Arunachalam
ShareChat
click to see wallet page
@463115585
463115585
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - X Dev JB 5' ಡ7*5 39m தமிழ்நாடு முழுதும் இருக்கிறஆதரவு புதுச்சேரியில் இல்லையாம் அங்க மட்டும் இவன்படத்தை பார்க்கஆள்இல்லையா. என்னபாகலர்கலராரீல் உடறீங்க #ஓட்டுத்திருட்டு X Dev JB 5' ಡ7*5 39m தமிழ்நாடு முழுதும் இருக்கிறஆதரவு புதுச்சேரியில் இல்லையாம் அங்க மட்டும் இவன்படத்தை பார்க்கஆள்இல்லையா. என்னபாகலர்கலராரீல் உடறீங்க #ஓட்டுத்திருட்டு - ShareChat
மொத்தம் பத்து நாடுகள் BRICS கூட்டமைப்பில் உள்ளது 🇧🇷 பிரேசில் 🇷🇺 ரஷ்யா 🇮🇳 இந்தியா 🇨🇳 சீனா 🇿🇦 தென்னாப்பிரிக்கா 🇸🇦 சவுதி அரேபியா 🇦🇪 யுனைடெட் அராப் எமிரேட்ஸ் 🇮🇷 ஈரான் 🇪🇬 எகிப்து 🇪🇹 எத்தியோப்பியா சமீபத்தில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு மனநிலை கொண்டிருப்பதால். பிரிக்ஸ் மாநாட்டில் இந்த ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக. பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இனிமேல் வர்த்தகங்கள் அனைத்தையும் சொந்த நாட்டு பணத்திலேயே மேற்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. இதில் இந்தியா மட்டும் அமெரிக்க பணத்தை தான் பயன்படுத்துவோம் என்று ஒற்றை காலில் நின்றது. மற்ற நாடுகள் அனைத்தும் தங்கள் சொந்த நாட்டு பணத்திலேயே வர்த்தகம் செய்யப் போவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உலக அரசியல் வல்லுனர்களின் கருத்துப்படி.‌ இதனால் இனி இந்தியா மீது சைனா ஆக்கிரமிப்பு நடத்தினால் அதை தட்டி கேட்பதற்கோ பஞ்சாயத்து செய்வதற்கோ எந்த நாடுகளும் முன் வராது என்று கருதுகின்றனர். ஏற்கனவே கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் இந்த நிலையில். ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இந்தியா தன் சொந்த நாட்டு பணத்தை தான் பயன்படுத்த நேரிடும் மாறாத அமெரிக்க பணத்தின் மூலம் வர்த்தகம் செய்வதாக இருந்தால் இந்த நாடுகள் இனி கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வழங்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும். மேலும் அமெரிக்கா மூலம் வரும் கச்சா எண்ணெய் பாதையை இவர்கள் தடுக்க முயற்சி செய்யலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.‌ இது பற்றி இந்திய அரசியல் வல்லுனர்கள் கூறுகையில். அமெரிக்காவில் மட்டும் 7,00,000 பார்ப்பனர்கள் வாழ்ந்து வருவதாகவும்.‌ அமெரிக்க பணத்தின் மூலம் இந்தியா வர்த்தகம் மேற்கொள்ளவில்லை என்றால். இவர்களில் பலருக்கு அமெரிக்க குடியுரிமை நிறுத்தப்படும் என்பதால். இந்திய மக்களுக்கு சமையல் எரிவாயு இல்லையென்றாலும் பரவாயில்லை அல்லது சமையல் எரிவாயுவின் விலை ஏறினாலும் பரவாயில்லை எப்படியாவது அமெரிக்காவில் இருக்கும் இந்த பார்ப்பனர்களை காப்பாற்றும் முயற்சியில் தான் ஒன்றிய பாஜக மோடி அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகவும். அப்படி செய்யவில்லை என்றால் ஆர் எஸ் எஸ் இந்திய பிரதமர் மோடியை பதவியை விட்டு நீக்கிவிடும் என்று கருத்து கூறுகின்றனர். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - படுத்தே விட்டான் ஐயா மாநாட்டில் அனைத்து BRICS நாடுகளும் தங்கள் சொந்த நாட்டு பணத்தைதான் பயன்படுத்துவோம் என்றுஉறுதி எடுத்தது இந்தியா மட்டும் அமெரிக்க பணத்தை பயன்படுத்துவோம் என்றுகூறியது படுத்தே விட்டான் ஐயா மாநாட்டில் அனைத்து BRICS நாடுகளும் தங்கள் சொந்த நாட்டு பணத்தைதான் பயன்படுத்துவோம் என்றுஉறுதி எடுத்தது இந்தியா மட்டும் அமெரிக்க பணத்தை பயன்படுத்துவோம் என்றுகூறியது - ShareChat
