ShareChat
click to see wallet page
search
#📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் சமீபகாலமாக உலகப் பொருளாதார அரங்கில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு பெயர் 'பெட்ரோடாலர்'. 50 ஆண்டுகளாக அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைத் தாங்கிப் பிடித்த இந்த ஒப்பந்தம் 2024ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், தற்போது சவுதி அராம்கோ (Aramco) மீதான தாக்குதல்கள் உலகையே உலுக்கியுள்ளன. சவுதி அராம்கோ என்பது உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மட்டுமல்ல, உலக எரிசக்தி சந்தையின் இதயம். தற்போது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், சவுதியின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ராஸ் தனுரா (Ras Tanura) சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. Ras Tanura இது மத்திய கிழக்கின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். நாளொன்றுக்கு 5,50,000 பேரல் (bpd) எண்ணெயைச் சுத்திகரிக்கும் பிரம்மாண்டமான உற்பத்தி திறன் கொண்டது. ட்ரோன் தாக்குதல் ஆபத்தில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Aramco மீதான தாக்குதல் பற்றி விவாதிக்க முன்னர் சற்று 50 வருடங்கள் பின்னோக்கி செல்வோம். 1974-ம் ஆண்டு அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெயை அமெரிக்க டாலரில் (USD) மட்டுமே விற்க வேண்டும். இதற்குப் பதிலாக, சவுதி அரேபியாவிற்குத் தேவையான முழுமையான இராணுவப் பாதுகாப்பை அமெரிக்கா வழங்கும். இந்த 'பெட்ரோடாலர்' முறையினால்தான் சர்வதேச அளவில் டாலர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாறியது. கடந்த ஆண்டுடன் இந்த 50 ஆண்டு கால ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியா தனது எண்ணெயை சீனாவின் நாணயமான 'யுவான்' (Yuan) மூலம் விற்பனை செய்யத் தொடங்கியது. இது அமெரிக்க டாலருக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பெட்ரோடாலர் ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தவரை சவுதி மீது பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் இருந்ததில்லை. ஆனால், பாதுகாப்பு ஒப்பந்தம் கேள்விக்குறியானவுடன் தாக்குதல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. உலகப் பொருளாதாரத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 'பெட்ரோடாலர்' ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ள நிலையில், சவுதி அராம்கோ (Aramco) மீதான சமீபத்திய தாக்குதல்கள் பலத்த சந்தேகங்கள் எழுகிறது. இது வெறும் தாக்குதலா அல்லது சவுதியை மீண்டும் அடிபணிய வைக்க அமெரிக்கா நடத்தும் திட்டமிட்ட நாடகமா? இங்குதான் ஒரு மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது. ஈரானின் ட்ரோன்களைப் போன்றே தாக்குதலை நடத்தி, சவுதி அரேபியாவை மீண்டும் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள் தள்ள அமெரிக்கா முயல்கிறதா? ஈரானின் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம். சவுதியை முட்டாளாக்கி, "உங்களுக்கு எங்களுடைய military பாதுகாப்பு அவசியம் தேவை" என்று உணர வைத்து, மீண்டும் 'பெட்ரோடாலர்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைப்பதற்கான ஒரு 'False Flag' (திட்டமிட்ட போலித் தாக்குதல்) நாடகமாக ஏன் இருக்ககூடாது? 2019-ல் அப்காய்க் மற்றும் குரைஸ் ஆலைகள் மீதான தாக்குதலின் போதும் சவுதி இதேபோன்ற அதிர்ச்சியைச் சந்தித்தது. தற்போது "அமெரிக்கா எங்களைக் கைவிட்டுவிட்டது" என்று சவுதி கதறும் சூழலை உருவாக்கி, மீண்டும் அவர்களை டாலர் வலைக்குள் கொண்டுவர அமெரிக்கா காய் நகர்த்துகிறது.
📰தமிழக அப்டேட்🗞️ - oromco UఖtIlJ  DAY REFINERY PER | RELS | I6Uul டும்சவுதியை TANURA 8 000_ 550 ( RAS CAPACITY: முப்பாள்ஆக்கும்அமெரிக்கா . =~ oromco UఖtIlJ  DAY REFINERY PER | RELS | I6Uul டும்சவுதியை TANURA 8 000_ 550 ( RAS CAPACITY: முப்பாள்ஆக்கும்அமெரிக்கா . =~ - ShareChat