ShareChat
click to see wallet page
search
பல வருடங்களாக ஒரு கனவாக இருந்தது. திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்தை நடந்து சென்று கடக்கும்போதெல்லாம், ஒரு நிமிடம் நின்று அந்த இல்லத்தைப் பார்த்துவிட்டு தான் செல்வேன். சில நாட்களில் அந்த இல்லத்திற்கு எதிரே நின்று, பாரதியைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பேன். பாரதி இந்த திருவல்லிக்கேணி இல்லத்தில் இருந்து பார்த்தசாரதி கோயிலுக்கும் இந்த வீதியிலும் எப்படி நடந்திருப்பான்? செல்லம்மாவும் பாரதியும் இந்த வீதியில் எப்படி நடந்திருப்பார்கள்? இந்த இல்லத்திற்கு பாரதியைச் சந்திக்க வரும் நண்பர்களுடன் பாரதி எப்படி உரையாடியிருப்பான் என்பதையும் யோசித்துப் பார்த்திருப்பேன். அவைகளெல்லாம் கனவுகளாகவே இருந்தன. இன்று காலை ஏனோ பாரதியின் நினைவு வந்ததுசரி, நாம் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, "பாரதி பற்றி நான் கண்ட" கனவுகளை எல்லாம் மெய்யாக்கி காணொளியாக உருவாக்கிப்பார்க்கலாம் என்று முயன்றேன். பலமுறை திருப்தி இல்லை என்றாலும், முயற்சி செய்துகொண்டே இருந்தேன். முடிவில், மிக அற்புதமாக வந்திருந்தது – அவை தங்களின் பார்வைக்காக! #📸Travel Photography #🤳மொபைல் போட்டோகிராபி #🤳போட்டோகிராஃபி ரகசியங்கள்📸 #காலை வணக்கம் #காலை வணக்கம் நண்பர்களே
📸Travel Photography - ShareChat
00:15