ShareChat
click to see wallet page
search
தமிழ் நாட்டின் தன்னாட்சி உரிமைகளை மீட்க ஆர்எஸ்எஸ் ஒழிக்கப்பட வேண்டும் த நீதிராஜன் பகுதி 12 மொழி தேசியங்களும், ஒரே மொழிக்குள்ளும் பல்வகை தேசியங்களும் இன தேசியங்களும் பண்பாட்டு தேசியங்களும் தமக்கான தன்னாட்சியோடும் சுயாட்சியோடும் உலகில் உருவாகி வருகின்றன. ஐரோப்பிய யூனியனும் சீனத்தின் தன்னாட்சி கொண்ட பிரதேசங்களும் உதாரணங்கள்தான். இலங்கையில் ஈழ தேசியமும் மலையகத் தேசியமும் தனித்தனியாக செயல்பட்டு வருவதும் உதாரணங்கள்தான். இத்தகைய தேசியங்களை இரண்டு விதமாக வரையறை செய்யலாம். ஆண்ட பரம்பரை பெருமிதம் உள்ளிட்ட பழம் பெருமை பேசும் போக்கும் தனது தேசியத்துக்குள் வாழும் சிறுபான்மையோர் மீதான வெறுப்பு அரசியலும் ஆதிக்க தேசியத்தின் அடையாளங்கள் ஆகும். உலகில் இத்தகைய பலவகைப் போக்குகளை இன்று பார்க்கலாம். ஒடுக்கப்பட்டோர் பிரச்சனைகளை முன்னுரிமை கொடுத்து தீர்ப்பதும் அறிவியல் தரவுகளோடு தனது தேசிய உணர்வுகளை ஒன்றுகலப்பதும் விடுதலை தேசியத்தின் அடையாளங்கள் ஆகும். கீழடியின் மேலதிக ஆதாரங்களின் வழியாக புத்துயிர் பெறும் தமிழ் தேசியம் தன்னை விடுதலை தேசியமாக மேலும் மேலும் வளர்த்திடவேண்டும். மாறிக்கொண்டேயிருக்கிற உலகின் சூழலுக்கு ஏற்ப தன்னை தமிழ் தேசியம் தகவமைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய விடுதலை தேசியமாக தமிழ் தேசியத்தை வளர்த்தெடுப்பதில் ஒரு தடையாக ஆர்எஸ்எஸ் இயக்கம் முன் நிற்கிறது. ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் ‘இந்துத்வா பண்பாட்டு தேசியம்’ விடுதலை தேசியம் அல்ல, அது ஆதிக்க தேசியம் ஆகும். ஒடுக்கப்பட்டோரிடமிருந்து தனக்கான அடியாட்களை எடுத்துக்கொண்டு தன்னைப் பலப்படுத்திக்கொள்கிற சக்தி இன்னமும் அதற்கு இருந்தாலும் அது விடுதலை தேசியமாக ஆக முடியாது. இந்திய தேசியத்தையும் தமிழ் தேசியத்தையும் விடுதலை தேசியங்களாக வளர்த்தெடுப்பதற்கான மக்கள் சக்தியைத் திரட்டுவதற்குத் தடையாக இருக்கிற ஆர்எஸ்எஸ் பயங்கரவாத இயக்கத்தையும் பிஜேபி கூட்டணிக் கட்சிகளையும் இந்தத் தேர்தலில் ஒழித்துக் கட்டுவது என்பது தமிழர்களின் முதன்மையான கடமை. #DMK #BJP4IND #CPIM #cpimnews #CPIMPressRelease #DMK4TN #dmkitwings #Congress #CongressParty #RSS4Nation #cpitamilnadu #திமுக #சிபிஐ #சிபிஐஎம் #காங்கிரஸ் (நிறைவு) தொடர்புக்கு / 9445318520 #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat