Arunachalam
ShareChat
click to see wallet page
@463115585
463115585
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
ஒன்றும் அதிசயமாக எதுவும் நடந்துவிடவில்லை! அதிகாரத்தின் மீதான தீரா விசுவாசத்தில் எப்போதும் தீர்க்கமான முடிவெடுப்பவராக இருந்துள்ளார் ஒபிஎஸ்! அவர் முதன்முதலாக நேரடியாக பார்த்த அதிகார பீடம் டி.டி.வி.தினகரன். 1999ல் டி.டி.வி.தினகரன் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட போது, தன்னைவிட 12 வயது குறைந்தவரான டிடிவியிடம் ஒபிஎஸ் காட்டிய பணிவும், ராஜவிசுவாசமும் அவருக்கு 2001ல் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. 2002-ல் ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்த நிலையில், விசுவாசமான அடிமைத் தேடலில் ஈடுபட்ட போது, அவருக்கு சசிகலாவும், டி.டி.வியும் ஒ.பி.எஸ்சை கை காட்டினர். இதே போன்ற வாய்ப்பு மறுபடியும் ஜெயலலிதா மீண்டும் சிறை சென்ற போதும் கிடைத்தது. மோடியா? லேடியா? என்று சவால் விட்ட ஜெயலலிதா அப்போலோவில் உயிருக்கு போராடிய நிலையில், அவருக்கு முடிவுரை எழுத விரும்பிய பாஜகவிற்கு ஒரு அடிமை விசுவாசி தேவைப்பட்டார். அப்போது ஜெயலலிதாவைக் காட்டிலும் பெரிய அதிகாரபீடம் டெல்லி என்பதை வேகமாக சுதாரித்துக் கொண்டு, அதிகார பீடத்தின் மீதான தன் தீரா விசுவாசம் என்பது மாறா விசுவாசமல்ல என்பதை நிரூபித்தார், ஒ.பி.எஸ். இதனால், அன்றைய தமிழக ஆளுநர் சசிகலாவால் முன் மொழியப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து ’’போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். ஒபிஎஸ்சை முதல்வாராக்கச் சொல்லியுள்ளது டெல்லி மேலிடம்’’ என விலக வைத்தார். ஆட்சி பீடம் ஏறியவுடன் மத்திய அரசுக்கு அடங்க மறுத்து கையெழுத்திடாமல் ஜெலலிதா தவிர்த்த பைல்களையெல்லாம் எடுத்து கையெழுத்து போட்டார் ஒபிஎஸ். மேலும், தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் வட இந்திய இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கவும் கையெழுத்திட்டார். ஒபிஎஸ்சை முதல்வராகத் தொடரவிட்டால் இவர் தமிழ் நாட்டையே ஒட்டுமொத்தமாக பாஜகவிற்கு அடகு வைத்துவிடுவார்…என்பதை உணர்ந்து விழிப்படைந்த சசிகலா, ஒ.பி.எஸிடம் ராஜூனாமா கடிதம் வாங்கினார். உடனே டெல்லி எஜமானர்களின் ஆலோசகரான குருமூர்த்தியிடம் ஆலோசனை கேட்டார் ஒபிஎஸ். அதன்படி தன்னை அடையாளம் காட்டி அதிகாரப்படுத்திய சசிகலா, டி.டி.வி ஆகியோரை எதிர்த்து தர்மயுத்தம் செய்து, சசிகலாவை சிறைக்கனுப்பிய ஆறே மாதத்தில் எடப்பாடியுடன் சமரசம் செய்து கொண்டு துணை முதல்வரானார். அதிமுகவின் கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய அதிகாரப் பதவியில் இருந்த போதும் அவர் எப்போதும் டெல்லியின் தீரா விசுவாசியே தான் என்பதில் தீர்க்கமாக இருந்ததால், கட்சியின் பொதுக் குழுவே ஒ.பிஎஸுக்கு கல்தா கொடுத்தது. அப்போது தன்னை உருவாக்கிய கட்சியின் தலைமை அலுவலத்தையே ஆக்கிரமிக்க அடியாள் படையுடன் வந்த ஒபிஎஸுக்கு தமிழக காவல்துறை ஒத்துழைத்து அதை எதிர்த்த அதிமுக தொண்டர்களை அடித்து விரட்டியது. தன்னையும் சேர்த்து வெறும் நான்கு எம்.எல்.ஏக்களை மட்டுமே கொண்டிருந்த ஒபிஎஸுக்கு சட்ட சபையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவி பறிபோகாமல் பாதுகாப்பு தந்தது திமுக அரசு. அதிமுகவில் தன்னை சேர்க்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்த ஒபிஎஸ் அதற்கு இணக்கமான வகையில் அதிமுக மீதான தன் வழக்குகளை வாபஸ் வாங்க மறுத்தே வந்தார், டெல்லியின் கட்டளைப்படி. எடப்பாடிக்கு செக் வைப்பதற்கான வாய்ப்பாகவே ஒ.பி.எஸ்சை வைத்து அழகுபார்த்த டெல்லி தலைமையின் சூழ்ச்சி தெரிந்த நிலையில் தான் எடப்பாடியும் கட்சிக்குள் ஒபிஎஸை அனுமதிக்கவில்லை. கடைசியாக அமித்ஷாவிடம் தான் பேசிய போது, ’’மீண்டும் ஸ்டாலின் தலைமையிலான திமுகவே ஆட்சிக்கு வரப் போகிறது’’ என அமித்ஷாவே சொல்லியதாகக் கோடிட்டு காட்டியிருந்தார், ஒ.பி.எஸ். அந்த சிக்னலுக்கு பிறகு, டெல்லி மேலிடத்தின் ஆசீர்வாதம் உள்ள இடத்திற்கே தற்போது வந்து அடைக்கலமாகியுள்ளார், ஒபிஎஸ்! பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ்சின் மைத்ரேயனையே உள்வாங்கிக் கொண்ட இன்றைய திமுகவுக்கு பிரேமலதாவைத் தொடர்ந்து மற்றொரு பாஜக விசுவாசி வந்து சேர்ந்துள்ளார். ’இவர்கள் பாசிச பாஜகவை எதிர்க்கும் படைக்கு பலம் சேர்ப்பார்கள். திமுகவின் கொள்கை கூட்டணிக்கு வலு சேர்ப்பார்கள்’ என்பதை நிராகரிக்கிறேன். இது ஒரு பிழைப்புவாத அரசியல். அவ்வளவே! சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
