ShareChat
click to see wallet page
search
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம்  முதலாம் திருமுறை 72 வது  திருத்தலம் திருக்குடந்தைக்காரோணம் அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை ஆதிகும்பேசுவரர் மரம் வில்வம் மகாமகததீர்த்தம் எண் : 3 பண் : சாதாரி காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடியார் மறுகு எலாம் மாலை மணநாறு பழையாறை மழபாடி அழகாய மலிசீர்ப் பாலையன நீறுபுனமார்பன் உறை பட்டிசர மேப பரவுவார் மேலையொரு மால்கடல்கள் போல்பெருகி விண்ணுலகம் ஆளும் அவரே. பொழிப்புரை: பெண்கள் காலையில் நீர்நிலைகளில் நீராடுவதால் உண்டாகும் ஓசையை உடையதாய், மாலையில் பூசை செய்வதால் வீதிகளில் எல்லாம் நறுமணம் கமழ்வதாய் உள்ள திருப்பழையாறை என்னும் தலத்தில் மழபாடி என்னும் பகுதியில், தன் திருமேனி முழுவதும் மிக்க சிறப்புடைய பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய மார்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை வணங்குவார் இம்மையில் கடல்போல் செல்வம் பெருக, மறுமையில் விண்ணுலகை ஆள்வர். #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
🙏🏾சனி பகவான் - ShareChat