#🌎பொது அறிவு
முகமது இக்பால்
(Muhammad Iqbal
09 நவம்பர் 1877-
*21 ஏப்ரல் 1938*)
பிரிட்டிஷ்- இந்தியாவின்
முஸ்லிம் கவிஞரும்,
இஸ்லாமிய மெய்யியலாளரும், அரசியல்வாதியும் ஆவார்.
உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெரும் இலக்கியப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
பிரிட்டிஷ்-இந்தியாவில் முஸ்லிம்களுக்கெனத் தனிநாடு கோரிய இவரது தூரநோக்கு பாகிஸ்தான் என்ற நாட்டைப் பின்னர் உருவாக்குவதற்கு ஊக்கமூட்டியது.
இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "ஸாரே ஜஹான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்.