அடிக்கப்போறது ஈரான்! இஸ்ரேலை விட்டு அலறியடித்து ஓடும் அமெரிக்கர்கள்! ஜெருசலேம் போஸ்ட் பகீர்! உலகமே அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை எந்த நேரமும் அடிச்சு நொறுக்கும் எண்டு திக் திக் எண்டு பாத்துக்கொண்டிருக்க, இப்ப ஆட்டம் அப்படியே தலைகீழா மாறிட்டுது! இஸ்ரேல்ல இருக்கிற அமெரிக்கர்களை "இண்டைக்குள்ள எந்த பிளைட் கிடைச்சாலும் பிடிச்சு நாட்டை விட்டுத் தப்பிச்சு ஓடிடுங்கோ" எண்டு அமெரிக்கா அவசர அவசரமாக வெளியேற்றிக்கொண்டிருக்கிறது, உலக அரங்கில ஒரு மாபெரும் புயலைக் கிளப்பியிருக்கு. இந்தத் திடீர் திருப்பத்துக்குப் பின்னால் இருக்கிற மாபெரும் அதிர்ச்சித் தகவல்களை இஸ்ரேலின் பிரபல பத்திரிகையான 'தி ஜெருசலேம் போஸ்ட்' (The Jerusalem Post) இப்ப அம்பலப்படுத்தியிருக்கு. நள்ளிரவில் வந்த அவசர ஈமெயில்! இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக் ஹக்கபீ (Mike Huckabee), இஸ்ரேல்ல இருக்கிற அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நள்ளிரவு 12:04 மணிக்கு ஒரு பகீர் ஈமெயிலை அனுப்பியிருக்கிறார். அந்த ஈமெயிலில அவர் மிகத் தெளிவாக, "உடனடியா இண்டைக்குள்ளேயே (TODAY) எல்லாரும் இஸ்ரேலை விட்டு வெளியேறுங்கோ. எந்த நாட்டுக்குப் பிளைட் கிடைக்குதோ, முதல்ல அந்த பிளைட்டைப் பிடிச்சு இந்த நாட்டை விட்டு வெளியே போறது மட்டும்தான் இப்ப உங்கட முதல் முன்னுரிமையா இருக்கோணும்" எண்டு செம பதற்றமாக் குறிப்பிட்டிருக்கிறார். இது மட்டுமில்லாம, அமெரிக்க அரசாங்கமும் தன்னோட குடிமக்களை இஸ்ரேலுக்குப் பயணம் செய்ய வேண்டாம் எண்டு உத்தியோகபூர்வமா எச்சரிச்சிருக்கு. முந்திக்கொண்டதா ஈரான்? இவ்வளவு நாளா, J.D. வான்ஸ் உட்படப் பல அமெரிக்கத் தலைவர்கள் "நாங்க ஈரானோட நீண்டகாலப் போருக்கு ரெடியில்லை" எண்டு சொல்லிக்கொண்டிருக்க, இப்ப திடீரெண்டு தங்களோட ஆட்களை இஸ்ரேலை விட்டு வெளியேத்துறதப் பாத்தால், ஒரு மாபெரும் சந்தேகம் எழும்புது. அமெரிக்கா ஈரானை அடிக்கிறதை விட்டுட்டு, இப்படி அலறியடிச்சுக்கொண்டு ஓடுறதப் பாத்தால், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் முந்தி, ஈரான் தன்னோட பிரம்மாண்டமான தாக்குதலைத் தொடங்கப் போகுது எண்ட ரகசியத் தகவல் அமெரிக்க உளவுத்துறைக்குக் (Intelligence) கிடைச்சிருக்கலாம் எண்டு அரசியல் நிபுணர்கள் அடிச்சுச் சொல்லுகினம். உலக நாடுகளின் அலறல்! இந்த நடுக்கம் அமெரிக்காவுக்கு மட்டுமில்லை. மத்திய கிழக்கில எந்த நேரமும் மாபெரும் போர் வெடிக்கலாம் எண்ட பயத்தில, உலகத்தில இருக்கிற அத்தனை முக்கிய நாடுகளும் இப்ப தங்கட மக்களை அலறியடிச்சுக்கொண்டு வெளியேற்றத் தொடங்கிட்டினம்: கனடா & சீனா: ஈரானில் இருக்கும் தங்கள் நாட்டுப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன. ஆஸ்திரேலியா: இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள தங்கள் தூதரக அதிகாரிகளின் குடும்பங்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கு. இந்தியா, ஜெர்மனி, பின்லாந்து: உள்ளிட்ட பல நாடுகள், எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம் என 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) விடுத்துள்ளன. அடுத்தது என்ன நடக்கும்? விமானங்கள் கிடைக்கிற வரைக்கும் பிளைட்டைப் பிடிச்சுத் தப்பிச்சுக்கோங்கோ எண்டு அமெரிக்கா சொல்லுறதப் பாத்தால், அடுத்த 24 தொடக்கம் 48 மணித்தியாலங்களுக்குள்ள மத்திய கிழக்கில ஒரு மாபெரும் சம்பவம் நடக்கக் காத்திருக்கு. மூன்றாம் உலகப்போருக்கான கவுண்டவுன் (Countdown) ஆரம்பமாகிவிட்டதா என்ற அச்சம் இப்போது உலக நாடுகள் மத்தியில் பரவியுள்ளது. வாசகர்களின் கருத்துக்கு: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை அடிக்கிறதுக்கு முந்தி, ஈரான் முந்திக்கொண்டு இஸ்ரேலை அடிக்கப் போகுதா? இந்தத் திடீர் வெளியேற்றத்துக்குப் பின்னால் இருக்கும் உண்மையான மர்மம் என்ன? உங்கள் கருத்துக்களைக் கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்! #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - Tube தமிழ் V,S,AR Fonce / 7|56 BREAKING NEWS அடிக்கப்போறது ஈரான் இஸ்ரேலை விட்டுத்தப்பியோடும் அமெரிக்கர்கள் வேட்டைக்காரன் இரையானான்! Tube தமிழ் V,S,AR Fonce / 7|56 BREAKING NEWS அடிக்கப்போறது ஈரான் இஸ்ரேலை விட்டுத்தப்பியோடும் அமெரிக்கர்கள் வேட்டைக்காரன் இரையானான்! - ShareChat
#👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 89.39 8.82 100 Lakhs 10 Crore கோடி 60L80 Incomel Growth Nef Assel 75 Lakhs 7.5 Grore 6.12 a கோடி 6 50 Lakhs 5 Crore 18.02 25 Lakhs 2.5 Crore 1.12 லட்சம் 5.4 கோடி லட்சம் 0 Lakhs 0 Crore 2011 2016 2021 2011 2016 2021 சொத்து வளர்ச்சி வருமான வளர்ச்சி நிகர தி ஸ்ரீநிவாசன் வா தமிழக அணி தலைவி மகளிர் பாஜக பாஜக தேசிய செயலாளர் துணை கோவை தெற்கு சட்டமன்ற வேட்பாளர் பாஜக ஒரு MLA இப்படியும் சொத்து சேர்க்கலாமா Affidavit Analysis Arappor இதெல்லாம் நீங்க கொடுத்த கணக்கு 89.39 8.82 100 Lakhs 10 Crore கோடி 60L80 Incomel Growth Nef Assel 75 Lakhs 7.5 Grore 6.12 a கோடி 6 50 Lakhs 5 Crore 18.02 25 Lakhs 2.5 Crore 1.12 லட்சம் 5.4 கோடி லட்சம் 0 Lakhs 0 Crore 2011 2016 2021 2011 2016 2021 சொத்து வளர்ச்சி வருமான வளர்ச்சி நிகர தி ஸ்ரீநிவாசன் வா தமிழக அணி தலைவி மகளிர் பாஜக பாஜக தேசிய செயலாளர் துணை கோவை தெற்கு சட்டமன்ற வேட்பாளர் பாஜக ஒரு MLA இப்படியும் சொத்து சேர்க்கலாமா Affidavit Analysis Arappor இதெல்லாம் நீங்க கொடுத்த கணக்கு - ShareChat
