ஒரு நாட்டின் அரசியலாகட்டும் , அரசியல்வாதிகளாகட்டும், அரசு இயந்திரங்களாகட்டும்
இவைகளனைத்தும்
திறம்பட
அதனதன் வேலைகளை
அது அது செவ்வனே செய்யுமானால்
அந்த நாடுதான் உலகின் NO. 1 மக்களுக்கான நாடாக இருக்கும் .
இப்படியெல்லாம் நடக்குமா என்றால் அது சற்று கடினம்தான்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் போலதொரு பைத்தியக்காரன் பைத்தியக்காரத்தனமாக முடிவெடுக்கும்போது
நாட்டின் உச்சபட்ச அதிகாரம் படைத்த நீதிமன்றம் தலையிட்டு உச்சந்தலையில் ஒரு கொட்டு வைத்து ட்ரம்ப் எனும் பைத்தியக்காரனின் பைத்தியக்காரத்தனத்தை எச்சரித்து
மக்களின் மானம் மரியாதையை காத்த வரலாற்றை இரண்டொரு நாட்களுக்கு முன்பு பார்த்தோம்.
அப்படியெல்லாம் அமெரிக்க நீதிமன்றத்தை மதித்துவிடுவார் என்பதுல் எனக்கு நம்பிக்கை இல்லை .
அப்படி ஒரு நல்ல செய்தி இந்தியாவில் நடக்காதா என்றால் இதுவும் சற்றே கடினம் தான் .
காரணம்
மதம்.
ஏன் அப்படி என்றால் அமெரிக்காவில் எல்லாம் மதம் இல்லையா ?
மதம் இருக்கிறது.
ஆனால்
மத வெறியர்கள் அங்கு இல்லை .
வீதிக்கு வீதி கோவில்கள் இல்லை .
எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் ஜனாதிபதியே தவறு செய்தாலும்
உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு உன் ஈகோவை உன் பைத்தியக்காரத்தனத்தை உன் வீட்டில் வைத்துக்கொள்.
உன்னைத் தேர்ந்தெடுத்தது இந்நாட்டு மக்கள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள் என்று நியாயத்தை நிலைநாட்டும் நீதிமன்றத்தின் உச்ச அதிகாரத்தை சமீபத்தில் பார்த்தோம்.
இங்கே அப்படிப்பட்ட நிலை இருக்கிறதா என்றால் இல்லை .
அப்படிப்பட்ட நீதிபதிகளாவது இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை .
மக்களை நம்ப வைப்பதற்காக
ஆட்சியாளர்களை கடுமையாக சாடுவதைப்போலதொரு தோற்றத்தை முதலில் கொடுப்பார்கள். மக்களும் ஆகா நேர்மையான தைரியமான நீதிபதி வந்திருக்கிறார் என்று பெருமூச்சை இழுத்து வெளியே விடுவதற்குள்
ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகவே தீர்ப்புகளை கொடுப்பார்கள்.
அதேசமயம்
மோடியையும் அமித்ஷாவையும் வைத்து அரசியலையும் நாட்டையும் கெடுத்து ..
ஒரு ஆர்எஸ்எஸ் கார சபாநாயகரை வைத்தே நாடுளுமன்றத்தையும் கெடுத்து ..
குற்றவாளிகளான அமைச்சர்களை வைத்தே அமைச்சகங்களையும் கெடுத்து ..
பணத்தாசையையும் பதவி ஆசையையும் காட்டி
அமலாக்கத் துறை ,
நீதித்துறை,
CBI,
இவைகளை நாசப்படுத்தி..
கலவரத்தை தூண்டுவதற்காக பெரும் பொருட்செலவில் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய
இணை துணை அமைக்களான பஜ்ரங்தள் போன்று, இந்து முன்னணி போன்று பலநூறு தொங்கு சதைகளை உருவாக்கி ..
சரி
இதெல்லாம் எதற்காக ..?
நாட்டுக்கு நல்லது செய்யவா..?
இல்லை
மக்களுக்குத்தான் நல்லது செய்யவா?
எதற்காகவும் இல்லை ..
ஆட்சியதிகாரத்தின்மூலம் கிடைக்கப் பெறும் பல லட்சம் கோடிகளை , அல்லக் கைகளை வைத்து மிரட்டி வாங்கப்பட்ட பல்லாயிரம் கோடிகளை பாதுகாக்க பினாமியாக ஒருவனை உருவாக்கி இருக்கிறார்கள் .
அவனுக்குப் பெயர்தான் அதானி.
இந்த அதானிக்காக இந்தியாவின் கொள்கை முடிவுகள் மாற்றப்படுகின்றன.
மாநில அரசுகளின் பெரும் பெரும் Projects எல்லாம்
மிரட்டி அதானிக்காக வாங்கப்படுகின்றன.
பணியவில்லை என்றால் அமலாக்கத்துறையை அனுப்பி நீதிமன்றத்தில் வழக்காகத் தொடுத்து நீதிமன்றத்தில் அதானிக்கு ஆதரவாக என்ன வாசிக்கப்பட வேண்டும் என்பதையும் தீர்மாணித்து
மிரட்டி வாங்கப்பட்ட Projects தான் அதிகம்.
இப்படி
உலகப் பணக்கார இயக்கமாக ஆர்எஸ்எஸ் மாறி
எஞ்சியும் சிதறிக்கிடப்பவைகளையும் அதானி மூலமாக மூலதனமாக்கி
அவனையும் உலகப் பணக்காரனாக ஆக்குவதை மட்டுமே முதன்மையாக கொண்டு இயங்கி வரும் இயக்கம் தான் ஆர்எஸ்எஸ் .
நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ நல்லது செய்வதற்காக வந்தவர்களேயல்ல இவர்கள் .
நாட்டு மக்கள் என்றால் அது ஆர்எஸ்எஸ் ன் பார்பன இனம் மட்டுமே .
பிற இன மக்கள் அனைவரும் பார்பனர்களை சுமக்கும் அடிமைகள் அவ்வளவே .
தயவுசெய்து சிந்தியுங்கள்.
ஆன்மீகத்துக்கும் ஆர்எஸ்எஸ் க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை .
ஆன்மீகம் என்பது ஆர்எஸ்எஸ் ஐ பொறுத்தவரையில் மக்களை ஆட்டுவிக்கப் பயன்படும் ஒரு கருவி அவ்வளவுதான்.
இனி மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆ. சிங்கராயர்
திராவிட நட்புக் கழகம்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை. #👨மோடி அரசாங்கம்


