பத்தாம் திருமுறை
திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு
பாடல் எண் : 18
சேர்ந்து இருந்தேன்
சிவ மங்கைதன் பங்கனை
சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்து இருந்தேன் சிவ போதியின் நீழலில்
சேர்ந்து இருந்தேன்சிவன் நாமங்கள் ஓதியே .
பொழிப்புரை:
சீருடையாள் பதம் சேர்ந்தமையால் அவளை ஒருபாகத்தில் உடைய சிவனையும் சேர்ந்து இருக்கின்றேன். இத் திருவா வடுதுறை அவளுடையது மட்டுமன்று; அவன் உடையதுந்தான். இங்கு சிவஞானத் திருவின்கீழ் அவனது திருப்பெயர் பலவற்றையும் ஓதித் துதித்து கொண்டிருக்கின்றேன்.
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்