இதோ.... ஒரு காலத்தில் டெல்லி, பஞ்சாப் என இரு மாநிலங்களிலும் ஆட்சி செலுத்திய கெஜ்ரிவால் இன்று கண்ணீர் வடிக்கிறார்! ஜீ... பிம்பத்தை உருவாக்குவதில் தொடக்க காலத்தில் உழைத்தவர்களில் இவரும் ஒருவர்... ஜீ-யையே ஓவர்டேக் செய்துவிடுவாரெனப் பார்க்கப்பட்ட நேரத்தில், டெல்லி முதல்வரான அவர் மீதும், டெல்லி துணை முதல்வர் மீதும் மதுபானக்கொள்கை முறைகேடு என்ற வழக்கை ஜோடித்தார்கள் ஜீயின் அடியாட்களான சிபிஐயும், அமலாக்கத்துறையும்! துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, 530 நாட்களாக சிறையிலடைக்கப்பட்டார்... முதல்வரான கெஜ்ரிவாலும் 150 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார்... அவர் மீதும், அவரது ஆட்சி மீதுமான மிஸ்டர் க்ளீன் இமேஜ் சிதைக்கப்பட்டதில், அடுத்த தேர்தலில் டெல்லியை பறிகொடுத்தார் கெஜ்ரிவால்! இதோ இன்று, மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் இவரை கைது செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று இவரையும், இவரோடு கைது செய்யப்பட்ட அனைவரையும் டெல்லி நீதிமன்றம் விடுவித்திருக்கிறது! அதேபோல், அடியாட்கள் சிபிஐயையும், அமலாக்கத்துறையையும் தலையிலேயே குட்டு வைத்துள்ளது! அத்தருணத்தில் தான் கண்ணீர் வடித்தார் கெஜ்ரிவால்! இன்றைய சூழலில் கெஜ்ரிவாலின் அதிரடி அரசியலே முடங்கிப்போயிருக்கிறது! இச்சூழலில், தனக்கு துணைநின்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். இப்போது புரிகிறதா ஸ்டாலின் எந்தளவுக்கு டெல்லிக்கு எதிராக வலுவாக செயல்படுகிறாரென்று? திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற டெல்லி போட்ட ஒவ்வொரு திட்டத்தையும் நொறுக்குகிறார் ஸ்டாலின்! அவர்கள் வீசும் ஒவ்வொரு பாலிலும் சிக்ஸர் அடிக்கிறார்! விஜய் மூலமாக காங்கிரஸை கழட்டிவிடச் செய்ய டெல்லி முயன்றது... ஸ்டாலினும், விஜயை நம்ப வேண்டாம்... அதெல்லாம் சும்மாக்காச்சி உருவாக்கப்பட்ட கட்சியென்றும், நம் கூட்டணி வலுவென்றும் சொல்லிப் புரியவைக்கப் பார்த்தார். புரிந்துகொள்ளவில்லை... மகளிர் உரிமைத்தொகை 5000 வழங்கினார்... தேமுததிகவை கூட்டணியில் சேர்த்தார்... இதோ இப்போது ஓ.பி.எஸ்ஸையே வளைத்துள்ளார். அதேபோல், காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டையும் ஒதுக்கியுள்ளார். பக்குவப்பட்ட தலைவரின் பின்னால் பலரும் அணிவகுக்கிறார்கள்! இதைக்கண்டு பாஜக. அதிமுக, தவெக என அனைத்துக் கட்சிகளும் மிரண்டுபோயிருக்கின்றன! இப்போது காங்கிரஸிலுள்ள பல தலைவர்களும் தங்களது தவறை உணர்ந்து, திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பேசத்தொடங்கியுள்ளனர்! சத்தமில்லாமல் சாதித்துவருகிறார் மு.க.ஸ்டாலின்! அடுத்தடுத்து அதிர்ச்சியை அளித்துவருகிறார்! ஆம், தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்! <3 - வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
ஈரானின் சபஹார் துறைமுகத்தை வாங்கிட்டோம். பாகிஸ்தானுக்கு மரண அடின்னு கூவிய மோ(டுமுட்)டி சங்கீ கூட்டம். ஈரான் வெளியுறவு அமைச்சர் இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி இந்த விவகாரம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டு ஈரானின் சபஹார் துறைமுகத் திட்டத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது, தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அப்பாஸ் அராச்சி தெரிவித்தார். இந்த துறைமுகம் இந்தியாவுக்கு மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடனான இணைப்பை மாற்றியமைக்கக்கூடிய "தங்க வாசல்" என்றும் அவர் குறிப்பிட்டார். தங்க வாசல் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இது தொடர்பாகப் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். சபஹார் துறைமுகத்திற்கு பட்ஜெட் ஒதுக்காதது குறித்துப் பேசிய அவர், "இது ஏமாற்றம் தான். ஈரானுக்கு மட்டுமில்லை.. இந்தியாவுக்கும் கூட இது ஏமாற்றத்தையே தரும் என்று நான் நினைக்கிறேன். பிரதமர் மோடி ஒருமுறை முன்பு குறிப்பிட்டது போல், சபஹார் துறைமுகம் என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியை மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஐரோப்பாவுடனும் இணைக்கும் ஒரு முக்கியமான தங்க வாசல். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம். இது முழுமையாக மேம்படுத்தப்பட்டால் ஈரானின் வழியாக மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஐரோப்பா நாடுகள் இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்கும். அந்த நாடுகளை இந்தியாவுடன் இணைப்பதில் இது மிக முக்கிய பங்காற்றும். இதுவே சிறந்த போக்குவரத்து வழித்தடமாக அமையும் என நான் நினைக்கிறேன். ஒரு நாள் இந்த துறைமுகம் முழுமையாக மேம்படுத்தப்படுவதை நாம் காணலாம் என நம்புகிறேன்" என்றார். இந்தியாவுக்கு நஷ்டம் ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சபஹார் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வந்தது. இந்தத் துறைமுகத்தால் பாகிஸ்தானைத் தொட தேவையில்லாமல் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கு நேரடி இந்தியாவால் வர்த்தகம் செய்ய முடியும். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து வழித்தடத்தை இது உருவாக்கும். இது இந்தியாவின் பிராந்திய இணைப்பை மேம்படுத்துகிறது. மேலும், இந்தத் துறைமுகம் நிலப்பரப்பில் சூழப்பட்ட மத்திய ஆசியச் சந்தைகளுக்கு வர்த்தகத்தை அதிகரிக்கிறது. பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் சீனாவின் செல்வாக்குக்கு அதிகரித்து வரும் சூழலில், அதற்குப் பதிலடியாக இந்தியாவுக்கு சபஹார் துறைமுகம் இருந்தது. இந்தத் திட்டம் பிராந்தியத்தில் இந்தியாவின் புவிசார் அரசியல் இருப்பை வலுப்படுத்துகிறது. சபஹார் திட்டம் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்த, இந்தியா 2024இல் ஒப்பந்தம் போட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் சபஹார் துறைமுக மேம்பாட்டிற்குக் கணிசமான நிதி ஒதுக்கப்படும். இருப்பினும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இப்போது நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாதது இதுவே முதல்முறை. கடந்த நிதியாண்டுகளில், இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் ஒதுக்கி வந்தது.! பொருளாதாரத் தடை கடந்த செப்டம்பரில், அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இருப்பினும், சபஹார் திட்டத்தில் இந்தியா தொடர்ந்து ஈடுபடுவதற்கு ஆறு மாதக் கால விலக்கை அமெரிக்கா வழங்கியிருந்தது. அந்த விலக்கு வரும் ஏப்ரல் 26ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு மேல் இந்தியா மேம்பாடு நடவடிக்கை எடுத்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரலாம். இதன் காரணமாகவே இந்தியாவும் நிதி ஒதுக்கீட்டை நிறுத்தியுள்ளது. முன்னதாக சபஹார் தொடர்பான விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதற்கு விலக்கு பெறும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராந்தீர் ஜெய்ச்வால் தெரிவித்தார். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 8 அமெரிக்க "தங்க வாசல் . பிரஷரால் இந்தியாவுக்கு பெரிய நஷ்டம் ஈரானிடம் இருந்து வந்த மேஜர் தகவல் Oneindial 11.39 am 26 Feb 2026 8 அமெரிக்க "தங்க வாசல் . பிரஷரால் இந்தியாவுக்கு பெரிய நஷ்டம் ஈரானிடம் இருந்து வந்த மேஜர் தகவல் Oneindial 11.39 am 26 Feb 2026 - ShareChat
56 இஞ்சி டான்ஸ் ஆட இஸ்ரேல் சென்றாரா? அண்மையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்களுக்கு (சோலார் செல்கள் மற்றும் பேனல்கள்) 126 சதவீதம் வரை countervailing duties (அரசு மானிய எதிர்ப்பு வரி) விதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சகத்தின் (U.S. Department of Commerce) சமீபத்திய அறிவிப்பாகும். இந்த வரி, இந்திய அரசின் மானியங்கள் காரணமாக இந்திய உற்பத்தியாளர்கள் அமெரிக்க சந்தையில் நியாயமற்ற போட்டியை ஏற்படுத்துவதாகக் கூறி விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பொருட்களுக்கு 86 முதல் 143 சதவீதம் வரையிலும், லாவோஸிலிருந்து 81 சதவீதம் வரையிலும் ஆரம்பகட்ட வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க உள்நாட்டு சோலார் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2025) இந்தியா, இந்தோனேஷியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்கா சுமார் 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சோலார் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இது அமெரிக்காவின் மொத்த சோலார் இறக்குமதியில் பெரும்பகுதியை உள்ளடக்கியது. குறிப்பாக இந்தியாவிலிருந்து 2025-இல் சுமார் 792.6 மில்லியன் டாலர் மதிப்பிலான சோலார் பேனல்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இது 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒன்பது மடங்கு அதிகரிப்பு ஆகும். இந்திய சோலார் தொழில் வேகமாக வளர்ந்து, அமெரிக்க சந்தையில் கணிசமான பங்கைப் பெற்றிருந்த நிலையில், இந்த உயர் வரி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கு முன்பு, டிரம்ப் அரசு இந்திய பொருட்களுக்கு பல்வேறு வரிகளை அறிவித்து வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 50 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. பின்னர், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அது 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. சில சமயங்களில் 10 