Arunachalam
ShareChat
click to see wallet page
@463115585
463115585
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
இதெல்லாம் இவர்களுக்கு வேடிக்கையாக, பொழுது போக்காக ஆகிவிட்டது போலும்! டிரம்பும், நெதன்யாகும் ஆடுகிற அராஜக, அத்துமீறல் ஆட்டத்தால் என்னென்ன விளைவுகளை உலகம் எதிர்கொள்ள நேருமோ..? தானுண்டு, தன் நாடுண்டு என்று இருக்கும் ஈரான் மீது வலிந்து குண்டு மழை பொழிய வேண்டிய அவசியமே இல்லை. கொலைவெறித்தனமான இந்தக் கொடூர தாக்குதல்கள் உலகில் மனிதகுலம் நாதியற்று போய்க் கொண்டுள்ளதோ..என கலங்க வைக்கிறது…? பள்ளிக் கூடத்தின் மீதெல்லாம் குண்டு மழை பொழிவதையும், மழலைகள் சாவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு கையறு நிலையில் இருக்கத் தான் வேண்டுமா..? உலகின் சிறிய நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வேண்டுமா..? பைத்தியக்கார பயங்கரவாதிகளை நாட்டின் தலைவர்களாக்கினால் உலகம் என்னென்ன விளைவுகளை சந்திக்கும் என்பதற்கு இன்றைய நிதர்சன உதாரணங்கள் டிரம்ப், நெதன்யாகு, மோடி! 2014 வரை இந்திய அரசு இஸ்ரேலின் போர்வெறியை ஆதரித்தது இல்லை. பாலஸ்தீனர்களின் விடுதலையை அங்கீகரித்தவர்களே நாம்! அமெரிக்காவை எச்சரிக்கையோடு அணுகி கெளரவமாக உறவாடிய பிரதமர்களைத் தான் இது வரை இந்தியா கண்டுள்ளது. மோடியின் தனிப்பட்ட பாலியல் பலவீனமும், ஆர்.எஸ்.எஸ்சி இஸ்லாமிய வெறுப்புமாக இணைந்து இன்று உலக அரங்கில் சர்வதேச சமரசமற்று பயணித்துக் கொண்டிருந்த இந்தியாவின் இமேஜ் சரிந்து வருகிறது. அதிகாரத் திமிர் பிடித்த அமெரிக்க டிரம்ப்பிடம் நமது பிரதமர் மோடி அடி பணிந்து போவது ஒட்டு மொத்த இந்தியர்களையும் கூனி குறுக வைக்கிறது. சிறிய நாடாயினும் அடிபணிய மறுக்கும் ஈரானின் நெஞ்சுரம் வியக்க வைக்கிறது. பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து ஈரானிலும் மானுட அழித்தொழிப்புகள் அரங்கேறினால் உலகம் வேடிக்கை பார்க்காது. சீனாவும், ரஷ்யாவும், வட கொரியாவும் இன்னும் சில நாடுகளும் சிலிர்த்தெழுந்து களம் கண்டால் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆகப் பெரிய அழிவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். இது உலகப் போராகவும் வடிவம் கொள்ள வாய்ப்பாகிவிடும். என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்! சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரை விடுவித்து ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் (பிப்ரவரி 27) அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் மதுபானக் கொள்கையில் சதி நடந்திருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மணீஷ் சிசோடியா தரப்பில் எந்தவொரு ‘குற்ற நோக்கமும்’ இருந்ததற்கான ஆதாரம் இல்லை எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. அத்துடன், “ஒரு முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுக்கும் அரசு முடிவுகளை, போதிய ஆதாரங்கள் இல்லாமல் வெறும் ‘சதித் திட்டம்’ என்று முத்திரை குத்திவிட முடியாது,” என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளை, போதிய சான்றுகள் இல்லாமல் ‘இது ஒரு சதி திட்டம்’ என்று அழைப்பது சட்டப்படி செல்லாது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். சிபிஐ -க்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. இங்கேயும் டாஸ்மார்க் ஊழலை பத்தி சொல்லிக்கிட்டே இருக்காங்க அது என்ன உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன், நீதிமன்ற அறையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டார். தனது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்த்தவுடன் அவர் கண்கலங்கி அழுதார். இரண்டு ஆண்டுகால சிறைவாசம், அரசியல் பழிவாங்கல் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட 'ஊழல்வாதி' என்ற முத்திரை அகன்ற நிம்மதியில் அவர் சில நிமிடங்கள் மௌனமாக கண்ணீர் படித்தார் என்று விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. இனி அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? அவர்கள் செய்ய வேண்டியது செய்து ஆட்சிக்கு வந்து விட்டார்கள். #Politics2025 #highlightsviralpost #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா குற்றவாளிகள் அல்ல என்பது ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது 38` 311% RIl   ೪ು आदमी आदमी    पाटी गार्ची 3183 318` आदमी आदम पमी पाटी पार्टी 96 3718 आदमी সাশ 3 மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா குற்றவாளிகள் அல்ல என்பது ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது 38` 311% RIl   ೪ು आदमी आदमी    पाटी गार्ची 3183 318` आदमी आदम पमी पाटी पार्टी 96 3718 आदमी সাশ 3 - ShareChat
