Arunachalam
ShareChat
click to see wallet page
@463115585
463115585
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
உலகம் முழுவதையும் பயன்படுத்தி… மதப் பெருமை பேசும் விந்தை! ♥️▪️இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் டீசலை போட்டு, கிறித்தவ நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட காரில் ஏறி, இந்து மத மாநாட்டுக்கு சென்று முழங்குங்கள் — “ஜெய் ஸ்ரீ ராம்!” ♥️▪️ முஸ்லிம் நாடுகளின் எண்ணெய் வைத்து, கிறித்தவ நாடுகள் உருவாக்கிய விமானத்தில் பறந்து, இந்து மதத்தின் மேன்மையை பற்றி உரை நிகழ்த்துங்கள்... ♥️▪️ பௌத்த நாடான ஜப்பான் கண்டுபிடித்த மொபைல் போனை கையில் பிடித்து, கிறித்தவ நாடான அமெரிக்கா உருவாக்கிய சமூக வலைதளத்தில் பதிவு போட்டு, இந்துமதம் தான் உலகில் சிறந்தது என்று விவாதிக்கிறோம்... ♥️▪️ முஸ்லிம் நாடான கத்தார் எரிவாயுவில் சமைத்து, கிறித்தவ நாடான ஜெர்மனி தயாரித்த காரில் பயணம் செய்து, மற்ற மதங்களை விமர்சிக்கிறோம். ♥️▪️ கம்யூனிச அரசியல் கொண்ட சீனா தயாரித்த மைக்கை பிடித்து, அமெரிக்கா உருவாக்கிய இணையத்தில் நேரலை செய்து, மத ஒற்றுமை பற்றியும் பேசுகிறோம். 🔥ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் உலகம் முழுவதும் பல மதங்களும், பல நாடுகளும் உருவாக்கிய விஷயங்களை பயன்படுத்திக் கொண்டு “எங்கள் மதம் மட்டும் பெரியது” என்று சொல்வது தான் விந்தையிலும் விந்தை... இறுதியில் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று தான் — மனிதம் மட்டுமே ஒரே மதம்! ✊ கண்டுபிடிப்பு செய்தவன் மனிதன்... அவன் இவை எல்லாம் செய்தது மதங்களுக்கு அல்ல .... கடவுளுக்கு அல்ல.... மனிதனுக்கு தான்.... #Ganeshraj ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - பெருமை பேசும் விந்தை! மதப் OIL ஜெய்ஸ்ரீராம் (>) மனிதம் மட்டுமே ர மதம்! By - Ganesh Raj Humanity is the only religion! பெருமை பேசும் விந்தை! மதப் OIL ஜெய்ஸ்ரீராம் (>) மனிதம் மட்டுமே ர மதம்! By - Ganesh Raj Humanity is the only religion! - ShareChat
ஈரான் அமெரிக்கா : மொஜ்தபா உரையும் வளைகுடாவின் எதிர்காலமும் நேற்று இரவு மோஜ்தபா காமெனெய் (Mojtaba Khamenei) 12 நிமிடங்கள் ஈரான் மக்களிடம் உரையாற்றினார். ஆனால் அவர் உண்மையில் ஈரான் மக்களிடம் பேசவில்லை. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நேராக வாஷிங்டனை நோக்கியதாக இருந்தது. முதல் ஆறு நிமிடங்களில், அவர் “அமெரிக்க குற்றங்களின் பட்டியலை” வாசித்தார். அவரது தந்தையின் படுகொலை, ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டது, பல தசாப்தங்களாக விதிக்கப்பட்ட தடைகள் (sanctions), இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட ஆதரவு, அரபு நிலங்களில் அமெரிக்க படைகள் இருப்பது, இவை எல்லாம் ஈரானில் வழக்கமான அரசியல் உரையாடலில் இடம்பெறுகியவையே. ஆனால் ஏழாவது நிமிடத்தில் அவரது குரலும் உள்ளடக்கமும் மாறியது. அவர் கடந்த காலத்தைப் பற்றி பேசுவதை நிறுத்தி, எதிர்காலத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். அவர் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த கோரிக்கைகளின் முழு உரை சுவிட்சர்லாந்து மூலம் அமெரிக்க வெளியுறவு துறைக்கு அனுப்பப்பட்டது. அமெரிக்கா மத்திய கிழக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை மட்டுமே சில ஊடகங்கள் தெரிவித்தன ஆனால் அது முழுமையான உரையை பிரதிபலிக்கவில்லை. காமெனெய் பயன்படுத்திய சொற்கள் மற்றும் அவர் கொடுத்த காலக்கெடு பற்றி எந்த ஊடகமும் தெளிவாக செய்திகள் ஏதும் வெளியிடவில்லை. கோரிக்கை 1: அமெரிக்காவின் அனைத்து இராணுவப்படைகளும் ஈராக், சிரியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து 30 நாட்களுக்குள் வெளியேறத் தொடங்க வேண்டும். பின்னர் அல்ல. பேச்சுவார்த்தைக்கு பிறகு அல்ல. இன்றில் இருந்து 30 நாட்களுக்குள். கோரிக்கை 2: 1979 முதல் ஈரானுக்கு விதிக்கப்பட்ட அனைத்து அமெரிக்க தடைகளும் 60 நாட்களுக்குள் நீக்கப்பட வேண்டும். இதில் அனைத்து வங்கி கட்டுப்பாடுகள், எண்ணெய் ஏற்றுமதி தடைகள், தொழில்நுட்ப பரிமாற்றத் தடைகள் அனைத்தும் அடங்கும். கோரிக்கை 3: கடந்த நாற்பது ஆண்டுகளில் ஈரானுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பொருளாதார இழப்புக்கு அமெரிக்கா ஈடு தொகை (reparations) வழங்க வேண்டும். காமெனெய் கூறியபடி “பொருளாதார போர்” காரணமாக ஈரான் 800 பில்லியன் டாலர் வருவாய் இழந்துள்ளது. அவர் கோரிய தொகை 500 பில்லியன் டாலர், இது 10 ஆண்டுகளில் செலுத்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், ஈரான் மூன்று நடவடிக்கைகள் எடுக்கும் என்று காமெனெய் அழுத்தமாக கூறினார். நடவடிக்கை 1: 30 நாள் காலக்கெடு முடிந்தவுடன், ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் உடனடியாக மூடப்படும். நடவடிக்கை 2: ஈரான் “பாதுகாப்பு இராணுவ கூட்டணிகள்” என ரஷ்யா மற்றும் சீனாவுடன் உடன்படிக்கைகளில் ஈடுபடும். இதில் ஈரான் நிலப்பரப்பில் ரஷ்யா மற்றும் சீனாவின் இராணுவ தளங்கள் அமைக்க