
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
ஈரானின் சபஹார் துறைமுகத்தை வாங்கிட்டோம். பாகிஸ்தானுக்கு மரண அடின்னு கூவிய மோ(டுமுட்)டி சங்கீ கூட்டம்.
ஈரான் வெளியுறவு அமைச்சர்
இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி இந்த விவகாரம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஈரானின் சபஹார் துறைமுகத் திட்டத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது, தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அப்பாஸ் அராச்சி தெரிவித்தார்.
இந்த துறைமுகம் இந்தியாவுக்கு மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடனான இணைப்பை மாற்றியமைக்கக்கூடிய "தங்க வாசல்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தங்க வாசல்
இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இது தொடர்பாகப் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். சபஹார் துறைமுகத்திற்கு பட்ஜெட் ஒதுக்காதது குறித்துப் பேசிய அவர், "இது ஏமாற்றம் தான். ஈரானுக்கு மட்டுமில்லை.. இந்தியாவுக்கும் கூட இது ஏமாற்றத்தையே தரும் என்று நான் நினைக்கிறேன்.
பிரதமர் மோடி ஒருமுறை முன்பு குறிப்பிட்டது போல், சபஹார் துறைமுகம் என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியை மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஐரோப்பாவுடனும் இணைக்கும் ஒரு முக்கியமான தங்க வாசல்.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம். இது முழுமையாக மேம்படுத்தப்பட்டால் ஈரானின் வழியாக மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஐரோப்பா நாடுகள் இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்கும்.
அந்த நாடுகளை இந்தியாவுடன் இணைப்பதில் இது மிக முக்கிய பங்காற்றும். இதுவே சிறந்த போக்குவரத்து வழித்தடமாக அமையும் என நான் நினைக்கிறேன்.
ஒரு நாள் இந்த துறைமுகம் முழுமையாக மேம்படுத்தப்படுவதை நாம் காணலாம் என நம்புகிறேன்" என்றார்.
இந்தியாவுக்கு நஷ்டம்
ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சபஹார் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வந்தது. இந்தத் துறைமுகத்தால் பாகிஸ்தானைத் தொட தேவையில்லாமல் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கு நேரடி இந்தியாவால் வர்த்தகம் செய்ய முடியும்.
தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து வழித்தடத்தை இது உருவாக்கும். இது இந்தியாவின் பிராந்திய இணைப்பை மேம்படுத்துகிறது.
மேலும், இந்தத் துறைமுகம் நிலப்பரப்பில் சூழப்பட்ட மத்திய ஆசியச் சந்தைகளுக்கு வர்த்தகத்தை அதிகரிக்கிறது.
பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் சீனாவின் செல்வாக்குக்கு அதிகரித்து வரும் சூழலில், அதற்குப் பதிலடியாக இந்தியாவுக்கு சபஹார் துறைமுகம் இருந்தது.
இந்தத் திட்டம் பிராந்தியத்தில் இந்தியாவின் புவிசார் அரசியல் இருப்பை வலுப்படுத்துகிறது.
சபஹார் திட்டம்
சபஹார் துறைமுகத்தை மேம்படுத்த, இந்தியா 2024இல் ஒப்பந்தம் போட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் சபஹார் துறைமுக மேம்பாட்டிற்குக் கணிசமான நிதி ஒதுக்கப்படும்.
இருப்பினும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இப்போது நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாதது இதுவே முதல்முறை. கடந்த நிதியாண்டுகளில், இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் ஒதுக்கி வந்தது.!
பொருளாதாரத் தடை
கடந்த செப்டம்பரில், அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இருப்பினும், சபஹார் திட்டத்தில் இந்தியா தொடர்ந்து ஈடுபடுவதற்கு ஆறு மாதக் கால விலக்கை அமெரிக்கா வழங்கியிருந்தது.
அந்த விலக்கு வரும் ஏப்ரல் 26ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு மேல் இந்தியா மேம்பாடு நடவடிக்கை எடுத்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரலாம்.
இதன் காரணமாகவே இந்தியாவும் நிதி ஒதுக்கீட்டை நிறுத்தியுள்ளது.
