ShareChat
click to see wallet page
search
◾◾பார்ப்பனக் கடப்பாரையைக் கையிலேந்திய சீமானுக்கு புரியும் வகையில் பாடம் புகட்டுவோம்!◾◾◾ ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் நேரடியாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற முடியாது என்ற சூழலில் தனது பினாமிக் கும்பல்களை வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பெயரில் இறக்கிவிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். இந்த வகையில் தமிழ் பாசிசக் கும்பலின் தலைவனான சீமானை ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறக்கி விட்டுள்ளது. அதற்கு தேசங்கடந்த தரகு முதலாளிகளின் ஒருவரான ஷிவ் நாடார் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து ஸ்ரீதர் வேம்பு போன்றவர்கள் தாராளமாக நிதி உதவி அளித்து வருகிறார்கள். இந்த பினாமிக் கும்பலின் தலைவனான சீமான் தமிழகத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற சிந்தனைகளை விதைத்து இந்தியாவிலேயே முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக திகழ வைத்துக் கொண்டுள்ள மாபெரும் சீர்திருத்தவாதிகளான பெரியார் உள்ளிட்டவர்களின் சிந்தனைகளைக் குழிதோண்டி புதைப்பதற்கு பல்வேறு வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பார்ப்பன கும்பலில் அரசியல் ஆலோசகரான திருவாளர் குருமூர்த்தி வழிகாட்டுதலின் கீழ் திராவிட இயக்கத்தின் மீது தாக்குதலை தொடுப்பதற்கு பிராமண கடப்பாரையை எடுத்துக் கொண்டதாக சீமான் பெருமை பீத்தி வருகிறார். இவரை ரங்கராஜ் பாண்டே போன்ற ஹைடெக் பார்ப்பனர்கள் முதல் கருப்புப் பார்ப்பனர்கள் வரை தூக்கி வைத்துக் கொண்டாடுவது உள்நோக்கம் கொண்டதாகும். ‘பிராமணன் என்றாலே பிரம்மனின் முகத்தில் பிறந்தவன்’ என்ற தகுதியை வர்ணத்தின் அடிப்படையில் பார்ப்பனர்களுக்கு வழங்குகின்ற இழிவான செயலாகும். இதனாலேயே ‘பிராமணன் என அழைக்காதே! பார்ப்பான் என கூப்பிடு’ என்றார் பெரியார். “பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதாலேயே, தங்களுக்கு நாட்டை ஆளுகின்ற தகுதி முதல் அனைத்து அதிகார மட்டங்களிலும் முன்னிலை வகிக்கின்ற தகுதி உள்ளது” என்று திமிர் பிடித்து திரிகின்ற பார்ப்பனக் கும்பலின் ஏவல் நாய்களில் ஒருவர்தான் திருவாளர் சீமான். இவர் கையில் பிராமண கடப்பாறை என்று கௌரவமாக கூறுவதை விட பார்ப்பன கடப்பாரையை ஏந்தி திராவிட இயக்கங்களின் மீதான தாக்குதலை தொடுப்பது மட்டுமின்றி, பொதுவுடமை கொள்கைகளின் மீதும், கம்யூனிச சித்தாந்தத்தின் மீதும் வெறுப்புணர்ச்சியையும் கொடூரமான தாக்குதல்களையும் நடத்தி வருகின்றார் திருவாளர் சீமான். ஜெர்மனியின் ஹிட்லர்; இத்தாலியின் முசோலினி போன்றவர்களின் வாரிசுகளாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ள தமிழ் பாசிச கும்பலின் தலைவனான சீமான் முன்வைக்கின்ற வாதங்கள், பொருளாதார திட்டங்கள் அனைத்தும் கற்பனையான, பொருளற்ற தன்மை கொண்டது என்பது தெரிந்தாலும் திராவிட இயக்கங்களின் மீது சாதி ரீதியாகவே வெறுப்பு கொண்ட பார்ப்பன மற்றும் மேல் சாதியினர் திராவிட இயக்கங்களை ஒழித்து