படலாம். நடவடிக்கை 3: சர்வதேச சட்டத்தின் கீழ் தங்களுக்கு உள்ள உரிமையை பயன்படுத்தி முழுமையான அணு தடுப்பு திறனை (full-spectrum nuclear deterrent) உருவாக்கி பயன்படுத்துவோம் என்றும் கூறினார். அவர் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் என்று சொல்லவில்லை. அவர் அதை பயன்படுத்தத் தயாராக வைத்திருப்போம் என்று கூறினார். இந்த சொற்கள் மிகவும் அழுத்தமாக பாவிக்கப்பட்டன. ஈரான் இதை ஏன் செய்தது? அதற்கான பதில் அதிகார அரசியலில் இருக்கிறது. மோஸ்தபா காமெனெய் தனது தந்தையைப் போல இல்லை. அலி காமெனெய் (Ali Khamenei) பல தசாப்தங்கள் ஈரானுக்குள் உள்ள பல அரசியல் குழுக்களை சமநிலைப்படுத்தி ஆட்சி செய்தார். அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். சமரசம் செய்தார். நீண்டகால அரசியல் விளையாட்டை விளையாடினார். ஆனால் மோஸ்தபாவுக்கு நிலை இல்லை. அவர் இராணுவத்தால் பதவியில் அமர்த்தப்பட்டவர். IRGC (Islamic Revolutionary Guard Corps) அவரை அதிகாரத்தில் கொண்டு வந்துள்ளது. அவர்கள் மோஸ்தபாவிடம் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். மோஸ்தபா மற்றும் IRGC தலைவர்கள் அவர் பதவி ஏற்ற சில மணி நேரங்களுக்குள் ஒரு கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தின் செய்தி தெளிவாக இருந்தது: “நாங்கள் உங்களை உச்ச தலைவராக ஆக்கியுள்ளோம். நாங்கள் விரும்புவதையே நீங்கள் செய்து கொடுக்க வேண்டும்.” அவர்கள் விரும்புவது: மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்க தாக்கத்தை முழுமையாக அகற்றுவது ஈரானின் இராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்ப பொருளாதார வளங்கள் அமெரிக்காவுடன் சமமான நாடாக ஈரான் பேச்சுவார்த்தை நடத்தும் சர்வதேச அங்கீகாரம் வேண்டும் இது 1979 க்கு பிறகு இல்லாத அளவுக்கு அதிகார சமநிலையை மாற்றக்கூடியது. நாற்பது ஆண்டுகளாக அமெரிக்கா ஈரானுக்கு விதிமுறைகளை நிர்ணயித்தது. தடைகள், அழுத்தம், தனிமைப்படுத்தல், இராணுவ அச்சுறுத்தல்கள் என ஈராநை நசுக்கியது, அதிகாரம் இல்லாமல் ஆக்கியது இப்போது அவர்கள் அந்த அதிகாரத்தை பெற்றிட துடிக்கிறார்கள்.. எண்ணெய் விலை இப்பொழுதே $121 இந்த போரை வெல்ல முடியாது என்று கூறும் பென்டகான் ஆவணம் வெளியானது சீனாவும் ரஷ்யாவும் வெளிப்படையாக ஈரானை ஆதரிக்கின்றன உலக பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய ஹார்முஸ் நீரிணை மூடல் மோஸ்தபா காமெனெய் பேச்சுவார்த்தை வேண்டும் என்று தனது உரையில் ஒற்றை வார்த்தை கூறவில்லை. அவர் எதிரிகளை சரணடைவை கோருகிறார். அடுத்த 72 மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளில் பேச்சுவார்த்தை ஏற்றுக்கொண்டால், இது மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்தின் முடிவாக வரலாற்றில் எழுதப்படும். அமெரிக்கா அதை நிராகரித்து போர் தொடர்ந்தால், இது பல ஆண்டுகள் அமெரிக்க வளங்களையும் நம்பகத்தன்மையையும் இழந்து, வெற்றி பெற முடியாத போரின் தொடக்கமாக நினைவில் கொள்ளப்படும். இது ஒரு சாதாரண வெளிநாட்டு கொள்கை சவால் அல்ல. இது உலக அதிகார அமைப்பை மறுசீரமைக்கும் தருணம். ஈரான் உண்மையில் இந்த மிரட்டல்களை செயல்படுத்தும் வாய்ப்பை கணக்கில் கொண்டு தனது நடவடிக்கைகளை கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. உலகம் இனி எந்த திசையில் செல்லும், முழுமையான அமைதி திரும்பிட வேண்டும் என்பதே எனது விருப்பம். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - மொஜ்தபா ரையும் உ வளைகுடாவின் எதிர்காலமும் மொஜ்தபா ரையும் உ வளைகுடாவின் எதிர்காலமும் - ShareChat
அந்த ஆண்ட்டிக்கு 40 வயசு ஆகுது...., அவரே கூப்பிட்டு இருந்தாலும் இந்தப் பெண்மணி ஜோடி போட்டுக்கொண்டு போயிருக்கக் கூடாது..., அந்தப் பெண்மணிக்கு அறிவில்லையா??? அப்படி இப்படி என்று சொல்ல தெரிஞ்ச உங்களுக்கு..., 52 வயசு அங்கிள், மனைவி விவாகரத்து வழக்கு கோட்டில் இருக்கும் போது, திருமண வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கும் போது, இதுபோல நடந்து கொள்ளலமா? என்று கேட்க தோன்றவில்லையே!? 🙄😏 லட்சக்கணக்கான ரசிகர்கள் தன்னை பின் தொடருகிறார்கள் என்று தெரிந்தும் கூச்சநாச்சம் இல்லாமல், வெட்கமில்லாமல் அந்தப் பெண்மணியை கூட அழைத்துக் கொண்டு போறதெல்லாம் தவறு இல்லையா? இந்த ஆன்ட்டி கூட போனது தான் தப்பா???🙄 நல்லா இருக்குங்க உங்கள் நியாயம்!🤷🏻‍♂️🚶‍♂️ #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - TALKIES AKDS ஆகுது விஜய் கூப்ட்டு இருந்தாலும் 40 வயசு விஜய் எவ்ளோ உயரத்துக்கு போய் இருக்காரு, அடுத்து அவர் தான்ங்கிற அளவுக்கு ஒரு பெரிய உயரத்தை அடையும் போது, இந்த பெண் மணிக்கு 40 வயசுக்கு மேல ஆகிடிச்சி இந்த பெண்மணி என்ன பண்ணி வர்லப்பா நீ போயிட்டு வா, இருக்கனும்? இதுனால நான் போயிடும்னு இல்ல சொல்லி உன் இமேஜே கெட்டப் அவங்க வீட்லயே இருந்து இருக்கலாம்னு இருக்கனும் பத்திரிகையாளர் கூட நிறைய பேர் பேசுனாங்க. ஒரு கொடுத்தா சொன்னார் மேட்சிங் புடவையை வாங்கி கூட, அத கட்டிக்கிட்டு வீட்ல இருக்கேன் நீங்க போயிட்டு வாங்கனு இல்ல சொல்லி இருக்கனும்னு சொன்னார் TALKIES AKDS ஆகுது விஜய் கூப்ட்டு இருந்தாலும் 40 வயசு விஜய் எவ்ளோ உயரத்துக்கு போய் இருக்காரு, அடுத்து அவர் தான்ங்கிற அளவுக்கு ஒரு பெரிய உயரத்தை அடையும் போது, இந்த பெண் மணிக்கு 40 வயசுக்கு மேல ஆகிடிச்சி இந்த பெண்மணி என்ன பண்ணி வர்லப்பா நீ போயிட்டு வா, இருக்கனும்? இதுனால நான் போயிடும்னு இல்ல சொல்லி உன் இமேஜே கெட்டப் அவங்க வீட்லயே இருந்து இருக்கலாம்னு இருக்கனும் பத்திரிகையாளர் கூட நிறைய பேர் பேசுனாங்க. ஒரு கொடுத்தா சொன்னார் மேட்சிங் புடவையை வாங்கி கூட, அத கட்டிக்கிட்டு வீட்ல இருக்கேன் நீங்க போயிட்டு வாங்கனு இல்ல சொல்லி இருக்கனும்னு சொன்னார் - ShareChat