முன்னதாக சபஹார் தொடர்பான விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதற்கு விலக்கு பெறும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராந்தீர் ஜெய்ச்வால் தெரிவித்தார். #👨மோடி அரசாங்கம்
56 இஞ்சி டான்ஸ் ஆட இஸ்ரேல் சென்றாரா?
அண்மையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்களுக்கு (சோலார் செல்கள் மற்றும் பேனல்கள்) 126 சதவீதம் வரை countervailing duties (அரசு மானிய எதிர்ப்பு வரி) விதிக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சகத்தின் (U.S. Department of Commerce) சமீபத்திய அறிவிப்பாகும்.
இந்த வரி, இந்திய அரசின் மானியங்கள் காரணமாக இந்திய உற்பத்தியாளர்கள் அமெரிக்க சந்தையில் நியாயமற்ற போட்டியை ஏற்படுத்துவதாகக் கூறி விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பொருட்களுக்கு 86 முதல் 143 சதவீதம் வரையிலும், லாவோஸிலிருந்து 81 சதவீதம் வரையிலும் ஆரம்பகட்ட வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க உள்நாட்டு சோலார் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு (2025) இந்தியா, இந்தோனேஷியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்கா சுமார் 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சோலார் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
இது அமெரிக்காவின் மொத்த சோலார் இறக்குமதியில் பெரும்பகுதியை உள்ளடக்கியது.
குறிப்பாக இந்தியாவிலிருந்து 2025-இல் சுமார் 792.6 மில்லியன் டாலர் மதிப்பிலான சோலார் பேனல்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இது 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒன்பது மடங்கு அதிகரிப்பு ஆகும்.
இந்திய சோலார் தொழில் வேகமாக வளர்ந்து, அமெரிக்க சந்தையில் கணிசமான பங்கைப் பெற்றிருந்த நிலையில், இந்த உயர் வரி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கு முன்பு, டிரம்ப் அரசு இந்திய பொருட்களுக்கு பல்வேறு வரிகளை அறிவித்து வந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 50 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. பின்னர், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அது 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
சில சமயங்களில் 10 சதவீதமாகவும் நடைமுறையில் இருந்தது. ஆனால், சமீபத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் சில போட்டி வரிகளை ரத்து செய்த பிறகு, டிரம்ப் புதிய வரி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.
இந்த 126 சதவீத வரி, இந்திய சோலார் உற்பத்தியாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
அமெரிக்க வாடிக்கையாளர்கள் இனி இந்திய பொருட்களை விலை உயர்வால் தவிர்க்கலாம். அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்காவிட்டால், மற்ற குறைந்த வரி நாடுகளை நோக்கி திரும்பலாம்.
இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் ஜவுளி, தோல், உணவு ஏற்றுமதி தொழில்களைப் போலவே, சோலார் துறையும் கடுமையாக பாதிக்கப் படும் அபாயம் உள்ளது.
லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளும் ஆபத்தில் உள்ளன. இந்த நடவடிக்கை உலகளாவிய பசுமை எரிசக்தி சங்கிலியை பாதிக்கும் வகையில் அமையலாம்.
இந்திய தரப்பில் இருந்து பதிலடி வரிகள் அல்லது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முயற்சிகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இறக்குமதி வரிகளை தீவிரமாக்கி வருகிறார்.
அண்மையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்களுக்கு (சோலார் செல்கள் மற்றும் பேனல்கள்) 126 சதவீதம் வரை countervailing duties (அரசு மானிய எதிர்ப்பு வரி) விதிக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சகத்தின் (U.S. Department of Commerce) சமீபத்திய அறிவிப்பாகும். #👨மோடி அரசாங்கம்
சரண்டர் சவக்குழி நரேந்திரா!
இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்ய பொருளாதாரத்திற்கு வலு சேர்ப்பதாகவும் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதி அளிக்கிறது என்றும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக இந்தியாவை சாடி வந்தது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் இறக்குமதி வரி என மொத்தம் 50 சதவீத வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இது இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கான ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என தொடர்ச்சியாக அமெரிக்க அரசு கூறி வந்தது.
மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்து கொண்டோம் என வெளியிடவில்லை.
ஆனால் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களும் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் படிப்படியாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து கொண்டன.
இந்த சூழலில் தான் அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா மீது திடீரென ராணுவ நடவடிக்கை எடுத்தது. அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்தது.
இதனை அடுத்து வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் தங்களுக்கு சொந்தமானவை என அறிவித்த டிரம்ப் இனி இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொண்டு வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என அறிவித்தார்.
அதே வேளையில் அமெரிக்க நிறுவனங்களின் மேற்பார்வையில் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான உரிமங்களையும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கியது.
அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து வெனிசுலாவிலிருந்து தலா 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயுடன் கூடிய மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
ரிலையன்ஸ், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்பிசிஎல் மீட்டல் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தொடங்கியுள்ளன.
அந்த வகையில் தற்போது மூன்று சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
இவை தலா 20 லட்சம் பேரல் கச்சா எண்ணையை ஏற்றிக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
போக்குவரத்து செலவுகளை குறைக்கவும் விரைவாக எண்ணெய் வந்து இந்தியாவை சேர்வதையும் உறுதிப்படுத்தவும் இருப்பதிலேயே பெரிய சரக்கு கப்பல்கள் மூலம் எண்ணெய் கொண்டு வரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டு வரை இந்தியா வெனிசுலாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கியது.
வெனிசுலாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருந்தது.
ஆனால் அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா மீது பொருளாதார தடைகளை விதித்ததால் இந்தியா வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டது.
அதே வேளையில் தான் ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கியதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் சென்றன.
Devika Manivannan Goodreturns
source: goodreturns.in #👨மோடி அரசாங்கம்
பாலஸ்தீன் குஜராத் கொலையாளிகளும், ICC யினால் தேடப்படும் குற்றவாளியுடன் ஜனநாயக நாட்டு பிரதமரின் நெருக்கமும்.
ஈரான், எந்த நேரத்திலும் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்ற பதட்டமான சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு வந்திறங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பெஞ்சமின் நெத்தன்யாகு ஆரத்தழுவி வரவேற்றார்.
விரோதிக்கு விரோதி நண்பன் என்ற அடிப்படையில் இருவரும் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள்.
இனப்படுகொலையாளி என்ற அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை ஜனநாயக நாடொன்றின் பிரதமர் கட்டிப்பிடித்து நட்பை பரிமாறிக்கொண்டார்.
காசாவில் உள்ள அப்பாவிக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான உயிர்களையும், காசாவில் உள்ள வைத்தியசாலைகளுக்கு குண்டு போட்டு நோயாளிகளை கொலை செய்த இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொலையாளியுடன், மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் நட்பு பாராட்டியுள்ளார்.
இதனை இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு என்று கடந்துசெல்ல முடியாது. ஏனெனில் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வர்த்தகம் சுமார் 3.7 பில்லியன் டொலர் மாத்திரமே. இது இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த வர்த்தகமானது சிறு துளியாகும்.
குறிப்பாக சவூதி அரேபியா, கத்தார், எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடனான இந்திய வர்த்தகமானது 155 பில்லியன் டொலர்.
அதேநேரம் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஈரானுடனான வர்த்தகம் 2.5 பில்லியன் டொலர் ஆகும். இங்கே ஏனைய இஸ்லாமிய நாடுகளுடனான வர்த்தகம் பற்றி குறிப்பிடவில்லை.
நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது 2002 குஜராத் கலவரத்தில் இரண்டாயிரத்துக்கு அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட அல்லது தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் பல கோடிகளாகும். இன்றுவரைக்கும் அடக்குமுறைகள் அவ்வப்போது நடைபெறுகிறது.
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மூலம் இனவாத அரசியல் கொள்கையினாலேயே நரேந்திர மோடி தலமையிலான BJP கட்சி இந்தியாவை ஆட்சி செய்து வருகின்றது.
