
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
என் நாட்டின் சீர்கேட்டை என்னவென்று சொல்வது??
தவறான வழியில் பணம் புகழ் பெற்ற ஒரு மோசமான இழிவான மனிதன்.. சாமியார் என்று சொல்லி பல நூறு ஏக்கர் பரப்பளவில் நிலங்களை அதுவும் வனவிலங்குளுக்கு உரிய இடத்தை எவ்வித மனசாட்சி உறுத்தும் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு...
இளைஞர்கள் இளம் பெண்களை யோகா கற்று தருவதாக கூறி உள்ளேயே வைத்து... தலையை மொட்டையடித்து அரை வயிறு கால் வயிறு கஞ்சி ஊற்றி அவர்களை யோகா என்ற பெயரில் கொடுமைப்படுத்தி....பெற்றோர்களிடம் அனுப்பி வைக்காமல் அவர்களின் எதிர்காலத்தை சின்னாப்பின்னமாக்கி....
சரி... இந்த (அ)யோக்கியன் திருமணம் செய்து கொள்ளாத துறவியா என்றால்...#இல்லை..
திருமணம் ஆகி மனைவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்... பலரும் அப்பெண்ணைக் கொன்றவர் இந்த மனிதன் என்று சொல்வது ஒரு பக்கம்...
பல இளைஞர்களின் வாழ்வை சீரழித்த இந்த மகா உத்தமன் தன் மகளுக்கு வெளிநாட்டு வாழ் கணவனை திருமணம் செய்து வைத்தார்...நதியை இணைக்கிறேன் என்று சொல்லி பல ஆயிரம் கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டவன்...
ஒவ்வொரு சிவராத்திரியன்று சினிமா பிரபலங்கள் குறிப்பாக கவர்ச்சி நடிகைகளின் நடனம்.. இந்த விழாவுக்கு வருகைத் தருவதெல்லாம் #பிரதமர் #உள்துறைஅமைச்சர் #குடியரசுதலைவர்...
இதென்ன அரசு விழாவா...??? சமீபத்தில் தான் சுபஷ்ரி என்று ஒரு பெண் இவரது யோகா மையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது இன்னும் பல சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில் குடியரசு தலைவர் இங்கே வந்திருப்பது போன்ற ஒரு கொடுமை உலகில் எங்கும் நிகழ்ந்திருக்காது...
இந்த கேவலங்களை முந்திக் கொண்டு எழுதி காசு பார்க்கும் ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள்.. மானமுள்ள என்னைப் போன்ற மானமுள்ள ஒவ்வொருவரும் காறி உமிழ வேண்டும்...
இப்போது நான் எழுதும் இந்த செய்தி பல திராவிட மாடல்களுக்கு எரிச்சல் தரும்.. ஆமாம்.. குடியரசு தலைவர் யோகா மையத்திற்கு வருகிறார் என்றால் இதனை தமிழக முதல்வர் கட்டாயமாக அனுமதித்து இருக்கக் கூடாது... எக்காரணம் கொண்டும் தமிழ் நாடு காவல்துறை அதிகாரிகள் குடியரசு தலைவருக்கு பாதுகாப்பு அளிக்க முன் வந்திருக்கக் கூடாது...
இன்னும் சொல்லப்போனால் தடை ஆணை கூட வாங்கி இருக்கலாம்..
ஜெயலலிதா குற்றவாளி எண் ஒன்று என்பதாகலாம்... ஆனால் இந்த யோகா மையத்திற்கு குடியரசு தலைவர் வருகிறார் என்றால் அதனைத் தடுத்து நிறுத்தி இருப்பார் நிச்சயமாக... இந்த யோகா மையத்திற்கு குடியரசு தலைவருடன் ஒரு அமைச்சர் வேறு எடுப்பு...
சிவராத்திரி விரதம் இருப்பது என்பது பக்தர்களின் தனிப்பட்ட நம்பிக்கை.. அமைதியாக பக்தர்கள் சிவனை வழிபடுவதற்கான ஒரு தினம்
. அந்த இரவில் சிவனுக்கு உகந்ததாக கருதப்படும் தேவாரம் திருவாசகம் போன்ற பதிகங்கள் பாடி துதிப்பதை அர்த்தமற்றதாக்கி... கவர்ச்சி நடிகைகளுடன் சேர்ந்து இந்த ஜக்கி நடனம் என்ற பெயரில் கூத்தடிப்பது..போதை வஸ்துக்கள் உபயோகிப்பது... இதற்கெல்லாம் தரம் பிரித்து கட்டணம் வசூலிப்பதும்...
