ShareChat
click to see wallet page
search
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! புதிய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என சூட்டப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் திறப்பு குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என நகராட்சி நிர்வாகமும் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் தெரிவித்தார்கள். திண்டிவனத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.26.50. கோடியில் புதிய பேருந்து நிலையக் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் மாநில நகராட்சி நிர்வாகம் ஆகியோர் திங்கட்கிழமை பார்வையிட்டு பணிகளின் தற்போது நிலை குறித்து கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து அமைச்சர் நேரு அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது இந்தப் பேருந்து நிலையம் 51 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடனும் மற்றும் 61 கடைகளை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. இதில் உணவகங்கள்.,பொருள்கள் வைப்பறை,ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான அறைகள், சுத்திகரிக்கபட்ட சுகாதாரமான குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 99 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. சிறு ,சிறு பணிகள் நடைபெற்று வருகின்றன திண்டிவனம் நகராட்சியின் தீர்மானத்தின் படி பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், பேருந்து நிலைய திறப்பு குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் நேரு கூறினார். மேற்படி இந்த ஆய்வில் முன்னாள் அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் எம்எல்ஏ, விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ அன்னியூர் சிவா, புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திண்டிவனம் நகராட்சி தலைவர் ஆர். எஸ். ரவிச்சந்திரன், திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட இளைஞர் அணிதுணை அமைப்பாளர்கள் டி. கே. பி .சுரேஷ், எம்.டி. பாபு, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் மருத்துவர் அணி துணை அமைப்பாளர் சூரிய பிரகாஷ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! - ShareChat