
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
அரசின் திட்டங்களை மக்களிடம் தெரிவிப்பதில் தவறில்லை!
- கேரள அரசின் பிரச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட உயர்நீதிமன்றத் தடை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு கேள்வி!
#Kerala #KeralaGovernment #KeralaHighCourt #SupremeCourt #👨மோடி அரசாங்கம்
மோடி ஜி, நீங்கள் அவமானத்தைப் பற்றிப் பேசுகிறீர்களா? அவமானத்தை நான் உங்களுக்குச் சொல்லட்டும்.
உங்கள் பெயர், உங்கள் அமைச்சர் மற்றும் உங்கள் நண்பரின் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில் ஒன்றாக வருவது, உங்கள் பெயர் ஒரு கொடூரமான குற்றவாளியுடன் இணைக்கப்பட்டுள்ளது - இது வெட்கக்கேடானது.
நீங்கள் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தத்தில், நாட்டையே விற்றுவிட்டீர்கள் - இது வெட்கக்கேடானது.
நீங்கள் எங்கள் நாட்டின் தரவைக் கொடுத்தீர்கள்.
நீங்கள் விவசாயிகளை அழித்தீர்கள்.
நீங்கள் ஜவுளித் தொழிலை நாசமாக்கினீர்கள் - இது வெட்கக்கேடானது.
அமெரிக்காவில் அதானிக்கு எதிரான வழக்கு உங்களுக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தருகிறது என்பது முழு நாடும் அறிந்ததே - ஏனெனில் இது பாஜக மற்றும் உங்கள் நிதிக் கட்டமைப்பிற்கு எதிரான வழக்கு. 14 மாதங்களாக அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - இது வெட்கக்கேடானது.
மோடி ஜி, உங்கள் நண்பர்கள் அனில் அம்பானி, அதானி மற்றும் உங்களுக்கு எது பொருத்தமானதோ அதைச் செய்யுங்கள்.
நானும் காங்கிரஸ் கட்சியின் துணிச்சலான சிங்கங்களும் நாட்டைப் பாதுகாப்போம் - நாங்கள் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம்.
#RahulGandhi #Vazhapadi Vazhapadi Rama Suganthan -வாழப்பாடி இராமசுகந்தன் #👨மோடி அரசாங்கம்
முஸ்லிம்கள் வெறுப்பை உமிழும் ஆட்களுக்கு...
👇
நாம இதைச்சொல்லி, யார் படிக்கப்போறா?
இன்றைக்கு இலவச கல்வியின் அவசியம் பற்றி மூலைக்கு மூலை கூவிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அந்த காலத்திலேயே 14 வயது வரை இலவசமாய் கல்வியை கட்டாயம் கொடுக்கவேண்டும் என்று குரல் கொடுத்து பேரராடியவர், அபுல் கலாம் ஆசாத்.
நாட்டுக்கு சுதந்திரம் கேட்ட முன் களப்போராளிகளில், முக்கியமானவர் அவர்.
இந்தியர்கள் போராடிய வேளையில் பிரிட்டிஷ் ஆட்சி இந்து-முஸ்லீம் இடையே பிளவை உண்டாக்கி அருமையாக குளிர்காய்ந்து கொண்டிருந்தது.
இந்த பிரித்தாளும் சூழ்ச்சியின் ஆணிவேரை வெட்டுவதற்காகவே, ஹல் ஹிலால் என ஒரு உருது வார இதழை தொடங்கி பிரிட்டிஷ்காரர்களை வெளுத்தார்.
உடனே மேற்கு வங்கத்தை விட்டு விரட்டியடித்தது அரசு.இரண்டே ஆண்டில் பத்திரிக்கைகு தடை..
இருந்தாலும் ஆசாத் விடவில்லை. போடாங் ங்கொய்யால என்று மறுபடியும் ஹல் பலாஹி என வேறு பெயரில் பத்திரிகையை கொண்டுவந்தார்.
அதே ஆவேசமான எழுத்துகள். "அடேய் நீ அடங்கவே மாட்டீயா?" என அந்த பத்திரிகையையும் இரண்டே ஆண்டுகளில் முடக்கியது பிரிட்டிஷ் ஆட்சி..
பல மாநிலங்களிலிருந்து ஆசாத்தை விரட்டியடித்தபடியே இருந்தது. அப்புறமென்ன? ஆசாத்துக்கு மாறுவேட போட்டிதான்.
இப்படித்தான் உருவெடுத்து சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான ஆளுமையாக திகழ்ந்தார் ஆசாத்.
வெறும், 35 வயதிலேயே காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகிறார் என்றால் அவரிடம் எந்த அளவுக்கு திறமைகள் குவிந்திருக்கவேண்டும்!
ஆசாத்துக்கு அடுத்துதான் மகாத்மா காந்தியே 1924-ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வந்தார்.
ஒரு புறம், முகமது அலி ஜின்னா போன்றவர்களால் வலுப்பெற்று வந்த நாட்டின் பிரிவினை வாதம்...
இன்னொருபுறம் பிரிட்டிஷ் காரர்களை எதிர்த்து பல போராட்டங்களுடன் சுதந்திரத்தை நோக்கி நாடு முன்னேறிவந்த தருணம்..
இந்தியத் துணைக்கண்டம் பல பிரச்சினைகளை உக்கிரமாக சந்தித்து கொண்டிருந்த அசாதாரணமான காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக 1940 முதல் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய அற்புதமான தலைவன் ஆசாத்.
பாகிஸ்தான் பிரிவினை தீர்மானத்தை ஆதரித்து வாக்க ளிக்காததால் ‘’காங்கிரசின் கைப்புள்ளை’’ என முகமது அலி ஜின்னாவால், கேலி பேசப்பட்டவர் ஆசாத்.
காந்தி, நேரு, படேல், நேதாஜி போன்றோர் வரிசையில் இடம் பெற்றிருந்த ஆசாத், நாடு சுதந்திரம் பெற்றதும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்றார்.
சிறந்த படிப்பாளியான ஆசாத், பிரிட்டிஷார் காலிசெய்துவிட்டு போன வெற்று இந்தியா, உயர்கல்வியில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினார்.
அந்த தொலைநோக்கு சிந்தனையுடன்தான் உயர்கல்வி நிறுவனங்களை அவர் உருவாக்கினார்.
தொழில் நுட்ப கல்வியின் அவசியத்தை உணர்ந்து 1951ல், முதல் ஐஐடியை கேரக்பூரில் பிறக்க வைத்தார் . அதன் பின் வரிசையாக மும்பை கான்பூர் சென்னை, டெல்லி போன்ற இடங்களில் ஐஐடிக்களை அமைத்தார் ஆசாத்.
இன்னொரு பக்கம், பல்கலைக்கழக மானியக்குழுவையும் உருவாக்கினார்.
கல்வியில் இத்தனை சாதனைகளை படைத்ததனால்தான் ஆசாத் பிறந்த நாள், இந்தியாவின் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுது.
1958ல் மறைந்த, பாரத ரத்னா அபுல்கலாம் ஆசாத்தின் 66 வது நினைவுதினம் இன்று.
இதையே யாரும் படிக்க போறது இல்ல. இதுக்கு மேல விலாவாரியா சொன்னா யார் படிப்பா?
- ஏழுமலை வெங்கடேசன். #👨மோடி அரசாங்கம்
அயோக்கியத்தனம் நிறைந்த, கொலைகார கூட்டம், அரசின் துணையோடு இந்தியாவில் ஆட்டம் போடுகிறது. ஈஷாவை ஆதரிப்பவர்கள் யோசிக்கட்டும்! #👨மோடி அரசாங்கம்
முக்குலத்தோருக்கான எச்சரிக்கை பதிவு :-
ராம சீனிவாசன் வைத்திருக்கும் பெண்ணின் பெயர் முத்துலட்சுமி இவர் முக்குலத்தோர் அனைவரிடமும் தன்னை மறவர் சமுதாயத்தைச் சார்ந்த பெண் என்று பொய் சொல்லி வருகிறார் ஆனால் இவர் முக்குலத்தோர் கிடையாது மாற்று சமுதாயத்துப் பெண்.
