#🌎பொது அறிவு
முல்லையூரான்
(முருகேசு சிவராசா
27 மார்ச் 1955-
*21 ஏப்ரல் 2006*)
ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.
யாழ்ப்பாணத்தில் 1980 ல் அக்னிக் குஞ்சு என்ற பெயரில் ஓர் இதழையும் வெளியிட்டு வந்தார்.
1980களில் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் ஈழம் எழுந்து வருகிறது,
குங்குமம், புதிய அலைகள் ஆகிய புதின நூல்களை எழுதி வெளியிட்டார்.
காகம் என்ற பெயரில் மாத இதழ் ஒன்றையும் 1996 வரை வெளியிட்டு வந்தார்.
இவ்விதழில் அவர் நெடுங்கதைகள், திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார்.