பெரியாரின் திராவிடம் ஆரியச்சதிக்கெதிரான திராவகம்... =============\\\============= பிரிட்டீஷ் இந்தியாவில் அனைத்து பதவிகள் மற்றும் கல்வி போன்றவற்றில் 90சதவீதம் பிராமணர்களுக்கே இடம் வழங்கப்பட்டது. நீதிக்கட்சி ஆட்சியில முதல் முறையா 1921 ஆகஸ்ட் மாசம் முத்தையா முதலியார் பிராமணரல்லாத சாதிகளுக்கு அரசு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கனும்னு ஆர்டர் பாஸ் பன்றாரு (GO.no 613) அந்த சட்டத்த கொண்டு வரதுக்கு நீதிக்கட்சியும் பெரியார், கேசவபிள்ளை ஆகியோரை உறுப்பினராக கொண்ட சென்னை மாகாண சங்கமும் சேர்ந்து பிரிட்டீஷ் கவர்மென்டோட கலந்து பேசி ஒரு உடன் படிக்கை போடுறாங்க. அதுக்குப்பேரு மெஸ்டன் உடன்படிக்கை அதன்படிதான் அந்த இட ஒதுக்கீட்டுச் சட்டத்தையே கொண்டு வாராங்க.. அதுக்கு முன்னால இந்த சட்டத்த கொண்டு வாரதுக்காக நீதிக்கட்சி சார்பா டி.எம் நாயர் தியாகராய செட்டியாரெல்லாம் லண்டன் வரைக்கும் போய் வெள்ளக்காரன்கிட்ட தலைகீழா நின்னு தண்ணி குடிச்சும் பிராமணர்கள்கிட்ட பருப்பு வேகல அதெல்லாம் தனி டாபிக்.. சரி விசயத்து வாரேன் அப்டி 1921 ல நீதிக்கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு ஆர்டர் போட்டும் அதை 1927 வரை பிராமணர்களின் தலையீடினால் அமுல் படுத்தவே முடியல.. கடைசில 1927 நவம்பர் மாசம்21 அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் சுப்பராயன் திரும்ப ஒரு ஆர்டர் (GO.no1071) பாஸ் பண்ணி இட ஒதுக்கீட்ட முறையா அமுல்படுத்துறாரு.. சுப்பராயனே பெரியாருடைய சுயமரியாதை இயக்கத்துக்காரருதான் அவரே இந்த சட்டங்களை அமுல்படுத்துவதுற்கு உறுதுணையாக இருந்தது பிராமணல்லாதார் சங்கங்களும் ஈவெராமசாமி நாயக்கரின் தீர்மாணங்களுமேன்னு சொன்னது மட்டுமில்லாம செங்கல்பட்டில் நடந்த பெரியாருடைய முதலாவது சுயமரியாதை மாநாட்டையும் திறந்து வச்சு நான் ஒரு சுயமரியாதைக்காரன்னு பொட்டுல அடிச்சா மாதிரி சொல்லிட்டாரு டாக்டர் சுப்பராயன் கவுண்டர். அந்த மாநாட்டோட தலைவர் யாரு தெரியுமா பட்டிவீரன்பட்டி சிங்கம் WPA சௌந்திரபாண்டிய நாடார்... இதெல்லாம் பெரியார் புள்ளீங்கோ இதுக்கிடையில பிராமாணாள்ளாம் சும்மா இருப்பாளா அவர்களும் வர்ணாசிரமதர்ம மாநாடு, பிராமணர்கள் சங்க மாநாடுன்னு போட்டு வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக்கெதிரா கண்டன தீர்மானம் போடுறாங்க நம்மாளுகளும் சரிசரி கண்டிச்சுக்கோன்னு அடுத்து கோவில் நுழைவு , விதவை திருமணம்னு அவனுகளுக்கெதிரான அடுத்தடுத்த ஆப்புகள சீவப்போய்ட்டாங்க.. ஆனாலும் பிராமணர்கள் விடல கொய்யால நீதிக்கட்சி பேதிக்கட்சி சுயமரியாதைன்னு ஆட்டமா ஆடுறீங்க சுதந்திரம் கிடைக்கட்டும்டா அப்புறம் வக்கிறோம் எங்க ஆப்புன்னு சரியா வச்சானுக பாருங்க அது இன்னான்னா.. 1947 ல சுதந்திரம் கிடைச்சதும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருது அதன்பிறகு 1950 ல குடியரசாகி இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வந்ததும் அதுவரைக்கும் சோழர்களை அழிக்க காத்துட்டு இருந்த ரீமா சென் மாதிரி உடனே சுப்ரீம் கோர்ட்ல போய் அய்யா கல்வியில மத்த சாதிக்கார படிக்காத தற்குறிப் பயலுவலுக்கெல்லாம் சீட்டு குடுத்து எங்க மாதிரி கெட்டிக்கார ஆளுவல்லாம் திரும்ப மணியடிக்க போவ வேண்டிருக்கு அதனால் இந்த ஒதுக்கீட்ட புடுங்கி வுடுங்கோ சாமியோன்னு பிராது குடுக்க, மேல நீதிபதியா ஒக்காந்துருந்த அவாளும் ஆமாம்டா அம்பிகளா அதுதேன் சரின்னு 1921 ல படாதபாடு பட்டு கொண்டு வந்த இட ஒதுக்கீட்ட 1950 ல ஒரே தீர்ப்புல தூக்கி விட்டானுக.. கேஸ் போட்டது யாருன்னா சேலம் பிராமண சேவா சங்கம்.. அதுல யாரு மெயின் கையி னா நம்ம ராஜாஜி ஐயர்.. அதாவது சம்பகம் துரைராஜன்னு ஒரு பிராமிண் பொன்னு எனக்கு சென்னை மெடிக்கல் காலேஜுல சீட்டு கிடைக்கல இட ஒதுக்கீட்ல நக்கிட்டு போயிருச்சுன்னு பிராது கொடுக்க (கடைசில அந்த புள்ள அட்மிசனுக்கு அப்ளிகேசனே போடலங்குறத கண்டுபுடிச்சானுக அது வேற கதை) அதே போல C.R.