ShareChat
click to see wallet page
search
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு பாடல் எண் : 18 சேர்ந்து இருந்தேன் சிவ மங்கைதன் பங்கனை சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண்டுறை சேர்ந்து இருந்தேன் சிவ போதியின் நீழலில் சேர்ந்து இருந்தேன்சிவன் நாமங்கள் ஓதியே . பொழிப்புரை: சீருடையாள் பதம் சேர்ந்தமையால் அவளை ஒருபாகத்தில் உடைய சிவனையும் சேர்ந்து இருக்கின்றேன். இத் திருவா வடுதுறை அவளுடையது மட்டுமன்று; அவன் உடையதுந்தான். இங்கு சிவஞானத் திருவின்கீழ் அவனது திருப்பெயர் பலவற்றையும் ஓதித் துதித்து கொண்டிருக்கின்றேன். #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்
🙏🏼ஓம் நமசிவாய - அருமுல தேவநாயனாம் அருமுல தேவநாயனாம் - ShareChat