பல உலக தலைவர்கள் நெத்தன்யாகுவுடன் கைகுலுக்க தயங்குகின்ற நிலையில், இந்திய பிரதமரின் மிக நெருக்கமான நட்பானது இந்தியாவில் வாழ்கின்ற இருபது கோடி முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எதிரானது மாத்திரமல்ல, இந்தியாவை நேசிக்கின்ற உலக முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும் எதிரானதாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது #👨மோடி அரசாங்கம்
வெள்ளைக்காரனுக்கு பொறந்தவுங்க சொல்லுறாங்க நாம என்ன செய்ய முடியும்...🤦♂️🤦♂️
இந்து என்ற மதத்தை வெள்ளைக்காரன் உருவாக்கி உங்களை எல்லாம் காப்பாற்றி விட்டான் இல்லை என்றால் உங்களை போன்ற ஆரிய கூட்டத்தை தமிழன் எப்போதே துரத்தி இருப்பான் ...🤷♂️
இங்கே நாங்கள் 4500 ஆண்டுகளாக வாழ்கிறோம் என்கிற வரலாற்று ஆதாரங்கள் கூட உண்டு கீழடி முதல் பொருநை நாகரீகங்கள் உண்டு எங்களுக்கு அப்படி என்ன இருக்கிறது உங்கள் ஆரியர்களுக்கு...🤷♂️
இங்கே சமணர்களை கழுவேற்றியவர்கள் யார் எதனால் என்பது எல்லாம் தமிழர்கள் அறிவார்கள் ஒன்னு செய்யுங்கள் வெள்ளைக்காரன் உருவாக்கிய மாநிலம் வேண்டாம் பேசாம உபி காசி க்கு போயிடுங்க சங்கீ சார்...😏😏 #👨மோடி அரசாங்கம்
“போது மான லாபம் கிடைத்தால், மூலதனம் மிகவும் துணிச்ச லானது... 100 சதவீதம் லாபம் கிடைத்தால் அனைத்து மனித சட்டங்களையும் மிதிக்கத் துணியும்; 300 சத வீத லாபம் கிடைத்தால் அது செய்யத் துணியாத குற்றமே இல்லை, அதன் உரிமையாளர் தூக்கிலி டப்படும் அபாயம் இருந்தாலும் அது தயங்காது.” எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படுத்திய கதை மார்க்ஸின் இந்த வாதத்தையே மெய்ப்பிக்கிறது.
எப்ஸ்டீன் என்னும் பாலியல் குற்றவாளி அமைப்பு ரீதியான குற்றங்களின் திகிலூட்டும் வரலாறு
ஜனவரி 30 அன்று அமெரிக்க நீதித்துறை யினால் எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) வெளியிடப்பட்டதிலிருந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் பெரும் சீற்றம் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற் பட்ட வீடியோ கிளிப்புகள் உள்ளிட்ட இந்தத் திடுக்கி டும் வெளிப்பாடுகள், சுய-பாணி நிதி ஆலோசகர் மற்றும் அதிகாரத் தரகர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளால் கட்ட மைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளன. இது அவரது அச்சுறுத்தல், அந்நியச் செலாவணி மற்றும் செல்வாக்கு மோசடி வலையமைப்பை முழுமையாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
வலையமைப்பும் தொடக்கமும்
குற்றச்சாட்டுகளில், ஏழை மக்கள் வாழும் பகுதிகள், அனாதை இல்லங்கள் மற்றும் அகதிகள் முகாம்களில் இருந்து ஆதரவற்ற பதின்பருவ இளம் பெண்களைக் கடத்திச் சென்று கட்டாயப் பாலியல் சுரண்டலில் ஈடு படுத்தியிருப்பதும் அடங்கும். இந்த மோசமான விவர ணைகள் எப்ஸ்டீனை மட்டுமே தனிப்பட்ட முறையில் குறிவைத்துச் சொல்லப்படுவது போலத் தோன்றினா லும், நிகழ்வுகளின் காலவரிசை எப்ஸ்டீனின் மனிதாபி மானமற்ற குற்றங்கள் தனிப்பட்ட ஒருவரின் சீரழிவு அல்ல என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இவ்வா றான குற்றங்கள் பல பத்தாண்டுகளாக நடந்து வந்துள் ளன, இது ஒரு அமைப்பு ரீதியான சூழலில் இருந்தே (systemic environment) உருவாகியுள்ளது.