சீனிவாசன்னு ஒரு பிரமாணாம்பி எனக்கும் கிண்டி இன்ஜினியரிங் காலேஜ்ல சீட்டு கிடைக்கல பிராமணாளுக்கு ஒதுக்கப்பட்ட 14.9 % ம் புல்லாகிருச்சு அதனால இட ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிராதுன்னு டெல்லி நீதிமன்றத்துல மூக்க சிந்தி தடை ஆர்டர வாங்கிட்டானுக.. இப்பதான் நம்ம பெரியார் தன்னோட வேலைய காமிக்கிறாரு சும்மாவே ஆடுற ஆளு காலுல சலங்கைய வேற கட்டிவிட்டானுக சும்மா தமிழ்நாடு புல்லா போராட்டம் அறிவிச்சு தெறிக்க விடுறாரு.. அறிஞர் அண்ணாதுரையும் திமுக வ களத்துல இறக்கி நாடே அல்லு விடுது.. உடனே சென்ட்ரல்ல நேருவும் பட்டேலும் யார்ரா இவனுக ஆ ஊன்னா கருப்பு கொடிய தூக்கினு ஏழ்ரைய கூட்றானுக இந்த பிரமாணர்களும் சும்மா இருக்க மாட்டேங்குறானுக கோர்ட்டு கோர்ட்டுன்னு போய் எழவ கூட்டிட்டே இருக்கானுவ அதனால கொய்யால போட்றா கேட்டன்னு அரசியலமைப்பு சட்டத்துலயே ஒரு திருத்தத்த கொண்டு வாரங்க அதாவது சமூகநீதி காரணங்களுக்காக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்காக வழங்கப்படும் இட ஒதுக்கீடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாதுன்னு.. இந்திய அரசியலைப்புச்சட்டம் 1951 ஆர்டிக்கிள் 15 ல செக்சன் 4 ன்னு ஒரு அமென்ட்மென்ட் கொண்டு வாராங்க.. அதாவது இந்தியான்னு ஒரு நாடு உருவாகி அதுல மொத கேசே பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பிராமணர்கள் போட்டதுதான் அதேபோல இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாகி முதல் திருத்தமே இட ஒதுக்கீட்டுக்கானது அது தந்தை பெரியார்னால வந்ததுதான்.. இன்னிக்கு OBC இட ஒதுக்கீடுக்காக திமுக பாமக அதிமுக ன்னு இருபது கட்சிக்கி மேல டெல்லில தலைகீழா நின்னு தண்ணி குடிச்சிட்டுருக்கானுக. அப்டியும் ஒரு 10% நக்கினு போயிருச்சு. ஆனா இதே கேசுக்காக அறுபது வருசத்துக்கு முன்னால கொய்யால வேங்க மவன் ஒத்தைல நிக்கேன் வாங்கடா வந்து பாருங்கடா ன்னு ஒரிஜினலா நின்னு சாதிச்சவன் றாம்சாமி நாயக்கன்.. இந்தியாவோட சட்டத்தையே முதன் முதலா திருத்த வச்சவருடா பெரியார்.. அவனாடா ஒங்களை அழிச்சவன் அட லூசுப்பயலுகளா... Raja M Raja Rajkumar Narasinghan Rajkumar Microbe #தமிழ்நாடு_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் #nda_betrays_india #nda_betrays_tn #kalaignarist #திராவிடமாடல் #திராவிட_பேரரசன் #கலைஞரிஸ்ட் #தீ_பரவட்டும் #பராசக்தி #அறிஞர்அண்ணா பகிர்வு - Rajkumar Narasinghan #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - சாதியின் கடைசி வேர் அறுபடும் வரையில் எ சிந்தனைகள் தொட( ும் வராமசாமி ٥، சாதியின் கடைசி வேர் அறுபடும் வரையில் எ சிந்தனைகள் தொட( ும் வராமசாமி ٥، - ShareChat
ஒன்றும் அதிசயமாக எதுவும் நடந்துவிடவில்லை! அதிகாரத்தின் மீதான தீரா விசுவாசத்தில் எப்போதும் தீர்க்கமான முடிவெடுப்பவராக இருந்துள்ளார் ஒபிஎஸ்! அவர் முதன்முதலாக நேரடியாக பார்த்த அதிகார பீடம் டி.டி.வி.தினகரன். 1999ல் டி.டி.வி.தினகரன் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட போது, தன்னைவிட 12 வயது குறைந்தவரான டிடிவியிடம் ஒபிஎஸ் காட்டிய பணிவும், ராஜவிசுவாசமும் அவருக்கு 2001ல் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. 2002-ல் ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்த நிலையில், விசுவாசமான அடிமைத் தேடலில் ஈடுபட்ட போது, அவருக்கு சசிகலாவும், டி.டி.வியும் ஒ.பி.எஸ்சை கை காட்டினர். இதே போன்ற வாய்ப்பு மறுபடியும் ஜெயலலிதா மீண்டும் சிறை சென்ற போதும் கிடைத்தது. மோடியா? லேடியா? என்று சவால் விட்ட ஜெயலலிதா அப்போலோவில் உயிருக்கு போராடிய நிலையில், அவருக்கு முடிவுரை எழுத விரும்பிய பாஜகவிற்கு ஒரு அடிமை விசுவாசி தேவைப்பட்டார். அப்போது ஜெயலலிதாவைக் காட்டிலும் பெரிய அதிகாரபீடம் டெல்லி என்பதை வேகமாக சுதாரித்துக் கொண்டு, அதிகார பீடத்தின் மீதான தன் தீரா விசுவாசம் என்பது மாறா விசுவாசமல்ல என்பதை நிரூபித்தார், ஒ.பி.எஸ். இதனால், அன்றைய தமிழக ஆளுநர் சசிகலாவால் முன் மொழியப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து ’’போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். ஒபிஎஸ்சை முதல்வாராக்கச் சொல்லியுள்ளது டெல்லி மேலிடம்’’ என விலக வைத்தார். ஆட்சி பீடம் ஏறியவுடன் மத்திய அரசுக்கு அடங்க மறுத்து கையெழுத்திடாமல் ஜெலலிதா தவிர்த்த பைல்களையெல்லாம் எடுத்து கையெழுத்து போட்டார் ஒபிஎஸ். மேலும், தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் வட இந்திய இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கவும் கையெழுத்திட்டார். ஒபிஎஸ்சை முதல்வராகத் தொடரவிட்டால் இவர் தமிழ் நாட்டையே ஒட்டுமொத்தமாக பாஜகவிற்கு அடகு வைத்துவிடுவார்…என்பதை உணர்ந்து விழிப்படைந்த சசிகலா, ஒ.பி.எஸிடம் ராஜூனாமா கடிதம் வாங்கினார். உடனே டெல்லி எஜமானர்களின் ஆலோசகரான குருமூர்த்தியிடம் ஆலோசனை கேட்டார் ஒபிஎஸ். அதன்படி தன்னை அடையாளம் காட்டி அதிகாரப்படுத்திய சசிகலா, டி.டி.