ShareChat
click to see wallet page
search
சிறுவனை ஏவி மாமியாரின் கழுத்தில் கத்தியால் குத்தவைத்த சம்பவத்தில் நடந்தது என்ன? ஆந்திர மாநிலம் சித்தூர் நகரில் உள்ள சாமந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. 17 ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் என்பவருடன் திருமணமாகி 15 வயதுடைய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கவிதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே தகாத பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுவன் என்பதால் ஏரியாவில் யாருக்கும் அவ்வளவு சந்தேகமும் வரவில்லை. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து நேரத்தைக் கடத்தி செலவழித்து வந்தனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய மனைவிக்கும், மகன் வயதுடைய சிறுவனுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்த விஜய், மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனால் திருந்த வேண்டிய மனைவி தன்னுடைய கணவர் விஜய் மற்றும் மாமியார் நிர்மலா இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளார். இதற்காக தன்னுடைய 17 வயது பாய் பிரண்டுடன் சேர்ந்து கணவன், மாமியார் ஆகியோரை கொலை செய்ய ரகசியத் திட்டம் தீட்டினார் கவிதா. சம்பவத்தன்று கணவர் மற்றும் பிள்ளைகள் இல்லாத நேரம் பார்த்து தன்னுடைய பாய் பிரண்டை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். கையில் கத்தி, மிளகாய்த் தூள் ஆகியவற்றுடன் கள்ளக்காதலி வீட்டுக்குச் சென்ற அந்த 17 வயது சிறுவன், கவிதாவின் மாமியார் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளான். ஆனால், மாமியார் நிர்மலா தீவிரமாகப் போராடி சத்தம் போட்டுக் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது இனிமேல் சிக்கிக் கொள்வோம் என்று அறிந்த அந்த பாய் ஃப்ரெண்ட், தப்பித்து ஓடிவிட்டான். #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #📢பிப்ரவரி 9 முக்கிய தகவல் 🫠
வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 - ஆந்திரா: சிறுவனுடன் கள்ளக்காதல். இடையூறாக ுந்ததால் மாமியாரையும் கணவரையும் கொல்ல முயன்ற பெண். ஆந்திரா: சிறுவனுடன் கள்ளக்காதல். இடையூறாக ுந்ததால் மாமியாரையும் கணவரையும் கொல்ல முயன்ற பெண். - ShareChat