#🌎பொது அறிவு
ஏப்ரல் 05,
தேசிய கடல்சார் தினம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ம் தேதி தேசிய கடல்சார் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கப்பல் துறையின் மகத்தான பணிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) 1919ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5ம் தேதி மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது. அதனை நினைவுக்கூறும் வகையில் 1964 ம் ஆண்டு ஏப்ரல் 5 ம் தேதி முதல்முறையாக தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது.