வி ஆகியோரை எதிர்த்து தர்மயுத்தம் செய்து, சசிகலாவை சிறைக்கனுப்பிய ஆறே மாதத்தில் எடப்பாடியுடன் சமரசம் செய்து கொண்டு துணை முதல்வரானார். அதிமுகவின் கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய அதிகாரப் பதவியில் இருந்த போதும் அவர் எப்போதும் டெல்லியின் தீரா விசுவாசியே தான் என்பதில் தீர்க்கமாக இருந்ததால், கட்சியின் பொதுக் குழுவே ஒ.பிஎஸுக்கு கல்தா கொடுத்தது. அப்போது தன்னை உருவாக்கிய கட்சியின் தலைமை அலுவலத்தையே ஆக்கிரமிக்க அடியாள் படையுடன் வந்த ஒபிஎஸுக்கு தமிழக காவல்துறை ஒத்துழைத்து அதை எதிர்த்த அதிமுக தொண்டர்களை அடித்து விரட்டியது. தன்னையும் சேர்த்து வெறும் நான்கு எம்.எல்.ஏக்களை மட்டுமே கொண்டிருந்த ஒபிஎஸுக்கு சட்ட சபையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவி பறிபோகாமல் பாதுகாப்பு தந்தது திமுக அரசு. அதிமுகவில் தன்னை சேர்க்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்த ஒபிஎஸ் அதற்கு இணக்கமான வகையில் அதிமுக மீதான தன் வழக்குகளை வாபஸ் வாங்க மறுத்தே வந்தார், டெல்லியின் கட்டளைப்படி. எடப்பாடிக்கு செக் வைப்பதற்கான வாய்ப்பாகவே ஒ.பி.எஸ்சை வைத்து அழகுபார்த்த டெல்லி தலைமையின் சூழ்ச்சி தெரிந்த நிலையில் தான் எடப்பாடியும் கட்சிக்குள் ஒபிஎஸை அனுமதிக்கவில்லை. கடைசியாக அமித்ஷாவிடம் தான் பேசிய போது, ’’மீண்டும் ஸ்டாலின் தலைமையிலான திமுகவே ஆட்சிக்கு வரப் போகிறது’’ என அமித்ஷாவே சொல்லியதாகக் கோடிட்டு காட்டியிருந்தார், ஒ.பி.எஸ். அந்த சிக்னலுக்கு பிறகு, டெல்லி மேலிடத்தின் ஆசீர்வாதம் உள்ள இடத்திற்கே தற்போது வந்து அடைக்கலமாகியுள்ளார், ஒபிஎஸ்! பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ்சின் மைத்ரேயனையே உள்வாங்கிக் கொண்ட இன்றைய திமுகவுக்கு பிரேமலதாவைத் தொடர்ந்து மற்றொரு பாஜக விசுவாசி வந்து சேர்ந்துள்ளார். ’இவர்கள் பாசிச பாஜகவை எதிர்க்கும் படைக்கு பலம் சேர்ப்பார்கள். திமுகவின் கொள்கை கூட்டணிக்கு வலு சேர்ப்பார்கள்’ என்பதை நிராகரிக்கிறேன். இது ஒரு பிழைப்புவாத அரசியல். அவ்வளவே! சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
அடிக்கப்போறது ஈரான்! இஸ்ரேலை விட்டு அலறியடித்து ஓடும் அமெரிக்கர்கள்! ஜெருசலேம் போஸ்ட் பகீர்! உலகமே அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை எந்த நேரமும் அடிச்சு நொறுக்கும் எண்டு திக் திக் எண்டு பாத்துக்கொண்டிருக்க, இப்ப ஆட்டம் அப்படியே தலைகீழா மாறிட்டுது! இஸ்ரேல்ல இருக்கிற அமெரிக்கர்களை "இண்டைக்குள்ள எந்த பிளைட் கிடைச்சாலும் பிடிச்சு நாட்டை விட்டுத் தப்பிச்சு ஓடிடுங்கோ" எண்டு அமெரிக்கா அவசர அவசரமாக வெளியேற்றிக்கொண்டிருக்கிறது, உலக அரங்கில ஒரு மாபெரும் புயலைக் கிளப்பியிருக்கு. இந்தத் திடீர் திருப்பத்துக்குப் பின்னால் இருக்கிற மாபெரும் அதிர்ச்சித் தகவல்களை இஸ்ரேலின் பிரபல பத்திரிகையான 'தி ஜெருசலேம் போஸ்ட்' (The Jerusalem Post) இப்ப அம்பலப்படுத்தியிருக்கு. நள்ளிரவில் வந்த அவசர ஈமெயில்! இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக் ஹக்கபீ (Mike Huckabee), இஸ்ரேல்ல இருக்கிற அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நள்ளிரவு 12:04 மணிக்கு ஒரு பகீர் ஈமெயிலை அனுப்பியிருக்கிறார். அந்த ஈமெயிலில அவர் மிகத் தெளிவாக, "உடனடியா இண்டைக்குள்ளேயே (TODAY) எல்லாரும் இஸ்ரேலை விட்டு வெளியேறுங்கோ. எந்த நாட்டுக்குப் பிளைட் கிடைக்குதோ, முதல்ல அந்த பிளைட்டைப் பிடிச்சு இந்த நாட்டை விட்டு வெளியே போறது மட்டும்தான் இப்ப உங்கட முதல் முன்னுரிமையா இருக்கோணும்" எண்டு செம பதற்றமாக் குறிப்பிட்டிருக்கிறார். இது மட்டுமில்லாம, அமெரிக்க அரசாங்கமும் தன்னோட குடிமக்களை இஸ்ரேலுக்குப் பயணம் செய்ய வேண்டாம் எண்டு உத்தியோகபூர்வமா எச்சரிச்சிருக்கு. முந்திக்கொண்டதா ஈரான்? இவ்வளவு நாளா, J.D. வான்ஸ் உட்படப் பல அமெரிக்கத் தலைவர்கள் "நாங்க ஈரானோட நீண்டகாலப் போருக்கு ரெடியில்லை" எண்டு சொல்லிக்கொண்டிருக்க, இப்ப திடீரெண்டு தங்களோட ஆட்களை இஸ்ரேலை விட்டு வெளியேத்துறதப் பாத்தால், ஒரு மாபெரும் சந்தேகம் எழும்புது. அமெரிக்கா ஈரானை அடிக்கிறதை விட்டுட்டு, இப்படி அலறியடிச்சுக்கொண்டு ஓடுறதப் பாத்தால், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் முந்தி, ஈரான் தன்னோட பிரம்மாண்டமான தாக்குதலைத் தொடங்கப் போகுது எண்ட ரகசியத் தகவல் அமெரிக்க உளவுத்துறைக்குக் (Intelligence) கிடைச்சிருக்கலாம் எண்டு அரசியல் நிபுணர்கள் அடிச்சுச் சொல்லுகினம். உலக நாடுகளின் அலறல்! இந்த நடுக்கம் அமெரிக்காவுக்கு மட்டுமில்லை. மத்திய கிழக்கில எந்த நேரமும் மாபெரும் போர் வெடிக்கலாம் எண்ட பயத்தில, உலகத்தில இருக்கிற