பொதுவாக - ஞாயித்துக்கிழமை பதிந்தால் அவ்வளவாக ரீச் ஆகாது. இருந்தும் துணிந்து .... 😅 உண்மையில் மத்தியில் ஆளுபவர்கள் மந்திரிப் பதவிக்கு மட்டுமல்ல- மனிதர்களுக்கே தகுதியானவர்களா தெரியவில்லை. என்னவொரு பொய்! எப்படியெல்லாம் கதையளக்கிறார்கள் ! “கச்சா எண்ணெய்… எரிவாயு என்று நாட்டில் எந்தப் பிரச்னையும் கிடையாது” எப்ஸ்டீன் ஃபைல்ஸ் புகழ் மந்திரி ஹர்தீப் சிங் புரி அடித்து விடுகிறார். எப்போது? தேர்தல் முடிந்த கையோடு வணிக எல்பிஜி (19 கிலோ) சிலிண்டர் விலையை ஒரு யூனிட்டுக்கு 993 ரூபாய் அளவுக்கு உயர்த்திவிட்டு வாயாடுகிறார் மந்திரி. கடந்த இரண்டு மாதங்களில் இது மூன்றாவது விலை ஏற்றம். வெறும் 60 நாட்களில் ரூ.1,300க்கும் அதிக உயர்வு. மே 1, 2026 நிலவரப்படி, புது தில்லியில் ஒரு 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை 3,071 ரூபாய்.50 காசுகள். சென்னையில் 3,237 ரூபாய். காசுகள். எரிபொருள் தட்டுப்பாடு என்று தன் விமான சேவை பலவற்றை ரத்து செய்வதாக ஏர் இண்டியா நேற்று அறிவித்திருக்கிறது. ஒரு சாதாரண டீயின் விலை 15 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. சிங்கிள் ரூம் டபுள் ரூம் ஏஸி ரூம் வாடகை எரிவாயு தட்டுப்பாட்டால் உயர்த்தப்படுவதாக தனியார் விடுதி உரிமையாளர்கள் சங்கம் நேற்று சொல்லிவிட்டது. உயர்தர உணவுக் கடைகளில் 80 ருபாய் பொங்கல் 115 ரூபாய் 150 ரூபாய் தோசை 210 ரூபாய் உயர்த்தப்படும் என்றிருக்கிறார்கள் ஓட்டல் சங்கத்தார். பாஜக மந்திரி எந்த உலகத்திலிருக்கிறார்? எந்த நாட்டைக் குறித்து கதைக்கிறார்? நேற்று டிவி பார்த்துக்கொண்டிருக்கிறேன். “என்ன எலெக்சன் முடிந்த கையோடு சிலிண்டர் விலையை ஏற்றிவிட்டீர்கள்” என்று கேட்ட பத்திரிகையாளரிடம் "பாஜக எது செய்தாலும் மக்கள் நன்மைக்குத்தான்" என்கிறார் பாஜக நயினார் நாகேந்திரன். மக்கள் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறார்கள் முட்டாள்கள் என்று நினைக்கும் ஆணவம் எங்கிருந்து வந்தது? எண்ணெய்க் கையிருப்பிலும் பொய் சொல்லுகிறது அரசு. ஒவ்வொரு நாடும் 90 நாளுக்கு கச்சா எண்ணெயைக் கையிருப்பு வைத்திருக்க வேண்டுமென்று பரிந்துரைக்கிறது IEA - சர்வதேச எரிசக்தி முகமை. ஆனால், அதை விட மிக மிகக் குறைவாக, 10 நாள்கூட போதாத அளவுக்குத்தான் கையிருப்பு வைத்திருக்கிறது இந்தியா. "சீனா தனது சேமிப்புக் கிடங்குகளை கச்சா எண்ணெயால் நிரப்புகிறது. இந்தியாவின் எண்ணெய்க் கிடங்குகளோ வெறும் வாய்ச்சவடால் அறிக்கைகளால் நிரம்பிக் கிடக்கிறது" இப்படிச் சொல்லியிருக்கிறார் உலக வங்கியின் ஆலோசகர் சல்மான் அனீஸ் சோஸ். இனி - வீட்டு சிலிண்டர் கதி என்ன? திருப்பரங்குன்றத்துப் பெருமானைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்! 😞 படங்களில் - சல்மான் சோஸும் நாமும். #highlight #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - e e - ShareChat
2004வரை மம்தா பானர்ஜியும் பாஜகவும் கூட்டணி வைத்தனர் ... வாஜ்பாய் அரசாங்கத்தில் மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராகவே இருந்தார் மேற்கு வங்காளத்தில் அப்போது வலிமையாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியையும் எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸையும் ஒழிக்க பாஜகவால் வளர்த்து விடப்பட்டவர் தான் மம்தா பானர்ஜி மமதா உடன் ஆரம்பத்தில் கூட்டணி வைத்து அவரை வளர்த்து விட்ட பாஜக பின்பு அவரையே தனிக்கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆன பின்பு முற்றிலும் கம்யூனிஸ்ட் & காங்கிரஸ் மேற்கு வங்காளத்தில் ஒழிந்தது. இப்போது அதே BJP மே வங்கத்தில் மமதாவை ஒழிக்க பாஜக முனைப்பு காட்டுகிறது.... இதேபோல்தான் டெல்லியிலும் .... டெல்லியில் கோலோச்சிய காங்கிரசை அழிக்க அரவிந்த கேஜ்ரவாலை உருவாக்கி காங்கிரசை வீழ்த்திய பின்பு இப்போது அரவிந்த் கெஜ்ர்வாளுக்கும் பாஜ க்காவும் டெல்லியில் போட்டி ... இதேதான் மகாராஷ்டிராவிலும். ஏற்கனவே பாண்டிச்சேரியிலும் ஆளும் கட்சியை மிரட்டி அவர்கள் வேலையை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது தமிழ்நாட்டிலும் அதே நிலையை அதிமுகவை வைத்து செய்ய பஜக முயல்கிறது. #Politics2026 #fightintellectually #அறிவாயுதம்_ஏந்துவோம் #aipmk #cnramamurthy #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
உங்களுக்குத் தெரியுமா? மோடி அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் 97 நாட்களுக்குள்ளேயே, 25 பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துவிட்டன... • 21 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் • 28 பேர் காயமடைந்தனர்... • 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்... • 47 பேர் காயமடைந்தனர் கடந்த பல ஆண்டுகளாக, ஒருபுறம் காஷ்மீரில் தினமும் சடலங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன; மறுபுறம், மோடி பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாகத் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் முழக்கமிட்டு வருகின்றனர்—காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தன, ஆனால் இப்போது பயங்கரவாதத் தாக்குதல்களே நடப்பதில்லை என்று அவர்கள் கூச்சலிடுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், மோடியின் பதவிக்காலத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் பட்டியல் மிகவும் நீளமானது; அதை நீங்கள் எண்ணிப் பார்க்க முயன்றால், நிச்சயம் பத்தைத் தவறவிட்டுவிடுவீர்கள்... ▪️டிசம்பர் 28, 2014: பெங்களூரில் குண்டுவெடிப்பு ▪️மார்ச் 20, 2015: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் ▪️ஜூன் 4, 2015: மணிப்பூரில் தாக்குதல் ▪️ஜூலை 27, 2015: குர்தாஸ்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் ▪️ஜனவரி 2, 2016: பதான்கோட் தாக்குதல் ▪️ஜூன் 25, 2016: ஜம்மு காஷ்மீரின் பம்போரில் பயங்கரவாதத் தாக்குதல் ▪️செப்டம்பர் 18, 2016: ஜம்மு காஷ்மீரின் ஊரியில் பயங்கரவாதத் தாக்குதல் ▪️அக்டோபர் 3, 2016: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் தாக்குதல் ▪️அக்டோபர் 6, 2016: ஹண்ட்வாரா தாக்குதல் ▪️நவம்பர் 29, 2016: நக்ரோட்டா ராணுவ முகாமின் மீது தாக்குதல் ▪️மார்ச் 7, 2017: போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரயிலில் குண்டுவெடிப்பு ▪️ஏப்ரல் 24, 2017: சுக்மாவில் நக்சல் தாக்குதல் ▪️ஜூலை 11, 2017: அமர்நாத் யாத்திரையின் மீது பயங்கரவாதத் தாக்குதல் ▪️ஆகஸ்ட் 5, 2017: கோக்ராஜாரில் தாக்குதல் ▪️பிப்ரவரி 10, 2018: சஞ்சுவான் தாக்குதல் ▪️மார்ச் 13, 2018: சுக்மாவில் நக்சல் தாக்குதல் ▪️ஏப்ரல் 9, 2019: தந்தேவாடாவில் நக்சல் தாக்குதல் ▪️பிப்ரவரி 14, 2019: புல்வாமாவில் பயங்கரவாதத் தாக்குதல் ▪️மார்ச் 7, 2019: ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு வெடிப்பு ▪️மே 1, 2019: கட்சிரோலியில் நக்சல் குண்டுவெடிப்பு ▪️ஜூன் 12, 2019: காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் ▪️ஜனவரி 