#🌎பொது அறிவு
மை ஊற்றி எழுதும் Fountain pen ல் மை கசிவதை தடுத்து நேரடியாக நிப்பிற்கு செல்லும் புதிய முறையை கண்டுபிடித்து அமெரிக்கா Connecticut ஐ சேர்ந்த Andrew Brown Hyde
காப்புரிமம் பெற்ற தினம் இன்று.
( *22 ஏப்ரல் 1890*)
#🌎பொது அறிவு
சர்வதேசப் புகழ்பெற்ற Oklahoma Land Rush of 1889
என்ற பெரும் ஓட்டம் அமெரிக்கா Oklahoma ல்
நடைபெற்ற தினம் இன்று.
( *22 ஏப்ரல் 1889*)
அமெரிக்கா Oklahoma ல் உள்ள சுமார் 20 லட்சம் (18,87,796) ஏக்கர் புறம்போக்கு நிலங்களை சுமார் 50,000 பேர் பெரும் ஓட்டத்தின்மூலம் கைப்பற்றி கூடாரங்கள் அமைத்து குடியேறினார்கள்.
#🌎பொது அறிவு
அமெரிக்காவின் two-cent piece நாணயம் முதன்முதலாக
"In God We Trust"
என்ற வாசகத்துடன் வெளியான தினம் இன்று
( *22 ஏப்ரல் 1864*)
U.S. Congress ன் Coinage Act of 1864 சட்டதிருத்தத்தின்படி இந்நாணயம் வெளியிடப்பட்டது
#🌎பொது அறிவு
ஏ. ரகுநாதன்
(05 மே 1935 -
*22 ஏப்ரல் 2020*)
ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவர்.
மேடை நாடகம், திரைப்படம், வானொலி, குறுந்திரைப்படங்கள் என்று பல்வேறு தளங்களில் செயற்பட்டு வந்தவர்.
#🌎பொது அறிவு
லால்குடி ஜெயராமன்
(17 செப்டம்பர் 1930-
*22 ஏப்ரல் 2013*)
தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசை அறிஞர் ஆவார்.
இவர் ஒரு வயலின் கலைஞர், பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இசை ஆசிரியர்.
#🌎பொது அறிவு
கந்தர்வன்
(03 பிப்ரவரி 1944-
*22 ஏப்ரல் 2004*)
தமிழக எழுத்தாளரும், கவிஞரும், தொழிற்சங்கவாதியும் ஆவார்.
70 களின் தொடக்கத்தில் உருவான மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.
பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர்.
#🌎பொது அறிவு
உலகின் முதல்முறையாக அமெரிக்கா
California ல் fiber optics கேபிள்மூலம்
தொலைபேசி வசதியை
General Telephone and Electronics
அறிமுகம் செய்த தினம் இன்று
( *22 ஏப்ரல் 1977*)
#🌎பொது அறிவு
1966 ம் ஆண்டின் சிறந்த திரைக்கதைக்கான
சென்னை சங்கீத நாடக சங்க விருதை
(Madras State Sangita Nataka Sangam)
கலைஞர் மு.கருணாநிதிக்கு
சென்னை ராஜாஜி ஹாலில் நடைபெற்ற விழாவில்,
தமிழக முதல்வர்
பேரறிஞர் அண்ணா
வழங்கிய தினம் இன்று.
( *22 ஏப்ரல் 1967*)
1966 ல் வெளியான அவன் பித்தனா?, மறக்க முடியுமா? என்ற திரைப்படங்களுக்காக கலைஞர் மு.கருணாநிதி இவ்விருதினைப் பெற்றார்.
#🌎பொது அறிவு
உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 58 நாடுகள் கலந்து கொண்ட EXPO New York 1964
அமெரிக்கா New York ல் துவங்கிய தினம் இன்று
( *22 ஏப்ரல் 1964*)
இது 17 அக்டோபர் 1965 ல் நிறைவுபெற்றது. இதில் 58 நாடுகளைச் சேர்ந்த சிறுதொழில் முதல் பெருந்தொழில் வரை உள்ள பொருட்கள் முதல் இயந்திரங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டன.
#🌎பொது அறிவு
தற்கால கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்
வைக்கம் என்ற ஊரில் வைக்கம் சிவன் கோவிலைச்
சுற்றியுள்ள தெருக்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்
பயன்படுத்தக்கூடாது என்ற தீண்டாமை சட்டத்திற்கு எதிராக
நடைபெற்றப் போராட்டமான “வைக்கம் போராட்டம்” ல்
பங்கேற்று பிரச்சாரங்கள் மேற்கொண்ட
தந்தை பெரியார்
கைது செய்யப்பட்டு அருவிக்குத்தி
சிறையில் அடைக்கப்பட்ட தினம் இன்று.
( *22 ஏப்ரல் 1924*)
சுமார் ஒருமாத சிறைத்தண்டனைக்குப்பிறகு விடுதலை செய்யப்பட்ட தந்தை பெரியார், விடுதலைக்குப்பின்னரும் போராட்டங்களில் ஈடுபட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு திருவனந்தபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சுமார் நான்குமாத தண்டனைக்குப்பின்னர் திருவிதாங்கூர் மகாராஜா காலமானதால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர், அப்போது தந்தை பெரியாரும் விடுவிக்கப்பட்டார்.






![🌎பொது அறிவு - 0 TRU S GOD STATE$ Wy ] ೯ ೩ 0٥NS 1864 0 TRU S GOD STATE$ Wy ] ೯ ೩ 0٥NS 1864 - ShareChat 🌎பொது அறிவு - 0 TRU S GOD STATE$ Wy ] ೯ ೩ 0٥NS 1864 0 TRU S GOD STATE$ Wy ] ೯ ೩ 0٥NS 1864 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_929377_302e57e1_1776839927343_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=343_sc.jpg)






