பற்றற்று போவதால்
பசியற்றுப் போகுமோ..?
இறைத் தேடல்
என்றாலும்
பசி வந்தால்
இரையைத் தேடித் தான்
ஆக வேண்டும்...
ஞான நிலை
அடைந்து விடுவதால்
பசி இல்லாமல்
போவதில்லை..
பக்குவம் வேறு
பசி வேறு.
ஞானம்
பற்றற்று இருக்கணும்..
பசி
ருசியற்று இருக்கணும்...
அவ்வளவுதான்..
இரண்டையும்
தனித்தனியாக
பார்ப்பவர்களுக்கு
முரண்பாடாகத் தான்
தெரியும்...
நீ பசி என்றால்
உலகம் தான் உணவு...
பற்றற்று ருசித்திரு..(அனுபவித்திரு)..
--பெ.மாரிமுத்து--
#💝இதயத்தின் துடிப்பு நீ