சதவீதமாகவும் நடைமுறையில் இருந்தது. ஆனால், சமீபத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் சில போட்டி வரிகளை ரத்து செய்த பிறகு, டிரம்ப் புதிய வரி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்த 126 சதவீத வரி, இந்திய சோலார் உற்பத்தியாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அமெரிக்க வாடிக்கையாளர்கள் இனி இந்திய பொருட்களை விலை உயர்வால் தவிர்க்கலாம். அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்காவிட்டால், மற்ற குறைந்த வரி நாடுகளை நோக்கி திரும்பலாம். இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் ஜவுளி, தோல், உணவு ஏற்றுமதி தொழில்களைப் போலவே, சோலார் துறையும் கடுமையாக பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளும் ஆபத்தில் உள்ளன. இந்த நடவடிக்கை உலகளாவிய பசுமை எரிசக்தி சங்கிலியை பாதிக்கும் வகையில் அமையலாம். இந்திய தரப்பில் இருந்து பதிலடி வரிகள் அல்லது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முயற்சிகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இறக்குமதி வரிகளை தீவிரமாக்கி வருகிறார். அண்மையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்களுக்கு (சோலார் செல்கள் மற்றும் பேனல்கள்) 126 சதவீதம் வரை countervailing duties (அரசு மானிய எதிர்ப்பு வரி) விதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சகத்தின் (U.S. Department of Commerce) சமீபத்திய அறிவிப்பாகும். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 6 மீண்டும் ஆரம்பித்த டிரம்ப் .!! இந்திய பொருளுக்கு 126% வரியாம்!! ஏற்றுமதியாளர்கள் O9ITB..!! Tamilwire 11.39 am 25 Feb 2026 மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அ தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இறக்குமதி வரிகளை தீவிரமாக்கி வருகிறார். 6 மீண்டும் ஆரம்பித்த டிரம்ப் .!! இந்திய பொருளுக்கு 126% வரியாம்!! ஏற்றுமதியாளர்கள் O9ITB..!! Tamilwire 11.39 am 25 Feb 2026 மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அ தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இறக்குமதி வரிகளை தீவிரமாக்கி வருகிறார். - ShareChat
சரண்டர் சவக்குழி நரேந்திரா! இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்ய பொருளாதாரத்திற்கு வலு சேர்ப்பதாகவும் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதி அளிக்கிறது என்றும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக இந்தியாவை சாடி வந்தது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் இறக்குமதி வரி என மொத்தம் 50 சதவீத வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இது இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கான ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என தொடர்ச்சியாக அமெரிக்க அரசு கூறி வந்தது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்து கொண்டோம் என வெளியிடவில்லை. ஆனால் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களும் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் படிப்படியாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து கொண்டன. இந்த சூழலில் தான் அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா மீது திடீரென ராணுவ நடவடிக்கை எடுத்தது. அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்தது. இதனை அடுத்து வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் தங்களுக்கு சொந்தமானவை என அறிவித்த டிரம்ப் இனி இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொண்டு வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என அறிவித்தார். அதே வேளையில் அமெரிக்க நிறுவனங்களின் மேற்பார்வையில் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான உரிமங்களையும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கியது. அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து வெனிசுலாவிலிருந்து தலா 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயுடன் கூடிய மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. ரிலையன்ஸ், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்பிசிஎல் மீட்டல் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் தற்போது மூன்று சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இவை தலா 20 லட்சம் பேரல் கச்சா எண்ணையை ஏற்றிக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. போக்குவரத்து செலவுகளை குறைக்கவும் விரைவாக எண்ணெய் வந்து இந்தியாவை சேர்வதையும் உறுதிப்படுத்தவும் இருப்பதிலேயே பெரிய சரக்கு கப்பல்கள் மூலம் எண்ணெய் கொண்டு வரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டு வரை இந்தியா வெனிசுலாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கியது. வெனிசுலாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருந்தது. ஆனால் அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா மீது பொருளாதார தடைகளை விதித்ததால் இந்தியா வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டது. அதே வேளையில் தான் ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கியதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் சென்றன. Devika Manivannan Goodreturns source: goodreturns.in #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - நினைத்ததை சாதித்த டிரம்ப்!! ரஷ்யாவுக்கு குட்பை சொல்லி வெனிசுலாவுக்கு வணக்கம் வைத்த இந்தியா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!! ரஷ்யாவுக்கு குட்பை சொல்லி வெனிசுலாவுக்கு வணக்கம் வைத்த இந்தியா!! - ShareChat
பாலஸ்தீன் குஜராத் கொலையாளிகளும், ICC யினால் தேடப்படும் குற்றவாளியுடன் ஜனநாயக நாட்டு பிரதமரின் நெருக்கமும். ஈரான், எந்த நேரத்திலும் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்ற பதட்டமான சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு வந்திறங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பெஞ்சமின் நெத்தன்யாகு ஆரத்தழுவி வரவேற்றார். விரோதிக்கு விரோதி நண்பன் என்ற அடிப்படையில் இருவரும் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள். இனப்படுகொலையாளி என்ற அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை ஜனநாயக நாடொன்றின் பிரதமர் கட்டிப்பிடித்து நட்பை பரிமாறிக்கொண்டார். காசாவில் உள்ள அப்பாவிக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான உயிர்களையும், காசாவில் உள்ள வைத்தியசாலைகளுக்கு குண்டு போட்டு நோயாளிகளை கொலை செய்த இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொலையாளியுடன், மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் நட்பு பாராட்டியுள்ளார். இதனை இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு என்று கடந்துசெல்ல முடியாது. ஏனெனில் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வர்த்தகம் சுமார் 3.7 பில்லியன் டொலர் மாத்திரமே. இது இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த வர்த்தகமானது சிறு துளியாகும். குறிப்பாக சவூதி அரேபியா, கத்தார், எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடனான இந்திய வர்த்தகமானது 155 பில்லியன் டொலர். அதேநேரம் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஈரானுடனான வர்த்தகம் 2.5 பில்லியன் டொலர் ஆகும். இங்கே ஏனைய இஸ்லாமிய நாடுகளுடனான வர்த்தகம் பற்றி குறிப்பிடவில்லை. நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது 2002 குஜராத் கலவரத்தில் இரண்டாயிரத்துக்கு அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட அல்லது தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் பல கோடிகளாகும். இன்றுவரைக்கும் அடக்குமுறைகள் அவ்வப்போது நடைபெறுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மூலம் இனவாத அரசியல் கொள்கையினாலேயே நரேந்திர மோடி தலமையிலான BJP கட்சி இந்தியாவை ஆட்சி செய்து வருகின்றது. பல உலக தலைவர்கள் நெத்தன்யாகுவுடன் கைகுலுக்க தயங்குகின்ற நிலையில், இந்திய பிரதமரின் மிக நெருக்கமான நட்பானது இந்தியாவில் வாழ்கின்ற இருபது கோடி முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எதிரானது மாத்திரமல்ல, இந்தியாவை நேசிக்கின்ற உலக முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும் எதிரானதாகும். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - முகம்மத் இகபால் 10' முகம்மத் இகபால் 10' - ShareChat
வெள்ளைக்காரனுக்கு பொறந்தவுங்க சொல்லுறாங்க நாம என்ன செய்ய முடியும்...🤦‍♂️🤦‍♂️ இந்து என்ற மதத்தை வெள்ளைக்காரன் உருவாக்கி உங்களை எல்லாம் காப்பாற்றி விட்டான் இல்லை என்றால் உங்களை போன்ற ஆரிய கூட்டத்தை தமிழன் எப்போதே துரத்தி இருப்பான் ...🤷‍♂️ இங்கே நாங்கள் 4500 ஆண்டுகளாக வாழ்கிறோம் என்கிற வரலாற்று ஆதாரங்கள் கூட உண்டு கீழடி முதல் பொருநை நாகரீகங்கள் உண்டு எங்களுக்கு அப்படி என்ன இருக்கிறது உங்கள் ஆரியர்களுக்கு...🤷‍♂️ இங்கே சமணர்களை கழுவேற்றியவர்கள் யார் எதனால் என்பது எல்லாம் தமிழர்கள் அறிவார்கள் ஒன்னு செய்யுங்கள் வெள்ளைக்காரன் உருவாக்கிய மாநிலம் வேண்டாம் பேசாம உபி காசி க்கு போயிடுங்க சங்கீ சார்...😏😏 #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - அரசியல் POST SUN NEWS [ ~ தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் 888 உருவாக்கப்பட்டது எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. தோன்றியபோது மூன்றில் இரண்டு மதம் &|0600 பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர் இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர் மும்பையில் நடைபெற்ற ஹெட்கேவர் பற்றியநூல் வெளியீட்டு விழாவில் மகாராஷ்டிரா கவர்னர் சிபிராதாகிருஷ்ணன் பேச்சு. 