26, 2020: குண்டுவெடிப்பு திப்ருகர்-சரய்தேவ், அசாம் ▪️நவம்பர் 26, 2020: HMT ஸ்ரீநகரில் பயங்கரவாதத் தாக்குதல் ▪️பிப்ரவரி 3, 2021: அசாமின் ஹைலகண்டியில் குண்டு வெடிப்பு ▪️ஏப்ரல் 3, 2021: சுக்மா-பிஜாப்பூர் தாக்குதல் ▪️ஜூன் 27, 2021: ஜம்மு ட்ரோன் தாக்குதல் ▪️ஆகஸ்ட் 4, 2021: காஷ்மீரின் பண்டிபோராவில் பயங்கரவாதத் தாக்குதல் ▪️ஆகஸ்ட் 27, 2021: அசாமின் திமா ஹசாவோவில் பயங்கரவாதத் தாக்குதல் ▪️ஆகஸ்ட் 11, 2022: ராஜௌரியின் பர்கலில் பயங்கரவாதத் தாக்குதல் ▪️ஏப்ரல் 20, 2023: பூஞ்ச்-ராஜௌரி தாக்குதல் ▪️ஏப்ரல் 26, 2023: தந்தேவாடாவில் குண்டு வெடிப்பு ▪️செப்டம்பர் 13, 2023: அனந்த்நாகில் பயங்கரவாதத் தாக்குதல் ▪️அக்டோபர் 29, 2023: ஆய்வாளர் மஸ்ரூர் அலி வாணி சுட்டுக் கொல்லப்பட்டார் ▪️டிசம்பர் 22, 2023: பூஞ்சில் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் ▪️டிசம்பர் 24, 2023: காஷ்மீரின் ராஜௌரியில் பெரும் பயங்கரவாதத் தாக்குதல் ▪️ஜனவரி 12, 2024: பூஞ்சில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதத் தாக்குதல் ▪️மே 4: பூஞ்ச் பயங்கரவாதத் தாக்குதலில் ஒரு வீரர் வீரமரணம், ஐவர் காயம் ▪️ஏப்ரல் 28: உதம்பூரில் ஒரு பாதுகாப்பு வீரர் வீரமரணம் ▪️ஏப்ரல் 22: ராஜௌரியில் அரசு ஊழியர் கொல்லப்பட்டார் ▪️ஜூன் 9: கத்ரா-ரியாசியில் யாத்திரீகர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் ▪️ஜூன் 11: பதர்வா சோதனைச்சாவடி மீது தாக்குதல் ▪️ஜூன் 11-12 இரவு: கத்துவாவில் தாக்குதல்; CRPF வீரர் வீரமரணம் ▪️ஜூன் 12: தோடாவில் காவல்துறை குழு மீது பயங்கரவாதத் தாக்குதல்; ஒருவர் வீரமரணம் ▪️ஜூலை 6: குல்காம் மோதலில் 2 வீரர்கள் வீரமரணம் ▪️ஜூலை 7: ராஜௌரியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதத் தாக்குதல் ▪️ஜூலை 8: ▪️கதுவாவில் 5 வீரர்கள் வீரமரணம் ▪️ஜூலை 10: நௌஷேராவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி ▪️ஜூலை 16: ராணுவ கேப்டன் உட்பட 4 வீரர்கள் வீரமரணம் ▪️ஜூலை 17: சத்தீஸ்கரின் பிஜாப்பூரில் நடந்த நக்சல் தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம், 4 பேர் காயம் ▪️ஆகஸ்ட் 10: அனந்த்நாக் பயங்கரவாத மோதலில் 2 வீரர்கள் வீரமரணம், 3 பேர் காயம் ▪️செப்டம்பர் 12: பாரமுல்லா மோதலில் ஒரு வீரர் வீரமரணம் ▪️செப்டம்பர் 14: கிஷ்த்துவார் தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம் ▪️செப்டம்பர் 10: இந்தியா-வங்கதேச எல்லையில் நடந்த பயங்கரவாத மோதலில் ஒரு BSF வீரர் வீரமரணம் https://x.com/Mayur52974592/status/2050640395718328622?s=20 #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - MURDERER Or DEMOCRACY In INDIA देश बचाओ तानाशाहहटाओं 1 MURDERER Or DEMOCRACY In INDIA देश बचाओ तानाशाहहटाओं 1 - ShareChat
🗞️📰 மம்தா பானர்ஜி தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைந்த பாஜகவினர்... #அண்மை #AlertNews #humen #EVMHackChallenge #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - தந்த THANTHI Tv 66 கவுன்டிங் மையத்தில் Vne36 குற்றச்சாட்டு கார்கள் கொடி 6LLQW பானர்ஜியும் மம்தா திரிணாமுல் கட்சியின் தலைவர் காங் , பாஜகவின் சுவேந்து அதிகாரியும் எதிர்க்கட்சித் தலைவரான பவானிபூர் தொகுதியில் திரிணாமுல் நேருக்கு நேர் மோதும் வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு. கட்சியினர் மெஷின்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் EVM மையத்திற்கு உள்ளே கார்கள் பாஜக