Arunachalam
ShareChat
click to see wallet page
@463115585
463115585
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
நான்கு மாநிலங்களில் ராகுல் காந்தி செய்த பிரச்சாரத்தின் போது சொன்னவை: வேலை இல்லா திண்டாட்டம் சமூக நீதி சமத்துவம் சிறுபான்மையினர் நலன் காதலதிருமணங்கள் பெண் உரிமைகள் கல்வி சுகாதாரம் விவசாயிகளின் நலம் AI மற்றும் டேட்டா பொருளாதாரம் மேதகு பூஜிக்கத்தக்க பிரதமர் மோடி பேசியவை: காங்கிரஸ் காங்கிரஸ் காங்கிரஸ் ஊடுருபவர்கள் ஊடுருபவர்கள் ஊடுருபவர்கள் மத பிளவு மத பிளவு சென்ட்டிமென்ட் சென்ட்டிமென்ட் மதுரை தர்கா தூணில் விளக்கு ஏற்றுவது #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - MUIMBIIIA  MUIMBIIIA - ShareChat
◾◾பார்ப்பனக் கடப்பாரையைக் கையிலேந்திய சீமானுக்கு புரியும் வகையில் பாடம் புகட்டுவோம்!◾◾◾ ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் நேரடியாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற முடியாது என்ற சூழலில் தனது பினாமிக் கும்பல்களை வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பெயரில் இறக்கிவிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். இந்த வகையில் தமிழ் பாசிசக் கும்பலின் தலைவனான சீமானை ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறக்கி விட்டுள்ளது. அதற்கு தேசங்கடந்த தரகு முதலாளிகளின் ஒருவரான ஷிவ் நாடார் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து ஸ்ரீதர் வேம்பு போன்றவர்கள் தாராளமாக நிதி உதவி அளித்து வருகிறார்கள். இந்த பினாமிக் கும்பலின் தலைவனான சீமான் தமிழகத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற சிந்தனைகளை விதைத்து இந்தியாவிலேயே முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக திகழ வைத்துக் கொண்டுள்ள மாபெரும் சீர்திருத்தவாதிகளான பெரியார் உள்ளிட்டவர்களின் சிந்தனைகளைக் குழிதோண்டி புதைப்பதற்கு பல்வேறு வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பார்ப்பன கும்பலில் அரசியல் ஆலோசகரான திருவாளர் குருமூர்த்தி வழிகாட்டுதலின் கீழ் திராவிட இயக்கத்தின் மீது தாக்குதலை தொடுப்பதற்கு பிராமண கடப்பாரையை எடுத்துக் கொண்டதாக சீமான் பெருமை பீத்தி வருகிறார். இவரை ரங்கராஜ் பாண்டே போன்ற ஹைடெக் பார்ப்பனர்கள் முதல் கருப்புப் பார்ப்பனர்கள் வரை தூக்கி வைத்துக் கொண்டாடுவது உள்நோக்கம் கொண்டதாகும். ‘பிராமணன் என்றாலே பிரம்மனின் முகத்தில் பிறந்தவன்’ என்ற தகுதியை வர்ணத்தின் அடிப்படையில் பார்ப்பனர்களுக்கு வழங்குகின்ற இழிவான செயலாகும். இதனாலேயே ‘பிராமணன் என அழைக்காதே! பார்ப்பான் என கூப்பிடு’ என்றார் பெரியார். “பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதாலேயே, தங்களுக்கு நாட்டை ஆளுகின்ற தகுதி முதல் அனைத்து அதிகார மட்டங்களிலும் முன்னிலை வகிக்கின்ற தகுதி உள்ளது” என்று திமிர் பிடித்து திரிகின்ற பார்ப்பனக் கும்பலின் ஏவல் நாய்களில் ஒருவர்தான் திருவாளர் சீமான். இவர் கையில் பிராமண கடப்பாறை என்று கௌரவமாக கூறுவதை விட பார்ப்பன கடப்பாரையை ஏந்தி திராவிட இயக்கங்களின் மீதான தாக்குதலை தொடுப்பது மட்டுமின்றி, பொதுவுடமை கொள்கைகளின் மீதும், கம்யூனிச சித்தாந்தத்தின் மீதும் வெறுப்புணர்ச்சியையும் கொடூரமான தாக்குதல்களையும் நடத்தி வருகின்றார் திருவாளர் சீமான். ஜெர்மனியின் ஹிட்லர்; இத்தாலியின் முசோலினி போன்றவர்களின் வாரிசுகளாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ள தமிழ் பாசிச கும்பலின் தலைவனான சீமான் முன்வைக்கின்ற வாதங்கள், பொருளாதார திட்டங்கள் அனைத்தும் கற்பனையான, பொருளற்ற தன்மை கொண்டது என்பது தெரிந்தாலும் திராவிட இயக்கங்களின் மீது சாதி ரீதியாகவே வெறுப்பு கொண்ட பார்ப்பன மற்றும் மேல் சாதியினர் திராவிட இயக்கங்களை ஒழித்து கட்டுவதற்கு சீமான் போன்றவர்களை கையில் எடுத்துக் கொண்டு திரிகின்றனர். தமிழகத்தின் சொத்துக்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற பார்ப்பன மற்றும் பார்ப்பனர்களாக மேல் சாதிகளின் அரசியல் பிரதிநிதியாகவே சீமான் தமிழகத்தில் களமாடுகின்றார். இந்த வகையில் மாற்று என்று முன்வைத்து கரை படியாத கரத்திற்கு சொந்தக்காரர் என்பது போலவும், 10 பைசா தேர்தலில் செலவு பண்ணாமல் தேர்தலில் போட்டியிடுவதைப் போலவும் பகடி வித்தைகளை காட்டி வருகிறார். திரள்நிதி என்ற பெயரில் ஈழத்தமிழர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்வது; தமிழகத்தில் தமிழ் தேசிய உணர்வு கொண்ட சிறு குறு தொழில் முனைவர்கள்; தனி நபர்கள் ஆகியோர்களை தனது சதித்திட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டுக் கோடிக்கணக்கான ரூபாய்களை சுருட்டியுள்ள இவர் குடிக்கின்ற தண்ணீர் கூட மினரல் என்பதில் மோடி பயன்படுத்துகின்ற வகையைச் சார்ந்த மினரல் தண்ணீராகும். இந்த லட்சணத்தில் எளிய வாழ்க்கையை வாழ்வதுப் போலவும், நிதி கையில் இல்லாமல் அன்றாடம் திண்டாடி கொண்டிருப்பது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை பொதுமக்களுக்கும் தனது கட்சி தொண்டர்களுக்கு உருவாக்கி வருகிறார். கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ஏறக்குறைய பல பேர் இவர்களை வந்து விலகி விட்டனர். இவரது உண்மை முகம் தெரிந்தவுடன் இவர் பேசுகின்ற தமிழ் தேசியமானது பார்ப்பன கும்பலில் அடிமை புத்திக் கொண்ட, திராவிட இயக்கங்களை ஒழித்துக் கட்டுவதற்கு உருவாக்கப்பட்ட ஐந்தாம் படை தமிழ் தேசியமே என்பதால் நேர்மையான தமிழ் தேசிய எண்ணம் கொண்டவர்கள் இவரிடம் இருந்து விலகி விட்டனர். “கம்யூனிச இயக்கங்களின் மீது வெறுப்பு கொண்டவர்கள் என்ற பிரிவினரும், திராவிட இயக்கங்களின் மீது வெறுப்பு கொண்டவர்கள் என்ற பிரிவினர்களும் ஒன்று சேரும் புள்ளி பாஜக ஆதரவு என்ற கோடாக விரிவடைகிறது. மற்றொருபுறம் பாஜகவை வெறுக்கின்ற எப்படியாவது நல்லது நடந்தால் போதும் என்று சிந்திக்கின்ற “அன்பான சர்வாதிகாரத்தை ’ஆதரிக்கிறவர்கள் சீமானிசத்தையும், சீமானையும் ஆதரிக்கிறார்கள். இதனால்தான் 2010 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்த சீமான் கட்சிக்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் 8.