உள்ளது. இங்குள்ள பல்வேறு சிலைகள், ஓவியங்கள் பல இலக்கியங்களை எடுத்துரைக்கும் விதமாக உள்ளது. பல தூண்களும் இசைபாடக்கூடியது. பல நடன சிற்பங்கள், நாடக சிற்பங்கள் அமைந்து #முத்தமிழை முழுவதுமாக உணர்த்துகிறது
22. இந்த கோவிலின் சித்திரை வீதியில் பக்தர்கள் கோவிலை சுற்றி வருவதற்குபேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
23. நவக்கிரகங்களில் புதனுக்குரியவராக கூறப்படுகிறார் சொக்கநாதர். புதனுக்குரிய பரிகாரங்களை இந்த கோவிலில் உள்ள சிவபெருமானுக்கு செய்வது வழக்கம்.
24. தல மரமான #கடம்ப_மரத்தின் நினைவாக கடம்பமரம் ஒன்று கம்பி வேலிக்குள் பாதுகாக்கப்படுகிறது.
25. மதுரை ரெயில் நிலையம், பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.
26. மற்ற கோவில்களை போல இங்கு இறைவனுக்கு முடி காணிக்கை செய்வது வழக்கத்தில் இல்லை. காரணம் இந்த கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டாலே நாம் செய்த பாவங்கள் நீங்கி அம்மை, அப்பனின் அருளை பெறுவது திண்ணம்.
27. தனியாக மீனாட்சி அம்மனுக்கு மட்டும் திருவிழா நடைபெறும் மாதங்கள் நான்கு. (புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, ஆடி).
28. இந்த கோவில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அனைவரும் கண்டு வியக்கும் வண்ணம் பேரழகு படைத்தவையாகும். கலைநயம் கொண்டவையாக அமைந்துள்ளன. மீனாட்சி அம்மன் கோவில் ஓவியங்கள் அனைத்தும் நாயக்கர் காலத்தை சேர்ந்தவை.
29. பொற்றாமரை குளத்தின் வடக்கு, கிழக்கு சுவர்களில் நாயக்கர் கால ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஓவியங்கள் மூலம் புராண கதைகளை அறிவதோடு, அந்த கால மக்களின் ஆடை வகைகள், அணிகலன்கள் போன்றவை பற்றி அறிய முடிகிறது.
30. மீனாட்சி அம்மன் சன்னதி முன்பாக 8 சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாட்சி திருக்கல்யாணம் சுதை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் 8 சக்திவடிவங் கள் அழகுற அமைந்துள்ளன.
31. #முக்குறுணி_விநாயகர் ஒரே கல்லிலான அற்புத சிற்பமாகும்.
32. கம்பத்தடி மண்டபம் சிற்பங் கள் சிறப்பு பெற்றவை. சிவபெருமானது 25 மூர்த்தங்கள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
33. கொடி கம்பத்தின் முன் மண்டபத்தில் அமைந்துள்ளநந்தியின் சிலை ஒரே கல்லில் ஆனது.
34. கருவறை சுவர்களில் உள்ள 32 சிற்பங்கள் கலை நேர்த்தி உடையவை. சுவாமி சன்னதி முன் வெள்ளி யம்பலத்தில் நடராஜர் பெருமானின் உருவம் கல்லிலும், செம்பிலும் அமைந்துள்ளது.
35. புதுமண்டபம், கம்பத்தடி மண்டபம், ஆயிரங் கால் மண் டபம் ஆகிய 3 மண்டபங்களில் உன்னதமான சிற்பங்கள் உள்ளன. புதுமண்டபத்தில் பிரமாண்டமான கலைநயம் மிக்க வியக்கத்தக்க சிற்பங்கள் அதிகம் உள்ளன.
36. இந்த கோவில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையான சிற்பங்கள் நாயக்கர் கால பாணியிலேயே அமைந்துள்ளன. சிற்ப அமைப்பை கொண்டு நாம் அவற்றின் காலத்தை அறிய முடியும்.
37. மீனாட்சி அம்மன் கோவில் சங்க காலத்திற்கு முன்பே கட்டப்பட்டது. சுமார் 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கலாம் என கூறப்படுகிறது.
38. மீனாட்சி அம்மன் கோவில் வாசலின் இருபுறமும் #விநாயகர், #சுப்பிரமணியர் காட்சி தருகின்றனர்.
39. இங்குள்ள ஆறுகால் மண்டபத்தில் தான் பரஞ்ஜோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
40. இந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான அசையா சொத்துக்கள் உள்ளன.
41. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 4 மாடங்கள் அமைந்துள்ளதால் “நான்மாடக்கூடல்” என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.
42. இந்த கோவில் அருகே பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோவில், இம்மையிலும் நன்மை தருவார், மதனகோபாலசுவாமி கோவில்கள் உள்ளன.