கொடி 2 கட்டிய எவ்வித தடையுமின்றி உள்ளே சென்றதாகவும் கேள்வி அப்புறப்படுத்தியதாகவும் கேட்ட தங்களை பாதுகாப்பு படை குற்றச்சாட்டு  நாளை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு 03.052026 IHAIIHIINEIV THANTHITV | தந்த THANTHI Tv 66 கவுன்டிங் மையத்தில் Vne36 குற்றச்சாட்டு கார்கள் கொடி 6LLQW பானர்ஜியும் மம்தா திரிணாமுல் கட்சியின் தலைவர் காங் , பாஜகவின் சுவேந்து அதிகாரியும் எதிர்க்கட்சித் தலைவரான பவானிபூர் தொகுதியில் திரிணாமுல் நேருக்கு நேர் மோதும் வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு. கட்சியினர் மெஷின்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் EVM மையத்திற்கு உள்ளே கார்கள் பாஜக கொடி 2 கட்டிய எவ்வித தடையுமின்றி உள்ளே சென்றதாகவும் கேள்வி அப்புறப்படுத்தியதாகவும் கேட்ட தங்களை பாதுகாப்பு படை குற்றச்சாட்டு  நாளை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு 03.052026 IHAIIHIINEIV THANTHITV | - ShareChat
பத்து ஆண்டுகளில் நாங்கள் செய்த அளவுக்கு 70 ஆண்டுகளில் யாரும் செய்ததில்லை" - சௌக்கிதார். ஆமாம்.. இவர் சொன்னது 100% உண்மை. வரலாற்றில் முதல் முறையாக பங்களாதேஷை விட இந்தியருக்கு வருமானம் குறைவு.. கென்யா போன்ற ஏழை நாட்டில் உதவி கேட்டு கையேந்தும் நிலை போல 70 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டதே இல்லை... BSNL, HAL போன்ற அரசு துறை நிறுவனங்கள் இந்த பத்து ஆண்டுகளில் நலிந்ததை போல 70 ஆண்டுகளில் நடந்ததே இல்லை. ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைவர் இறந்தது 70 ஆண்டுகளில் இதுவரை நடந்ததில்லை. 70 ஆண்டுகளில் இவ்வளவு படிக்காத அமைச்சர்கள் இருந்ததே இல்லை. இந்த ஐந்து ஆண்டுகளில் உயர்ந்த அளவு விவசாயிகளின் மீதான கடன் சுமை (8 லட்சம் கோடியிலிருந்து 15 லட்சம் கோடி) 70 ஆண்டுகளில் உயர்ந்ததே இல்லை. பிரதமரின் 700 தேர்தல் பேரணிகள் 70 ஆண்டுகளில் நடக்கவே இல்லை. 70 ஆண்டுகளில் 8,458 கோடிகள் பிரதமர் செலவு இதுவரை நடந்ததில்லை. மதவெறுப்பு அதிகரித்துள்ளது இந்த ஐந்து ஆண்டுகளில் 70 ஆண்டுகளில் அதிகரிக்கவே இல்லை. இந்த பத்து ஆண்டுகளில் மாற்றப்பட்ட கிராமங்களின் பெயர்கள் 70 ஆண்டுகளில் மாற்றப்படவில்லை. இறுதியாக இவ்வளவு பொய்கள் எந்த பிரதமரும் 70 வருடங்களில் சொல்லவில்லை. ... (#Ethiraj #Madhavan #Madhavan) #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - NEws18 इंडिया news1Bindia com NEws18 इंडिया news1Bindia com - ShareChat
பெரியார் படத்தின் மீது, சிறுநீர் கழிக்கப்படுகிறது; செருப்பால் அடிக்கப்படுகிறது. இன்று அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைவார்; அவமானப்பட மாட்டார். அவரே சொன்னார்... 'பொதுத் தொண்டுக்கு வந்தவன், மானம் - அவமானம் பார்க்க முடியாது; மானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது!’ கடலூர் மஞ்சக்குப்பத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை நோக்கி கைவண்டியில் பயணித்துக்கொண்டு இருந்தார் பெரியார். நள்ளிரவு நேரம். பகலிலேயே அவர் மீது கல், சாணி விழும். அனைத்தையும் பார்த்தும் பயம் இல்லாமல்தான் பேசுவார். ராத்திரி நேரத்தில் பயணம் செய்யும்போது சும்மா இருப்பார்களா? திடீரென, கயிறுபோல ஏதோ ஒன்று அவர் மேல் விழுந்தது. அது... பச்சைப் பாம்பு. எடுத்துத் தூக்கிப் போட்டுவிட்டு, வண்டியை வேகமாகச் செலுத்தச் சொன்னார். கொஞ்சம் தூரம் போனதும், வண்டியைத் திருப்பச் சொல்லி வந்த வழியே மீண்டும் போகச் சொன்னார். வண்டியை ஓட்டுபவருக்கு ஒன்றும் புரியவில்லை; உடன் வந்தவர்களுக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. வண்டியைவிட்டு இறங்கிய பெரியார், காலால் தடவியவாறு இருட்டில் எதையோ தேடினார். ஒரு செருப்பு கிடந்தது. அதை கையில் எடுத்த பெரியார், 'அதுதானே பார்த்தேன்! நான் போகும்போது என் மேல ஒரு செருப்பு விழுந்தது. ஒரு செருப்பை வீசினவரால் இன்னொரு செருப்பை வெச்சுட்டு பிரயோஜனம் இல்லை. அதனால் அந்த இடத்துலதானே போட்டுட்டுப் போயிருக்கணும். அதை எடுக்கத்தான் வந்தேன்’ எனச் சொன்னார். அவர் மீது செருப்பு வீசப்பட்டதே மற்றவர்களுக்கு அப்போதுதான் தெரியும். 30 ஆண்டுகள் கழிந்தது. செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் பெரியாருக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது. 'செருப்பொன்று வீசினால் சிலையொன்று முளைக்கும்’ என கவிஞர் கருணானந்தம் எழுதினார். பெரியாரின் 'ராசி’ இறப்புக்குப் பிறகும் செருப்பு மாலைகள்! ஈரோட்டில் மளிகைக்கடை மண்டிவைத்து வெறும் ராமசாமி நாயக்கராக செல்வத்தில் புரண்டு கிடக்காமல், அவர் தலையெழுத்து... தமிழர்களுக்காக இரவும் பகலும் வெயிலிலும் மழையிலும் அலைந்து, குடல் இறக்கம் காரணமாக மாட்டு வயிறுபோல தொங்கிய தன் வயிற்றைத் தூக்கிக்கொண்டு திரிந்து, சிறுநீர் கழிக்க முடியாத நிலையிலும் மூத்திரச் சட்டியுடன் மேடையில் அமர்ந்து, சிறுநீர் பிரியும்போதெல்லாம் 'அம்மா... அம்மா...’ என மரண அவஸ்தைப்பட்டு, அந்தக் கிழவன் பாடுபட்டதன் வினை என்ன தெரியுமா? அவரது படத்துக்கு ஓர் இளைஞர் செய்கிறார் சிறுநீர் அபிஷேகம்! 'உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான்’ எனச் சொன்னவர் பெரியார். சாதியை எதுவெல்லாம் காப்பாற்றியதோ அதையெல்லாம் எதிர்த்து பிரசாரம் செய்தார். மதம், சாஸ்திரம், கடவுள் எதிர்ப்புக் கருத்துக்களை அவர் அதிகம் பேசியது அதனால்தான். 'எனக்கு கண்ணை உறுத்திக்கொண்டு இருப்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இழிதன்மைகள்தான். அவர்களைச் சுதந்திரம் அடையச் செய்வதே என் கண் நோய்க்கான தீர்வு’ என்பதைத் தெளிவாகச் சொன்னவர் அவர். அந்த லட்சியத்துக்காகப் பேசியவர்; போராடியவர். அதில் சிறுபகுதிதான் கடவுள் மறுப்பு. 'சாதியை மதம் காப்பாற்றுகிறது. மதத்தைக் கடவுள் படைத்தார் என்றால், அப்படிப்பட்ட கடவுளும் மதமும் தேவையா?’ என்றே அவர் கேட்டார். கடவுள் மறுப்பு வாசகங்களை, தன் சிலைக்குக் கீழே செதுக்கிவைத்திருக்கச் சொன்னதே, அவரது கிண்டலான எதிர்வினைதான். 'சும்மா சிலையை மட்டும் வைத்தால் சில ஆண்டுகளுக்குப் பின், இவர் ஏதோ சாமியார்போல என நினைத்து மாலை போட்டுக் கும்பிட ஆரம்பிச்சுருவான். அப்படி ஆகிவிட கூடாதுனுதான் இப்படி எழுதச் சொன்னேன்’ என்றார். கடவுள் இல்லை என நா தழும்பேறி நாத்திகத்தை பிரசாரம் செய்த பெரியார், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் நிச்சயம் கவனிக்க வேண்டியது. தான் நடத்திய அநாதை இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பேசிக்கொண்டு இருந்தார். கடவுள் வாழ்த்து என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, 'உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?’ என பெரியாரிடம் கேட்டார். 'ஆதரிக்க ஆள் இல்லாத அநாதைப் பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை. வயதுவந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி’ எனச் சொன்ன பண்பு, இன்று தமிழ்ச் சமூகத்திடம் இருக்கிறதா? 