11 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறீர்கள் ஒருவரை கூட தகுந்த ஆதாரத்தோடு கைது செய்யவில்லை... #GoBackModi #EpsteinFiles #CylinderPriceHike #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - Polimer DIGITAL தமிழகத்தில் அனைத்து ஊழல் பணமும் ஒரு குடும்பத்தை சென்று சேர்கிறது; திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பணத்திற்காக வேலை தருவதாக கூறி மோசடி; வேலை விற்கப்படும் போது ஏழை இளைஞர்களின் கனவு பாழாகிறது திருச்சியில் NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு 11-03-2026 IPolimer News Polimer DIGITAL தமிழகத்தில் அனைத்து ஊழல் பணமும் ஒரு குடும்பத்தை சென்று சேர்கிறது; திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பணத்திற்காக வேலை தருவதாக கூறி மோசடி; வேலை விற்கப்படும் போது ஏழை இளைஞர்களின் கனவு பாழாகிறது திருச்சியில் NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு 11-03-2026 IPolimer News - ShareChat
போர் என்றால் இருபக்கமும்தான் இழப்பு எனபதை இப்போதைய ஈரான் போர் அத்தனை அமெரிக்கர்ளும்‌ நடுமண்டையில் நச்சுன்னு ஆ. அடிச்சது போல இப்போது புரிந்திருக்கும். இதையொட்டிய ஒரு டாக் ஷோவில் ஒரு வார் எக்ஸ்பர்ட், ஒரு நாளைக்கு 1-2 பில்லியன் டாலர்கள் செலவாகுது. அப்டி பார்த்தால் இதுவரை 12 நாட்கள்.. ஆவரேஜா 1.5னு வச்சிக்கிட்டாக்கூட 18 - 20 பில்லியன் டாலர்கள் குண்டா, ஏவுகணையா முக்கியமா ஏவுகணை தடுப்புகளா, ஏவுகணை பாதுகாப்பு கவசங்களா சாம்பல்களாயிருக்கு. அமெரிக்க அதிபருக்கு ஒரு வாரை ஆரம்ப்பிக்கும் அதிகாரம் கிடையாது. அரசியல் சாசனப்படி காங்கிரஸ்க்கு தான் அந்த அதிகாரம் இருக்கு. காங்கிரஸ்னா அங்கிருக்கும் பார்ளிமென்ட். ஆனா ஒருத்தனுக்கு கூட ஒரு எமெர்ஜென்சி காங்கிரஸ கூட்டி ட்ரம்ப வழிக்கு கொண்டுவர முடில. என்ன எழவு ஜனநாயகமோ... என்ன‌ எழவு காங்கிரஸோ (அவர் இன்னும் கொச்சையாக திட்டினார். அதை போட்டா பிரச்சினைனு எழவுன்னு போட்டிருக்கேன்..‌). அமெரிக்க கதைய ஏன் சொல்றனு கேட்டா... காங்கிரஸ்னு ஒன்னு அங்கயும் ஒன்னும் பண்ணல.. இங்க இருக்கற காங்கிரஸ் கட்சியும் ஒன்னும் பண்ண மாதிரி தெரியல. மன்மோகன் சிங்கை நினைவு படுத்தி ஒற்றை ஆளாக நம் பதிவுகளின் எண்ணிக்கையில் கூட ஒட்டு மொத்த காங்கிரஸ்காரர்களும் போடல. ஒரு வேளை ஒரு அளவுக்கு மேல வீச்சுத்தானு முழங்கி களத்தில நிக்கிறாங்களானு எட்டிப்பாத்தா... 😁 களம் எதற்கா... தலைப்பு: "இந்தியாவின் எரிசக்தி தட்டுப்பாடு - வெறும் தற்செயலா? அல்லது முட்டாள்தனமான ஆட்சியாளர்களாலா?" 🇮🇳⛽🔥 இன்னைக்கு (11 மார்ச் 2026) என்ன நடக்குது? (Current Reality): ஹோட்டல்கள் மூடல்::: பெங்களூரு, மும்பை, கொல்கத்தான்னு எல்லா மெட்ரோ சிட்டிகளிலும் கமர்ஷியல் சிலிண்டர் சப்ளை 75% குறைஞ்சுடுச்சு. இதனால 20%-க்கும் அதிகமான ஹோட்டல்கள் இப்போதே மூடப்பட்டுடுச்சு. ரேஷன் முறை::: நிலைமை மோசமானதால, மத்திய அரசு 'அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை' (Essential Commodities Act) அமல்படுத்தி, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கு. இதனால பிசினஸ் பண்றவங்க நடுரோட்டுல நிக்கிறாங்க. தட்டுப்பாட்டுக்கு காரணம்::: ஈரான் - இஸ்ரேல் போர் காரணமா, இந்தியாவுக்கு 62% எரிவாயு வர்ற அந்த 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) பாதை இப்போ அடைக்கப்பட்டிருக்கு. சீனா vs இந்தியா - ஒரு கசப்பான ஒப்பீடு: சீனா: அவங்க புத்திசாலிங்க. போர் வரும்னு மூணு மாசத்துக்கு முன்னாடியே கணிச்சு, டிசம்பர் 2025-ல இருந்தே இறக்குமதியை அதிகமாக்கி இப்போ 200 நாட்களுக்குத் தேவையான இருப்பை (Strategic Reserves) வச்சிருக்காங்க. இந்தியா: நம்ம கிட்ட இருக்கிறது வெறும் 74 நாட்களுக்கான இருப்பு தான். டிரம்ப்பை குஷிப்படுத்தணும்னு சொல்லி, ரஷ்ய எண்ணெய் வாங்குறதை பாதியில நிறுத்திட்டு இப்போ கையேந்தி நிக்கிறோம். ஆனா அந்த 74 நாட்கள்னு சொன்னதும் பச்சை‌ பொய்னு நிரூபணமாகியிருக்கு. வீடுகளிலும் ஏன் வீதிகளிலேயே கேஸ் பிரச்சினை தலைவிரித்து ஆட ஆரம்பித்திருக்கு. வெளியுறவுக் கொள்கையின் தோல்வி::: கடந்த 12 வருஷத்துல நம்ம வெளியுறவுத் துறை செஞ்ச தப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இஸ்ரேல் பக்கம் போய் நின்னுட்டு, இப்போ BRICS நாடுகள் கிட்ட இருந்தும், மத்திய கிழக்கு நாடுகள் கிட்ட இருந்தும் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு நிக்குது. நம்ம கடற்கரைக்கு பக்கத்துல ஈரானியக் கப்பல் (IRIS Dena) மூழ்கடிக்கப்பட்டப்ப கூட நாம கண்டிக்கல. ஆனா இன்னைக்கு மேற்குலக நாடுகள் நம்மைக் கண்டுக்காம கைவிட்டுட்டாங்க. மன்மோகன் சிங் - அந்த 'சைலண்ட்' சாதனை (The Precedent): 2012-ல இதே மாதிரி ஈரான் மேல தடை வந்தப்போ, மன்மோகன் சிங் அமெரிக்காவுக்கு பயந்து ஒதுங்கிடல. சத்தம் போடாம UCO Bank மூலமா ஒரு வழியை உருவாக்கி, ஈரான் கிட்ட இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கினாரு. அந்த "பொருளாதார மேதை" (Economist PM) விளம்பரத்தை விட நாட்டு மக்களோட சமையல் அடுப்பு எரியணும்ங்கிறதை தான் முக்கியமா நினைச்சாரு. ஆனா இப்போ, விளம்பரத்துக்காக வெளியுறவுக் கொள்கையை சிதைச்சதுல, எரிவாயு தட்டுப்பாடுல இந்தியா தவிக்குது. கஷ்ட காலத்தில்‌ துணைநிற்போம்னு முட்டாள்களுக்கு முட்டுக்கொடுக்காதீங்க. கேள்வி கேட்டு வீதிக்கு வந்தா காங்கிரஸ் எங்கனு மாநிலம் மாநிலமா தேடனும்‌னு சொல்றவங்க வாய அடக்கலாம். அதுக்காவது... வாங்க ப்ளீஸ். #GasCrisis2026 #LPGShortage #ManmohanSinghVsModi #ForeignPolicyFailure #IndiaVsChina #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - HOTELS IN BENGALURU y ಗ್ಯಾಸ್ ಇಲ್ಲದ ಕಾಗಣ . ర్మిసి: ಬಂದ್ CLOSED TEMPORARILY DUE T0 NO LPG GAS SUPPLY Worthview | APOLOGIES FOR INCONVENIENCE. HOTELS IN BENGALURU y ಗ್ಯಾಸ್ ಇಲ್ಲದ ಕಾಗಣ . ర్మిసి: ಬಂದ್ CLOSED TEMPORARILY DUE T0 NO LPG GAS SUPPLY Worthview | APOLOGIES FOR INCONVENIENCE. - ShareChat
ஈரானிய உயர்மட்ட அதிகாரி: டிரம்ப் எங்களுடனும் வாஷிங்டனுடனும் தொடர்பில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறார், ஆனால் அதே நேரத்தில், அவர் அதற்கு நேர்மாறாகக் கூறுகிறார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு குறிப்பிட்ட கால அட்டவணை எதுவும் இல்லை என்று டிரம்ப் அமெரிக்க ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் கூறுகிறார், இது அவர் நமக்கு அனுப்பும் செய்திகளுக்கு முரணானது. இந்த அமெரிக்க முரண்பாடு, டிரம்ப் அனுபவிக்கும் குழப்பம் மற்றும் ஆழமான நெருக்கடியின் நிலையை பிரதிபலிக்கிறது, ஏனெனில் அவர் இந்த புதைகுழியில் இருந்து வெளியேற ஒரு தெளிவான வழி இல்லாமல் ஒரு பெரிய சிக்கலில் இருக்கிறார். தெஹ்ரான்எங்களிடம் வரும் இடைத்தரகர்களுக்கு அமெரிக்கத் தரப்பிலிருந்து எந்த செய்திகளையும் நாங்கள் பெறவில்லை என்றும், அப்படியேஏதனும் செய்திகள் வந்தாலும் பொற்படுத்த மாட்டோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டோம் ஈரான் ஒரு நோக்கத்துடன் உறுதியான மற்றும் அசைக்க முடியாத நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது: பிராந்தியத்தில் இஸ்ரேல் செய்த அனைத்து குற்றங்களுக்கும், உலகில் அது ஏற்படுத்திய குழப்பத்திற்கும் உரிய தண்டனையை அது பெறும் வரை ஈரான் ஓய போவதில்லை என்பதே அந்த முடிவு #Tamilmuslimmedia #IranIsraelUSWar #Israel #NewsUpdate #Trump #Netanyahu #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - a arabicpust m ~Pala.u 105=5 serl 1 Uyealತae 99 ங்கும்ஈரானின்கை لكشب لمعي ماظنلا نأ ىنعي ناريإل 2!2 சமாதானதூதுஅனுப்பும் அமெரிக்கா ஏர்க மறுக் ஈரான் (1 a arabicpust m ~Pala.u 105=5 serl 1 Uyealತae 99 ங்கும்ஈரானின்கை لكشب لمعي ماظنلا نأ ىنعي ناريإل 2!2 சமாதானதூதுஅனுப்பும் அமெரிக்கா ஏர்க மறுக் ஈரான் (1 - ShareChat
அமெரிக்காவால் வெல்ல முடியாத போர் இது! பேராசிரியர் முனைவர் விஜய் பிரசாத் . ========================= “ஈரானுக்கு எதிரான போர் என்பது ஒருபோதும் வெல்ல முடியாத போர். அங்கு வாழும் சுமார் 10 கோடி மக்களில் பெரும்பகுதியினர் தங்கள் குடியரசைத் தற்காத்துக் கொள்ள இறுதிவரை போராடுவார்கள்.அயதுல்லா அலி காமேனியின் படுகொலை ஈரானிய மக்களைச் சோர்வடையச் செய்யாது; மாறாக, அவரை ஒரு தியாகியாக (Martyr) உயர்த்தி, மக்களின் போராட்ட உணர்வை இன்னும் தீவிரப்படுத்தும். …” என்கிறார் இக்கட்டுரையில் விஜய் பிரசாத். உலக ஏகாதிபத்தி யத்தின் மேலாதிக்கப் பசிக்கு எல்லைகளே கிடையாது. தங்கள் காலடியில் பணிய மறுக்கும் நாடுகளின் இறை யாண்மையை நசுக்குவது அமெரிக்காவின் நீண்டகால வாடிக்கையாகிவிட்டது. தற்போது, புதிதாக அமைக்கப்பட்ட ‘அமைதி வாரியம்’ (Board of Peace) என்ற பெயரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஒரு புதிய போரைத் தொடங்கியுள்ளன. 2026 பிப்ரவரி 28 அதிகாலை யில், ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளன.குறிப்பாக, ஹோர்மோஸ் கான் மாகாணத்தின் மினாப் பகுதியில் உள்ள ஒரு சிறுமியர் தொடக்கப் பள்ளி இந்தத் தாக்கு தலுக்கு இரையாகியுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட பிஞ்சு உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன. ஈரான் உயர் தலைவர் காமேனி உட்பட ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் இதுவரை 201 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின் றன. பலிகள் மேலும் தொடர்கின்றன. ஒரு வரலாற்றுப் போர் 2026 பிப்ரவரி 28 அன்று நடந்த இந்தத் தாக்கு தல் ஈரானுக்கு எதிரான ஏதோ ஒரு திடீர் நடவடிக்கை அல்ல.