
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✡️ஜோதிட பரிகாரங்கள் #📸பக்தி படம் #✨கடவுள் #🙏ஆன்மீகம் Don't do this
#🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌕 சித்ரா பௌர்ணமி🌼 Today at madurai
#🌕 சித்ரா பௌர்ணமி🌼 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#திருமால்நகரம்மதுரை
#சித்ராபெளர்ணமி இன்று
30-04-2026 இரவு 09.50 முதல் 01-05-2026 நாளை இரவு 11.07 வரை
*சித்ராபௌர்ணமி வழிபாடும் அதன்ரகசியமும்*
சித்திரை மாதத்தில் ஸ்ரீசூரியபகவான் மேசம் ராசியில் பிரவேசிப்பார். அப்போது ஸ்ரீசூரியபகவான் உச்சம் பெறுவார். அதாவது தன்னுடைய அதிகமான கதிர்வீச்சு ஆற்றலை வெளியிடுவார்.
இவ்வாறு ஸ்ரீசூரியபகவான் ஆற்றலை வெளியிட்டு கொண்டு இருக்கும் சமயத்தில் ஸ்ரீசந்திரபகவான் சித்திரை நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது ஏற்படும் திதியான பொளர்ணமி திதி சித்ராபெளர்ணமி என அழைக்கப்படுகிறது .
இதன் சிறப்ப என்னவென்றால் இந்த பௌர்ணமி நாளில் ஸ்ரீசூரியபகவானின் முழு ஆற்றலையும் ஸ்ரீசந்திரபகவான் உள்வாங்கி பிரதிபலிப்பார். அப்போது ஸ்ரீசந்திரபகவானின் பூரணமான ஒளி பூமிக்கு கிடைக்கும். ஆகையால் மற்ற மாதங்களில் ஏற்படும் பௌர்ணமியின் ஒளியை விட சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீசந்திரபகவான் பயணம் செய்யும் போது கிடைக்கும் ஒளி அளவு அதிகமாக பூமிக்கு கிடைக்கும், . அப்போது ஸ்ரீசந்திரபகவானின் பூரண கதிர்வீச்சு அதாவது ஆற்றல் அல்லது சக்தி பூமியில் வாழும் உயிரினங்களுக்கு கிடைக்கும்.
இதுபோன்ற பூரணமான ஸ்ரீசந்திரபகவானின் சக்தி வருடத்தில் ஒருநாள் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியில் மட்டுமே கிடைக்கும் .
ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்தவர்கள் , சந்திரனுடன் கேது ராகு சனி தொடர்பு பெற்றவர்கள் மனஅழுத்தம் , மனக்குழப்பம் , மனக்கலக்கம் ,பைத்தியம் பிடித்தவர்களாக இருப்பார்கள் .
அவர்களுக்கும் மற்றும் சந்திரனின் ஆற்றல் தேவைப்படும் கற்பனையாளர்கள் , ஆராய்ச்சியாளர்கள் , கண்டுபிடிப்பாளர் போன்றோர்களும் சந்திரன் ஆற்றல் அதிகமாக கிடைக்கும் சித்ராபௌர்ணமி அன்று வீட்டை விட்டு வெளியே வந்து நிலவு ஒளியில் அதிக நேரம் இருந்தால் சந்திரனின் ஆற்றல் அதிக அளவு கிடைக்கும் .
அப்போது சந்திரன் வலுப்பெற்று ராகு-கேது சனி போன்ற இருட்டு கிரகங்களால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறையும் .
எனவே நம் முன்னோர்களும் ரிஷிகளும் முனிவர்களும் சித்ராபௌர்ணமி நாளை இறைவனுக்கு கொண்டாடும் திருவிழாவாக கொண்டாட வழிவகை செய்து எல்லோரையும் பூரண நிலவு ஒளியை பெறவைத்தனர்.
இதுதான் மெய்ஞான மற்றும் -விஞ்ஞான சூட்சமம் ஆகும் .
எனவே நாமும் #சித்ராபௌர்ணமி நிலவு ஒளியில் அதிகநேரம் இருந்து #கள்ளழகர் இறைவனையும் வழிபட்டு இறையருளையும் ஸ்ரீசந்திரபகவானின் ஆற்றலையும் பெறுவோம்..
அன்று சத்ய நாராயண பூஜை செய்தல் பெரும் பலனை கொடுக்கும்
#ராஜ்குமார்மதுரை
ஓம்நமோநாராயணா
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📸பக்தி படம் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #✨கடவுள்
#திருமால்நகரம்மதுரை
#சித்ராபெளர்ணமி இன்று
30-04-2026 இரவு 09.50 முதல் 01-05-2026 நாளை இரவு 11.07 வரை
*சித்ராபௌர்ணமி வழிபாடும் அதன்ரகசியமும்*
சித்திரை மாதத்தில் ஸ்ரீசூரியபகவான் மேசம் ராசியில் பிரவேசிப்பார். அப்போது ஸ்ரீசூரியபகவான் உச்சம் பெறுவார். அதாவது தன்னுடைய அதிகமான கதிர்வீச்சு ஆற்றலை வெளியிடுவார்.
இவ்வாறு ஸ்ரீசூரியபகவான் ஆற்றலை வெளியிட்டு கொண்டு இருக்கும் சமயத்தில் ஸ்ரீசந்திரபகவான் சித்திரை நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது ஏற்படும் திதியான பொளர்ணமி திதி சித்ராபெளர்ணமி என அழைக்கப்படுகிறது .
இதன் சிறப்ப என்னவென்றால் இந்த பௌர்ணமி நாளில் ஸ்ரீசூரியபகவானின் முழு ஆற்றலையும் ஸ்ரீசந்திரபகவான் உள்வாங்கி பிரதிபலிப்பார். அப்போது ஸ்ரீசந்திரபகவானின் பூரணமான ஒளி பூமிக்கு கிடைக்கும். ஆகையால் மற்ற மாதங்களில் ஏற்படும் பௌர்ணமியின் ஒளியை விட சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீசந்திரபகவான் பயணம் செய்யும் போது கிடைக்கும் ஒளி அளவு அதிகமாக பூமிக்கு கிடைக்கும், . அப்போது ஸ்ரீசந்திரபகவானின் பூரண கதிர்வீச்சு அதாவது ஆற்றல் அல்லது சக்தி பூமியில் வாழும் உயிரினங்களுக்கு கிடைக்கும்.
இதுபோன்ற பூரணமான ஸ்ரீசந்திரபகவானின் சக்தி வருடத்தில் ஒருநாள் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியில் மட்டுமே கிடைக்கும் .
ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்தவர்கள் , சந்திரனுடன் கேது ராகு சனி தொடர்பு பெற்றவர்கள் மனஅழுத்தம் , மனக்குழப்பம் , மனக்கலக்கம் ,பைத்தியம் பிடித்தவர்களாக இருப்பார்கள் .
அவர்களுக்கும் மற்றும் சந்திரனின் ஆற்றல் தேவைப்படும் கற்பனையாளர்கள் , ஆராய்ச்சியாளர்கள் , கண்டுபிடிப்பாளர் போன்றோர்களும் சந்திரன் ஆற்றல் அதிகமாக கிடைக்கும் சித்ராபௌர்ணமி அன்று வீட்டை விட்டு வெளியே வந்து நிலவு ஒளியில் அதிக நேரம் இருந்தால் சந்திரனின் ஆற்றல் அதிக அளவு கிடைக்கும் .
அப்போது சந்திரன் வலுப்பெற்று ராகு-கேது சனி போன்ற இருட்டு கிரகங்களால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறையும் .
எனவே நம் முன்னோர்களும் ரிஷிகளும் முனிவர்களும் சித்ராபௌர்ணமி நாளை இறைவனுக்கு கொண்டாடும் திருவிழாவாக கொண்டாட வழிவகை செய்து எல்லோரையும் பூரண நிலவு ஒளியை பெறவைத்தனர்.
இதுதான் மெய்ஞான மற்றும் -விஞ்ஞான சூட்சமம் ஆகும் .
எனவே நாமும் #சித்ராபௌர்ணமி நிலவு ஒளியில் அதிகநேரம் இருந்து #கள்ளழகர் இறைவனையும் வழிபட்டு இறையருளையும் ஸ்ரீசந்திரபகவானின் ஆற்றலையும் பெறுவோம்..
அன்று சத்ய நாராயண பூஜை செய்தல் பெரும் பலனை கொடுக்கும்
#ராஜ்குமார்மதுரை
ஓம்நமோநாராயணா
#🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏பெருமாள்
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️ராசிபலன் #✡️தோஷ பரிகாரங்கள்
#🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐
இன்று ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜெயந்தி
ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்...
“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.
“இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்...
அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.
“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்...
அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை...
“தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது...
இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம், வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன்...
சிறு கதைகளைச் சொல்லிப் பெரிய தத்துவங் களை விளக்குவதில் வல்லவர் பராசரபட்டர்...
இக்கதையைச் சொன்ன பராசர பட்டர், “திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை...
மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை...
ஆனால்,
மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும்...
எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ,
அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை!” என்று கதைக்குப் பின் உள்ள தத்துவதை விளக்கினார்...
மேலும், “நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர்...
மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா?
பகலையும் இரவையும் இணைக்க முடியுமா?
பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா?
வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா?
உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் இணைக்க முடியுமா?
கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா?
இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர்...
சிங்கம், மனிதன் இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார்...
பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியாகாலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார்...
தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார்.
வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார்...
நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர் இருப்பதாகவும் கொள்ளலாம், அதை வெட்டினா லும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம்...
தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார் நரசிம்மர்...
சிங்கம் எப்படி யானையோடு போர் புரிந்து கொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ, அதுபோல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்து கொண்டே, தன் குழந்தையான பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார்.
இப்படிக்கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்!” என்று விளக்கினார் பட்டர்.
‘தாதா’ என்றால் சேர்ப்பவர் என்று பொருள்.
சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று அழைக்கப்படுகிறார்...
“ஸந்தாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும் படியும், இணைந்த உறவுகள் பிரியாதிருக்கும் படியும் நரசிம்மர் அருள்புரிவார்🙏🙏🙏🚩🚩🚩🕉🕉🕉🧡🧡🧡... #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள்
#✨கடவுள் #🕉️ஓம் முருகா #🗓️ தமிழ் மாதங்களின் சிறப்புக்கள் 🌼 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம்
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🏹ராம நவமி வாழ்த்துக்கள்🙏 #🙏பெருமாள்