#கண்டணத்துக்குரியது...
என் இந்த பதிவை அநேகமாக பலரும் #பார்க்காதது_போல_கடந்து_சென்று_விடுவார்கள்... காரணம் #பயம்_பயம்_பயம்.....
இம்முறை ராணுவ வீரர்கள் இவன் கையால் ஷீல்டு வாங்கிய கொடுமை...
ஒரு போதும் வரும் முன் காப்போம் என்பதே இல்லை..
#தமிழ்நாட்டின்இந்தியாவின்
லிட்டில் ஜேம்ஸ் தீவு போன்ற
தோழர் Sasikala Devi Sulaiman .. #👨மோடி அரசாங்கம்
#அது_தெரியாத
ஒரு நீதின்றமா?
அடப்பாவமே!
அதானிக்கு அம்பானிக்கு
இலவசமாக 16 லட்சம் கோடியை
எங்கிருந்து மத்திய அரசு தள்ளுபடி செய்ததோ...
அங்கிருந்துதான்..! #👨மோடி அரசாங்கம்
ஊருக்கு உபதேசம் இவர் வாழ்வது அனைத்தும் இலவசத்திலேயே சாமானிய மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாது என்று நினைக்கும் இந்த அயோக்கியர்கள் பெற்றுள்ள வசதி வாய்ப்புகளை பாருங்கள். கீழே இவர்கள் பெரும் சலுகைகளை வேண்டாம் என்று கூறிவிட்டு இவர் எது வேணாலும் பேசட்டும்
இலவச குடியிருப்பு:
புது தில்லியில் உள்ள முழுமையாக ஏசி பொருத்தப்பட்ட மிகப்பெரிய குடியிருப்பு.
இலவச பாதுகாப்பு:
அந்த குடியிருப்புக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வழங்கும் ஆயுதம் தாங்கிய உயர்மட்ட பாதுகாப்பு.
இலவச பயணம் மற்றும் போக்குவரத்து:
இலவச ஓட்டுநர்களுடன் கூடிய அதிகாரப்பூர்வ இலவச அரசு வாகனங்கள், முதல் வகுப்பு ஏசி ரயில் பயணங்கள் பணியாளர்களுக்கும் சேர்த்து இலவசம் மற்றும், அதிகாரபூர்வ பயணத்திற்கு செலவான பணத்தை அரசிடம் கோரி திரும்பப் பெறுதல் போன்ற பல இலவச பயணச் சலுகைகள் உண்டு.
இலவச மருத்துவ வசதிகள்:
தலைமை நீதிபதி மற்றும் அவரைச் சார்ந்த குடும்பத்தினர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு உட்பட விரிவான இலவச மருத்துவ சிகிச்சைகள்.
இலவச மின்சாரம், தண்ணீர், தொலைபேசி, கைபேசி, பிராட்பேண்டு இணையம்:
பணிக்காலத்தில்:
தலைமை நீதிபதிக்கு அவரின் அரசு குடியிருப்பில் தொலைபேசி, மின்சாரம், தண்ணீர், கைபேசி டேட்டா இணையம் யாவும் இலவசம்.
ஓய்வுக்குப் பிறகு:
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிக்கு குடியிருப்பு தொலைபேசி இணைப்பு இலவசமாகவும், குடியிருப்பு தொலைபேசி, மொபைல் போன், பிராட்பேண்ட் அல்லது மொபைல் டேட்டாவிற்கான தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை மாதத்திற்கு ரூ.4,200 வரை மட்டும் இலவசமாகவும் உண்டு.
இலவச ஊழியர்கள்:
செயலாளர்கள் மற்றும் எழுத்தர் ஊழியர்கள் உட்பட அர்ப்பணிப்புள்ள தனிப்பட்ட ஊழியர்கள் அரசின் சம்பளத்துடன்.
ஓய்வுக்குப் பிந்தைய இலவச சலுகைகள்: குறிப்பிடத்தக்க ஓய்வூதியம் (கடைசியாகப் பெற்ற சம்பளத்திற்குச் சமம்), கூடுதலாக வாழ்நாள் முழுவதும் இலவச பணியாளர்/ஓட்டுநர் சேவைகள். ஓய்வுக்குப் பிந்தைய காலத்திலும் மருத்துவக் காப்பீடு உட்பட விரிவான இலவச மருத்துவ சிகிச்சைகள்.