43. அதிக கோவில்கள் நிறைந்த நகரமாக மதுரை உள்ளதால் “கோவில் மாநகரம்” என்று அழைக்கப்படுகிறது.
44. இத்தலத்தின் வரலாறு தனிபெருமை வாய்ந்ததாகும். தெய்வ மனம் கமழும் தேவார திருப்பதிகங்களில் இடம் பெற்றுள்ள 274 தலங்களில் இதுவும் ஒன்று.
45. இத்தலத்தின் பெயரை கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும். இதனால் சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தினை சிவன் முக்திபுரம் என்றும் அழைக்கின்றனர்.
46. கோவிலுக்குள் செல்ல5 நுழைவு வாயில்கள்உள்ளன. கிழக்கு 2 வாயில்கள் மற்றும் வடக்கு, மேற்கு, தெற்கு கோபுர வாயில்களும் உள்ளன.
47. மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான முதியவர்களுக்கான பேட்டரி கார் (தொடர்புக்கு-83009 56820) வீல் சேர்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
48. தினமும் 500 பேருக்குபகல் 12.15 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
49. மற்ற அம்மன் கோவில்களை போல இங்கு பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிடுவது இல்லை.
50. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சித்திரை வீதி முழுவதும் கருங்கற்களால் ஆனஅழகிய பாதை அமைக்கப்பட்டுள்ளது..!!
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள்
ஏகாந்த சிந்தனை
தேவையின் பொருட்டு கடவுளை துதிப்போருக்கும், பக்தி செலுத்துவோருக்கும் கடவுள் ஒரு நாளும் காட்சி அளிப்பதில்லை. எவன் ஒருவன் களங்கமற்ற மனதுடன், இறைவன் குறித்து ஏகாந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறானோ, அவன் வழிமுறைகள் தவறு என்றாலும், அவனுக்கு, ஜோதிமயமான இறைவன் அவன் வேண்டிய உருவில் காட்சி தந்து அருளுகிறார். இதற்கு உதாரணமாக, சோழநாட்டைச் சேர்ந்த சனந்தனரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையே எடுத்துக் கொள்ளலாம்.
தன் இள வயதிலேயே நரசிம்ம மந்திர உபதேசம் பெற்றவர் சனந்தனர். இவர் ஒரு முறை, காட்டில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது, வேடன் ஒருவன் சனந்தனரைப் பார்த்து, ’சாமி... இந்த காட்டுல கண்ண மூடி உட்கார்ந்துட்டு என்ன செய்றீங்க?’ எனக் கேட்டான். அவன் குரல் கேட்டு கண்விழித்த சனந்தனர், ’இந்த வேடனுக்கு நரசிம்மரை பற்றியும், அவருடைய உபாசனை குறித்தும் எப்படி சொல்லி புரிய வைப்பது...’ என நினைத்து,’வேடனே... நீ காட்டில் விலங்குகளை தேடுகிறாய் அல்லவா... அதுபோல, நானும் ஒரு விசித்திரமான விலங்கை கண்களை மூடியபடி, தேடிக் கொண்டிருக்கிறேன்...’ என்று கூறி, நரசிம்ம உருவத்தை விவரித்தார். அதைக்கேட்ட வேடன் வியந்து, ’பாதி சிங்கம்; பாதி மனித வடிவில் ஒரு உருவமா... ஆச்சரியமாக இருக்கே... இருந்தாலும், நீங்க கவலைப்படாதீர்கள். நாளை சூரியன் மறைவதற்குள் நீங்கள் சொன்ன அந்த விலங்கை கட்டி, இழுத்து வருவேன்; அப்படி கொண்டு வராவிட்டால், நெருப்பில் விழுந்து இறப்பேன்; இது சத்தியம்...’ என்று கூறி, புறப்பட்டான்.
மறுநாள் பொழுது விடிந்ததும், நரசிம்மத்தை தேடி, காடெங்கும் அலைந்தான் வேடன். அவன் சிந்தனை முழுவதும் நரசிம்மர் நினைவிலேயே இருந்தது; தண்ணீர் கூட அருந்தாமல் தேடி அலைந்தான். அந்தி சாயும் நேரம் நெருங்கியது, வேடன் மனம் உடைந்து போனான். ’அந்த நல்ல மனிதருக்கு, அவர் தேடும் விலங்கை கொண்டு வருவதாக வாக்கு கொடுத்தேனே... அதை நிறைவேற்றாத நான், இனிமேல் உயிருடன் இருக்கக் கூடாது...’ என்று நினைத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான். அப்போது, காடே அதிரும்படியாக ஒரு கர்ஜனை கேட்டது. வேடன் திரும்பிப் பார்த்தான்; அங்கே, நரசிம்மர் நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும், வேடனுக்கு கோபம் தாங்கவில்லை. காட்டு கொடிகளை நரசிம்மரின் கழுத்தில் கட்டி, ’தரதர’வென இழுத்து போய், சனந்தனரின் முன்னால் நிறுத்தி, ’சாமி, நீங்கள் தேடிய விலங்கை இழுத்துக் கொண்டு வந்து விட்டேன்...’ என்று கூறினான். சனந்தனருக்கு, நரசிம்மரின் கர்ஜனை கேட்டதே தவிர, உருவம் கண்ணுக்கு தெரியவில்லை. ’வேடனுக்கு கிடைத்த புண்ணியம் எனக்கு கிடைக்கவில்லையே...’ என்று அழுதார் சனந்தனர். அப்போது நரசிம்மர், ’சனந்தனா... இந்த வேடனுக்கு உள்ள ஏகாந்த சிந்தனை, ஒருமைப்பட்ட மனது உனக்கு ஏற்படவில்லை; அப்படி உனக்கு ஏற்படும் சமயத்தில் நான் உனக்கு அருள் புரிவேன்...’ என்று அசரீரியாக கூறினார். அந்த சனந்தனர் தான் பிற்காலத்தில் ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவராகி, பத்மபாதர் என திருநாமம் பெற்றார். காபாலிகன் ஒருவன் ஆதிசங்கரரை கொல்ல முயன்ற போது, சனந்தனரின் உடம்பில் நரசிம்மர் ஆவாகனமாகி, காபாலிகனை கொன்று, ஆதிசங்கரரை காப்பாற்றினார் என்பது வரலாறு.tks nalini gopalan #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள்
#🧳 கோடைகால இடங்கள்🌅 #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #📢தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி உத்தரவு😨 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#😱இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்👏 #😨விஜய் பாடல்களுக்கு தடை❌ #📢தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி உத்தரவு😨 #🤪தேர்தல் அலப்பறைகள்📦 #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅
#🕉️ஓம் முருகா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🌹இன்று 07.05.2026.. தேய்பிறை சஷ்டி
🌹முருகப்பெருமானின் சரவணபவ மந்திரத்தின் பொருள்..
சிவனிடமிருந்து முருகன் தோன்றியதால் ‘சிவமும் முருகனும்’ ஒன்றே என்பது தத்து வம். சைவ சித்தாந்தம் முருக வழிபாட்டை சைவத்தின் ஒருகூறாவே கருதப்படுகிறது.
முருகப்பெருமான் இச்சாசக்தி வள்ளியை யும், கிரியா சக்தியான தெய்வானையை யும் மணந்த ஞான சக்தியாக தென்னாட்டி லும், பிரம்மச்சாரியான கார்த்திகேயராக வடநாட்டிலும் வழிபடப்படுகிறார்.
சரவணப்பொய்கையில் உதித்த சண்முக க் கடவுளை கார்த்திகைப் பெண்கள் வளர் த்தமையால், கார்த்திகை நட்சத்திரம், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், ஆடிக் கிருத்திகை என்றே சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது.
அன்று துவங்கி, கிருத்திகை நட்சத்திரம் தோறும் விரதமிருந்து, தைக்கிருத்திகை அன்று விரதம் முடிப்பவர்களுக்கு எம்பெ ருமான் முருகனருளால் தீராப் பெருந்துயர் தீரும்.
திருமுருகனின் ஷடாட்சர மந்திரம் ‘சரவணபவ’ என்பதாகும். ‘சரவணபவன்’ என்றால் நானல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று பொருள். ‘சரவணபவ’ மந்திரத்தின் தத்துவம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.
ச - செல்வம்
ர - கல்வி
வ - முக்தி
ண - பகை வெல்லல்
ப - காலம் கடந்த நிலை
வ - ஆரோக்கியம்
முருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது.
🌹 சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்த இடும்பன், பின் முருகனின் கருணையைப் பெற வேண்டி, அகத்தியர் ஆணைப் படி, சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகளை பிரம்மதண்டத்தின் இருபுறமும், பாம்புக ளை உறியாகக் கட்டி, கழுத்தில் தண்டாயு தபாணியாக முருகன் ஆட்கொள்ளவே, தன்னை போல், காவடி சுமந்து வருபவர்க ளின் கோரிக்கைகளை முருகன் நிறைவே ற்றித் தர வேண்டும் என வரம் பெற்றான். #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🕉️ஓம் முருகா #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
#✨கடவுள் #🕉️ஓம் முருகா #🗓️ தமிழ் மாதங்களின் சிறப்புக்கள் 🌼 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம்
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🏹ராம நவமி வாழ்த்துக்கள்🙏 #🙏பெருமாள்