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை எட்டியுள்ளது. இவர்கள் பாஜகவிற்கு சாதகமாக திமுக ஆதரவு ஓட்டுக்களை பிரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது என்பதல்ல நமது பிரச்சனை. பாட்டாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கின்ற வகையில் தமிழர் × தெலுங்கர், தமிழர் × மலையாளி தமிழர் × கன்னடியர் போன்ற முரண்களை முன்வைத்து தமிழ் பாசிச அமைப்பாக வளர்ந்து வருகின்ற சீமான் கட்சி பாரம்பரிய பாசிச கட்சியான ஆர்எஸ்எஸ் பாஜகவுடன் சித்தாந்த ரீதியாக ஒன்றிணைகிறது. நடைமுறையில் எதிர்த்துப் பேசுவதாகவும், போராடுவதாகவும் கூறிக் கொண்டாலும் அன்பான சர்வாதிகாரம் என்பதை முன்வைக்கின்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழியில் செயல்படுவது, பசும்பொன் முத்துராமலிங்க தேவரை உயர்த்திப் பிடிப்பது, பகிரங்கமாக அன்பான சர்வாதிகாரம் தமிழகத்திற்கு தேவை என்று பிரச்சாரம் செய்வது போன்றவற்றின் மூலமாக பாசிச சர்வாதிகாரத்தை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்குவதில் சீமான் முன்னேறி வருகிறார். ‘சீமான் ஒரு நடிகர்’, ‘ கோமாளி’, ‘ குடிகாரர்,’ ‘மூக்கு நோண்டி’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்து அவரை முறியடிக்க முடியாது. மாறாக அவர் முன்வைக்கின்ற தமிழ் பாசிச அரசியலை எதிர்த்து முறியடிப்பதற்கு தயாராக வேண்டும் என்பதுதான் தற்போதைய கட்டத்தில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு அனைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கும் பணிக்கு உதவுகின்ற செயல்பாடாகும்.” என்று தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து புதிய ஜனநாயகம் தினசரியில் எழுதியுள்ளோம். பாசிஸ்டுகளுக்கே உரிய உடல் மொழியும், கவர்ச்சிவாதப் பேச்சும் ஒருங்கிணைந்த வகையில் பார்ப்பனக் கடப்பாறைகளில் ஒருவனாக உருவாகியுள்ள தமிழ் பாசிச கும்பலின் தலைவனை, தமிழ் தேசியத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் மணியரசன் போன்றவர்களும், ஈழத் தமிழர்களை பார்த்து சூடு போட்டுக் கொண்டு பூனைகளாக தமிழகத்தில் வலம் வந்த சில தமிழ் இன ஆதரவாளர்களும் ஆதரித்து வருவது வெட்கக்கேடானது. குருமூர்த்தியின் பயிற்சி பட்டறையில் உருவாகி, தேசங்கடந்த தரகு முதலாளிகள் நிதியளிப்புடன், ஈழத் தமிழர்களை ஏய்த்துப் பிழைத்த நிதியை வைத்துக்கொண்டு தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு எதிராகவும், கம்யூனிச இயக்கங்களுக்கு எதிராகவும் களத்தில் குதித்துள்ள சீமான் போன்ற பார்ப்பன அடிவருடிக் கும்பலை, பார்ப்பனக் கடப்பாரையை ஏந்தி துணிச்சலாக வலம் வரும் பயங்கரவாதிகளை தேர்தலில் முறியடிப்பது மட்டும் போதாது. பார்ப்பன அடிமைப் புத்தியுடன் நேருக்கு நேர் களத்தில் இறங்கி முண்டா தட்டுகின்ற இவர்களுக்கு புரிகின்ற மொழியை கையாள்வதற்கு தமிழகத்தில் உள்ள பாட்டாளி வர்க்கம் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறை கூவலாக விடுகின்றோம். ◾தமிழ்ச்செல்வன். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - மகளிர் இடஒதுக்கீடு மசோதா | ஈசெப் 19, 2023. வரலாற்றின் மிக முக்கிய நாள்!  மக்களவையில் மோடி பிரதமர் நெகிழ்ச்சி 0 செய்திப்பிரிவு  Sep 2023 05:45 PM 19 லோக் சபாவில் ராஜ்யசபா வில் ஆதரவு : 454. ஆதரவு : 214. எதிர்ப்பு : 2. எதிர்ப்பு : இல்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்கட்சிகள் ஆதரவுடன் 20236 நிறைவேறியது  மகளிர் இடஒதுக்கீடு மசோதா | ஈசெப் 19, 2023. வரலாற்றின் மிக முக்கிய நாள்!  மக்களவையில் மோடி பிரதமர் நெகிழ்ச்சி 0 செய்திப்பிரிவு  Sep 2023 05:45 PM 19 லோக் சபாவில் ராஜ்யசபா வில் ஆதரவு : 454. ஆதரவு : 214. எதிர்ப்பு : 2. எதிர்ப்பு : இல்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்கட்சிகள் ஆதரவுடன் 20236 நிறைவேறியது - ShareChat
*திருப்பரங்குன்றம் விவகாரத்தின் மூலம் தீபத்தூண் எனப்படும் அந்த நில அளவைகல்லின் வரலாறு பற்றி படிக்க நேர்ந்தது*.! எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்தில் மனிதர்கள் நிலத்தை துல்லியமாக அளக்கவும் map உருவாக்கவும் எவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறார்கள்! ஆனால் நம் கோமிய சங்கிகள் எந்த மாதிரி ஆராய்ச்சி செய்து அந்த அளவை கல்லை மத கலவரத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்! பொறுமையும் ஆர்வமும் இருப்பவர்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள் : இதான் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் தூண். இதில்தான் தீபம் ஏற்ற வேண்டுமென்று சங்கிகள் போராட்டம் செய்கிறார்கள். இது போன்ற பல தூண்கள் பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கினார்கள். பிரிட்டிஷார் இந்தியா முழுமைக்கான ஒரு வரைபடம் தயாரிக்கும்போது இதுபோன்ற தூண்களை பல இடங்களில் நிறுவி சர்வே எடுத்தார்கள். இதுபற்றிய 'மதராஸ் மண்ணும் கதைகளும்' என்ற நூலில் உள்ள இக்கட்டுரையில் உள்ள செய்திகள். ஒன்றியத்தை அளந்த கால்களின் கதை --------------------------------- தொழில்நுட்பம் வளர்ந்து செயற்கைக்கோள் வரை வளர்ந்துவிட்ட இந்த யுகத்தில் நமக்கு மேப் தயாரிப்பவர்களின் சிரமம் பெரிதாக தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் வாகன வசதிகள் எதுவும்இல்லாத காலத்தில் அந்த முயற்சி எவ்வளவு பெரிய இமாலய சாதனையாக இருந்திருக்கும். ஆம். இமய மலையை கால்களால் அளப்பது என்ன சாதாரண விஷயமா என்ன? அந்த சாதனையின் முதல் புள்ளியை எங்கு வைத்தார்கள் தெரியுமா? மெட்ராஸில் உள்ளபரங்கிமலையில்தான். பண்டைய ஒன்றிய நிலப்பகுதிகளின் மேப்பை இங்கு ஆண்ட பல்வேறு அரசர்கள், மாலுமிகள், கடலோடிகள், பயணிகள், வணிகர்கள் என்று சிலர் உருவாக்கியிருந்தாலும் அறிவியல்பூர்வமாக துல்லியமான தகவல்களோடும் விரிவாகவும் ஒரு முறையான மேப்பை உருவாக்கும் பணிகள் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் தொடங்கப்பட்டது. அதை பரங்கிமலையில் தொடங்கினார்கள். அந்த பணி அப்படியே சென்று இறுதியாக எவரெஸ்ட் சிகரத்தை அளப்பதில் முடிந்தது. கிழக்கிலிருந்து கடல்வழியாக மதராஸுக்குள் நுழைபவர்களுக்கு இரண்டு மலைகள் தெரியும். ஒன்று நாகலாபுரம் மலை. இப்போதைய ஆந்திராவில் உள்ளது.(அருகே தடா போன்ற நீர்வீழ்ச்சி உள்ளது) இன்னொன்று மதராஸ் பரங்கிமலை. மதராஸுக்கு கடல்வழியாக வந்த முதல் ஐரோப்பியர்கள் என்றால் போர்த்துகீசியர்களைத்தான் சொல்வார்கள். டச்சு, பிரெஞ்சுகாரர்களுக்கு பிறகே பிரிட்டிஷ்காரர்கள் வந்தார்கள். இங்கு வந்த போர்த்துக்கீசியர்களுக்கு பரங்கிமலையின் தட்வெப்பநிலை பிடித்துப்போக அங்கு வசிக்க ஆரம்பித்தார்கள். சிலர் சாந்தோம் பகுதியில் வசித்தார்கள். அப்போதைய போர்த்துகீசிய, ஆர்மீனிய வணிகக்கப்பல்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக பரங்கிமலை இருந்துள்ளது. பின்னாட்களில் தான் ஜார்ஜ் கோட்டையில் கிழக்கிந்திய நிறுவனத்தால் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டுள்ளது. பரங்கிமலை எப்போதுமே எல்லா ஐரோப்பியர்க்கும் பிடித்த இடமாக இருந்துள்ளது. பின்னாட்களில்இங்கு வந்து மற்ற ஐரோப்பியர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷார்க்கு மதராஸ் ராஜதானியை சுற்றி இருந்த சிக்கலான நிலவமைப்பையும், மலைகளையும், அடர்ந்த காடுகளையும் புரிந்துகொள்வது குழப்பமாகவும், அயர்ச்சியாகவும் இருந்தது. மதராஸ் நிலப்பரப்பு என்பது மேற்கிலிருந்து கிழக்கே கடலை நோக்கி சரியும் நிலவெளி. இதில் இரண்டு பெரிய ஆறுகள் ஓடும். அடையாற்றுக்கு தெற்கே பரங்கிமலை. கூவமாற்றுக்கு வடக்கே நாகலாபுரம் மலை. இடையில் சிறுசிறு குன்றுகள். அடர்ந்த காடுகள், ஏரிகள்,குளங்கள், கிராமங்கள். இன்னொருப்பக்கம் பரந்த வங்கக்கடல் என்று பல்வேறு கலவையிலான நிலவமைப்பை கொண்டிருக்கும். பிரிட்டிஷ் அரசுக்கு சிம்மசொப்பனாக இருந்தவர் மைசூரு மன்னன் திப்புசுல்தான். திப்புவின் வீரர்கள் பிரஞ்சுக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு பிரிட்டிஷ் அரசுக்கு தொடர்ந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். ஒருக்கட்டத்தில் தொடர்ந்து நடக்கும் பல்வேறு மைசூர் போர்களின் முடிவில் இந்தியாவை இழக்கும் அபாயத்துக்கு கூட போகிறார்கள். எப்படியாவது திப்புவை ஒழித்துக்கட்டவேண்டும் என்று களமிறங்கும் ஆர்தர் வெஸ்லிக்கு உதவியாளராக வில்லியம் லாம்ப்டன் என்ற மேஜர் ஜெனரல் பணிக்கு சேர்கிறார். வெஸ்லி அன்றைய காளிகாட் என்கிற கோழிக்கோடு தலைமையகத்துக்கு கடிதம் எழுதி லாம்ப்டனை இந்திய சர்வே பணிக்கு பரிந்துரை செய்கிறார். வில்லியம் லாம்ப்டன் வீரர் மட்டுமல்ல. கணித நிபுணர். குறிப்பாக கார்ட்டோ கிராபர். இந்த சர்வே எடுக்க அவர்களுக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று எங்கெங்கே எவ்வளவு வரிவசூல் செய்வது என்று தீர்மானிப்பது. இரண்டாவது எந்தெந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி திப்புவின் படைகளைதோற்கடிப்பது. அதற்காக நிலசர்வே எடுக்க முடிவெடுக்கிறார்கள். ஆனால் போரின்முடிவில் திப்பு கொல்லப்பட்டாலும் பிரிட்டிஷார் சமாதானமடையவில்லை. தொடர்ந்து வேறுயாரும் தாக்காமல் தங்களை இருக்க உடனடியாக மதராஸ் ராஜ்தானியை அளக்கும் தேவையை உணர்ந்தார்கள். பொறுப்பை லாம்ப்டனுக்கு வழங்கினார்கள். 1799-ஆம் ஆண்டு திப்பு சுல்தான் சீரங்கபட்டனத்தில் திப்புவின் போர்படை தளபதி காட்டி கொடுத்து திட்டமிட்டு ஆங்கிலேயர்களால் கொல்லப்படுகிறார். 1802 –ல் மேப் தயாரிக்கும் பணிதொடங்குகிறது. லாம்ப்டன் குழுவினர் பரங்கிமலையில் தங்கி அந்த பணியை தொடங்கினார்கள். மதராஸின் நிலப்பரப்பை சிறுசிறு முக்கோணமாக பிரித்துக்கொண்டு அளக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு முக்கோணமாக வரைந்துக்கொண்டேபோனார்கள். கிழக்கே கடல் வந்ததும் அந்த முக்கோணம் நிறைவுறும். பிறகு அதை நீட்டித்து மேற்கு,வடக்குப்பக்கமாக முக்கோணங்கள்வரைந்தபடியே பயணிக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு பத்து மைல்களுக்கும் ஒரு முக்கோணம் வரைந்து கொண்டே போனார்கள். அந்த முக்கோணத்தின் மூன்று புள்ளிகளில் மலைகளோ, ஆறோ, கடலோ இருக்கும். சமவெளி என்றால் இவர்களே செயற்கையாக ஒரு தூணை நிறுவியோ அல்லது பெரிய மூங்கில்கழியை நட்டுவைத்தோ அளந்தார்கள். இப்படியே அவர்கள் கன்னியா குமரி முதல் இமய மலை வரை பரந்துக்கிடந்த இந்த அகண்ட நிலப்பரப்பை சிறு சிறு முக்கோணங்களாக வரைந்து ஒவ்வொரு முக்கோணங்களுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தினார்கள். புள்ளிகளையும், இடங்களையும், திசைகளையும் வைத்து கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் எந்த புள்ளி உள்ளது. எந்த திசையில் உள்ளது. ஒரே முக்கோணத்தில் உள்ள மூன்று புள்ளிக்கும் உள்ள தொலைவு. ஒரு முக்கோணத்துக்கும், இன்னொரு முக்கோணத்துக்கும் உள்ள தொலைவு போன்றவற்றை துல்லியமாக கணக்கிட்டார்கள். இந்தமுறைக்கு கோணவியல் அளத்தல் (Trigonometrical Survey) என்றுபெயர். இந்தியாவில் நடந்த இந்த மேப் தயாரிக்கும் வேலைக்கு Great Trigonometrical Survey என்று பெயர். இந்தியாவில் பின்பற்றிய இந்த முறையை இன்றும் மேல்நாடுகளில் பல பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகளில் மாணவர்களிடம் சிலாகித்து சொல்கிறார்கள். இந்த வேலையை தொடங்கிய வில்லியம் லாம்ப்டன் மேப் தயாரிக்கும் அர்ப்பணிப்பில் உடல்நலம் குன்றி தனது உயிரையே விட்டார். 