மேற்கண்ட இலவசங்கள் எல்லாம் தாண்டி...
மாதா மாதத்திற்கு 2,80,000 ரூபாய் சம்பளம். பண்டிகை கால போனஸ். பஞ்சப்படி. இது எலாம் மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விட இவருக்கு அதிகம்.
இப்போது...
இவர் கேட்ட முக்கியமான கேள்விக்கு வருவோம்.
மாதா மாதம் இவர் பெறும் 2.8 லட்சம் ரூபாய் சம்பளம் தாண்டி...
இவர் அனுபவிக்கும் மேற்கண்ட அனைத்தும் இலவசம் எனும் போது...
இது குறித்து... அந்த ஏழை மக்கள் இவரை பார்த்து திருப்பிக் கேட்க மாட்டார்களா..?!அய்யா நீதிபதி அவர்களே "லட்ச கணக்குல சம்பளம் வாங்குறீங்களே அப்புறம் எதுக்குங்க உங்களுக்கெல்லாம் இலவச பங்களா - பங்களாவுல பணி செய்றவங்களுக்கு சம்பளமும் அரசாங்க ( மக்கள் வரி பணம் ) காசுல, இலவச மின்சாரம், இலவச வாகனம் - அந்த வாகனத்துக்கு எரிபொருள் இலவசம் - சுங்க கட்டணம் இலவசம், விமான பயணம், கோவில் வழிபாடுகள்ல சலுகைகள் - முன்னுரிமைகள், இது போக மருத்துவப் படி அது இது ன்னு ஏகப்பட்ட இலவசங்கள், சலுகைகள் லாம் உங்களுக்கு எதுக்குங்க ????.
அதெல்லாம் எங்களுக்கு வேண்டாம், எங்களுக்கு தான் லட்க கணக்குல சம்பளம் வருதில்ல, அதுலேயே பார்த்துக்கிறோம் ன்னு சொல்லுங்க சார் .... லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கு இவர்கள் நாட்டின் நலன் கருதி 10,000 15,000 சம்பளத்தில் வாழ தயாரா? இத்தனை இலவசங்களையும் வேண்டாம் என்று கூறிவிட்டு நாட்டின் நலன் கருதி பத்தாயிரம் மற்றும் 15 ஆயிரம் சம்பளத்துக்குள் வாழ தயாரா?
ஜே அப்துல் சமது #👨மோடி அரசாங்கம்
பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்னை விட, உயர்ந்தவர் நம்ம பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி! இவரு ராஜினாமா பண்ணவும் மாட்டார்! மோடி டிஸ்மிஸ் செய்யவும் மாட்டார்! மோடி குடுமி ஹர்தீப் சிங் பூரி கையில்!
ரட்சிக்கணும் பாபாவே! #👨மோடி அரசாங்கம்
இந்தியாவின்
பாஜக ஆட்சியில்
தற்போதய இந்துத்துவா தீவிரவாதம்
புதிய முறையில் கையாளப்படுகிறது
எப்படியெனில்?????