கடந்த பல பத்தாண்டுகளாகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ஒரு தொடர்ச்சியான போரை நடத்தி வருகின்றன. இது சில நேரங்களில் நேரடி ராணுவத் தாக்குதலாக வும் (2025 ஜூன் மாதத் தாக்குதல் போல), பல நேரங்களில் பொருளாதாரத் தடைகள் மூலமான மறைமுகப் போராகவும் (1996 முதல் தொடரும் தடைகள்) இருந்து வருகிறது. அமெரிக்காவிற்கோ அல்லது இஸ்ரேலுக்கோ ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் மீது எவ்வித மதிப்பும் இல்லை. அதன் விதி 2-ஐ இவை தொடர்ந்து மீறி வருகின்றன. ஆனால், ஐநா பாது காப்பு கவுன்சிலில் இவர்களுக்கு எதிராக எந்தக் கண்டனமும் தெரிவிக்கப்படுவதில்லை. கடந்த பல பத்தாண்டுகளாக, ஈரானின் அரசியலைப் பயங்கரவாதமாகவும், அதன் அரசாங்கத்தைச் சர்வாதிகார அமைப்பாகவும் உலக அரங்கில் இவை சித்தரித்து வருகின்றன. ஒரு நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயல்வது சர்வதேச சட்டப்படி குற்றம் என்றாலும், டெஹ்ரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவது ‘சட்டப்பூர்வ மானது’ என்ற மாயையை இவை உலக நாடுகள் மத்தியில் உருவாக்கியுள்ளன. டொனால்டு டிரம்ப்பின் மேலாதிக்க வெறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பிற்கு நீண்ட காலப் போர்களை நடத்தும் ஆர்வம் இல்லை. அவர் எப்போதும் உடனடி வெற்றிகளை யும், உலகச் செய்திகளில் தலைப்புச் செய்திகளாக வரும்படியான அதிரடி நடவடிக்கைகளையுமே விரும்புகிறார். 2026 ஜனவரி 3-இல் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தி யதும், ஜனவரி 30-இல் கியூபாவிற்கு எண்ணெய் விற்பதைத் தடுத்ததும் டிரம்ப்பின் இத்தகைய மனநிலைக்குச் சான்றுகள். ஈரானிலும் இதேபோன்ற ஒரு முடிவை அவர் எதிர்பார்த்தார். ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி அல்லது ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஆகியோரை படுகொலை செய்வதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்க மாக இருந்தது.அதன்படி இந்தத் தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும், டொனால்டு டிரம்ப் எதிர்பார்த்த அந்த உடனடி ‘ஆட்சி மாற்றம்’ நிகழவில்லை. 2025 ஜூன் தாக்குதலில் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அழிக்க முடியாததைப் போலவே, இந்த 2026 பிப்ரவரி தாக்குதலும் ஈரானின் அரசியல் கட்டமைப்பைச் சிதைக்க முடியவில்லை. ‘எதிர்ப்பின் அச்சு’ சிதைப்பும் ராணுவச் சூழ்ச்சிகளும் ஈரானுக்கு எதிரான தற்போதைய ராணுவ நடவடிக்கை 2020 ஜனவரியில் ஜெனரல் காசிம் சுலைமானியின் படுகொலையுடன் தொடங்கியது எனலாம். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைவராக இருந்த அவர், ‘எதிர்ப்பின் அச்சு’ (Axis of Resistance) என்ற ஈரானின் முதல் தற்காப்பு வளையத்தை உருவாக்கியவர். அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஈரானைத் தாக்க முயன்றால், ஹிஸ்புல்லா (லெபனான்) முதல் அன்சர் அல்லா (ஏமன்) வரையிலான நட்பு சக்திகள் பதிலடி கொடுக்கும் என்பதே இதன் அடிப்படை. சுலைமானியின் மரணத்திற்குப் பிறகு, வரிசையாக நடந்த நிகழ்வுகள் இந்த பாதுகாப்பு வளையத்தைச் சிதைத்தன. பாலஸ்தீனத்தில் ஹமாஸை பலவீனப்படுத்தியது, லெபனானில் சையத் ஹசன் நஸ்ரல்லாவை (2024 செப்டம்பர்) படுகொலை செய்தது மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தது எனப் பல ராணுவம் சார் சூழ்ச்சிகள் மூலம் ஈரானைத் தனிமைப்படுத்த ஏகாதிபத்தியம் முயன்றது. இதன் விளைவாகவே, தற்போது ஈரான் மீது இவ்வளவு துணிச்சலாக அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளன. அணுசக்திப் பிரச்சனையா அல்லது ஆட்சி மாற்றமா? ஈரானின் அணுஆயுதத் திட்டம் என்பது ஒரு புனையப்பட்ட கதை என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் 2024-இல் ஒரு ‘சீர்திருத்த’ நோக்கத்துடன் ஆட்சிக்கு வந்தார்.அவர் ஒரு நவதாராளவாத நிதியமைச்சரை (அலி மதானிசாதே) நியமித்து, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) ஆகியவற்றிற்கு இணக்கமாகச் செல்ல முயன்றார். 2026 பிப்ரவரி தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, ஓமன் நாட்டின் மத்தி யஸ்தத்தில் ஒரு அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் நிலையில் இருந்தது. ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் பல கட்டுப்பாடுகளை ஏற்கத் தயாராக இருந்தது. அப்படியிருந்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது: ஈரானின் அணுசக்தித் திட்டம் அவர்களின் உண்மையான கவலை அல்ல; ஈரானின் இறையாண்மையை நசுக்கி, அங்கே தங்களுக்குச் சாதகமான ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதே அவர்களின் இறுதி நோக்கம். ஒரு வெல்ல முடியாத தேசபக்தி ஈரானுக்கு எதிரான போர் என்பது ஒருபோதும் வெல்ல முடியாத போர். அங்கு வாழும் சுமார் 10 கோடி மக்களில் பெரும்பகுதியினர் தங்கள் குடியரசைத் தற்காத்துக் கொள்ள இறுதிவரை போராடுவார்கள்.