1823-ஆம் வருடம் நாக்பூர் அருகே உள்ள ஹான்காட் என்ற கிராமத்தில் இறக்கிறார். வில்லியம் லாம்ப்ட்டன் தென்னிந்திய பெண் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு ஒருமகன் மட்டுமே. லாம்பட்டன் உயிரோடு இருந்த காலத்தில் அவரது பன்னிரண்டு வயது மகனையும் தனது மேப் தயாரிக்கும்பணிகளுக்காக ஊர் ஊராக அழைத்துச்சென்றுள்ளார். வில்லியம்லாம்ப்ட்டன் மறைந்த பிறகு அவரது உதவியாளர் ஜார்ஜ் எவரெஸ்ட்(ஆம் இவர் பெயரைத்தான் பின்னாளில் எவரெஸ்ட் சிகரத்துக்குவைத்தார்கள்) அந்தப்பணியை தொடங்குகிறார். எவரெஸ்டின் உதவியாளர் ஆண்ட்ரு ஸ்காட் வாக். இருவரும் ராதாநாத் சிக்கந்தர் என்ற இந்தியருடன் இணைந்து மேப் தயாரிக்கும் பணிகளை முடிக்கிறார்கள். லாம்ப்டன் மென்மையானவர் என்றால் எவரெஸ்ட் சற்று கோபக்காரராக இருக்கிறார். மேப் தயாரிக்கும் பணிகளில் உதவியாளர்களிடம் மூர்க்கமாக நடந்துக்கொள்கிறார். காடுகளில் தவறு செய்யும் வேலையாட்களை தண்டிக்கிறார். சுமைதூக்கும் நோயுற்ற வேலையாட்கள் கீழே விழும் போது சுட்டுக்கொல்கிறார். மெதுவாக செல்லும் குதிரைகளை சவுக்கால் விளாசுகிறார். சுமைதூக்கி வரும் குதிரை நொண்டி கீழே விழும்போது கோபத்தில் அதைசுட்டு கொல்கிறார். எத்தனையோ தடைகள். அடர்ந்த காட்டுக்குள் பலர் விஷப்பூச்சியால் கடிபட்டு இறக்கிறார்கள். காட்டுவிலங்குகள்தாக்குகின்றன. ஆட்கள் கிடைப்பதில் சிரமம். மலையேறும் போது பொருட்கள் வந்து சேர்வதில் தாமதம். மேப் தயாரிக்க வரும் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம். எண்ணற்ற தடைகளைத்தாண்டி சோர்வடையாமல் முன்னேறி செல்கிறார்கள். பல நேரங்களில் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேகரித்ததகவல்களை எல்லாம் வைத்து மேப் தயாரிக்கும் வேலைகளையும்செய்ய வேண்டும். இறுதியாக எவரெஸ்ட்டும் பணி ஓய்வு பெற அவரது உதவியாளர் ஆண்ட்ரு ஸ்காட் வாக் அந்த பணியை தொடர்கிறார். ஸ்காட் வாக்காலும் பணியை நிறைவு செய்ய முடியவில்லை. உடல்நலம் சரியில்லாமல் போகிறது. 1843 ஆம் ஆண்டு ராதாநாத் சிக்தர் என்ற வங்காளி இளைஞன் அந்தப்பணியை தொடர்கிறான். பழைய கணக்கீடுகளில் சிறுசிறு மாற்றங்களை செய்து இமய மலைத்தொடரை அளக்கத் தொடங்குகிறான் முடிவில் எவரெஸ்ட் சிகரமே உலகின்உச்சம் என்று பரிந்துரைக்க உலகம் ஏற்றுக்கொள்கிறது.. பனிச்சிகரத்திற்குப் பெயரிடப்படும்போதுஉள்ளுர் பெயர் முன்னுரிமை வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆனால், ஆண்ட்ரு ஸ்காட் வாக்கும், இராதானாத் சிக்தாரும் சேர்ந்த தங்கள் முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்த திரு. எவரெஸ்ட்டின் பெயரை சூட்டுகிறார்கள். இந்த நீண்ட பயணத்தில் குமரி முதல் இமயம் வரை நீண்டிருந்த 2400 கிலோமீட்டரை அளக்க மொத்தம் எழுபதாண்டுகள் பிடித்தன. தியோடலைட் என்ற நில அளவியல் கருவியை பற்றி இங்கு குறிப்பிடவேண்டும். லண்டனிலிருந்து இந்தியாவுக்கு கப்பலில் கொண்டுவந்த தியோடலைட் கருவியை மதராஸ் கடற்கரையில்தான் முதன்முதலாக இறக்கினார்கள். விதவிதமான உருப்பெருக்கி ஆடிகளை நீளமான குழாய்களில் பொருத்தி 360 பாகையில் சுழலக்கூடிய சக்கரங்களை வைத்து பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட கருவி தியோடலைட். இந்த கருவி முதன்முதலில் இங்கு கொண்டு வரப்பட்டபோது பார்த்த எல்லாரும் மிரண்டிருக்கிறார்கள். இங்குள்ளவர்கள் கருவியைப்பார்த்து அது புதையல் எடுக்க உதவும் கருவி, என்றெல்லாம் நினைத்துள்ளார்கள். டெல்லியருகே சலீம் சிங் என்ற ஜமீன்தாருக்கு சொந்தமான அந்தப்புரத்தருகே நிலஅளவை செய்யும்போது அங்குள்ள பெண்களை தியோடலைட் கருவி நிர்வாணமாக தலைகீழ் உருவமாக காட்டுவதாக வதந்தி பரவ பலரும் அந்த கருவியை களவாடவும் முயற்சித்துள்ளார்கள்.அரை டன் எடைக்கு மேலே இருந்த இந்தக்கருவியை தூக்க பன்னிரண்டு பேர் தேவைப்பட்டுள்ளார்கள். யானைகளின்மீதும், குதிரைகளின் மீதும் ஏற்றி கொண்டுச்சென்றுள்ளார்கள். தஞ்சை பெரியகோவிலின் கோபுரத்தின் மீதிருந்து கீழே விழுந்து உடைந்திருக்கிறது. இதைப்பற்றி ஜான் கே எழுதிய The Great Arc என்ற புத்தகத்தில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம். இந்த கருவி பலமுறை பழுதடைந்து சீர்செய்யப்பட்டு பிறகு லண்டனிலிருந்து புதிதாக கொண்டுவந்துள்ளார்கள். ஆரம்பத்தில் பிரமாண்டமாக இருந்த தியோலைட் கருவியையும் காலப்போக்கில் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து உருவத்தை குறைத்துக்கொண்டே வந்தார்கள். தியோடலைட் கருவியை சுமந்துக்கொண்டு இந்தியாவின் குறுக்கும்,நெடுக்குமாக சென்ற இந்த நீண்டப்பயணம் பற்றிய தகவல்களை ரமணனின் கடைசிக்கோடு புத்தகத்தில் படிக்கலாம். இன்றைய செயற்கைக்கோள் காலத்தில் நாம் நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள தூரத்தை அளந்துகொண்டிருக்கிறோம். இப்போது மேப் தயாரிப்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இருந்தாலும் அன்றைய காலத்தில் இந்தப் பணியில் தங்கள் உயிரையே கொடுத்துள்ள