ஒரு இஸ்லாமியரை
அடித்து கொன்றாலோ
அடித்து துன்புறுத்தினாலோ
பிரச்சினைகள் எழக்கூடும் மோடி அரசுக்கு
அதனால்
புதிய வழியை கண்டிபிடித்து
வெற்றியும் பெற்றுள்ளது
மோடி இந்துத்துவா அரசு
பாஜக ஆளும் மாநிலங்களில்
பல உயர் சாதி இந்துக்களின்
யூடீயூபர்களையோ அல்லது இதற்காகவே
RSS ஆல் உருவாக்கப்பட்ட மீடியர்களையோ
கையில் மைக் கொடுத்து
இஸ்லாமிய வீதிகள் மற்றும்
கடை வைத்திருக்கும்
இஸ்லாமியர்களை பேட்டி காணவேண்டும்
அந்த பேட்டி எப்படி இருக்கவேண்டுமெனில்
இஸ்லாமியர்களை பிற மதத்தவரிடம்
தீவிரவாதி போலவும்
இந்தியாவுக்கு எதிராக இருப்பது போலவும்
கேள்விகள் கேட்கவேண்டும்
அந்த கேள்விகள்
1 ஜெய் சீ ராம் கூறுங்கள்
2 வந்தேமாதரம் கூறுங்கள்
3 நீங்கள் இந்தியர் தானா
4 நீங்கள் வசிக்கும் இடம் உங்களுடயதா
என் பலதரப்பட்ட கேள்விகளை
இஸ்லாமியரிடம் கேட்பார்கள்
அவர்கள் எப்போது தனது பதிலில்
பலவீனமடைகிறார்களோ
உடனே பார்த்தீர்களா
இவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள்
இவர்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள்
என இஸ்லாமிய வெறுப்பு எண்ணங்களை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் ஒளிபரப்பி
இதை காணும் இந்துக்கள் ஆவேசப்பட்டு இஸ்லாமியர்களை தாக்கி இஸ்லாமியர்களின்
வணிகங்கள் வீடுகள் என அத்தனையையும் பத்து பைசா செலவு
இல்லாமல் கைப்பற்றி அதை
பாஜக முதல்வர்கள் மூலம்
பாஜகவுக்கு சொத்து சேர்ப்பது
இஸ்லாமியர்களை பங்களாதேஷியர்கள்
என்று அகதிகளாக்குவது
போன்ற பலதரப்பட்ட
இந்துத்துவா அஜெண்டாக்கள்
தற்போது இந்தியாவில்
பாஜக ஆளும் மாநிலங்களில்
அதிகளவில் புதிய முறையில்
நடைமுறைபடுத்தப்படுகிறது
மேலும்
பாஜக அரசு எந்த ஆயூதமும்
எடுக்காமல் நாமெல்லாம் இந்து
என்ற பெரும்பாண்மை கோஷத்தை
வலியுறுத்தி இஸ்லாமியர்களுக்கு
எதிராக இந்து மக்களை பயன்படுத்தி
இந்துத்துவா தீவிரவாதத்தை
இஸ்ரேலிய மொசாத் ஐடியாலாஜிக்கள்
மூலமாக திறம்பட செய்து வெற்றி கொண்டுள்ளது
ஆனால்
தமிழ்நாட்டிற்கு இந்த திட்டம்
வேலைக்கு ஒத்துவராது என்பதால்
தனது பழைய திட்டமான
வாக்குகளை பிரித்தாளும் சூழ்ச்சிகளை கையிலெடுத்துள்ளது
பாஜக இந்துத்துவா அரசு
எப்படியெனில்
இங்கே உள்ள
நாம் தமிழர்
தவெக அதிமுக பாமக தேமுதிக
போன்ற கட்சிகள் மூலம்
வாக்குகளை சிதறடித்து
அதன்மூலம் தனது பினாமி கட்சிகள்
மூலம் தமிழ்நாட்டை கைப்பற்றி
தனது வட இந்தியா இந்துத்துவா
அஜெண்டாவை நிறைவேற்ற
பலதரப்பட்ட ஊடகங்கள் யூடீயூபர்கள்
வழியாக முயற்சிகளை மேற்கொள்கிறது
அதில் படிப்படியாக
முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கிறது
உதாரணமாக
திமுக அரசு நிகழ்சிகள் தவிர
பிற கட்சிகளின் செயல்பாடுகளையே
தினமும் அதிகளவிலான செய்திகளை தமிழக ஊடகங்கள் மூலம் காணலாம்
திமுக மக்களுக்கான
நலத்திட்டங்கள் பிற சேனல்களில்
இடம் பெறுவதில்லை
திமுகவுக்கு எதிராக
பாஜக செய்திகளும்
தவெக செய்திகளும்
அதிமுக செய்திகளும்
நாம் தமிழர் செய்திகளும்
பாமக செய்திகள் மட்டுமே
தினமும் மக்களுக்கு ஒளிபரப்பபடும்
அதே நேரம்
மோடி டெல்லியில்
குசு போட்டால் உடனே இங்கே உள்ள
தமிழக சேனல்கள் குசுவின் நாத்தத்தை
ரோஜா பூச்செண்டு நறுமணம்
அளவிற்கு தினமும் செய்திகளாக
வெளியிடும்
ஆனால்