1980 மற்றும் 90-களில், அவர் பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்தி சுரண்டத் தொடங்கிய தாகக் கூறப்படுகிறது. 1996-ஆம் ஆண்டின் ஒரு அறிக்கையின்படி, எப்ஸ்டீன் தனது இளம் சகோதரி களின் புகைப்படங்களைத் திருடிவிட்டு, இது குறித்து வெளியே பேசக் கூடாதென மிரட்டல் விடுத்ததாக ஒரு கலை ஞர் எஃப்பிஐ (FBI) அமைப்பிடம் புகார் அளித்தார். 1998-இல் எப்ஸ்டீன் அமெரிக்க விர்ஜீன் தீவுகளில் உள்ள ‘லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்’ என்ற தனது சொந்தத் தீவை வாங்கினார். இது அவரது பாலியல் கடத்தல் நடவடிக்கைகளுக்கு மையமாக மாறியது. 2000-ஆம் ஆண்டிலேயே, எப்ஸ்டீனிடம் மசாஜ் செய்ப வராக இருந்த ஒருவர், தான் ஒரு பதின்பருவப் பாலியல் அடிமையாக நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
சலுகை ஒப்பந்தமும் சட்டப் போராட்டமும்
2005 மார்ச்சில், பாம் பீச்சில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான புகாரைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. 2006 ஜூலையில், பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்த முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். 2008 ஜூன் மாதம், புளோரிடா நீதிமன்றத்தில் ஒரு மைனரை பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்திய குற்றத்தை எப்ஸ்டீன் ஒப்புக்கொண்டார். அப்போது அமெரிக்க அட்டர்னி அலெக்சாண்டர் அகோஸ்டாவுடன் செய்து கொண்ட ‘சலுகை மிக்க’ (sweetheart) ஒப்பந்தம், எப்ஸ்டீன் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் குற்றச் சாட்டுகளில் இருந்து தப்பி வெறும் 18 மாத சிறைத் தண்டனையுடன் வெளியே வர உதவியது.
2011-இல், விர்ஜீனியா கியூஃப்ரே (முன்னர் விர்ஜீ னியா ராபர்ட்ஸ்) என்பவர் பொதுவெளியில் தோன்றி, தான் கடத்தப்பட்டு இளவரசர் ஆண்ட்ரூவிடம் சேர்க்கப் பட்டதாகக் குற்றம் சாட்டினார். 2018 நவம்பரில் மியாமி ஹெரால்ட் வெளியிட்ட தொடர் கட்டுரைகள் எப்ஸ்டீனின் 2008-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்ன ணியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. 2019 ஜூலை 6 அன்று, சிறுமிகளைப் பாலியல் கடத்தல் செய்ததற்காக எப்ஸ்டீன் மீண்டும் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 10, 2019 அன்று, எப்ஸ்டீன் சிறை அறையில் இறந்து கிடந்தார்; இது சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் நடந்த தற்கொலை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
உயரடுக்கின் தொடர்புகள்
எப்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகும் திரை மறைக்கப்படவில்லை. 2021 டிசம்பரில், எப்ஸ்டீனின் நெருங்கிய கூட்டாளியான கிஸ்லைன் மேக்ஸ்வெல் (Ghislaine Maxwell) என்ற பெண், பாலியல் கடத்தல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். நீடித்த சட்ட மோதல்களுக்குப் பிறகு, நீதிமன்றம் எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட உத்தரவிட்டது. இந்தப் பின்ன ணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட வர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் பத்திரி கையாளர்களின் தேடலால் உருவான போராட்டங்க ளின் அலை, அமெரிக்க நாடாளுமன்றத்தை ‘எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தை’ நிறை வேற்றக் கட்டாயப்படுத்தியது. இது கூடுதல் புல னாய்வுப் பதிவுகளை வெளியிடக் கோரியது.
இந்தக் கோப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அதிகார உயரடுக்கில் உள்ள முக்கியப் புள்ளிகளை அம்பலப்படுத்தின. இதில் அரசியல்வாதி கள் மட்டுமல்லாது, லாரி சம்மர்ஸ், பீட்டர் மண்டேல்சன் போன்ற கொள்கை வகுப்பாளர்கள், அரச குடும்பத்தி னர் மற்றும் பில் கேட்ஸ், எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான் சன் போன்ற மிகப் பெரும் தொழிலதிபர்களும் அடங்கு வர். டொனால்டு டிரம்ப் பெயரே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது; எப்ஸ்டீன் அவரைத் தனது ‘நெருங்கிய நண்பர்’ என்று விவரிக்கிறார். மேலும், இஸ்ரேலுடனும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் எகுத் பராக் உடனும் எப்ஸ்டீன் ‘பாதுகாப்பு முக்கியத்துவம்’ வாய்ந்த தொடர்புகளைக் கொண்டிருந்தார்.
அமைப்பும் மூடிமறைப்பும்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதிக் குழு நடத்திய பொது விசாரணையில், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி மற்றும் எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல் ஆகியோர் கடுமையாகக் கேள்விக்குள் ளாக்கப்பட்டனர். இந்தக் குற்றச்செயல்களை மறைக்கவும் தாமதப்படுத்தவும் திட்டமிட்ட முயற்சி கள் நடந்தது இப்போது தெளிவாகிறது. ஆதாரங்க ளை வெளியிடும்போது ‘தணிக்கை’ (redaction) என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைத் தேர்ந்தெடுத்து வெளிப்படுத்திவிட்டு, ‘உயர்ந்த மற்றும் சக்திவாய்ந்த’ நபர்களை அமெரிக்க அரசு மூடி மறைக்கிறது. பிரதான ஊடகங்கள் இன்னமும் எப்ஸ்டீ னை மட்டுமே மையப்படுத்துகின்றன; இவ்வளவு பெரிய குற்றங்கள் நடக்கத் துணை நின்ற அமைப்பு ரீதியான பாதுகாப்பை அவை மூடிமறைக்கின்றன.
வேட்டையாடும் வர்க்கம்
தற்போதைய ‘நவீன தாராளமய’ வாதம் ஒரு வேட்டையாடும் ‘எப்ஸ்டீன் வர்க்கத்தை’ உருவாக்கி யுள்ளது. இது மற்ற மனிதர்களை வெறும் “வீரர்கள் அல்லாத கதாபாத்திரங்களாக” பார்க்கும் ஒரு மனிதாபி மானமற்ற சூழலை நிலைநிறுத்துகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சொந்தமான ஊடகங்கள் இந்தச் சூழலை இயல்பாக்குகின்றன. மோடி அரசாங்கத்தின் தற்போதைய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோர் எப்ஸ்டீனுடன் தொடர்பு கொண்டிருந்தது ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எப்ஸ்டீன் தனது கொடூரக் குற்றங்களை ஒப்புக்கொண்ட ஒரு பத்தாண்டுக்குப் பிறகே நடந்துள்ளன. உண்மையை வெளிக்கொணரவும், இத்தகைய மனித விரோதக் குற்றங்களை ஊக்குவிக்கும் உலகளாவிய அமைப்பு ரீதியான உள்கட்டமைப்பைத் தகர்க்கவும் நாம் தயாராக வேண்டும்.
மார்க்சியப் பார்வையில் மூலதனம்
150 ஆண்டுகளுக்கு முன்பு ‘மூலதனம்’ (Capital) நூலில் மார்க்ஸ் குறிப்பிட்டது போல: “மூலதனம் தலை முதல் கால் வரை, ஒவ்வொரு துவாரத்திலி ருந்தும் இரத்தம் மற்றும் அழுக்குடன் சொட்டுகிறது.” தொழிற்சங்கத் தலைவர் டி.ஜே. டன்னிங்கின் மேற் கோளைக் காட்டி மார்க்ஸ் விளக்குகிறார்:
“போது மான லாபம் கிடைத்தால், மூலதனம் மிகவும் துணிச்ச லானது... 100 சதவீதம் லாபம் கிடைத்தால் அனைத்து மனித சட்டங்களையும் மிதிக்கத் துணியும்; 300 சத வீத லாபம் கிடைத்தால் அது செய்யத் துணியாத குற்றமே இல்லை, அதன் உரிமையாளர் தூக்கிலி டப்படும் அபாயம் இருந்தாலும் அது தயங்காது.” எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படுத்திய கதை மார்க்ஸின் இந்த வாதத்தையே மெய்ப்பிக்கிறது.
நன்றி : தீக்கதிர் 24/02/26. #👨மோடி அரசாங்கம்
இந்த ஆண்டின் மிகச்சிறந்த முட்டாள்தனமான முடிவென்று ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், அது அமெரிக்கா தனது USS Abraham Lincoln விமானம் தாங்கிப் போர்க்கப்பலை ஈரானுக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தியதைச் சொல்லலாம்.
இது ஒரு தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது என்று சொன்னால் அது மிகையாகாது.
இதற்கு மிக முக்கியமான காரணம்: ஈரானின் அசுரத்தனமான ட்ரோன் (Drone) தொழில்நுட்பம்.
ஈரானிய ட்ரோன் தொழில்நுட்பத்தின் ஆழம் தெரியாமல் அமெரிக்கா காலை விட்டு ஆழம் பார்க்க முற்பட்டுள்ளது.
இதை விளக்கும் முன், ஒரு வரலாற்றை நாம் நினைவு கூர வேண்டும்.
அதுதான் அமெரிக்காவையே அதிரவைத்த அந்த 2011 சம்பவம்.
ஈரானின் இன்றைய ட்ரோன் பலத்திற்கு அடித்தளமிட்டது அமெரிக்காவின் அவமானம் மிக்க ஒரு மிகப்பெரிய சறுக்கல் தான்.
அமெரிக்காவின் அதிநவீன உளவு ட்ரோனான Lockheed Martin RQ-170 Sentinel, ஈரானிய எல்லைக்குள் நுழைந்தபோது, ஈரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் அதன் கட்டுப்பாட்டு அமைப்பிற்குள் ஊடுருவி (Electronic hijacking), அதை எவ்வித சேதமுமின்றி பத்திரமாக தரையிறக்கினர்.
உலகமே வியக்கும் வண்ணம், அந்த அதிநவீன ட்ரோனை முழுமையாக ஆய்வு செய்து (Reverse-engineering), அதன் நகலாக Shahed 171 Simorgh என்ற புதிய வகை ட்ரோனை ஈரான் உருவாக்கியது.
அமெரிக்காவின் ரகசிய தொழில்நுட்பத்தையே அமெரிக்காவிற்கு எதிராகத் திருப்பும் வித்தையை அன்று ஈரான் உலகிற்கு நிரூபித்தது.
போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்தவன் என்றவகையில் எனது கணிப்பின்படி, ஒருவேளை யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால், சில மணிநேரங்களிலேயே அமெரிக்காவின் பிரம்மாண்டமான Abraham Lincoln கப்பல் கடலுக்கு அடியில் சங்கமிக்க அதிக வாய்ப்புள்ளது.
அதற்கு மிக முக்கியமான காரணம் ஈரானின் Swarm Drone Technology.
"ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ஒரு தேனீக் கூட்டம் போல பாய்ந்து வரும்போது, உலகின் எவ்வளவு பெரிய பாதுகாப்பு அமைப்பாக இருந்தாலும் நிலைகுலைந்து போகும்."
அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் (Missile Defense Systems) மிக வலிமையானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஈரானின் மலிவான மற்றும் அதிவேக ட்ரோன்கள் ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் தாக்கும்போது, அமெரிக்காவின் ரேடார் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் அவை அனைத்தையும் இடைமறிக்க முடியாது.
ஈரானின் ட்ரோன்கள் வெறும் உளவு பார்ப்பதோடு நின்றுவிடாமல், வெடிமருந்துகளைச் சுமந்து கொண்டு தற்கொலைப்படைத் தாக்குதல் (Kamikaze Drones) நடத்துவதில் வல்லமை பெற்றவை.