மனிதர்களை நினைத்தால் பிரமிப்பாக உள்ளது. லாம்பட்டனின் மகத்தான பணியை நினைவுகூறும் வகையில் 2003- ஆம் ஆண்டு பரங்கிமலையில் சிறு சிலையொன்றை நிறுவினார்கள். லாம்பட்டன் முதல்முதலாக அந்த பிரமாண்ட மேப் தயாரிக்கும்பணியில் அளந்த புள்ளிகள் எது தெரியுமா? பரங்கிமலையிலிருந்து பல்லாவரத்தையும், பட்டினப்பாக்கத்தையும் வரைந்தது. இந்தமூன்று பகுதிகளுக்கும் இடையே இருந்த தூரத்தைத் துல்லியமாக அளந்து முதல் மேப்பை உருவாக்கியபிறகே அதைப் படிப்படியாக விரிவாக்கியபடியே இந்தியா வெங்கும் பயணித்தார்கள். இங்கிருந்து தொடங்கிய பயணம்தான் இமயத்தில் முடிவடைந்தது. பரங்கிமலையை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அது எவரெஸ்ட்டின் சுருக்கப்பட்ட வடிவமாக பெரிய முக்கோணத்துக்குள் இருக்கும் ஒரு சிறு முக்கோணமாக தெரியும். அன்றைய மதராஸ் இன்றைய சிங்கார சென்னை தான் எத்தனை வரலாற்று சாதனைகளை, அற்புத பொக்கிசங்களை தனக்குள் ஒளித்து வைத்துள்ளது... நன்றி : பகிரிச் செய்தி Rajkumar Microbe #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - தீபத் தூண் அல்ல.! வில்லியம் லாம்டன் தூண் ! 1753 1823 @11%^/25 தீபத் தூண் அல்ல.! வில்லியம் லாம்டன் தூண் ! 1753 1823 @11%^/25 - ShareChat
ஜனநாயகம் என்று - நேற்றுதான் இந்த தேசமே ஒரு விரல் காட்டி ஆர்ப்பரித்தது. ஆனால், பாருங்க சேரியில் எப்போதும் இழவு செய்திதான். ஏன்னா, ஜனநாயகம் என்பது எப்போதுமே - சேரிக்கு கற்பனைதான்; செத்தும்கூட சுவாதிகள் வீழ்வதில்லை. கட்டடங்களின் தீர்ப்புகளில் சேரிக்கு எப்போதும் நீதியில்லை. உங்கள் ஜனநாயக கூத்து - நேத்துதான் முடிஞ்சது; எங்களுக்கு ஜனநாயகம் என்பது எப்போதுமே கற்பனைதான். என்னங்கடா உங்க சட்டம் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ #Ramkumar #justice #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ராம்குமார் மரண வழக்கு ததிலமுறை முடித்துவைப்பு! சென்னையில் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் இறந்தது தொடர்பான வழக்கு முடித்துவைப்பு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்துவைத்தது ராம்குமார் தற்கொலை செய்தது மனித உரிமைகள் cuclu விசாரணையில் உறுதியானதால் தேசிய மனித முடித்துவைப்பு உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்துவைத்ததை எதிர்த்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு 24.04.2026 Puthiyathalaimurai com ராம்குமார் மரண வழக்கு ததிலமுறை முடித்துவைப்பு! சென்னையில் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் இறந்தது தொடர்பான வழக்கு முடித்துவைப்பு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்துவைத்தது ராம்குமார் தற்கொலை செய்தது மனித உரிமைகள் cuclu விசாரணையில் உறுதியானதால் தேசிய மனித முடித்துவைப்பு உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்துவைத்ததை எதிர்த்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு 24.04.2026 Puthiyathalaimurai com - ShareChat
*இப்பதிவின் இறுதியில் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.* தொடர்ந்து படியுங்கள்! அரசல், புரசலாக உங்கள் காதில் விழுந்ததைப் பற்றி இப்பதிவின் மூலம் ஆழமாக அறிந்து கொள்க.---- சென்னையில் (தரமணியில்) உலகத் தரத்திலான ஒரு பள்ளி உள்ளது. அது மழலையர் வகுப்புக்கு முந்தைய நிலை தொடங்கி 12-ம் வகுப்பு வரையிலான கல்வியை அளிக்கிறது. இது சிபிஎஸ்இ போன்றவை கூட எட்டமுடியாத உலகத் தரம் வாய்ந்த ஒரு கல்விக் கழகத்தின் பாடத்திட்டத்தின் படி இயங்கி வரும் பள்ளியாகும். அந்தக் கல்விக் கழகத்தின் பெயர் இன்டர்நேஷனல் பக்கலோரியட் (International Baccalaureate—IB) எனப்படும். அதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது. இந்தக் கழகப் பாடத்திட்டத்தின் படி நடத்தப் படும் பள்ளிகள் உலகில் 160க்கும் கூடுதலான நாடுகளில் உள்ளன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவை செல்வாக்குடன் உள்ளன. ஏஐ.தகவல்--- “As of March 2026, the International Baccalaureate (IB) programme is offered in over 6,100 schools across more than 160 countries. • ....... Top Locations: The United States holds the highest number of IB students and schools. Other top countries include Singapore, Peru, Canada, and China. சென்னையில் உள்ள இத்தகைய பள்ளி அமெரிக்க அரசும் இந்திய அரசும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி (இந்திய பாடத்திட்டத்தால் கட்டுப்படுத்தப் படாமல்) சுதந்திரமாக அமெரிக்க பாணிக் கல்வியை அளித்து வருகிறது. The American International School Chennai (AISC) was established in 1995 through a formal bilateral agreement between the Governments of the United States and India. AISC operates as a non-profit, U.S.-style school............ அத்துடன் அமெரிக்க அரசின் தூதர் அல்லது அவரது பிரதிநிதி இந்தப் பள்ளியின் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். The U.S. Ambassador to India or a designated representative serves on the AISC Board of Directors. இப்பள்ளி குறித்த தகவல்களை அமெரிக்க அரசின் வலைத்தளத்தில் காணலாம்---- Chennai, India: American International School Chennai: 2023-2024 Fact Sheet OVERSEAS SCHOOLS FACT SHEET OFFICE OF OVERSEAS SCHOOLS OCTOBER 30, 2023 இந்தப் பள்ளியில் சேரும் மாணாக்கர் மழலையர் வகுப்பிற்கும் முந்தைய நிலையிலேயே சேர்க்கைக் கட்டணமாக செலுத்தவேண்டிய தொகை 4000 டாலர்!! அதாவது--- 3,70,000 (மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரூபாய்.) பள்ளி வளர்ச்சிக் கட்டணமாக செலுத்த வேண்டிய தொகை 12,000 டாலர். அதாவது, 11,08,446 (பதினோரு லட்சத்து எட்டாயிரத்து நானூறு) ரூபாய்!!! மேற்கண்ட இரண்டு கட்டணங்களும் சேர்க்கையின் போது மட்டுமே செலுத்தப் பட வேண்டும். ஆனால் அக்கட்டணங்கள் இந்திய ரூபாய்களாக இருக்கக் கூடாது. மாறாக அமெரிக்க டாலர்களில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். “The school charges a registration fee of US $4,000, a development fee of US $12,000 (both one-time and non-refundable), and an application fee of US $400. All fees, except for the application fees, are payable in U.S. dollars.” அடுத்ததாக--- ஒரே ஓர் ஆண்டுக்கான கட்டண விவரம்—***மழலையர் வகுப்பிற்கு முந்தைய (இரண்டரை வயதேயான) பிள்ளைகளுக்கு--- 14,630 டாலர். ***(சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபாய்) அடுத்து, கே.ஜி. வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 28, 730 டாலர். (26 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 29,415 டாலர். (27 லட்சத்துப் பதினாறாயிரம் ரூபாய்) அடுத்து— ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 33,045 டாலர். (30 லட்சத்து 51ஆயிரம் ரூபாய்) மேலே குறிப்பிட்ட அமெரிக்க அரசின் தகவல் தளத்தில் இது பற்றிய தகவல் உள்ளது--- “Finances: In the 2023-2024 school year, annual tuition rates are as follows: EY: US $14,630; KG-grade 5: US $28,730; grades 6-8: US $29,415; and grades 9-12: US $33,045. “ 2023-23ம் ஆண்டுக் கணக்கின்படி இந்தப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை 665 ஆகும். இவர்களில் அமெரிக்க நாட்டுக் குடிகள் 94 பேர். இந்தியர்கள் 57 பேர். பிற நாட்டினர் 514 பேர். At the beginning of the 2023-2024 school year, enrollment was 665.............. Of the total, 94 are U.S. citizens, 57 are host-country nationals, and 514 are third-country nationals. -------------- இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே அளிக்கப் படுகிறது. மொழிப்பாடம் என்ற முறையில் ஆங்கிலத்தோடு கூடுதலாக பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் ஆகிய இரண்டு மொழிகளும் மட்டுமே கற்பிக்கப் படுகின்றன. தமிழ், இந்தி உள்ளிட்ட வேறு மொழிகள் எவற்றிற்கும் அங்கே அறவே இடமில்லை. இந்தப் பள்ளியில் பயிலும் 57 இந்திய மாணவர்களில் இரண்டு மாணவர்கள் யார் தெரியுமா? ************* செந்தமிழனின் சீமானின் மகனும், அவரது மைத்துனி மகனும்!!!! நண்பர்களே, சீமானின் மகனும் வளர்ப்பு மகனும் ஆங்கில வழிக் கல்வி பயின்று வருகிறார்கள் என்று மட்டும் தான் இன்றுவரை (அதுவும் சிலரால் மட்டும்) விவாதிக்கப் பட்டும், விமர்சிக்கப் பட்டும் வந்துள்ளது. ஆனால் அவ்விரு பிள்ளைகளும் எத்தகைய உலகத் தரத்திலான அமெரிக்கப் பள்ளியில், தமிழோசை என்பது அறவே கேட்காத ஒரு மோசமான சூழலில் கல்வி பெற்று வருகிறார்கள் என்பதும், அதற்காக சீமான் ஆண்டுதோறும் எத்தனை லட்சங்களை வாரியிறைத்து வருகிறார் என்பதும் பேசுபொருளாக மாறவேயில்லை!!! இது மிகவும் அதிர்ச்சிகரமான உண்மையாகும். ஆனால் இந்த உலக மகா அயோக்கியன் தனது கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையில் கூறியுள்ளதைப் பாருங்கள்---- தலைப்பு--கல்விக் கொள்கை “தொடக்கக் கல்வி முதல் உயர் படிப்பான மருத்துவம், சட்டம், பொறியியல் வரையிலுமான அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்றுத் தரப்படும். தமிழ்வழிக் கல்வியே சட்டமாக்கப் படும்.” தமிழ் பயிற்றுமொழி. ஆங்கிலம் கட்டாயப் பாட மொழி. இந்தி உட்பட உலக மொழிகள் அனைத்தும் விருப்ப மொழி. “ஒருமொழிக் கொள்கையே பின்பற்றப் படும்.” முன்னதாக இந்த அறிக்கை கூறுகிறது--- “ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே. அதுவே அறிவு அல்ல.” (அதுவே அறிவு என்று யார் சொன்னது? அதன் மூலம் அறிவு பெறுவதே சாலச் சிறந்தது என்றல்லவா தந்தை பெரியார் போதித்தார்?) ஆக, தமிழக வரலாற்றில் இதுவரை தோன்றியிராத ஹிட்லரிசப் பெரும் பொய்யன் சீமான் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும். இவ்வளவுக்குப் பிறகும் இந்த மக்கள் விரோதி சீமான் தனது மகனும், வளர்ப்பு மகனும் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று ஒரே ஒரு முறை கூட வாய் திறந்து சொன்னதில்லை. கூகுள் செய்தாலோ ஏ.ஐ. மூலம் தேடினாலோ கூட இது குறித்த தகவல் ஏதும் வெளிப்படையாக அறிவிக்கப் படவேயில்லை. ஆனாலும் சில குறிப்புகள் இருக்கத் தான் செய்கின்றன. அவற்றை மறுக்கவும் சீமான் துணியவில்லை. “என் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். எனக்கே அவமானமாக உள்ளது,” என்று மட்டும் கூறிவிட்டு ஓம் தமிழன் ஓடி விடுகிறார். நாம் தான் அவரை விடாமல் துரத்திச் சென்றுக் கூண்டில் ஏற்றி விசாரித்து மக்கள் முன் அம்பலப் படுத்தியாக வேண்டும். எனவே நண்பர்களே, சீமான் பிள்ளைகள் எத்தகைய உலகத் தரம் வாய்ந்த அமெரிக்கப் பள்ளியில் எத்தனை லட்சங்கள் கொட்டிப் படிக்க வைக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் தமிழ்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கூட அவர்கள் பயிலவில்லை என்பதைப் பற்றியும் தமிழ்மக்கள் பலரும் அறிந்திடுமாறு செய்ய நீங்கள் தான் உதவ வேண்டும். அதன் பொருட்டு இந்தப் பதிவை இப்போதும், இனி வரும் காலங்களிலும் அடிக்கடி பகிரவேண்டும். உணர்வீர்! பகிர்வீர்! அன்புடன், பேராசிரியர் மருதமுத்து #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