கட்டுவதற்கு சீமான் போன்றவர்களை கையில் எடுத்துக் கொண்டு திரிகின்றனர். தமிழகத்தின் சொத்துக்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற பார்ப்பன மற்றும் பார்ப்பனர்களாக மேல் சாதிகளின் அரசியல் பிரதிநிதியாகவே சீமான் தமிழகத்தில் களமாடுகின்றார். இந்த வகையில் மாற்று என்று முன்வைத்து கரை படியாத கரத்திற்கு சொந்தக்காரர் என்பது போலவும், 10 பைசா தேர்தலில் செலவு பண்ணாமல் தேர்தலில் போட்டியிடுவதைப் போலவும் பகடி வித்தைகளை காட்டி வருகிறார். திரள்நிதி என்ற பெயரில் ஈழத்தமிழர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்வது; தமிழகத்தில் தமிழ் தேசிய உணர்வு கொண்ட சிறு குறு தொழில் முனைவர்கள்; தனி நபர்கள் ஆகியோர்களை தனது சதித்திட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டுக் கோடிக்கணக்கான ரூபாய்களை சுருட்டியுள்ள இவர் குடிக்கின்ற தண்ணீர் கூட மினரல் என்பதில் மோடி பயன்படுத்துகின்ற வகையைச் சார்ந்த மினரல் தண்ணீராகும். இந்த லட்சணத்தில் எளிய வாழ்க்கையை வாழ்வதுப் போலவும், நிதி கையில் இல்லாமல் அன்றாடம் திண்டாடி கொண்டிருப்பது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை பொதுமக்களுக்கும் தனது கட்சி தொண்டர்களுக்கு உருவாக்கி வருகிறார். கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ஏறக்குறைய பல பேர் இவர்களை வந்து விலகி விட்டனர். இவரது உண்மை முகம் தெரிந்தவுடன் இவர் பேசுகின்ற தமிழ் தேசியமானது பார்ப்பன கும்பலில் அடிமை புத்திக் கொண்ட, திராவிட இயக்கங்களை ஒழித்துக் கட்டுவதற்கு உருவாக்கப்பட்ட ஐந்தாம் படை தமிழ் தேசியமே என்பதால் நேர்மையான தமிழ் தேசிய எண்ணம் கொண்டவர்கள் இவரிடம் இருந்து விலகி விட்டனர். “கம்யூனிச இயக்கங்களின் மீது வெறுப்பு கொண்டவர்கள் என்ற பிரிவினரும், திராவிட இயக்கங்களின் மீது வெறுப்பு கொண்டவர்கள் என்ற பிரிவினர்களும் ஒன்று சேரும் புள்ளி பாஜக ஆதரவு என்ற கோடாக விரிவடைகிறது. மற்றொருபுறம் பாஜகவை வெறுக்கின்ற எப்படியாவது நல்லது நடந்தால் போதும் என்று சிந்திக்கின்ற “அன்பான சர்வாதிகாரத்தை ’ஆதரிக்கிறவர்கள் சீமானிசத்தையும், சீமானையும் ஆதரிக்கிறார்கள். இதனால்தான் 2010 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்த சீமான் கட்சிக்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் 8.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை எட்டியுள்ளது. இவர்கள் பாஜகவிற்கு சாதகமாக திமுக ஆதரவு ஓட்டுக்களை பிரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது என்பதல்ல நமது பிரச்சனை. பாட்டாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கின்ற வகையில் தமிழர் × தெலுங்கர், தமிழர் × மலையாளி தமிழர் × கன்னடியர் போன்ற முரண்களை முன்வைத்து தமிழ் பாசிச அமைப்பாக வளர்ந்து வருகின்ற சீமான் கட்சி பாரம்பரிய பாசிச கட்சியான ஆர்எஸ்எஸ் பாஜகவுடன் சித்தாந்த ரீதியாக ஒன்றிணைகிறது. நடைமுறையில் எதிர்த்துப் பேசுவதாகவும், போராடுவதாகவும் கூறிக் கொண்டாலும் அன்பான சர்வாதிகாரம் என்பதை முன்வைக்கின்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழியில் செயல்படுவது, பசும்பொன் முத்துராமலிங்க தேவரை உயர்த்திப் பிடிப்பது, பகிரங்கமாக அன்பான சர்வாதிகாரம் தமிழகத்திற்கு தேவை என்று பிரச்சாரம் செய்வது போன்றவற்றின் மூலமாக பாசிச சர்வாதிகாரத்தை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்குவதில் சீமான் முன்னேறி வருகிறார். ‘சீமான் ஒரு நடிகர்’, ‘ கோமாளி’, ‘ குடிகாரர்,’ ‘மூக்கு நோண்டி’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்து அவரை முறியடிக்க முடியாது. மாறாக அவர் முன்வைக்கின்ற தமிழ் பாசிச அரசியலை எதிர்த்து முறியடிப்பதற்கு தயாராக வேண்டும் என்பதுதான் தற்போதைய கட்டத்தில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு அனைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கும் பணிக்கு உதவுகின்ற செயல்பாடாகும்.” என்று தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து புதிய ஜனநாயகம் தினசரியில் எழுதியுள்ளோம். பாசிஸ்டுகளுக்கே உரிய உடல் மொழியும், கவர்ச்சிவாதப் பேச்சும் ஒருங்கிணைந்த வகையில் பார்ப்பனக் கடப்பாறைகளில் ஒருவனாக உருவாகியுள்ள தமிழ் பாசிச கும்பலின் தலைவனை, தமிழ் தேசியத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் மணியரசன் போன்றவர்களும், ஈழத் தமிழர்களை பார்த்து சூடு போட்டுக் கொண்டு பூனைகளாக தமிழகத்தில் வலம் வந்த சில தமிழ் இன ஆதரவாளர்களும் ஆதரித்து வருவது வெட்கக்கேடானது. குருமூர்த்தியின் பயிற்சி பட்டறையில் உருவாகி, தேசங்கடந்த தரகு முதலாளிகள் நிதியளிப்புடன், ஈழத் தமிழர்களை ஏய்த்துப் பிழைத்த நிதியை வைத்துக்கொண்டு தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு எதிராகவும், கம்யூனிச இயக்கங்களுக்கு எதிராகவும் களத்தில் குதித்துள்ள சீமான் போன்ற பார்ப்பன அடிவருடிக் கும்பலை, பார்ப்பனக் கடப்பாரையை ஏந்தி துணிச்சலாக வலம் வரும் பயங்கரவாதிகளை தேர்தலில் முறியடிப்பது மட்டும் போதாது. பார்ப்பன அடிமைப் புத்தியுடன் நேருக்கு நேர் களத்தில் இறங்கி முண்டா தட்டுகின்ற இவர்களுக்கு புரிகின்ற மொழியை கையாள்வதற்கு தமிழகத்தில் உள்ள பாட்டாளி வர்க்கம் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறை கூவலாக விடுகின்றோம். ◾தமிழ்ச்செல்வன். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - மகளிர் இடஒதுக்கீடு மசோதா | ஈசெப் 19, 2023. வரலாற்றின் மிக முக்கிய நாள்!  மக்களவையில் மோடி பிரதமர் நெகிழ்ச்சி 0 செய்திப்பிரிவு  Sep 2023 05:45 PM 19 லோக் சபாவில் ராஜ்யசபா வில் ஆதரவு : 454. ஆதரவு : 214. எதிர்ப்பு : 2. எதிர்ப்பு : இல்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்கட்சிகள் ஆதரவுடன் 20236 நிறைவேறியது  மகளிர் இடஒதுக்கீடு மசோதா | ஈசெப் 19, 2023. வரலாற்றின் மிக முக்கிய நாள்!  மக்களவையில் மோடி பிரதமர் நெகிழ்ச்சி 0 செய்திப்பிரிவு  Sep 2023 05:45 PM 19 லோக் சபாவில் ராஜ்யசபா வில் ஆதரவு : 454. ஆதரவு : 214. எதிர்ப்பு : 2. எதிர்ப்பு : இல்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்கட்சிகள் ஆதரவுடன் 20236 நிறைவேறியது - ShareChat