அத்தனை முக்கிய நாடுகளும் இப்ப தங்கட மக்களை அலறியடிச்சுக்கொண்டு வெளியேற்றத் தொடங்கிட்டினம்: கனடா & சீனா: ஈரானில் இருக்கும் தங்கள் நாட்டுப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன. ஆஸ்திரேலியா: இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள தங்கள் தூதரக அதிகாரிகளின் குடும்பங்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கு. இந்தியா, ஜெர்மனி, பின்லாந்து: உள்ளிட்ட பல நாடுகள், எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம் என 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) விடுத்துள்ளன. அடுத்தது என்ன நடக்கும்? விமானங்கள் கிடைக்கிற வரைக்கும் பிளைட்டைப் பிடிச்சுத் தப்பிச்சுக்கோங்கோ எண்டு அமெரிக்கா சொல்லுறதப் பாத்தால், அடுத்த 24 தொடக்கம் 48 மணித்தியாலங்களுக்குள்ள மத்திய கிழக்கில ஒரு மாபெரும் சம்பவம் நடக்கக் காத்திருக்கு. மூன்றாம் உலகப்போருக்கான கவுண்டவுன் (Countdown) ஆரம்பமாகிவிட்டதா என்ற அச்சம் இப்போது உலக நாடுகள் மத்தியில் பரவியுள்ளது. வாசகர்களின் கருத்துக்கு: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை அடிக்கிறதுக்கு முந்தி, ஈரான் முந்திக்கொண்டு இஸ்ரேலை அடிக்கப் போகுதா? இந்தத் திடீர் வெளியேற்றத்துக்குப் பின்னால் இருக்கும் உண்மையான மர்மம் என்ன? உங்கள் கருத்துக்களைக் கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்! #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - Tube தமிழ் V,S,AR Fonce / 7|56 BREAKING NEWS அடிக்கப்போறது ஈரான் இஸ்ரேலை விட்டுத்தப்பியோடும் அமெரிக்கர்கள் வேட்டைக்காரன் இரையானான்! Tube தமிழ் V,S,AR Fonce / 7|56 BREAKING NEWS அடிக்கப்போறது ஈரான் இஸ்ரேலை விட்டுத்தப்பியோடும் அமெரிக்கர்கள் வேட்டைக்காரன் இரையானான்! - ShareChat
#👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 89.39 8.82 100 Lakhs 10 Crore கோடி 60L80 Incomel Growth Nef Assel 75 Lakhs 7.5 Grore 6.12 a கோடி 6 50 Lakhs 5 Crore 18.02 25 Lakhs 2.5 Crore 1.12 லட்சம் 5.4 கோடி லட்சம் 0 Lakhs 0 Crore 2011 2016 2021 2011 2016 2021 சொத்து வளர்ச்சி வருமான வளர்ச்சி நிகர தி ஸ்ரீநிவாசன் வா தமிழக அணி தலைவி மகளிர் பாஜக பாஜக தேசிய செயலாளர் துணை கோவை தெற்கு சட்டமன்ற வேட்பாளர் பாஜக ஒரு MLA இப்படியும் சொத்து சேர்க்கலாமா Affidavit Analysis Arappor இதெல்லாம் நீங்க கொடுத்த கணக்கு 89.39 8.82 100 Lakhs 10 Crore கோடி 60L80 Incomel Growth Nef Assel 75 Lakhs 7.5 Grore 6.12 a கோடி 6 50 Lakhs 5 Crore 18.02 25 Lakhs 2.5 Crore 1.12 லட்சம் 5.4 கோடி லட்சம் 0 Lakhs 0 Crore 2011 2016 2021 2011 2016 2021 சொத்து வளர்ச்சி வருமான வளர்ச்சி நிகர தி ஸ்ரீநிவாசன் வா தமிழக அணி தலைவி மகளிர் பாஜக பாஜக தேசிய செயலாளர் துணை கோவை தெற்கு சட்டமன்ற வேட்பாளர் பாஜக ஒரு MLA இப்படியும் சொத்து சேர்க்கலாமா Affidavit Analysis Arappor இதெல்லாம் நீங்க கொடுத்த கணக்கு - ShareChat
இதோ.... ஒரு காலத்தில் டெல்லி, பஞ்சாப் என இரு மாநிலங்களிலும் ஆட்சி செலுத்திய கெஜ்ரிவால் இன்று கண்ணீர் வடிக்கிறார்! ஜீ... பிம்பத்தை உருவாக்குவதில் தொடக்க காலத்தில் உழைத்தவர்களில் இவரும் ஒருவர்... ஜீ-யையே ஓவர்டேக் செய்துவிடுவாரெனப் பார்க்கப்பட்ட நேரத்தில், டெல்லி முதல்வரான அவர் மீதும், டெல்லி துணை முதல்வர் மீதும் மதுபானக்கொள்கை முறைகேடு என்ற வழக்கை ஜோடித்தார்கள் ஜீயின் அடியாட்களான சிபிஐயும், அமலாக்கத்துறையும்! துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, 530 நாட்களாக சிறையிலடைக்கப்பட்டார்... முதல்வரான கெஜ்ரிவாலும் 150 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார்... அவர் மீதும், அவரது ஆட்சி மீதுமான மிஸ்டர் க்ளீன் இமேஜ் சிதைக்கப்பட்டதில், அடுத்த தேர்தலில் டெல்லியை பறிகொடுத்தார் கெஜ்ரிவால்! இதோ இன்று, மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் இவரை கைது செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று இவரையும், இவரோடு கைது செய்யப்பட்ட அனைவரையும் டெல்லி நீதிமன்றம் விடுவித்திருக்கிறது! அதேபோல், அடியாட்கள் சிபிஐயையும், அமலாக்கத்துறையையும் தலையிலேயே குட்டு வைத்துள்ளது! அத்தருணத்தில் தான் கண்ணீர் வடித்தார் கெஜ்ரிவால்! இன்றைய சூழலில் கெஜ்ரிவாலின் அதிரடி அரசியலே முடங்கிப்போயிருக்கிறது! இச்சூழலில், தனக்கு துணைநின்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். இப்போது புரிகிறதா ஸ்டாலின் எந்தளவுக்கு டெல்லிக்கு எதிராக வலுவாக செயல்படுகிறாரென்று? திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற டெல்லி போட்ட ஒவ்வொரு திட்டத்தையும் நொறுக்குகிறார் ஸ்டாலின்! அவர்கள் வீசும் ஒவ்வொரு பாலிலும் சிக்ஸர் அடிக்கிறார்! விஜய் மூலமாக காங்கிரஸை கழட்டிவிடச் செய்ய டெல்லி முயன்றது... ஸ்டாலினும், விஜயை நம்ப வேண்டாம்... அதெல்லாம் சும்மாக்காச்சி உருவாக்கப்பட்ட கட்சியென்றும், நம் கூட்டணி வலுவென்றும் சொல்லிப் புரியவைக்கப் பார்த்தார். புரிந்துகொள்ளவில்லை... மகளிர் உரிமைத்தொகை 5000 வழங்கினார்... தேமுததிகவை கூட்டணியில் சேர்த்தார்... இதோ இப்போது ஓ.