இன்று நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தல் எவ்வித அசம்பாவிதம் எதுவும் இல்லாமல் சுமூகமான நிலையில் முடிந்துள்ளது, பாராட்டுக்குரியது. ஆனால் இந்த தேர்தலில் ஏதோ பெரிய அளவில் எழுச்சி வந்தது போன்றும், நிறைய வாக்குப்பதிவு போன்றும், ஒரு செய்தி பரபரப்பாக்கப்படுகிறது. ஒரு சில விபரங்களை இந்த பதிவில் தருகிறேன். சென்ற 2021 தேர்தலில் தமிழக வாக்காளர் எண்ணிக்கை 6.28 கோடி. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 4.62 கோடி அதாவது 73.63%.தற்போது நடைபெற்றுள்ள தேர்தல் என்பது, சிறப்பு வாக்காளர் பட்டியல் சீர்திருத்த அடிப்படையில் சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், புதிதாக 14 லட்சம் வாக்காளர்கள், அதாவது முதல் முறை வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.73 கோடி ஆக குறைந்துவிட்டது. (அதாவது சுமார் 55 லட்சம்) இந்த நிலையில் உத்தேசமாக தமிழகத்தின் சராசரி வாக்குப்பதிவு 83% எடுத்துக் கொண்டால் கூட மொத்த வாக்குபதிவு என்பது 4.76 கோடி தான். அதாவது சென்ற 2021 தேர்தலை விட சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் தான் கூடுதலாக வாக்களித்துள்ளனர். அனேகமாக இந்த வாக்காளர்களும் ஆர்வத்துடன் முதல் முறை வாக்களித்தவர்களாக இருக்கலாம். அந்த வகையில் வாக்காளர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ள நிலையில் 2021 இல் சுமார் 74% வாக்குப்பதிவு என்பது தற்போது 83% - 84% வரை என்பது பெரிய ஆச்சரியம் இல்லை!....ஒரே ஒரு புதிய விடயம் என்னவென்றால் மேற்குப் பகுதியில் அதாவது சேலம், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் மிக அதிகமாக 88- 90% வரை பதிவானது என்பது கணக்கில் எடுக்க வேண்டிய ஒரு விடயமாகும். மற்றபடி வாக்காளர் சீர்திருத்தத்தின் அடிப்படையில் இரட்டை வாக்கு உள்ளவர்கள், இறந்தவர்கள்,முகவரியில் இல்லாதவர்கள், வசிக்காதவர்கள், இவர்களை நீக்கியதன் அடிப்படையில் தான் இந்த சதவிகித உயர்வு. ஆனாலும் புதிய வாக்காளர்கள் 14 லட்சம் பேர் ஒரு சில தொகுதிகளில் முடிவுகளை தீர்மானிப்பவர்களாக கூட இருக்கலாம், அதுவும் 234 தொகுதிகளில் பிரித்தாலும் தொகுதிக்கு இது 5000 - 7000 ஓட்டுகள் வரலாம். ஒரு உத்தேச கணக்குதான். 83% -84% வாக்கு பதிவு உயர்வு என சொல்வது, உயர்வு என பெருமையாக்குவதும், ஏதோ எழுச்சி உண்டானது போல், யாருக்கோ சாதகமாக வந்துவிட்டது போல், பலர் பேசிக் கொண்டிருப்பதும்தான் ஆச்சரியமானது!...... பொறுத்திருந்து பார்ப்போம் மே 4 இல் தேர்தல் முடிவுகளை!..... #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
ஒண்ணா நான். இல்லேன்னா நீ! செய் அல்லது செத்து மடி!!! இந்த வெறியுடன் மேற்கு வங்க தேர்தலை சந்திக்க களம் இறங்குகிறது பாஜக. நாளைய முதல் கட்ட தேர்தலுக்கு மோடி அரசு அனுப்பும் ஒன்றிய பாதுகாப்பு படை - 2,047 கம்பெனி படையினர். 2.4 லட்சம் தேர்தல் ஊழியர்கள். புரியும் படி சொல்வதானால், மணிப்பூரில் உச்சகட்ட கலவரம் நடந்து மாநிலமே பற்றி எரிந்த போது மோடி அரசு அனுப்பிய ஒன்றிய படைகள் - 288 கம்பெனி படையினர் மட்டுமே! ஆனால், ஒரு தேர்தலுக்கு, அதுவும் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு போர்க்களத்திற்கு அனுப்புவது போல 2,047 கம்பெனி படையினர். 2.4 லட்சம் தேர்தல் ஊழியர்களை அனுப்புகிறது மோடி அரசு!!! நடக்க போவது தேர்தலா அல்லது உள்நாட்டு போரா? #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - telegraphindiacom telegraphindiacom - ShareChat
🛑 விஜய் ரசிகர்களே... ஒரு நிமிடம் நிதானமா படியுங்க! 🔥 ~ உங்களை தற்குறி என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் தற்குறி இல்லை இன்னொஸண்ட் வெகுளித்தனமான ஆட்கள் நீங்கள், ரொம்ப நல்லவங்கதான் இன்னொஸண்ட்டா இருப்பாங்க, தனக்கு பிடித்தவருக்காக எந்த அளவுக்கும் போவீர்கள் அந்த அளவுக்கு ஒருவர் மீது அன்பு வைக்கக்கூடிய ஆட்கள் நீங்கள், அந்த அன்பைத்தான் விஜய் மீது வைக்கிறீர்கள் ஆனால் உங்கள் அன்புக்கு விஜய் சரியானவரா ? இன்னும் இன்னொசண்டா இருக்க வேண்டுமா தயவு செய்து படியுங்கள் 👇 ~நம்ம விஜய் அண்ணன் இப்போ அரசியல்ல "ஈழத் தமிழர்களுக்கு ஆதரவா" பேசுறார். TVK-ல தீர்மானம் போட்டு பொதுவாக்கெடுப்பு கேக்குறார். நல்ல விஷயம். ஆனா... கண்மூடித்தனமா பின்தொடரும் முன்னாடி இந்த உண்மையை தெரிஞ்சுக்கங்க. 2013-ல் (இனப்படுகொலைக்கு பிறகு) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) ராஜபக்சேவுக்கு எதிரா ஒரு கையெழுத்து இயக்கம் நடத்துச்சு. ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, தண்டனை, தமிழர்களுக்கு நீதி கேட்டு தமிழ் நடிகர்கள், பிரபலங்கள் எல்லாரும் கையெழுத்து போட்டாங்க. ~அந்த நேரம் விஜய் படப்பிடிப்பு தளத்துக்கு வன்னியரசு உள்ளிட்ட VCK நிர்வாகிகள் நேர்ல போனாங்க.கையெழுத்து கேட்டதும் விஜய் சொன்ன பதில்: "I am not interested" ❌ (இப்போது மனைவியை worth இல்லை என்று சொன்ன அதே மெத்தனமா பதில்) ~அவரோட அப்பா S.A. Chandrasekar-ம் அதே மாதிரி மறுத்தார் (இது அப்போதைய பேட்டி வீடியோ இன்னும் இருக்கு) ~அதே காலகட்டத்துல ரஜினி, கமல், சரத்குமார், சூர்யா, அஜித், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட எல்லா பெரிய நடிகர்களும் நடிகர் சங்கம் மூலமா பட்டினி போராட்டம் நடத்தி, தீர்மானம் போட்டு ஆதரவு கொடுத்தாங்க. ஆனா விஜய் மட்டும் "எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை"னு சொல்லிட்டார். இப்போ அரசியல் கட்சி ஆரம்பிச்சதும் ஈழப் பிரச்சினையை பேசுறார். மாறலாம். ஆனா பழைய செயலை மறைக்கவோ, ரசிகர்களை ஏமாத்தவோ கூடாது. ரசிகர்களா இருக்குற நீங்க... கண்மூடித்தனமா ரசிகர்களா இருக்காதீங்க. ~விஜய விரும்புங்க... ஆனா தமிழ் இன உணர்வை அதுக்கு மேல வைங்க. உண்மையை தெரிஞ்சுக்கிட்டு ஆதரிக்கணுமா? இல்ல இல்லைனு கேள்வி கேட்கணுமா? அதுதான் உண்மையான ரசிகன்! ( நீங்க உங்கள் அருகில் இருக்கும் அரசியல் தெரிந்த பெரியவர்கிட்ட கேட்டு பாருங்கள் எந்த இணையதளத்தில் வேண்டும் ஆனாலும் தேடிப்பாருங்கள் AI கிட்ட கூட கேட்டு பாருங்கள் இது முற்றிலும் உண்மை நான் பொய் சொல்லவில்லை ) ~ ஒரு ஓட்டு ஒரே ஒரு ஓட்டு தலையெழுத்தை மாற்றும் யோசித்து போடுங்கள் 🙏 #ஈழதமிழர்கள் #விஜய் #TVK #உண்மைதான்வெல்லும் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ೯೫ = GUட ೯೫ = GUட - ShareChat
தமிழ் நாட்டின் தன்னாட்சி உரிமைகளை மீட்க ஆர்எஸ்எஸ் ஒழிக்கப்பட வேண்டும் த நீதிராஜன் பகுதி 12 மொழி தேசியங்களும், ஒரே மொழிக்குள்ளும் பல்வகை தேசியங்களும் இன தேசியங்களும் பண்பாட்டு தேசியங்களும் தமக்கான தன்னாட்சியோடும் சுயாட்சியோடும் உலகில் உருவாகி வருகின்றன. ஐரோப்பிய யூனியனும் சீனத்தின் தன்னாட்சி கொண்ட பிரதேசங்களும் உதாரணங்கள்தான். இலங்கையில் ஈழ தேசியமும் மலையகத் தேசியமும் தனித்தனியாக செயல்பட்டு வருவதும் உதாரணங்கள்தான். இத்தகைய தேசியங்களை இரண்டு விதமாக வரையறை செய்யலாம். ஆண்ட பரம்பரை பெருமிதம் உள்ளிட்ட பழம் பெருமை பேசும் போக்கும் தனது தேசியத்துக்குள் வாழும் சிறுபான்மையோர் மீதான வெறுப்பு அரசியலும் ஆதிக்க தேசியத்தின் அடையாளங்கள் ஆகும். உலகில் இத்தகைய பலவகைப் போக்குகளை இன்று பார்க்கலாம். ஒடுக்கப்பட்டோர் பிரச்சனைகளை முன்னுரிமை கொடுத்து தீர்ப்பதும் அறிவியல் தரவுகளோடு தனது தேசிய உணர்வுகளை ஒன்றுகலப்பதும் விடுதலை தேசியத்தின் அடையாளங்கள் ஆகும். கீழடியின் மேலதிக ஆதாரங்களின் வழியாக புத்துயிர் பெறும் தமிழ் தேசியம் தன்னை விடுதலை தேசியமாக மேலும் மேலும் வளர்த்திடவேண்டும். மாறிக்கொண்டேயிருக்கிற உலகின் சூழலுக்கு ஏற்ப தன்னை தமிழ் தேசியம் தகவமைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய விடுதலை தேசியமாக தமிழ் தேசியத்தை வளர்த்தெடுப்பதில் ஒரு தடையாக ஆர்எஸ்எஸ் இயக்கம் முன் நிற்கிறது. ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் ‘இந்துத்வா பண்பாட்டு தேசியம்’ விடுதலை தேசியம் அல்ல, அது ஆதிக்க தேசியம் ஆகும். ஒடுக்கப்பட்டோரிடமிருந்து தனக்கான அடியாட்களை எடுத்துக்கொண்டு தன்னைப் பலப்படுத்திக்கொள்கிற சக்தி இன்னமும் அதற்கு இருந்தாலும் அது விடுதலை தேசியமாக ஆக முடியாது. இந்திய தேசியத்தையும் தமிழ் தேசியத்தையும் விடுதலை தேசியங்களாக வளர்த்தெடுப்பதற்கான மக்கள் சக்தியைத் திரட்டுவதற்குத் தடையாக இருக்கிற ஆர்எஸ்எஸ் பயங்கரவாத இயக்கத்தையும் பிஜேபி கூட்டணிக் கட்சிகளையும் இந்தத் தேர்தலில் ஒழித்துக் கட்டுவது என்பது தமிழர்களின் முதன்மையான கடமை. #DMK #BJP4IND #CPIM #cpimnews #CPIMPressRelease #DMK4TN #dmkitwings #Congress #CongressParty #RSS4Nation #cpitamilnadu #திமுக #சிபிஐ #சிபிஐஎம் #காங்கிரஸ் (நிறைவு) தொடர்புக்கு / 9445318520 #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
பூமிக்கு அடியில் நூற்றுக்கணக்கான அடி ஆழம்... நவீன செயற்கைக்கோள்களின் கண்களுக்கே புலப்படாத ஒரு பிரம்மாண்ட நகரம். அது வெறும் மண் அல்ல, மேலை நாடுகளின் நிம்மதியைச் சிதைக்கும் இரும்புக்கோட்டை என சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஈரானின் சாக்ரோஸ் (Zagros) மலைத்தொடர்களுக்கு அடியில், மேற்கத்திய நாடுகளின் மிகப்பெரும் சிம்மசொப்பனமாக விளங்கும் "மிசைல் நகரங்கள்" (Missile Cities) அமைந்துள்ளன. வாஷிங்டனும் டெல் அவிவ் நகரமும் 13 டன் எடையுள்ள Bunker-buster குண்டுகளை நம்பியிருக்கும் வேளையில், ஈரான் எவராலும் ஊடுருவ முடியாத ஒரு பிரம்மாண்டமான நிலத்தடி வலையமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலத்தடி தளங்கள் வெறும் சேமிப்பு கிடங்குகள் அல்ல; இவை கருங்கற் பாறைகள் மற்றும் Steel கொண்டு கட்டப்பட்ட ஒரு சிக்கலான பிரம்மாண்ட தளம். செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களால்கூட இந்த சுரங்கத்திற்குள் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய முடியாது. இந்த கோட்டைகள் உயர் தொழில்நுட்ப தொழிற்சாலைகளாகவும் செயல்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஹைப்பர்சோனிக் (Hypersonic) ஏவுகணைகள், மணிக்கு சுமார் 2000 மைல் வேகத்தில் செல்லக்கூடியவை. இவை ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே இஸ்ரேலை சென்றடையும் வல்லமை கொண்டவை. தற்போது ஈரானின் இந்த நிலத்தடி பாதுகாப்பு உத்தி, அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்கு (Air Dominance) நேரடி சவாலாக மாறியுள்ளது. ஒரு நாடு தனது முழு ஏவுகணை பலத்தையும் நிலத்திற்கு அடியில் பல மைல் தூரத்தில் மறைத்து வைத்திருக்கும்போது, வழக்கமான போர் முறைகள் அங்கு எடுபடாது. எதிரி கண்ணுக்குத் தெரியாமல், நிலத்திற்கு அடியில் பல மைல் ஆழத்தில் மறைந்திருந்து தாக்கும் இந்த சூழலை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்கிறதா? ஈரானின் இந்த "Missiles city" நவீன காலத்தின் சமச்சீரற்ற போர்முறைக்கு (Asymmetric warfare) ஒரு சிறந்த உதாரணமாகவும், உலக நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் ஒரு பெரும் எச்சரிக்கையாகவும் மாறியுள்ளன. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ? ஈரானின் Underground] ஏவுகணைைநகரம் ? ஈரானின் Underground] ஏவுகணைைநகரம் - ShareChat