அமெரிக்கா ஒரு ட்ரோனைச் சுட்டு வீழ்த்த பயன்படுத்தும் ஏவுகணையின் விலை பல மில்லியன் டாலர்கள். ஆனால், ஈரானின் ஒரு ட்ரோனின் விலை மிகக் குறைவு.($20,000).
ரேடார்களில் சிக்காமல் பறக்கும் (Stealth) தொழில்நுட்பத்தில் ஈரான் இன்று ரஷ்யாவிற்கே ட்ரோன்களை வழங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
பாரசீக வளைகுடா (Persian Gulf) என்பது புவியியல் ரீதியாக மிகவும் குறுகலான ஒரு பகுதி. இவ்வளவு சிறிய பரப்பளவிற்குள் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலைக் கொண்டு வந்து நிறுத்துவது என்பது, ஒரு குறுகிய அறைக்குள் ஒரு பெரிய யானையை நிற்க வைத்துவிட்டு, அதைச் சுற்றி நூற்றுக்கணக்கான தேனீக்களை ஏவிவிடுவதற்கு சமம்.
யானை எவ்வளவு பலமானதாக இருந்தாலும், தேனீக்களின் தாக்குதலில் இருந்து அதால் தப்பிக்க முடியாது.
அமெரிக்கா தனது பலத்தைக் காட்ட விரும்பி, தனது கப்பலை ஈரானின் ஏவுகணைகளுக்கும் ட்ரோன்களுக்கும் மிக எளிய இலக்காக (Sitting Duck) மாற்றிவிட்டது.
ஈரானின் வீட்டு வாசலுக்கே வந்து, அவர்களின் பலமான ட்ரோன் தாக்குதல் எல்லைக்குள் கப்பலை நிறுத்தியது அமெரிக்காவின் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ராஜதந்திர மற்றும் இராணுவத் தோல்வியாகும்.
ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஈரான் அடைந்திருக்கும் அசுர வளர்ச்சியை உணராமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அமெரிக்காவிற்கு ஒரு கசப்பான பாடத்தை புகட்டப்போவது உறுதி.
படித்ததில் பகிர்வது. #👨மோடி அரசாங்கம்
பிப்ரவரி 20, 2026 முதல் தினசரி 204 ரயில்களில் இருந்து 164 ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால் நிலைமை மோசமானதால், பிப்ரவரி 24 முதல் இது 115 ரயில்களாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 90 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இருக்கும் ரயில்களில் மக்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வந்தே பாரத் போன்ற ஆடம்பர ரயில்களுக்குக் காட்டும் ஆர்வத்தை, சாமானிய மக்கள் பயணிக்கும் புறநகர் மின்சார ரயில்களில் ஒன்றிய பாஜக அரசு காட்டவில்லை.
இந்த பணிகளைத் தொடங்கும் முன் கூடுதல் நடைமேடைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சரியான மாற்று வழிகளை யோசிக்காமல் ஒன்றிய பாஜக அரசு அவசரகதியில் பணிகளைத் தொடங்கியதே இந்த குழப்பத்திற்கு காரணம்.
எழும்பூர் ரயில் நிலையத்தை அழகுபடுத்துவதை விட, கூடுதல் தண்டவாளங்கள் மற்றும் நடைமேடைகளை (Platform 10, 11) பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் அமைப்பதே ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும். ஆனால், ஒன்றிய பாஜக அரசு இதில் தோல்வி அடைந்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலையப் பணிகளைத் தொடங்கும் முன்பு, தமிழ்நாட்டு மக்களின் அன்றாடப் போக்குவரத்தைப் பாதிக்கும் இந்த முடிவை எடுக்கும்போது, மாநில அரசுடன் (Tamil Nadu Govt) முறையான ஆலோசனைகளை ஒன்றிய அரசு செய்யவில்லை.
Vignesh Anand #👨மோடி அரசாங்கம்
அரசின் திட்டங்களை மக்களிடம் தெரிவிப்பதில் தவறில்லை!
- கேரள அரசின் பிரச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட உயர்நீதிமன்றத் தடை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு கேள்வி!
#Kerala #KeralaGovernment #KeralaHighCourt #SupremeCourt #👨மோடி அரசாங்கம்












