#🌎பொது அறிவு
டி. ஆர். மகாலிங்கம்
(16 ஜூன் 1924-
*21 ஏப்ரல் 1978*)
1940,1950 களில் பிரபலமாயிருந்த தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.
உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.
#🌎பொது அறிவு
முல்லையூரான்
(முருகேசு சிவராசா
27 மார்ச் 1955-
*21 ஏப்ரல் 2006*)
ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.
யாழ்ப்பாணத்தில் 1980 ல் அக்னிக் குஞ்சு என்ற பெயரில் ஓர் இதழையும் வெளியிட்டு வந்தார்.
1980களில் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் ஈழம் எழுந்து வருகிறது,
குங்குமம், புதிய அலைகள் ஆகிய புதின நூல்களை எழுதி வெளியிட்டார்.
காகம் என்ற பெயரில் மாத இதழ் ஒன்றையும் 1996 வரை வெளியிட்டு வந்தார்.
இவ்விதழில் அவர் நெடுங்கதைகள், திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார்.
#🌎பொது அறிவு
சகுந்தலா தேவி
(04 நவம்பர் 1929-
*21 ஏப்ரல் 2013*)
புகழ்பெற்ற இந்திய கணிதமேதை
மற்றும் சமூகசேவகி,
கின்னஸ் விருது உள்ளிட்ட
பல்வேறு விருதுகள் பெற்றவர்.
#🌎பொது அறிவு
முகமது இக்பால்
(Muhammad Iqbal
09 நவம்பர் 1877-
*21 ஏப்ரல் 1938*)
பிரிட்டிஷ்- இந்தியாவின்
முஸ்லிம் கவிஞரும்,
இஸ்லாமிய மெய்யியலாளரும், அரசியல்வாதியும் ஆவார்.
உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெரும் இலக்கியப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
பிரிட்டிஷ்-இந்தியாவில் முஸ்லிம்களுக்கெனத் தனிநாடு கோரிய இவரது தூரநோக்கு பாகிஸ்தான் என்ற நாட்டைப் பின்னர் உருவாக்குவதற்கு ஊக்கமூட்டியது.
இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "ஸாரே ஜஹான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்.
#🌎பொது அறிவு
ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ்
(Sir Richard Stafford Cripps
24 ஏப்ரல் 1889-
*21 ஏப்ரல் 1952*)
இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த இங்கிலாந்து தொழிற்கட்சியின் அரசியல்வாதி.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இங்கிலாந்தின் போர்க்காலக் கூட்டணி அரசில் பல பதவிகளை வகித்தவர்.
சோவியத் ஒன்றியத்திற்கான தூதராகவும் வானூர்தி தயாரிப்புத்துறை அமைச்சராகவும் இந்தக் காலகட்டத்தில் பணியாற்றியுள்ளார்.
#🌎பொது அறிவு
பாரதிதாசன்
(கனக சுப்புரத்தினம்
29 ஏப்ரல் 1891-
*21 ஏப்ரல் 1964*)
பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார்.
தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.