பி.எஸ்ஸையே வளைத்துள்ளார். அதேபோல், காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டையும் ஒதுக்கியுள்ளார். பக்குவப்பட்ட தலைவரின் பின்னால் பலரும் அணிவகுக்கிறார்கள்! இதைக்கண்டு பாஜக. அதிமுக, தவெக என அனைத்துக் கட்சிகளும் மிரண்டுபோயிருக்கின்றன! இப்போது காங்கிரஸிலுள்ள பல தலைவர்களும் தங்களது தவறை உணர்ந்து, திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பேசத்தொடங்கியுள்ளனர்! சத்தமில்லாமல் சாதித்துவருகிறார் மு.க.ஸ்டாலின்! அடுத்தடுத்து அதிர்ச்சியை அளித்துவருகிறார்! ஆம், தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்! <3 - வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
ஈரானின் சபஹார் துறைமுகத்தை வாங்கிட்டோம். பாகிஸ்தானுக்கு மரண அடின்னு கூவிய மோ(டுமுட்)டி சங்கீ கூட்டம். ஈரான் வெளியுறவு அமைச்சர் இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி இந்த விவகாரம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டு ஈரானின் சபஹார் துறைமுகத் திட்டத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது, தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அப்பாஸ் அராச்சி தெரிவித்தார். இந்த துறைமுகம் இந்தியாவுக்கு மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடனான இணைப்பை மாற்றியமைக்கக்கூடிய "தங்க வாசல்" என்றும் அவர் குறிப்பிட்டார். தங்க வாசல் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இது தொடர்பாகப் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். சபஹார் துறைமுகத்திற்கு பட்ஜெட் ஒதுக்காதது குறித்துப் பேசிய அவர், "இது ஏமாற்றம் தான். ஈரானுக்கு மட்டுமில்லை.. இந்தியாவுக்கும் கூட இது ஏமாற்றத்தையே தரும் என்று நான் நினைக்கிறேன். பிரதமர் மோடி ஒருமுறை முன்பு குறிப்பிட்டது போல், சபஹார் துறைமுகம் என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியை மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஐரோப்பாவுடனும் இணைக்கும் ஒரு முக்கியமான தங்க வாசல். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம். இது முழுமையாக மேம்படுத்தப்பட்டால் ஈரானின் வழியாக மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஐரோப்பா நாடுகள் இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்கும். அந்த நாடுகளை இந்தியாவுடன் இணைப்பதில் இது மிக முக்கிய பங்காற்றும். இதுவே சிறந்த போக்குவரத்து வழித்தடமாக அமையும் என நான் நினைக்கிறேன். ஒரு நாள் இந்த துறைமுகம் முழுமையாக மேம்படுத்தப்படுவதை நாம் காணலாம் என நம்புகிறேன்" என்றார். இந்தியாவுக்கு நஷ்டம் ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சபஹார் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வந்தது. இந்தத் துறைமுகத்தால் பாகிஸ்தானைத் தொட தேவையில்லாமல் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கு நேரடி இந்தியாவால் வர்த்தகம் செய்ய முடியும். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து வழித்தடத்தை இது உருவாக்கும். இது இந்தியாவின் பிராந்திய இணைப்பை மேம்படுத்துகிறது. மேலும், இந்தத் துறைமுகம் நிலப்பரப்பில் சூழப்பட்ட மத்திய ஆசியச் சந்தைகளுக்கு வர்த்தகத்தை அதிகரிக்கிறது. பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் சீனாவின் செல்வாக்குக்கு அதிகரித்து வரும் சூழலில், அதற்குப் பதிலடியாக இந்தியாவுக்கு சபஹார் துறைமுகம் இருந்தது. இந்தத் திட்டம் பிராந்தியத்தில் இந்தியாவின் புவிசார் அரசியல் இருப்பை வலுப்படுத்துகிறது. சபஹார் திட்டம் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்த, இந்தியா 2024இல் ஒப்பந்தம் போட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் சபஹார் துறைமுக மேம்பாட்டிற்குக் கணிசமான நிதி ஒதுக்கப்படும். இருப்பினும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இப்போது நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாதது இதுவே முதல்முறை. கடந்த நிதியாண்டுகளில், இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் ஒதுக்கி வந்தது.! பொருளாதாரத் தடை கடந்த செப்டம்பரில், அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இருப்பினும், சபஹார் திட்டத்தில் இந்தியா தொடர்ந்து ஈடுபடுவதற்கு ஆறு மாதக் கால விலக்கை அமெரிக்கா வழங்கியிருந்தது. அந்த விலக்கு வரும் ஏப்ரல் 26ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு மேல் இந்தியா மேம்பாடு நடவடிக்கை எடுத்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரலாம். இதன் காரணமாகவே இந்தியாவும் நிதி ஒதுக்கீட்டை நிறுத்தியுள்ளது. முன்னதாக சபஹார் தொடர்பான விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதற்கு விலக்கு பெறும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராந்தீர் ஜெய்ச்வால் தெரிவித்தார். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 8 அமெரிக்க "தங்க வாசல் . பிரஷரால் இந்தியாவுக்கு பெரிய நஷ்டம் ஈரானிடம் இருந்து வந்த மேஜர் தகவல் Oneindial 11.39 am 26 Feb 2026 8 அமெரிக்க "தங்க வாசல் . பிரஷரால் இந்தியாவுக்கு பெரிய நஷ்டம் ஈரானிடம் இருந்து வந்த மேஜர் தகவல் Oneindial 11.39 am 26 Feb 2026 - ShareChat
56 இஞ்சி டான்ஸ் ஆட இஸ்ரேல் சென்றாரா? அண்மையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்களுக்கு (சோலார் செல்கள் மற்றும் பேனல்கள்) 126 சதவீதம் வரை countervailing duties (அரசு மானிய எதிர்ப்பு வரி) விதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சகத்தின் (U.S. Department of Commerce) சமீபத்திய அறிவிப்பாகும். இந்த வரி, இந்திய அரசின் மானியங்கள் காரணமாக இந்திய உற்பத்தியாளர்கள் அமெரிக்க சந்தையில் நியாயமற்ற போட்டியை ஏற்படுத்துவதாகக் கூறி விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பொருட்களுக்கு 86 முதல் 143 சதவீதம் வரையிலும், லாவோஸிலிருந்து 81 சதவீதம் வரையிலும் ஆரம்பகட்ட வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க உள்நாட்டு சோலார் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2025) இந்தியா, இந்தோனேஷியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்கா சுமார் 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சோலார் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இது அமெரிக்காவின் மொத்த சோலார் இறக்குமதியில் பெரும்பகுதியை உள்ளடக்கியது. குறிப்பாக இந்தியாவிலிருந்து 2025-இல் சுமார் 792.6 மில்லியன் டாலர் மதிப்பிலான சோலார் பேனல்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இது 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒன்பது மடங்கு அதிகரிப்பு ஆகும். இந்திய சோலார் தொழில் வேகமாக வளர்ந்து, அமெரிக்க சந்தையில் கணிசமான பங்கைப் பெற்றிருந்த நிலையில், இந்த உயர் வரி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கு முன்பு, டிரம்ப் அரசு இந்திய பொருட்களுக்கு பல்வேறு வரிகளை அறிவித்து வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 50 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. பின்னர், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அது 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. சில சமயங்களில் 10 சதவீதமாகவும் நடைமுறையில் இருந்தது. ஆனால், சமீபத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் சில போட்டி வரிகளை ரத்து செய்த பிறகு, டிரம்ப் புதிய வரி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்த 126 சதவீத வரி, இந்திய சோலார் உற்பத்தியாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அமெரிக்க வாடிக்கையாளர்கள் இனி இந்திய பொருட்களை விலை உயர்வால் தவிர்க்கலாம். அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்காவிட்டால், மற்ற குறைந்த வரி நாடுகளை நோக்கி திரும்பலாம். இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் ஜவுளி, தோல், உணவு ஏற்றுமதி தொழில்களைப் போலவே, சோலார் துறையும் கடுமையாக பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளும் ஆபத்தில் உள்ளன. இந்த நடவடிக்கை உலகளாவிய பசுமை எரிசக்தி சங்கிலியை பாதிக்கும் வகையில் அமையலாம். இந்திய தரப்பில் இருந்து பதிலடி வரிகள் அல்லது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முயற்சிகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இறக்குமதி வரிகளை தீவிரமாக்கி வருகிறார். அண்மையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்களுக்கு (சோலார் செல்கள் மற்றும் பேனல்கள்) 126 சதவீதம் வரை countervailing duties (அரசு மானிய எதிர்ப்பு வரி) விதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சகத்தின் (U.S. Department of Commerce) சமீபத்திய அறிவிப்பாகும். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 6 மீண்டும் ஆரம்பித்த டிரம்ப் .!! இந்திய பொருளுக்கு 126% வரியாம்!! ஏற்றுமதியாளர்கள் O9ITB..!! Tamilwire 11.39 am 25 Feb 2026 மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அ தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இறக்குமதி வரிகளை தீவிரமாக்கி வருகிறார். 6 மீண்டும் ஆரம்பித்த டிரம்ப் .!! இந்திய பொருளுக்கு 126% வரியாம்!! ஏற்றுமதியாளர்கள் O9ITB..!! Tamilwire 11.39 am 25 Feb 2026 மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அ தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இறக்குமதி வரிகளை தீவிரமாக்கி வருகிறார். - ShareChat
சரண்டர் சவக்குழி நரேந்திரா! இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்ய பொருளாதாரத்திற்கு வலு சேர்ப்பதாகவும் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதி அளிக்கிறது என்றும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக இந்தியாவை சாடி வந்தது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் இறக்குமதி வரி என மொத்தம் 50 சதவீத வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இது இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கான ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என தொடர்ச்சியாக அமெரிக்க அரசு கூறி வந்தது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்து கொண்டோம் என வெளியிடவில்லை. ஆனால் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களும் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் படிப்படியாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து கொண்டன. இந்த சூழலில் தான் அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா மீது திடீரென ராணுவ நடவடிக்கை எடுத்தது. அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்தது. இதனை அடுத்து வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் தங்களுக்கு சொந்தமானவை என அறிவித்த டிரம்ப் இனி இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொண்டு வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என அறிவித்தார். அதே வேளையில் அமெரிக்க நிறுவனங்களின் மேற்பார்வையில் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான உரிமங்களையும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கியது. அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து வெனிசுலாவிலிருந்து தலா 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயுடன் கூடிய மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. ரிலையன்ஸ், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்பிசிஎல் மீட்டல் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் தற்போது மூன்று சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இவை தலா 20 லட்சம் பேரல் கச்சா எண்ணையை ஏற்றிக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. போக்குவரத்து செலவுகளை குறைக்கவும் விரைவாக எண்ணெய் வந்து இந்தியாவை சேர்வதையும் உறுதிப்படுத்தவும் இருப்பதிலேயே பெரிய சரக்கு கப்பல்கள் மூலம் எண்ணெய் கொண்டு வரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டு வரை இந்தியா வெனிசுலாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கியது. வெனிசுலாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருந்தது. ஆனால் அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா மீது பொருளாதார தடைகளை விதித்ததால் இந்தியா வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டது. அதே வேளையில் தான் ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கியதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் சென்றன. Devika Manivannan Goodreturns source: goodreturns.in #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - நினைத்ததை சாதித்த டிரம்ப்!! ரஷ்யாவுக்கு குட்பை சொல்லி வெனிசுலாவுக்கு வணக்கம் வைத்த இந்தியா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!! ரஷ்யாவுக்கு குட்பை சொல்லி வெனிசுலாவுக்கு வணக்கம் வைத்த இந்தியா!! - ShareChat