தமிழ்நாட்டின் திமுக ஆட்சியின்
மக்களுக்கான நலத்திட்டங்களை
ஒளிபரப்பவே செய்யாது பாஜக ஊடகங்கள்
மேலும்
இந்த அரசியல் கட்சிகள் மூலம்
குள்ளநரி திட்டங்களின் மூலமாக
பாஜகவினால் சீரழியும் மாநிலங்களில் இதற்கு உதாரணமாக
அண்டை மாநிலமான
பாண்டிச்சேரி மாநிலத்தை கூறலாம்
அங்கே என்ன நடக்கிறது என
பாண்டிச்சேரி மக்கள் கூறினால் தவிர
பாஜக செய்யும் அட்டுழியங்கள்
வெளியே தெரிய வாய்ப்பில்லை
தெரியவும் போவதில்லை
காரணம்
நாமெல்லாம் இந்து என்ற
பெரும்பாண்மை கோஷம்
இப்படி
தமிழ்நாட்டை தனது
குள்ளநரி அரசியல் கட்சிகள் மூலம்
கைப்பற்ற துடிக்கும் பாஜக இந்துவா கட்சியை இஸ்லாமிய கிருஸ்துவ
தலித் சமுகம் வரும் தேர்தலில் புறகணித்தாலே பாஜகவின் திட்டம்
செயலற்று போகும்
ஏனெனில்
இஸ்லாமிய கிருஸ்துவ தலித்
வாக்குகள் மட்டுமே பாஜகவை
தோற்கடிக்க முடியும் #👨மோடி அரசாங்கம்
ஆர்.எஸ்.எஸ். – உலகின் மிகப்பெரிய பாசிச பயங்கரவாத அமைப்பு
செங்கனல் – ஜனவரி – பிப்ரவரி 2026 – அச்சு இதழில் வெளியான கட்டுரை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய ‘அரசு சாரா அமைப்பு’ எனக் கூறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அளவை பற்றி மட்டுமே மோடி கூறியிருக்கிறார். அதன் தன்மை பற்றிய உண்மையை ஒருபோதும் கூறுவதில்லை. இதிலிருந்தே அது ஒரு கேடான அமைப்பு என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். இருந்தபோதிலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாம் நினைப்பது போல சாதாரண அமைப்பல்ல. இன்று உலகிலுள்ள பாசிச அமைப்புகளிலேயே மிகப் பெரியதும், மிக வலிமையானதும், நூறாண்டு கால அமைப்பு பலமும், இரண்டாயிரம் ஆண்டு கால பார்ப்பனிய சித்தாந்தப் பின்புலமும் கொண்ட கொடிய பாசிச பயங்கரவாத அமைப்பாகும்.... #👨மோடி அரசாங்கம்
உ.பி.யில் வீட்டில் தொழுகை நடத்தியவர்கள் மீது வழக்கு: மாவட்ட ஆட்சியர், எஸ்எஸ்பி பதில் அளிக்க நோட்டீஸ்
புதுடெல்லி: உத்தரபிரதேசம் பரேலியின் முகமதுகஞ்ச் கிராமத்தில் மசூதி இல்லாத நிலையில் ரேஷ்மா கான் என்பவரின் வீட்டில் கடந்த ஜனவரி 16-ம் தேதி கூட்டாக தொழுகை நடத்தப்பட்டது.
இதுகுறித்து ராஷ்டிரிய இந்து தளம், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பிஷாரத் கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் செய்தன. இதையடுத்து, தொழுகை நிறுத்தப்பட்டதுடன் 12 பேர் மீது பொது அமைதியை குலைத்ததாக வழக்குப் பதிவானது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 19-ல் ரம்ஜான் மாத நோன்பு துவங்குகிறது. இந்த நாட்களில் தனது வீட்டில் கூட்டாக தொழுகை நடத்த அக்கிராமத்தைச் சேர்ந்த தாரீக் கான் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் அத்துல் ஸ்ரீதரன், எஸ்.ஏ.சித்தார்த் நந்தன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது தாரீக் கானிடம் இதுபோல் ஒரு மனு அளிக்க வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு தாரீக் கான் தனது கிராமத்தில் 12 பேர் மீது பதிவான வழக்கை சுட்டிக்காட்டினார்.
இதைக் கேட்டு வியப்படைந்த நீதிபதிகள், தனியார் வளாகத்தில் பிரார்த்தனை செய்வதற்கு அரசின் அனுமதி தேவையில்லை என்ற முந்தைய ஒரு தீர்ப்பை நினைவுகூர்ந்தனர்.