22 MAR 2025 (( SUNNEWSIAMIL SUNNEWS sunnewslive in அரசியல் POST SUN NEWS [ ~ தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் 888 உருவாக்கப்பட்டது எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. தோன்றியபோது மூன்றில் இரண்டு மதம் &|0600 பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர் இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர் மும்பையில் நடைபெற்ற ஹெட்கேவர் பற்றியநூல் வெளியீட்டு விழாவில் மகாராஷ்டிரா கவர்னர் சிபிராதாகிருஷ்ணன் பேச்சு. 22 MAR 2025 (( SUNNEWSIAMIL SUNNEWS sunnewslive in - ShareChat
“போது மான லாபம் கிடைத்தால், மூலதனம் மிகவும் துணிச்ச லானது... 100 சதவீதம் லாபம் கிடைத்தால் அனைத்து மனித சட்டங்களையும் மிதிக்கத் துணியும்; 300 சத வீத லாபம் கிடைத்தால் அது செய்யத் துணியாத குற்றமே இல்லை, அதன் உரிமையாளர் தூக்கிலி டப்படும் அபாயம் இருந்தாலும் அது தயங்காது.” எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படுத்திய கதை மார்க்ஸின் இந்த வாதத்தையே மெய்ப்பிக்கிறது. எப்ஸ்டீன் என்னும் பாலியல் குற்றவாளி அமைப்பு ரீதியான குற்றங்களின் திகிலூட்டும் வரலாறு ஜனவரி 30 அன்று அமெரிக்க நீதித்துறை யினால் எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) வெளியிடப்பட்டதிலிருந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் பெரும் சீற்றம் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற் பட்ட வீடியோ கிளிப்புகள் உள்ளிட்ட இந்தத் திடுக்கி டும் வெளிப்பாடுகள், சுய-பாணி நிதி ஆலோசகர் மற்றும் அதிகாரத் தரகர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளால் கட்ட மைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளன. இது அவரது அச்சுறுத்தல், அந்நியச் செலாவணி மற்றும் செல்வாக்கு மோசடி வலையமைப்பை முழுமையாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. வலையமைப்பும் தொடக்கமும் குற்றச்சாட்டுகளில், ஏழை மக்கள் வாழும் பகுதிகள், அனாதை இல்லங்கள் மற்றும் அகதிகள் முகாம்களில் இருந்து ஆதரவற்ற பதின்பருவ இளம் பெண்களைக் கடத்திச் சென்று கட்டாயப் பாலியல் சுரண்டலில் ஈடு படுத்தியிருப்பதும் அடங்கும். இந்த மோசமான விவர ணைகள் எப்ஸ்டீனை மட்டுமே தனிப்பட்ட முறையில் குறிவைத்துச் சொல்லப்படுவது போலத் தோன்றினா லும், நிகழ்வுகளின் காலவரிசை எப்ஸ்டீனின் மனிதாபி மானமற்ற குற்றங்கள் தனிப்பட்ட ஒருவரின் சீரழிவு அல்ல என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இவ்வா றான குற்றங்கள் பல பத்தாண்டுகளாக நடந்து வந்துள் ளன, இது ஒரு அமைப்பு ரீதியான சூழலில் இருந்தே (systemic environment) உருவாகியுள்ளது. 1980 மற்றும் 90-களில், அவர் பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்தி சுரண்டத் தொடங்கிய தாகக் கூறப்படுகிறது. 1996-ஆம் ஆண்டின் ஒரு அறிக்கையின்படி, எப்ஸ்டீன் தனது இளம் சகோதரி களின் புகைப்படங்களைத் திருடிவிட்டு, இது குறித்து வெளியே பேசக் கூடாதென மிரட்டல் விடுத்ததாக ஒரு கலை ஞர் எஃப்பிஐ (FBI) அமைப்பிடம் புகார் அளித்தார். 1998-இல் எப்ஸ்டீன் அமெரிக்க விர்ஜீன் தீவுகளில் உள்ள ‘லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்’ என்ற தனது சொந்தத் தீவை வாங்கினார். இது அவரது பாலியல் கடத்தல் நடவடிக்கைகளுக்கு மையமாக மாறியது. 2000-ஆம் ஆண்டிலேயே, எப்ஸ்டீனிடம் மசாஜ் செய்ப வராக இருந்த ஒருவர், தான் ஒரு பதின்பருவப் பாலியல் அடிமையாக நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். சலுகை ஒப்பந்தமும் சட்டப் போராட்டமும் 2005 மார்ச்சில், பாம் பீச்சில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான புகாரைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. 2006 ஜூலையில், பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்த முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். 2008 ஜூன் மாதம், புளோரிடா நீதிமன்றத்தில் ஒரு மைனரை பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்திய குற்றத்தை எப்ஸ்டீன் ஒப்புக்கொண்டார். அப்போது அமெரிக்க அட்டர்னி அலெக்சாண்டர் அகோஸ்டாவுடன் செய்து கொண்ட ‘சலுகை மிக்க’ (sweetheart) ஒப்பந்தம், எப்ஸ்டீன் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் குற்றச் சாட்டுகளில் இருந்து தப்பி வெறும் 18 மாத சிறைத் தண்டனையுடன் வெளியே வர உதவியது. 2011-இல், விர்ஜீனியா கியூஃப்ரே (முன்னர் விர்ஜீ னியா ராபர்ட்ஸ்) என்பவர் பொதுவெளியில் தோன்றி, தான் கடத்தப்பட்டு இளவரசர் ஆண்ட்ரூவிடம் சேர்க்கப் பட்டதாகக் குற்றம் சாட்டினார். 2018 நவம்பரில் மியாமி ஹெரால்ட் வெளியிட்ட தொடர் கட்டுரைகள் எப்ஸ்டீனின் 2008-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்ன ணியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. 2019 ஜூலை 6 அன்று, சிறுமிகளைப் பாலியல் கடத்தல் செய்ததற்காக எப்ஸ்டீன் மீண்டும் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 10, 2019 அன்று, எப்ஸ்டீன் சிறை அறையில் இறந்து கிடந்தார்; இது சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் நடந்த தற்கொலை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. உயரடுக்கின் தொடர்புகள் எப்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகும் திரை மறைக்கப்படவில்லை. 2021 டிசம்பரில், எப்ஸ்டீனின் நெருங்கிய கூட்டாளியான கிஸ்லைன் மேக்ஸ்வெல் (Ghislaine Maxwell) என்ற பெண், பாலியல் கடத்தல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். நீடித்த சட்ட மோதல்களுக்குப் பிறகு, நீதிமன்றம் எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட உத்தரவிட்டது. இந்தப் பின்ன ணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட வர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் பத்திரி கையாளர்களின் தேடலால் உருவான போராட்டங்க ளின் அலை, அமெரிக்க நாடாளுமன்றத்தை ‘எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தை’ நிறை வேற்றக் கட்டாயப்படுத்தியது. இது கூடுதல் புல னாய்வுப் பதிவுகளை வெளியிடக் கோரியது. இந்தக் கோப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அதிகார உயரடுக்கில் உள்ள முக்கியப் புள்ளிகளை அம்பலப்படுத்தின. இதில் அரசியல்வாதி கள் மட்டுமல்லாது, லாரி சம்மர்ஸ், பீட்டர் மண்டேல்சன் போன்ற கொள்கை வகுப்பாளர்கள், அரச குடும்பத்தி னர் மற்றும் பில் கேட்ஸ், எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான் சன் போன்ற மிகப் பெரும் தொழிலதிபர்களும் அடங்கு வர். டொனால்டு டிரம்ப் பெயரே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது; எப்ஸ்டீன் அவரைத் தனது ‘நெருங்கிய நண்பர்’ என்று விவரிக்கிறார். மேலும், இஸ்ரேலுடனும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் எகுத் பராக் உடனும் எப்ஸ்டீன் ‘பாதுகாப்பு முக்கியத்துவம்’ வாய்ந்த தொடர்புகளைக் கொண்டிருந்தார். அமைப்பும் மூடிமறைப்பும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதிக் குழு நடத்திய பொது விசாரணையில், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி மற்றும் எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல் ஆகியோர் கடுமையாகக் கேள்விக்குள் ளாக்கப்பட்டனர். இந்தக் குற்றச்செயல்களை மறைக்கவும் தாமதப்படுத்தவும் திட்டமிட்ட முயற்சி கள் நடந்தது இப்போது தெளிவாகிறது. ஆதாரங்க ளை வெளியிடும்போது ‘தணிக்கை’ (redaction) என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைத் தேர்ந்தெடுத்து வெளிப்படுத்திவிட்டு, ‘உயர்ந்த மற்றும் சக்திவாய்ந்த’ நபர்களை அமெரிக்க அரசு மூடி மறைக்கிறது. பிரதான ஊடகங்கள் இன்னமும் எப்ஸ்டீ னை மட்டுமே மையப்படுத்துகின்றன; இவ்வளவு பெரிய குற்றங்கள் நடக்கத் துணை நின்ற அமைப்பு ரீதியான பாதுகாப்பை அவை மூடிமறைக்கின்றன. வேட்டையாடும் வர்க்கம் தற்போதைய ‘நவீன தாராளமய’ வாதம் ஒரு வேட்டையாடும் ‘எப்ஸ்டீன் வர்க்கத்தை’ உருவாக்கி யுள்ளது. இது மற்ற மனிதர்களை வெறும் “வீரர்கள் அல்லாத கதாபாத்திரங்களாக” பார்க்கும் ஒரு மனிதாபி மானமற்ற சூழலை நிலைநிறுத்துகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சொந்தமான ஊடகங்கள் இந்தச் சூழலை இயல்பாக்குகின்றன. மோடி அரசாங்கத்தின் தற்போதைய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோர் எப்ஸ்டீனுடன் தொடர்பு கொண்டிருந்தது ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எப்ஸ்டீன் தனது கொடூரக் குற்றங்களை ஒப்புக்கொண்ட ஒரு பத்தாண்டுக்குப் பிறகே நடந்துள்ளன. உண்மையை வெளிக்கொணரவும், இத்தகைய மனித விரோதக் குற்றங்களை ஊக்குவிக்கும் உலகளாவிய அமைப்பு ரீதியான உள்கட்டமைப்பைத் தகர்க்கவும் நாம் தயாராக வேண்டும். மார்க்சியப் பார்வையில் மூலதனம் 150 ஆண்டுகளுக்கு முன்பு ‘மூலதனம்’ (Capital) நூலில் மார்க்ஸ் குறிப்பிட்டது போல: “மூலதனம் தலை முதல் கால் வரை, ஒவ்வொரு துவாரத்திலி ருந்தும் இரத்தம் மற்றும் அழுக்குடன் சொட்டுகிறது.” தொழிற்சங்கத் தலைவர் டி.ஜே. டன்னிங்கின் மேற் கோளைக் காட்டி மார்க்ஸ் விளக்குகிறார்: “போது மான லாபம் கிடைத்தால், மூலதனம் மிகவும் துணிச்ச லானது... 100 சதவீதம் லாபம் கிடைத்தால் அனைத்து மனித சட்டங்களையும் மிதிக்கத் துணியும்; 300 சத வீத லாபம் கிடைத்தால் அது செய்யத் துணியாத குற்றமே இல்லை, அதன் உரிமையாளர் தூக்கிலி டப்படும் அபாயம் இருந்தாலும் அது தயங்காது.” எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படுத்திய கதை மார்க்ஸின் இந்த வாதத்தையே மெய்ப்பிக்கிறது. நன்றி : தீக்கதிர் 24/02/26. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat