
அம்மை ஆச்சி நேசன்
@432439658
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
காதலுடன் நானும் காலை மாலை தொழுது
வாடுதல் வாழ்விலிருந்து எம்மை விடுவி என
பதிகம் பல பாடி வேண்டி
நின் பாதம் பணிந்து
நாளையும் கோளையும் இயக்கும் தாயே
நாயேனுக்கு எப்பொழுது அருள்வாய்
தயாபரியே என் அம்மை
ஆச்சியே
{ S.ஜெய வீர பத்ரன்}
#🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
பேராயிரம் முறை காழி செல்வர் அருளிய பதிகத்தை அடியேன் பக்தியுடன் ஒதியும்
தீரவில்லையே என் தீவினை
அருளவில்லையே அம்மை ஆச்சியே நீர் பதிக பலனை
அறவடிவு தாயே ஏற்றம் வேண்டி போற்றும் அடியவர்களூக்கு அரூளாமல்
வாட்டத்துடனே வாழமாறு செய்வாயோ வள்ளலே இது அறமோ அம்மை ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன்} #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்
தர்மர் அறம் கூறுதல் {8}
பகைமையை வெல்லதனால்
வெற்றி அல்லவே
பலம் கொண்டவன் வெற்றி அடைகிறான்
தோற்றவன் மேலும் பகை கொள்கிறான்
சூதினால் வெல்ல முயல்கிறான்
பகைமை ஒழியாது
பகை எனும் நெருப்பை அன்பெனும் நீர கொண்டு அணைப்போம்
பகை வேறு ஒரு இடத்தில் தோன்றி கொண்டே இருக்கும். அன்பினால் அரவைணத்து சென்றால் பகைமை தீருமே நன்மை மலருமே அன்புடையீர் கேளீர்
(ஜெயவீரபத்திரன்) #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
நாரணர் நெஞ்சிலும் நான்முகர் நாவிலும்
ஈசனார் இடப்பக்கிலும் அமர்ந்துள்ள என் அன்னையே
ஏழையேன் நெஞ்சில் அமர்ந்து
என் இன்னல்களை களைவாய்
இன்னிசை நாயகியே என் அம்மையே ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன்} #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
தர்மர் அறம் கூறுதல் {7}
அறம் அற்றவனிடமும் ஒர் அறம் உடையோன் தேவைபடுகிறான்
உலக மக்கள் பொருளினை தேடுவதை விட அன்பை
தேடி அலைகின்றனர்
அன்புடைய மனிதனை
கண்ட பின்புஅகம் மகிழ்கின்றனர்
ஆண் பெண் உறவுக்கு
அன்பே பாலம் அறிவாயே
அன்பே உயர்வு
அன்பே வாழ்வு
அன்பே அமைதி
அறிவாயே ஆரியர்களே பகைமையை மறப்போமே
(ஜெயவீரபத்திரன்) #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
போற்றி தொழுது கொண்டு இரு அந்த பொன்னம்பல
நாயகி திருவடிகளை என்று
ஆற்றை கடந்து அய்யன் திருவடிகளை போற்றி புகழ்ந்த அழகிய தமிழன் அஞ்ஞானம் அகற்றிய மெய்ஞான திருஞான சிவசம்பந்த பெருமான்
கூறியபடி போற்றி கொண்டு இருக்கிறேன் பொறுமையுடன் என் அம்மையே ஆச்சியே
(S.ஜெயவீரபத்திரன்) #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவெங்குரு
அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர்
பவழமல்லி பிரம தீர்த்தம்
பாடல் எண் : 1
காலை நன்மாமலர் கொண்டு அடிபரவி கைதொழும் மாணியை கறுத்த வெங்காலன் ஓலமதிடமுன் உயிரொடு மாள உதைத்தவன் உமையவள் விருப்பம் பெருமான் மாலை வந்து அணுக வோதம் வந்து உலவி மறி திரைசங்கொடு பவளமும் உந்தி வேலை வந்து அணையும் சோலைகள்
சூழ்ந்த வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
பொழிப்புரை:
வைகறைப் பொழுதில், சிறந்தனவாகிய நல்ல மலர்களைப் பறித்துவந்து சாத்தித் தன் திருவடிகளைப் பரவி, கைகளால் தொழும் மார்க்கண்டேயன் உயிரைக் கவரச் சினந்துவந்த கொடிய காலனை ஓலமிட்டு அலறித் தனக்கு முன்னே உயிரோடு மாளுமாறு உதைத்தருளியவனும், உமையம்மைக்கு விருப்பமானவனும் ஆகிய எம்பெருமான், மாலைக் காலம் வரக் கடல் வெள்ள நீர் வந்து உலவிச் சூழ்ந்து வரும் அலைகளால் சங்கு, பவளம் ஆகியவற்றை உந்திவந்து கரையிற் சேர்க்கும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழியில் மேவி வீற்றிருந்தருள்கின்றான்.
குறிப்புரை:
நாள்தோறும் மலர்கொண்டு அடிபரவும் மார்க் கண்டற்காகக் காலனைக் காய்ந்த பரமன் வெங்குரு என்னும் சீகாழியில் வீற்றிருக்கிறார் என்கின்றது. மாணி - பிரமசாரியாகிய மார்க்கண்டர். கறுத்த - கோபித்த. மாலைக்காலம் வந்ததும் கடல் ஓதம் பெருகி, சங்கையும் பவளத்தையும் உந்திக் கடல்சாரும் சோலைகள் சூழ்ந்த காழி என நெய்தல்வளம் கூறப்பெற்றது.
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
மகிழ்ச்சி தரும் செல்வமே
மங்கள இசையே
புகழ்ச்சி தரும் உறவே புண்ணிய வடிவே
எழுச்சி தரும் தமிழே எளியவர்களின் தலைவியே
சுழற்சியை இயக்கும் இயற்கையே என் தெய்வமே
வளர்ச்சியை நிலையாக அருள்வாயே
என் அம்மையே ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன்}
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
புத்ரான் தேஹி தனம் தேஹி
ஸர்ம காமாச்ச தேஹிமே ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி தவிசோ ஜஹி
{தேவிமஹாத்மியம்
கீலக ஸ்தோத்திரம்} #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏கோவில்
ஸ்ரீ சண்டி ஸ்தோத்திரம்
முண்டமாலா தாரிணி முகுந்தபூஜித ருபினி
முக்தி தாரிணிஸர்வ கார்யஸித்தி தாரிணி
முத்கல கேடக தாரிணி
மூலாதார ஸ்வரூபிணி
பாஹிமாம் பாஹிமாம் சாமுண்டி தேஹிமே தேஹிமே
பக்த இஷ்ட பிராதாயணி
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்