அயதுல்லா அலி காமேனியின் படுகொலை ஈரானிய மக்களைச் சோர்வடையச் செய்யாது; மாறாக, அவரை ஒரு தியாகியாக (Martyr) உயர்த்தி, மக்களின் போராட்ட உணர்வை இன்னும் தீவிரப்படுத்தும். ஏகாதிபத்திய சக்திகளிடம் ஈரானை வீழ்த்துவதற்கான யதார்த்தமான திட்டம் எதுவும் இல்லை. அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்லலாம், உள்கட்டமைப்புகளைச் சிதைக்கலாம். ஆனால் ஈரானிய மக்களின் தேசபக்தியையும் அவர்களின் சுதந்திர வேட்கை யையும் ஒருபோதும் முறியடிக்க முடியாது. ஏகாதிபத்தியத்தின் இந்தப் பசிக்கு எதிராகக் குரல் கொடுப்பது சர்வதேச சமூகத்தின் கடமையாகும். அணுஆயுதங்கள் குறித்த கவலைகள் வெறும் போலி முகமூடி மட்டுமே என்பதை இந்தத் தாக்கு தல் உலகிற்குத் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. ஈரானின் நிலப்பரப்பு மற்றும் அதன் மக்களின் வீரம், அமெரிக்காவின் ராணுவம் சார் சூழ்ச்சிகளுடன் கூடிய கனவுகளை நிச்சயம் சிதைத்துவிடும். ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க வேட்கைக்கு எதிராக அணிதிரள்வோம். - பீப்பிள்ஸ் டெமாக்கரசி , தமிழில் : எஸ்பிஆர். - நன்றி : தீக்கதிர் . 03/03/26. மீள்பதிவு: 09-03-2026 #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - இறெரிகீகர ஸ்டலேணறைநிறுத்துி போர்வெறிபிடித்த ழைக்கு - 0 ా பககல அமெரிக்காவின் பொருட்களைப்புறக்கணிப்போம்ி ஈரானுக்குதுணைநிற்போமி தமிழ்நாடு மக்கள் அதிகாரம் புதுவை 9597 [8 89 59 இறெரிகீகர ஸ்டலேணறைநிறுத்துி போர்வெறிபிடித்த ழைக்கு - 0 ా பககல அமெரிக்காவின் பொருட்களைப்புறக்கணிப்போம்ி ஈரானுக்குதுணைநிற்போமி தமிழ்நாடு மக்கள் அதிகாரம் புதுவை 9597 [8 89 59 - ShareChat
உண்மையில் இந்த உலகை ஆள்பவர்கள் யார் என்ற கேள்வி வரும் பொழுது எல்லோரும் விரல் நீட்டுவது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் நோக்கியே… “உலகத்தை யூதர்கள் ஆள்கிறார்கள்” என்று சொல்லுவது ஒரு தவறான கருத்து. யூதர்கள் என்பது ஒரு மதத்தையும் இன அடையாளத்தையும் கொண்ட மக்கள். உண்மையில் உலகை ஆள்பவர்கள் சியோனிஸ்ட்கள்… இவர்களை “இலுமினாட்டிகள்” என்று வேண்டுமானாலும் கூறிக் கொள்ளலாம். ஏனெனில் அதில் இருப்பவன் தான் இதிலும் இருப்பான் , இதில் இருப்பவன் தான் அதிலும் இருப்பான். எல்லா யூதர்களும் சியோனிஸ்ட்கள் அல்ல, அதேபோல் எல்லா சியோனிஸ்ட்களும் யூதர்கள் அல்ல. சியோனிசத்தை ஆதரிப்பவர்களில் கிறிஸ்தவர்கள், அரசியல் சக்திகள் மற்றும் பிற மதங்களை சேர்ந்தவர்களும் கூட உள்ளனர்.” சியோனிசம் என்பது ஒரு அரசியல் சித்தாந்தம். இவர்களே உலகத்தை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்துடன் பலவழிகளில் அதை நிறைவேற்றி வெற்றி கண்டு கொண்டிருக்கின்றனர். சியோனிச இயக்கம் ஒரு சிறிய அரசியல் கருத்தியலாகத் தொடங்கி, இன்று உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்துள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது ? இந்த சியோனிசம் என்ற கொடூர சிந்தனைக்கு அடித்தளமாக இருந்தது யூதர் ஒருவரின் நெடு நாள் கனவு ஒன்றே.. சியோனிசத்தின் தந்தை என அழைக்கப்படும் Theodor Herzl 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், யூதர்களுக்கென ஒரு தனி நாடு வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். Herzl தனது காலத்திலேயே ஐரோப்பிய மன்னர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து தனது திட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். 1897-இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, பணக்கார யூதக் குடும்பங்களின் நிதி உதவியுடன் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. பிரித்தானிய அரசியலில் சியோனிசத்தின் தாக்கம் வரலாற்று ரீதியானது மற்றும் தற்காலத்திலும் மிக வலுவானது. முதலாம் உலகப் போரின்போது, பிரித்தானிய அரசு யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் இடம் தருவதாக உறுதியளித்து Balfour Declaration 1917 பிரகடனம் ஒன்றை உருவாக்கியது. அது வெறும் குடியேற்றமாக இல்லாமல், ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே அவரது நோக்கம். இதற்கு முக்கிய காரணம், பிரித்தானியாவின் போர்க்கால நிதித் தேவைகளுக்கு செல்வாக்கு மிக்க யூத குடும்பங்கள் (உதாரணமாக, Rothschild குடும்பம்) உதவியதே ஆகும். அதன்படியே இஸ்ரேலும் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட சில நிமிங்களுக்குள் இஸ்ரேலை நாடாக அங்கீகரித்தது அமெரிக்கா. இதிலிருந்து அமெரிக்காவை சியோனிஸ்ட் எவ்வளவு எளிதாக கட்டுப்படுத்துகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பிரித்தானியாவில் ஆட்சி அதிகாரத்தையே நிர்ணயிக்கும் சக்திகளாக இருந்தனர். Conservative Friends of Israel (CFI) என்ற பிரித்தானியாவின் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் 80%-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இது பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் தடுக்கிறது. அண்மைய ஆண்டுகளில், இஸ்ரேலை விமர்சிக்கும் தலைவர்கள் (உதாரணமாக: Jeramy Corbyn ) 'யூத எதிர்ப்பு' (Anti-semitism) என்ற முத்திரை குத்தப்பட்டு அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். இது அந்த நாட்டின் உள்நாட்டு அரசியலில் சியோனிச அமைப்புகளின் பிடியைக் காட்டுகிறது. அமெரிக்காவில் சியோனிச அமைப்பான AIPAC (he American Israel Public Affairs Committee) ஒரு "நிழல் அரசாங்கம்" போலவே செயல்படுகிறது. AIPAC என்பது உலகின் சக்திவாய்ந்த லாபி அமைப்பு. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் எவரும் இந்த அமைப்பின் ஆதரவின்றி வெற்றி பெறுவது கடினம். அமெரிக்க அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை சியோனிச ஆதரவு பெரும் முதலாளிகள் வழங்குகின்றனர். இதனால், அமெரிக்கா தனது சொந்த நாட்டு மக்களின் நலனை விட இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் (ஆண்டுக்கு $3.8 பில்லியன் ராணுவ உதவி) அளிக்கிறது. இன்று பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் பெரும்பாலும் சியோனிச நலன்களைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. இஸ்ரேலில் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைகளில் இருந்து பாதுகாக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஐநா சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களை அமெரிக்கா தொடர்ந்து தடுத்து வருகிறது. உலகின் முன்னணி ஊடகங்களான CNN, New York Times போன்றவற்றின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அல்லது அவற்றின் உரிமையாளர்கள் சியோனிச சார்புடையவர்களாக இருப்பதால், பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவான செய்திகளே அதிகம் பரப்பப்படுகின்றன. உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளிகளான வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் சியோனிச ஆதரவாளர்களின் முதலீடு மிக அதிகம். அமெரிக்காவின் Federal Reserve மற்றும் உலக வங்கி (World Bank) ஆகியவற்றின் கொள்கை முடிவுகளில் செல்வாக்கு மிக்க யூத நிதி வல்லுநர்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், facebook, TikTok போன்ற நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகள் மற்றும் முதலீடுகள் மூலம் சமூக வலைதளங்களில் சியோனிசத்திற்கு எதிரான கருத்துக்கள் முடக்கப்படுகின்றன (Shadow Banning). பல தசாப்தங்களாக தமது யூ*த வங்கி முறைமைக்குட்படாமல் தனித்தியங்கும் ஈரானை ஒரு "உலகளாவிய அச்சுறுத்தல்" என்று சித்தரித்து வருகின்றது AIPAC. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் நிதி மற்றும் அரசியல் ஆதரவு மூலம், ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், ராணுவ நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்க அரசை AIPAC நிர்பந்திக்கின்றன. இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களின்படி, இஸ்ரேல் தாக்கப்பட்டால் அமெரிக்கா உதவ வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஈரான் மீதான மோதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தும்போது, அமெரிக்கா தற்காப்பு என்ற பெயரில் உள்ளே நுழைய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேற்கத்திய ஊடகங்கள் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை உலக அமைதிக்கு எதிரானது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்வதன் மூலம், அமெரிக்கப் பொதுமக்களிடையே ஈரான் மீதான ஒரு அச்சத்தை (Iranophobia) உருவாக்கியுள்ளன. ஈரானை வலுவிழக்கச் செய்வது சியோனிச தொலைநோக்குப் பார்வையில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு ராணுவ ரீதியாக சவால் விடக்கூடிய ஒரே நாடு ஈரான் மட்டுமே. ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார வலிமையைச் சிதைப்பதன் மூலம், அந்தப் பிராந்தியம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இஸ்ரேல் விரும்புகிறது. இந்த மோதலில் அமெரிக்கா தனது வீரர்களையும் பணத்தையும் இழக்க நேரிட்டாலும், சில காரணங்களுக்காக அது தொடர்ந்து இஸ்ரேலை ஆதரிக்கிறது. போர் மேகங்கள் சூழும்போது அமெரிக்காவின் Military Industrial Complex ற்கு(Lockheed Martin, Raytheon) பில்லியன் கணக்கான டாலர்கள் லாபம் கிடைக்கிறது. இதில் பெரும் முதலீட்டலளரான Larry fink என்ற யூதரின் black Rock என்ற நிறுவனத்திடம் போய் சேருகிறது. சியோனிச இயக்கத்தின் எதிர்கால நகர்வு என்பது வெறும் நிலப்பரப்பு சார்ந்தது மட்டுமல்ல; அது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு தனிமனிதனின் பொருளாதாரத்தையும் ஒரு மையப்புள்ளியில் இருந்து கட்டுப்படுத்துவதாகும். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாட்டு நாணயங்களை (Currencies) ஒழித்துவிட்டு, டிஜிட்டல் முறையில் இயங்கும் ஒரு பொதுவான நிதி அமைப்பைக் கொண்டு வருவது இவர்களின் முதன்மைத் திட்டமாகக் கருதப்படுகிறது. உலகின் அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும் ஒரு மைய வங்கியின் கீழ் வரும்போது, எந்த நாடு யாருக்கு நிதியுதவி அளிக்க வேண்டும், யாருக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதை மிக எளிதாகத் தீர்மானிக்க முடியும். வட்டி மற்றும் கடன் மூலமாக நாடுகளைத் தன் வசப்படுத்துவது இவர்களின் உத்தி( Debt Trap). ஒரு நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும்போது, அந்த நாட்டை மீட்பதாகக் கூறி அந்த நாட்டின் இறையாண்மையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள். ரொக்கப் பணத்தை (Cash) ஒழித்துவிட்டு, முழுமையாக டிஜிட்டல் நாணயங்களை (CBDC) அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு தனிமனிதனையும் கண்காணிக்க பெரும் திட்டம் ஒன்றை விரைவில் அறிமுகமாக்க உள்ளனர். சியோனிசக் கொள்கைகளுக்கு அல்லது அவர்களின் உலகளாவிய திட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களின் வங்கிச் கணக்குகளை ஒரே சொடுக்கில் (One Click) முடக்கி, அவர்களைப் பொருளாதார ரீதியாகச் செயலற்றவர்களாக்க முடியும். உங்கள் பணம் எங்கு செலவிடப்படுகிறது, நீங்கள் யாருக்குப் பணம் அனுப்புகிறீர்கள் என்பது அனைத்தும் இந்த ஒற்றை மைய அமைப்பால் கண்காணிக்கப்படவுள்ளது. உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களான BlackRock மற்றும் Vanguard போன்றவை சியோனிச செல்வாக்கு மிக்கவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. விதை முதல் மருந்து வரை அனைத்தையும் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் இவர்களின் கைகளில் இருப்பதால், உலக மக்கள் தொகையையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் இவர்களால் தீர்மானிக்க முடியும். உலகை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் இவர்களின் திட்டத்தை மக்கள் எதிர்க்காமல் இருக்க, ஊடகங்கள் மூலம் "உலகமயமாக்கல்" (Globalization) என்பது ஒரு நன்மையான விஷயம் என்ற பிம்பத்தை இவர்கள் உருவாக்குகியுள்ளனர். இந்த ஒற்றை உலக அரசாங்கத்தை (One World Government) நிறுவுவதற்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் ராணுவ மற்றும் அரசியல் பலம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாடுகள் உலகெங்கிலும் நடத்தும் போர்கள், உண்மையில் அந்த நாடுகளின் வளங்களைக் கைப்பற்றுவதற்கும், அந்த நாடுகளை இந்த சியோனிஸ்ட்களின் ஒற்றை வங்கி முறைமைக்குள் கொண்டு வருவதற்கும் நடப்பவை ஆகும். குறிப்பாக, மத்திய கிழக்கில் ஈரானை வீழ்த்துவது என்பது, அவர்களின் சுதந்திரமான நிதி அமைப்பை அழித்து உலக வங்கி முறைமைக்குள் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. சியோனிசத்தின் எதிர்காலத் திட்டம் என்பது வெறும் இஸ்ரேல் என்ற நாடு சார்ந்தது மட்டுமல்ல; அது உலகப் பொருளாதாரத்தையே ஒரு டிஜிட்டல் சிறைக்குள் கொண்டு வருவதாகும். தொழில்நுட்பம் மற்றும் நிதி வலிமை மூலம் உலகை அடிமைப்படுத்தும் இந்த நுணுக்கமான போர் தற்போது திரைமறைவில் மிக வேகமாக நடந்து வருகிறது. உலகை முற்றுமுழுதாக ஆளும் முயற்சிக்கு தடையாக உள்ளவர்கள் ஈரானும் ஈரானின் சித்தாந்தமுமே ஆகும். சியோனிஸ்ட்களின் அடிமை பொறிக்குள் வீழ்ந்துவிடாமல் இன்றுவரை நெஞ்சை நிமிர்த்தி எதிர்த்து நிற்கும் நாடு ஈரான் என்பதால் அதற்கு என்றுமே ஒரு மரியாதை உண்டு. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - WHO CONTROLS THE WORLD? யார் இலுமினாப்டிகவி3 WALL ٤؟ ٤؟ Glss 00' ् I MONEY MEDIA POWER WAR WHO CONTROLS THE WORLD? யார் இலுமினாப்டிகவி3 WALL ٤؟ ٤؟ Glss 00' ् I MONEY MEDIA POWER WAR - ShareChat
நாட்டில் எவ்வளவோ இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு மக்கள் அல்லல் படும் போது வராத பிரதமர் தேர்தல் வந்தால் மட்டும் வாரம் ஒருமுறை மாநிலங்களுக்கு trip வருகிறார் என்றால். இது அரசியல் அல்ல… Seasonal marketing campaign! 😂 #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - மார்ச் 11 திருச்சியில் பிரதமர் மோடி தலைமையில் NDA மாநாடு. மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் இதில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்" *மத்திய இணையமைச்சர் எல்முருகன் * லட்சம் UIసGటDu" பேர் 7 மார்ச் 11 திருச்சியில் பிரதமர் மோடி தலைமையில் NDA மாநாடு. மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் இதில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்" *மத்திய இணையமைச்சர் எல்முருகன் * லட்சம் UIసGటDu" பேர் 7 - ShareChat
~ என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார் சென்னையில் தங்குவதற்கு எனக்கு வீடே இல்லை என்கிறார் சங்கீதா 🤷🏻‍♀️ ~ வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜயின் மகன் 🤷🏻‍♀️ ~ மகளிர் விடுதியில் தங்கி இருக்கிறார் விஜயின் மகள் 🤷🏻‍♀️ ஆனா இந்த புடுங்கி இன்னைக்கு சொல்றான் பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய், திருமணத்திற்கு ஒரு சவரன் நகை மற்றும் பட்டு சேலை😂😂 இதை கேட்டு எதுல சிரிக்கிறதுனு தெரியலை😂😂🤷🏻‍♀️🤦🏼‍♀️ . . #tvkfails #vijayfailsasdad #tvkvijay #vijaysangeetha #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - Tollywood Tide | Tollywood Tide | - ShareChat