ராம சீனிவாசன் வைத்திருக்கும் இந்தப் பெண்ணின் கீழ் ஒரு youtube சேனலும் 10 பேர் அடங்கிய ராம சீனிவாசன் IT விங்கும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது .
இந்த IT WING மூலமாக சமூக வலைதளங்களில் பேக் ஐடிகள் நிறைய கிரியேட் செய்யப்பட்டு முக்குலத்தோரை தாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள்தான் முக்குலத்தோருக்கு இடையே பிரிவினையை தூண்டி விடுவதும் கள்ளருக்கு எதிராக மறவர் பேசுவது போலவும் மறவருக்கு எதிராக அகமுடையார் பேசுவது போலவும் முகநூலில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
முக்குலத்தோர் சமுதாயத்தில் அதிமுக திமுக ஏன் பிஜேபி உட்பட முக்குலத்தோர் தலைவர் யாராவது வளர்ச்சியடைந்து விட்டால் அவர்களுக்கு எதிராக பேக் ஐடிகளில் சென்று அவர்களை தாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த IT விங் BJP முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை அவர்களை கூட விட்டு வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
முக்குலத்தோரான நயினார் நாகேந்திரன் பிஜேபி தமிழக தலைவராக நியமித்தபோது அவரையும் இந்த IT விங் விட்டு வைக்கவில்லை என்று பேசப்படுகிறது.
மேலும் சக தமிழ் சாதிகளை வைத்து முக்குலோத்தருக்கு எதிராக திருப்பி விடும் வேலையும் இந்த ஐடிவிங் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இப்படி ராம சீனிவாசனும் இந்த பெண்ணும் சேர்ந்து பல அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது.
தமிழ்நாடு காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு இந்தப் பெண்ணை விசாரித்த போது இந்தப் பெண் இன்ஸ்பெக்டர் அதிகாரியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இனிமேல் இந்த செயலில் ஈடுபட மாட்டேன் என்று விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகவே முக்குலத்தோர் அனைவரும் தேர்தல் முடியும் வரை சற்று ஜாக்கிரதையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
#முக்குலத்தோர் #Mukkulathor #மறவர்
#கள்ளர் #அகமுடையார் #தேவர்
#MukkulathorUnity #முக்குலத்தோர்_ஒற்றுமை #சமூகஎச்சரிக்கை #தமிழ்நாடு
#TamilNadu #சமூக_வலைதளம்
#FakeID #ITWing #SocialMedia
#முக்குலத்தோர்_பாதுகாப்பு
#சமூகஅரசியல் #TamilPolitics
#தமிழர் #👨மோடி அரசாங்கம்
திமுகவை ஆதரித்து ஓபிஎஸ் பேசியதிலிருந்து
அவர் எதோ பஞ்சமா பாதகச் செயலைச் செய்தது போன்று எபெக்ட் கொடுக்கிறார்கள் அதிமுகவினர்.
திமுகவிலிருந்து அதிமுக உருவானது கொள்கை முரண்பாடல்ல.
தனிநபர் முரண்பாடு மட்டுமே.
ஆனால்,அதிமுகவையே அழித்துக் கொண்டிருக்கும் பாஜகவோடு சேர்ந்திருந்து குலாவுவது வெட்மாக இல்லையா?
மோடியா? லேடியா? எனக் கேட்ட ஜெயலலிதா ஆன்மா உங்களை மன்னிக்குமா?
இதுவரை எவ்விதக் கூச்சநாச்சமும் இல்லாமல் பாஜகவை ஆதரித்த ஓபிஎஸ், திமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருப்பதும் கூட பாஜக ஏற்பாடாகவே இருக்க முடியும் என்பதே என் பார்வை.
ஏனெனில் அதிமுகவை அழிப்பதன் மூலமே பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்பதால்,அதிமுக முகங்களான ஓபிஎஸ்,செங்கோட்டையன் போன்றவர்களை வெளியேற்றி வேடிக்கை பார்க்கிறது.
பாஜகவிற்கு ஆதாயமாக கருதும் ஒரு விசயத்திலிருந்து திமுகவை ஆதரித்தாலும்
திமுகவிற்கு லாபமாக கருதுவதை திமுக ஏன் தடுக்கப் போகிறது?
அதிமுகவை பாஜகவிடமிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுங்கப்பா.
பாஜக எதிர்கட்சி அந்தஸ்தோடு சட்டப்பேரவைக்குள் நுழைவதை தடுத்து நிறுத்த அதிமுக முயற்சிங்க.
அதை விடுத்து காவிப் புழுதி கண்ணை மறைக்க வள்ளுவருக்கே சாயம் பூசும் வேலையைச் செய்வதா அண்ணாயிசம்?
குருமூர்த்திக்கு குனிந்து கொடுப்பதை விட
திமுகவிடம் கும்பிட்டு நிற்பது மரியாதையானது. #👨மோடி அரசாங்கம்
#ஹிந்தி அனைத்து மொழிகளுக்க்ம் நண்பன் என்றால் "
#போஜ்புரி,
#மைதிலி,
#பிகாரி,
#இராஜஸ்தானி போன்ற பிராந்திய மொழிகள் ஏன் காணாமல் போகின...??.
"தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய #திராவிட_மொழிகளுக்கு உள்ள #ஊடக_வலிமையும், #சினிமா_தொழிலும் ஏன் மராத்தி, பெங்காலி, ஒடியா போன்ற மொழிகளுக்கு இல்லாமல் போனது. இதற்கு மட்டும் #அமித்து_மாமா(என்ற அயோக்கியன்) சரியான விளக்கம் கொடுக்கட்டும். அதற்கு பிறகு ஹிந்தி மற்ற மொழிகளுக்கு நண்பனா or எதிரியா என்பதை தீர்மானிக்கலாம்.
"வடநாட்டு ஏகாதிபத்திய கங்காணிகள் ஒருபோதும் யோக்கியமான முறையில் மாநிலங்களை அணுக மாட்டார்கள். கொல்லைப்புறத்தில் அயோக்கியத்தனத்தை செய்து யோக்கியன் போல் வேடம் போட்டு பிராந்திய மொழிகளையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அழிப்பது தான் அவர்கள் நெடுநாள் கொடும் கனவு அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் #ஈனப்பிறவிகள் இந்த #சங்கீகள் முதலில் இந்த சங்கீகள் செய்கிற அயோக்கியத்தனத்தை நாம் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு பக்குவமும் அறிவும் பெற்றிருக்க வேண்டும் என்பதே சுயமரியாதை மண்ணாக இருக்கக்கூடிய தமிழக மக்களின் அடிப்படை #அரசியல்_அறிவு எத்தனை வேடம் போட்டு வந்தாலும் மொத்தமாக #முகத்திரையை_கிழிக்கும் #தத்துவம் #சிந்தனை_மரபு நம்மிடம் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
" அமித்ஷாக்கள் அல்ல எத்தனை பாதுஷாக்கள் வந்தாலும் பந்தாட வேண்டிய பலமும் வளமும் நலமும் நம்மிடம் இருக்கிறது.
#நாளை_நமதே " #👨மோடி அரசாங்கம்
விவசாயிகள் மார்பில் குத்துகிறது மோடி அரசு . கைதட்டி ஆதரவு தெரிவிக்கிறார் எடப்ஸ் அண்ட் கம்பெனி . இது பற்றி எல்லாம் வாய் திறக்க மாட்டேன் என மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொள்கிறார் விசிலார் .
ஆயினும் … நாட்டில் என்ன நடக்கிறது இச்செய்தியை வாசிப்பீர்!
மோடி அரசு அமெரிக்காவிடம் சரணடைந்ததை அம்பலப்படுத்த அணி திரள்வோம்! கிராமங்கள்தோறும் போராட்டங்களை தீவிரப்படுத்த…..
ஐக்கிய விவசாயிகள் முன்னணி அழைப்பு
புதுதில்லி மோடி அரசு அமெரிக்கா விடம் சரணடைந் ததை அம்பலப் படுத்த அணி திரள்வோம் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) அழைப்பு விடுத்துள் ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:
வர்த்தக ஒப்பந்தம் மூலமாக மோடி அரசு அமெரிக்காவிடம் சர ணடைந்துள்ளது. அமெரிக்காவுட னான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்போது, “அமெரிக்கா விலிருந்து மூலப்பொருட்களை வாங்கினால், இந்தியாவிற்கும் பூஜ்ஜிய வரி ஏற்றுமதி வசதி கிடைக் கும்” என்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறி வித்துள்ளதற்கு ஐக்கிய விவசாயி கள் முன்னணி (எஸ்கேஎம்) கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இந்த அறிவிப்பானது, இந்தியாவின் சுய சார்பு மற்றும் இறையாண்மையை அமெரிக்காவிடம் மோடி அரசு அடகு வைப்பதன் அப்பட்டமான உண்மையாகும்.
எல்லாம் பொய்
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத் தில் விவசாயத் துறை சேர்க்கப்பட வில்லை என்று ஒன்றிய அரசு கூறி வந்தது. ஆனால் அமைச்சர் கோய லின் அறிவிப்பு, மோடி அரசின் கூற்று பொய் என்பதையும், மக்க ளைத் திசைதிருப்பும் முயற்சி என்ப தையும் நிரூபிக்கிறது. மோடி அரசு கையெழுத்திட்டுள்ள இந்த ‘தடை யற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs)’ இந்தியாவின் பொருளா தார காலனித்துவத்திற்கான ஒரு புதிய வரைபடமாக அமைகிறது. இந்தியாவை அமெரிக்கப் பொருட் களின் குப்பைத் தொட்டியாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காடாகவும் மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.
அடிமாட்டு விலை பூஜ்ஜிய வரி விகிதத்தில் கச்சா பருத்தியை இறக்குமதி செய்வது உள்நாட்டு விலையைக் குறைத்து, இந்திய பருத்தி விவசாயிகளைப் பேரழிவிற்கு உள்ளாக்கும். 2025-ஆம் ஆண்டு காரிப் (Kharif) பரு வப் பயிர்களுக்கான கணக்கீட்டின் படி, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த C2 + 50\% சூத்தி ரப்படி (சாகுபடிச் செலவு, குடும்ப உழைப்பு, நிலத்தின் வாடகை மற்றும் முதலீட்டிற்கான வட்டி ஆகிய அனைத்தையும் உள்ளடக் கிய விரிவான செலவுடன் 50 சதவீத லாபம்) பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.10,075 ஆக இருக்க வேண்டும். ஆனால், விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணை யம் (சிஏசிபி), வெறும் A2 + FL அடிப்படையில் (விவசாயி நேரடி யாகச் செய்த செலவு மற்றும் குடும்ப உழைப்பின் மதிப்பு மட்டுமே) குவிண்டாலுக்கு ரூ.7,710 மட்டுமே அறிவித்துள்ளது. இது விரிவான செலவு கணக்கீட்டு முறையான C2 சூத்திரத்துடன் ஒப்பிடும்போது ரூ.2,365 குறைவு ஆகும்.
மோடி அரசு இந்த அடிப்படை விலையைக் கூட விவசாயிகளுக்கு உறுதி செய்யவில்லை. முறை யான கொள்முதல் வசதி இல்லாத தால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை குவிண்டாலுக்கு ரூ. 5,500 முதல் ரூ.6,500 என்ற அடி மாட்டு விலைக்கே விற்கும் நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர்.
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று, பருத்தி மீதான 11% இறக்கு மதி வரியை ஒன்றிய அரசு நீக்கி யது. இது லட்சக்கணக்கான பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரப் பாது காப்பை மேலும் சீரழித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவிலி ருந்து பருத்தி இறக்குமதி 2024 (ஜனவரி-நவம்பர்) இல் 199.30 மில்லியன் டாலராக இருந்தது, 2025- இல் 95.5% அதிகரித்து 377.90 மில்லி யன் டாலராக உயர்ந்துள்ளது. இதற் கான காரணத்தை மோடி அரசு இது வரை மக்களுக்குத் தெரிவிக்க வில்லை.
விவசாயிகளைச் சந்தையிலிருந்து வெளியேற்றச் சதி
தற்போது,”உள்நாட்டுச் சந்தையை நிலைப்படுத்துவதற் கான விவசாயிகளை மையமாகக் கொண்ட நடவடிக்கை” என்று கூறி 25 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை யை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது உள் நாட்டுத் தொழில்துறை வளர்ச்சிக்கு எந்த உத்தியும் இல்லாமல், உண வுப் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளி, அமெரிக்க விவசாயிகள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்க அனும திப்பது ஆகும். அதாவது இந்திய விவசாயிகளைச் சந்தையிலிருந்து வெளியேற்றும், இந்தியப் பொரு ளாதாரம் மீதான நவீன கால னித்துவ ஆக்கிரமிப்பாகும்.
சுதந்திரத்திற்குத் துரோகம்
அதே போல இந்தியா-அமெ ரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின்படி ஆப் பிள், பருத்தி, மரக் கொட்டைகள் (Tree nuts), சிவப்பு சோளம், விதைகள், சோயாபீன் எண்ணெய், மதுபானங்கள் மற்றும் மக்காச் சோளம் சார்ந்த கால்நடைத் தீவ னங்கள் போன்றவற்றுக்கான சந்தையும் திறக்கப்பட்டுள்ளது. இது இந்தியச் சந்தையில் அமெ ரிக்க நிறுவனங்களுக்கு ஒரு ஏக போக நிலையை உருவாக்கும். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், நியூஸிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகியவற்றுடன் கையெழுத்திடப பட்ட ஒப்பந்தங்களில் பால் பொருட்களும் சேர்க்கப்பட்டுள் ளன. இதன் மூலம் மோடி அரசு விவ சாயிகளையும், தொழிலாளர்களை யும், இயற்கை வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் முழு மையாகச் சரணடையச் செய்து நாட்டின் சுதந்திரத்திற்குத் துரோகம் இழைத்துள்ளது.
அமைச்சர் பதவி விலக வேண்டும்
அமெரிக்கா உடனான ஒப் பந்தத்தில் இறக்குமதி வரிகளை 30% - 150% என்பதிலிருந்து 0% ஆகக் குறைப்பதும், ஏற்றுமதி வரி களை 0% - 3% என்பதிலிருந்து 18% ஆக உயர்த்துவதும் போன்ற தீவிரக் கொள்கை மாற்றங்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரியா மல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்துப் பயிர்களுக்கும் C2 + 50\% அடிப்படையில் சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்காத மோடி அரசு, இப்போது விவசாயம் மற்றும் பால்வளத் துறையைப் பாதுகாத்து வந்த வரி முறையை முற்றிலுமாக ஒழித்து வருகிறது.
பிப்ரவரி 12 அன்று (2026) நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மிகப்பெரிய வெற்றியைப் பெற் றும், பிரதமர் இன்னும் விழித்துக் கொண்டு தவறுகளைத் திருத்தத் தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பதவி விலக வேண்டும் என்ற கோரி க்கையை எஸ்கேஎம் மீண்டும் வலி யுறுத்துகிறது.
மோடி அரசு அமெரிக்காவிடம் சரணடைந்ததை அம்பலப்படுத்த வும், விவசாயம், பால்வளம் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதா ரத்தைப் பாதுகாக்கவும் கிராம அளவிலான போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யு மாறு விவசாயிகளுக்கு எஸ்கேஎம் அழைப்பு விடுக்கிறது.
பிப்ரவரி 24 அன்று ஹரியானா மாநிலம் குருச் சேத்திரத்தில் நடைபெறவுள்ள எஸ்கேஎம்-இன் தேசியக் குழு கூட்டம், போராட்டத்தைத் தீவிரப் படுத்துவதற்கான உறுதியான நட வடிக்கைகளை மேற்கொள்ளும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தீக்கதிர் . 16 /02 /26 . #👨மோடி அரசாங்கம்
ஒரு நாட்டின் அரசியலாகட்டும் , அரசியல்வாதிகளாகட்டும், அரசு இயந்திரங்களாகட்டும்
இவைகளனைத்தும்
திறம்பட
அதனதன் வேலைகளை
அது அது செவ்வனே செய்யுமானால்
அந்த நாடுதான் உலகின் NO. 1 மக்களுக்கான நாடாக இருக்கும் .
இப்படியெல்லாம் நடக்குமா என்றால் அது சற்று கடினம்தான்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் போலதொரு பைத்தியக்காரன் பைத்தியக்காரத்தனமாக முடிவெடுக்கும்போது
நாட்டின் உச்சபட்ச அதிகாரம் படைத்த நீதிமன்றம் தலையிட்டு உச்சந்தலையில் ஒரு கொட்டு வைத்து ட்ரம்ப் எனும் பைத்தியக்காரனின் பைத்தியக்காரத்தனத்தை எச்சரித்து
மக்களின் மானம் மரியாதையை காத்த வரலாற்றை இரண்டொரு நாட்களுக்கு முன்பு பார்த்தோம்.
அப்படியெல்லாம் அமெரிக்க நீதிமன்றத்தை மதித்துவிடுவார் என்பதுல் எனக்கு நம்பிக்கை இல்லை .
அப்படி ஒரு நல்ல செய்தி இந்தியாவில் நடக்காதா என்றால் இதுவும் சற்றே கடினம் தான் .
காரணம்
மதம்.
ஏன் அப்படி என்றால் அமெரிக்காவில் எல்லாம் மதம் இல்லையா ?
மதம் இருக்கிறது.
ஆனால்
மத வெறியர்கள் அங்கு இல்லை .
வீதிக்கு வீதி கோவில்கள் இல்லை .
எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் ஜனாதிபதியே தவறு செய்தாலும்
உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு உன் ஈகோவை உன் பைத்தியக்காரத்தனத்தை உன் வீட்டில் வைத்துக்கொள்.
உன்னைத் தேர்ந்தெடுத்தது இந்நாட்டு மக்கள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள் என்று நியாயத்தை நிலைநாட்டும் நீதிமன்றத்தின் உச்ச அதிகாரத்தை சமீபத்தில் பார்த்தோம்.
இங்கே அப்படிப்பட்ட நிலை இருக்கிறதா என்றால் இல்லை .
அப்படிப்பட்ட நீதிபதிகளாவது இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை .
மக்களை நம்ப வைப்பதற்காக
ஆட்சியாளர்களை கடுமையாக சாடுவதைப்போலதொரு தோற்றத்தை முதலில் கொடுப்பார்கள். மக்களும் ஆகா நேர்மையான தைரியமான நீதிபதி வந்திருக்கிறார் என்று பெருமூச்சை இழுத்து வெளியே விடுவதற்குள்
ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகவே தீர்ப்புகளை கொடுப்பார்கள்.
அதேசமயம்
மோடியையும் அமித்ஷாவையும் வைத்து அரசியலையும் நாட்டையும் கெடுத்து ..
ஒரு ஆர்எஸ்எஸ் கார சபாநாயகரை வைத்தே நாடுளுமன்றத்தையும் கெடுத்து ..
குற்றவாளிகளான அமைச்சர்களை வைத்தே அமைச்சகங்களையும் கெடுத்து ..
பணத்தாசையையும் பதவி ஆசையையும் காட்டி
அமலாக்கத் துறை ,
நீதித்துறை,
CBI,
இவைகளை நாசப்படுத்தி..
கலவரத்தை தூண்டுவதற்காக பெரும் பொருட்செலவில் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய
இணை துணை அமைக்களான பஜ்ரங்தள் போன்று, இந்து முன்னணி போன்று பலநூறு தொங்கு சதைகளை உருவாக்கி ..
சரி
இதெல்லாம் எதற்காக ..?
நாட்டுக்கு நல்லது செய்யவா..?
இல்லை
மக்களுக்குத்தான் நல்லது செய்யவா?
எதற்காகவும் இல்லை ..
ஆட்சியதிகாரத்தின்மூலம் கிடைக்கப் பெறும் பல லட்சம் கோடிகளை , அல்லக் கைகளை வைத்து மிரட்டி வாங்கப்பட்ட பல்லாயிரம் கோடிகளை பாதுகாக்க பினாமியாக ஒருவனை உருவாக்கி இருக்கிறார்கள் .
அவனுக்குப் பெயர்தான் அதானி.
இந்த அதானிக்காக இந்தியாவின் கொள்கை முடிவுகள் மாற்றப்படுகின்றன.
மாநில அரசுகளின் பெரும் பெரும் Projects எல்லாம்
மிரட்டி அதானிக்காக வாங்கப்படுகின்றன.
பணியவில்லை என்றால் அமலாக்கத்துறையை அனுப்பி நீதிமன்றத்தில் வழக்காகத் தொடுத்து நீதிமன்றத்தில் அதானிக்கு ஆதரவாக என்ன வாசிக்கப்பட வேண்டும் என்பதையும் தீர்மாணித்து
மிரட்டி வாங்கப்பட்ட Projects தான் அதிகம்.
இப்படி
உலகப் பணக்கார இயக்கமாக ஆர்எஸ்எஸ் மாறி
எஞ்சியும் சிதறிக்கிடப்பவைகளையும் அதானி மூலமாக மூலதனமாக்கி
அவனையும் உலகப் பணக்காரனாக ஆக்குவதை மட்டுமே முதன்மையாக கொண்டு இயங்கி வரும் இயக்கம் தான் ஆர்எஸ்எஸ் .
நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ நல்லது செய்வதற்காக வந்தவர்களேயல்ல இவர்கள் .
நாட்டு மக்கள் என்றால் அது ஆர்எஸ்எஸ் ன் பார்பன இனம் மட்டுமே .
பிற இன மக்கள் அனைவரும் பார்பனர்களை சுமக்கும் அடிமைகள் அவ்வளவே .
தயவுசெய்து சிந்தியுங்கள்.
ஆன்மீகத்துக்கும் ஆர்எஸ்எஸ் க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை .
ஆன்மீகம் என்பது ஆர்எஸ்எஸ் ஐ பொறுத்தவரையில் மக்களை ஆட்டுவிக்கப் பயன்படும் ஒரு கருவி அவ்வளவுதான்.
இனி மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆ. சிங்கராயர்
திராவிட நட்புக் கழகம்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை. #👨மோடி அரசாங்கம்
மஹாசிவராத்திரி கொண்டாடணும்னா நம்ம ஊர்ல இல்லாத இடமா? அமைதியா சாமி கும்பிடணுமா... அழகா மருதமலை முருகன் கோவிலுக்குப் போயிட்டு வரலாம். இல்ல, "எனக்கு விடிய விடிய முழிப்பு வரணும், கொண்டாட்டமா இருக்கணும்" அப்படின்னு ஆசைப்பட்டா, தெருவுக்குத் தெரு நம்ம விநாயகர் கோவில்கள் இருக்கு. அங்க போனா சூடான சுண்டலும், சக்கரைப் பொங்கலும் பிரசாதமா வந்துகிட்டே இருக்கும்!
நம்ம ஊர் கோவில்கள்ல பெட்ரோல் செலவைத் தவிர ஒரு பைசா செலவு இல்லாம, மனநிம்மதியோட சிவராத்திரியைக் கழிக்க முடியும்.
அதை விட்டுட்டு, எதுக்குயா ₹50,000 பணத்தைக் கொட்டிக் கொடுத்து அந்த ஆசிரமத்துக்குப் போறீங்க? அங்க போறதுக்கு எதுக்கு அவ்வளவு ஆர்வம்? அந்த ஆளு மேல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், புகார்கள்னு இவ்வளவு இருந்தும், இன்னும் அவரை ஏன் சப்போர்ட் பண்றீங்கன்னு புரியவே மாட்டேங்குது.
பக்திங்கிறது மனசு சம்பந்தப்பட்டது, அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய "கவர்மெண்ட் பட்ஜெட்" செலவு? காசு கொடுத்து வாங்குறதுக்கு அது ஒன்றும் வியாபாரம் இல்லையே! #👨மோடி அரசாங்கம்