ஒரு கிறிஸ்தவ குழு தொடர்புடைய வழக்கில் இத்தீர்ப்பு கடந்த ஜனவரி 27-ல் வெளியானது. எனவே, இந்த விதி முஸ்லிம்களின் தொழுகைக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் பரேலி கிராமத்தில் பதிவான வழக்கு நீதிமன்ற அவமதிப்புக்கு உரியது என முடிவு செய்தனர்.
இதையடுத்து பரேலி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் சிங், எஸ்எஸ்பி அனுராக் ஆர்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதில், ‘‘12 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததற்காக உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது?’’ என கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வழக்கை மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். #👨மோடி அரசாங்கம்
வங்கி கணக்கில் நேரடி மானியம் ரேசன் கடைகளை மூடுவதற்கான சதித்திட்டம்
இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொது விநியோக திட்டத்தின் மூலம் சுமார் 80 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பதிலாக, அதற்கான மானியத் தொகையை நேரடியாகப் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் (DBT - Direct Benefit Transfer) செலுத்தும் புதிய திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது.... #👨மோடி அரசாங்கம்
*மெக்கால்லே கல்வித் திட்டம்:*
கீழே ஒரு சிறிய படம் இணைத்துள்ளேன். அது மெக்கால்லே இந்தியக் கல்வி குறித்து இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஒரு உரையின் ஒரு பகுதி. அதில் சொல்லியிருப்பது:
"அவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்றதாகவும் ஒரு திருடனையோ ஒரு பிச்சைக்காரனையோ எங்கும் காண முடியவில்லை என்றும் இந்த தேசம் அவ்வளவு பண்பாடு நிறைந்ததாகவும் ஆன்மீக பலம் பொருந்தியதாகவும் உள்ளது. எனவே அதை அடிமைப் படுத்த நாம் அவர்களின் தொன்மையான கல்வி முறையை ஒழித்து விட்டு ஆங்கில வழி கல்வியைப் பயன்படுத்தலாம்."
*பார்ப்பனியம் அவிழ்த்து விட்ட மிகப் பெரிய பொய்களில் இதுவும் ஒன்று. இன்று வரையிலும் அந்தப் பொய் நிலைத்து நிற்கிறது.*
அடித்துச் சொல்கிறேன் மெக்கால்லே அவ்வாறு சொல்லவே இல்லை. அவர் அதை இங்கிலாந்துப் பாராளு மன்றத்தில் சொன்னதாகச் சொல்லப் படும் 2-2-1835 ஆம் தேதி அவர் இங்கிலாந்தில் இல்லை. அவர் இந்தியாவில் இருந்தார். சரி அவர் சொன்னது அவருடைய நாட்குறிப்பில் இருக்கும் என்று தோண்டி எடுத்துப் பார்த்தால் ஆயிரம் பக்கத்தில் ஒரு இடத்திலும் இல்லை. அவருடைய நாட்குறிப்பு தளத்தையும் இணைத்துள்ளேன்.
*சரி உண்மையில் நடந்ததென்ன?*
இந்தியாவில் கல்வியை அறிமுகப் படுத்தும் பொறுப்புடன் வந்த ஆங்கிலப் பிரபு மெக்கால்லே. இந்து சனாதன வாதிகளுடன் அவர் மூன்று கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அத்தனையும் ஆவணமாக உள்ளன.
*(1) முதல் கட்டத்தில்* மெக்கால்லே *இந்தியர்கள் எல்லோருக்கும் கல்வி கொடுக்க வேண்டும்* என்று வாதிடுகிறார். சனாதன வாதிகள் அதை முழுதுமாய் மறுக்கிறார்கள். கல்வி பார்ப்பனர்கள் மற்றும் மேல் சாதியின மக்களுக்கு மட்டுமே என்று வாதிடுகின்றனர். பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு எல்லோருக்கும் கல்விக்கு சனாதனவாதிகள் ஒத்துக் கொள்கின்றனர்.
*(2) இரண்டாவது கட்டமாக* எத்தகைய கல்வி என்ற பிரச்சனை. மெக்கால்லே கணக்கும் அறிவியலும் என்றார். சனாதன வாதிகள் வேத புராண இதிகாசங்கள் என்றனர். இந்த சண்டை மிக வலுவாக நடந்தது. பல ஆண்டுப் போராட்டம். பல கட்ட பேச்சு வார்த்தைகள். வரலாற்றுச் சக்கரத்தை பின் நோக்கி ஓட்ட முடியாது என்று ஒரே பிடிவாதமாக மெக்கால்லே. அதை முழுதும் எதிர்த்த ஹிந்து பார்ப்பனர்கள். கடைசியில் மெக்கால்லே ஒரே அடியாக ஒரு தனிப்பட்ட அரசு ஆணை ஒன்றைப் பெற்று வந்து இந்தியாவில் கல்வியை வலுக் கட்டாயமாக புகுத்தினார். அதையும் எதிர்த்து பார்ப்பனர்கள் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு மனு அனுப்பினர். ஆனாலும் அது பயனளிக்கவில்லை. வெற்றி பெற்றார் மெக்கால்லே.
*(3) மூன்றாவது கட்டமாக* பயிற்சி மொழி ஆங்கிலமா சமஸ்கிருதமா என்ற கட்டத்தை அடைந்தார். ஆனால் அதில் சுலபமாக வெற்றி பெற்று ஆங்கிலத்தை பயிற்சி மொழியாக்கினார்.
"எல்லோருக்கும் கல்வி" இந்தியக் கல்வியின் தந்தை மெக்கால்லே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால் இந்தியர்களின் கல்விக்காக மெக்கால்லே எவ்வளவு போராடியுள்ளார் என்பதும் அதைத் தடுக்க பார்ப்பனர்கள் எவ்வளவு போராடியுள்ளனர் என்பதும் தெளிவாக தெரிகிறது.
ஒரு தேசத்தையே பொய் சொல்லி நம்ப வைத்த பார்ப்பனியக் குட்டை உடைத்திருக்கிறேன். நண்பர்கள் எல்லோரும் பகிருங்கள். பிரபலங்களிடமும் பகிரச் சொல்லி வேண்டுங்கள். உண்மை எல்லோரும் அறியட்டும். அவருடைய நாட்குறிப்பையும் சான்றாக இத்துடன் இணைத்துள்ளேன். இதில் நான் பகிர்ந்துள்ள அனைத்துக்கும் சான்று உள்ளது.
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00generallinks/macaulay/txt_minute_education_1835.html #👨மோடி அரசாங்கம்
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் மாவட்டம நிதான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெபராராம் மேக்வால் (28). இவர் பாஜக இளைஞர் அணியை சேர்ந்தவர் என்பதால் பாஜக அரசு இவருக்கு இ-மித்றா சேவை மையம் அமைத்துக் கொடுத்தது.
இந்த நபர் இந்த மையத்தின் மூலமாக பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு பிரிவு பெண்ணோடு தொடர்பில் இருந்து உள்ளார். மேலும் ராஜஸ்தான் பாகிஸ்தான் எல்லை பகுதிகளை புகைப்படம் எடுத்து காணொளி எடுத்து அனுப்பி வைத்துள்ளார். கடந்த 11 வருடங்களில் மட்டும் சுமார் 350 க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் பாகிஸ்தான் உளவு பிரிவோடு தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டது நம் அனைவருக்கும் தெரியும். பிறகு இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் ஈடுபடுகிறார்களா என்று இந்திய தீவிரவாத தடுப்பு பிரிவு தொடர்ச்சியாக சோதனை நடத்தி வந்தது.
இந்த சோதனையின் போது தான் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஜபராராம் மேக்குவால் நடந்து கொண்டது தெரியவந்தது. பிறகு அவரை தீவிரமாக கண்காணித்ததில் அவர் பாகிஸ்தான் உளவு பிரிவு பெண்ணோடு தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டு. அவர் இ மித்ரா கடையில் இருந்த மொபைல் போன் கம்ப்யூட்டர்கள் ஹார்ட் டிரைவ்கள் என்று அனைத்தையும் பறிமுதல் செய்து, ஜெய்ப்பூர் மாவட்டத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து இவருக்கு விசாரணை நடந்து வருகிறது. எப்படி குறிப்பிட்ட இந்த நபருக்கு இ மித்ரா சேவை மையத்தை பாஜக ஏற்பாடு செய்து கொடுத்தது? ஆர் எஸ் எஸ் உறுப்பினரான இவருக்கு எப்படி பாஜக உதவி செய்தது போன்ற கேள்விகளை இந்திய தீவிரவாத இயக்க தடுப்பு பிரிவு கேள்விகளாக கேட்டு வருகிறது. #👨மோடி அரசாங்கம்