'என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு’ என்பதுதான் பெரியாரின் நடத்தை. தனது கருத்துக்கு எதிரானவர்கள் அனைவரையும் தன்னைவிட உயர்வாக மதித்தவர் அவர். சைவ நெறியாளரான மறைமலை அடிகளுக்கும் பெரியாருக்கும் கடுமையான மோதல்கள் நடந்தன. சைவ சமயக்கூட்டத்தில் இவரது ஆட்களும், சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் சைவ சமயத்தவரும் மோதிக்கொள்வார்கள். ஒருகட்டத்தில் இரண்டு இயக்கத்தவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டது. மறைமலை அடிகள், பெரியாருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதை 'திராவிடன்’ இதழில் பிரசுரிக்கச் சொன்னார் பெரியார். ஆசிரியர் குழுவினர், 'மன்னிப்புக் கடிதம்’ எனத் தலைப்பிட்டு பிரசுரித்துவிட்டார்கள். துடித்துப்போன பெரியார், 'இந்தத் தலைப்புக்காக நிபந்தனை இல்லாமல் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்’ எனப் பகிரங்கமாகப் பணிந்தார். சைவப்பழமான திரு.வி.க-வுடன் பெரியாரின் நட்பு உருக்கமானது. 'நான் செத்தால் அழுவதற்கு என நீங்கள்தான் இருக்கிறீர்கள்’ என இறப்புக்குச் சில நாட்களுக்கு முன் பெரியாரிடம் சொன்னவர் திரு.வி.க. அவர் மறைந்தபோது தனது தொண்டர்களுடன் மயானக் கரைக்கு வந்தார் பெரியார். திராவிடர் கழகத்தினர், திரு.வி.க-வுக்குக் கொள்ளி வைக்கத் தயாராக இருந்தனர். அப்போது தமிழ் அறிஞர் களான அ.ச.ஞானசம்பந்தனும் மு.வரதராசனாரும் வந்து, 'திரு.வி.க. எங்கள் இருவரைத்தான் கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார்’ எனச் சொன்னார்கள். 'சரி’ என, தன் தொண்டர்களை அமைதியாக இருக்கச் சொன்னார் பெரியார். 'திருவாசகத்தில் சிவபுராணத்தைப் பாடப்போகிறோம்’ என அ.ச.ஞா சொன்னார். 'அப்படியே செய்யுங்க’ எனச் சொல்லிவிட்டு அவர்கள் பாடும்போது எழுந்து நின்றவர் பெரியார். கடவுளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் பெரியாரைச் சந்திக்க நினைக்கிறார் குன்றக்குடி அடிகளார். ஈரோடு வந்த அடிகளார், பெரியாரைச் சந்திக்க வருவதாகச் சொல்கிறார். 'நீங்கள் மகா சந்நிதானம். என்னைத் தேடிவரக் கூடாது. நானே வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு பெரியார் சென்றார். அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார் அடிகளார். 'மகா சந்நிதானம் எழுந்து நிற்கக் கூடாது’ எனச் சொல்லிவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமரப் போகிறார். 'இந்த இருக்கையில் இரண்டு பேர் உட்காரலாம். என் அருகில் உட்காருங்கள்’ என அடிகளார் சொல்ல, 'சந்நிதானத்துக்குச் சமமாக நான் உட்காரக் கூடாது’ என மறுத்தார். இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். 'சாதியை உங்கள் கடவுளும் மதமும் ஒழிக்கவில்லையே’ என பெரியார் சொல்ல, 'சாதியை கடவுள் உருவாக்கவில்லை’ என அடிகளார் சொல்ல, 'ஆனால், உங்கள் கடவுள் அதைத் தட்டிக் கேட்கவில்லையே’ என பெரியார் சொல்ல... அந்தச் சந்திப்புதான் இருவரையும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் கரம் கோக்கவைத்தது. அப்போது பெரியார் சொல்லி அடிகளார் குலுங்கிச் சிரித்த ஜோக்: 'எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’ அடிகளாரைப் பார்க்க, அவரது குன்றக்குடி மடத்துக்கே பெரியார் ஒருமுறை போனார். அவருக்கு வைதீகமாக பூரணக் கும்ப மரியாதை தரப்பட்டது. அடிகளார், மரியாதையின் அடையாளமாக விபூதியை எடுத்துப் பூசினார். பெரியார் அழிக்கவில்லை. சில நாட்கள் கழித்து பெரியாரிடம் ஒரு தொண்டர் கேட்டபோது, 'விபூதியை நான் எடுத்துப் பூசிக்கொள்ளவில்லை. அடிகளார்தான் பூசிவிட்டார். அப்போது தலையைத் திருப்புவது அவரை அவமதிப்பதுபோல் ஆகாதா?’ எனக் கேட்டார். அடுத்தவர் உணர்வுக்கு மரியாதை கொடுத்து நடந்தவரின் படத்தை இன்று சிறுநீரால் அவமதிக்கிறார்கள். பிராமண துவேஷி என அவர் தூற்றப்படுகிறார். உண்மையில், அவர் சாதி துவேஷிதானே தவிர, குறிப்பிட்ட ஒரு சாதியின் துவேஷி அல்ல. எல்லா சாதிகளையும் அதன் ஆணவத்தையும் கண்டித்தவர். சிலர் 'தங்களை ஆண்ட பரம்பரை’ எனச் சொன்னபோது, 'பட்டாளத்தில் இருந்த எல்லாரும் ஆண்ட பரம்பரைதான்’ என நெத்தியடி அடித்தவர். 'பறையர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் போகாது’ என்றவர். அனைத்துக்கும் மேலாக தான் சார்ந்த சமூகத்தையே விமர்சிக்கத் தயங்காதவர். ஒருவன் தான் பிறந்த மதத்தை, தான் பிறந்த சாதியை விமர்சிப்பதற்குத்தான் வீரம் வேண்டும். நாயக்க மன்னர்களின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒரு கிராமத்தில் மரியாதைக் குறைவாக நடத்தியபோது, 'இரண்டு பேருக்கும் என்ன வித்திசாயம்?’ எனக் கேட்டவர். 'இந்து’ கஸ்தூரி சீனிவாசன், நியூஸ் ஏஜென்சியை ஆரம்பித்தபோது பணம் முதலீடு செய்தார். சிம்சன் அனந்த ராமகிருஷ்ணன் இயந்திரக் கலப்பையை உற்பத்தி செய்தபோது பார்க்கப் போனார். மகா பெரியவர் காஞ்சி சந்திரசேகர ஸ்வாமிகள் மயிலாப்பூருக்கு வந்தபோது, திராவிடர் கழகத்தினர் அங்கு குழும, ரசபாச சூழல் ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் அந்த இடத்துக்கு வந்த பெரியார், 'பெரியவருக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டியது உங்கள் வேலை’ என தி.க-வினருக்கு அறிவுறுத்தினார். கவியோகி சுத்தானந்த பாரதி தனது வீட்டுக்கு வந்தபோது, பூட்டப்பட்டுக் கிடந்த பூஜை அறையைத் திறந்துவிட்டு, தட்டில் பூ கொண்டுவைத்தவர் பெரியார். வடலூர் சத்தியஞான சபைக்கு வந்தார். ஒருகட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்துகொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, 'கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’ என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். 'நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’ என மறுத்த மாண்பாளர். அவரது படத்துக்கா இன்று சிறுநீர் கழிப்புகள்? அந்தக் காலத்தில் மாலி என்பவர் 'கடவுள் எங்கே?’ என்ற தலைப்பில் நாடகம் நடத்தினார். பெரியாரைக் கடுமையாகத் திட்டிய நாடகம் அது. ம.பொ.சி-யின் நண்பர் அவர். பெரியாரைச் சந்திக்கப் போன ம.பொ.சி., தன்னோடு மாலியையும் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தினார். ' 'கடவுள் எங்கே?’ நாடகம் போட்ட பையனா நீ?’ எனக் கேட்டார். 'உங்களை எதிர்த்து அதில் நிறைய வசனங்கள் வருது’ என்றார் மாலி. 'அதனால் என்ன... உன் கருத்தை நீ சொல்ற... என் கருத்தை நான் சொல்றேன். இதுல தப்பு ஒண்ணும் இல்லை. மக்கள் முடிவு பண்ணிப்பாங்க’ என இந்தச் சமூகத்தில் தனக்கு எவ்வளவு உரிமையை எடுத்துக்கொண்டாரோ, அதே உரிமையை தனது கொள்கை எதிரிக்கும் வழங்கினார். ஆனால், அவர் எந்த மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுத்தாரோ அது அவருக்குத் திரும்பக் கிடைக்கவில்லை. அதைப் பெரியார் எதிர்பார்த்தவரும் அல்ல. 'மனித ஜீவனிடம் நன்றியை எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மை’ எனச் சொன்ன அவர், 'எனக்கு யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்றும் சொன்னார். ஏனெனில், அவர் பெரியார்! - Vikatan EMagazine #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - தந்தை பெரியாா் தந்தை பெரியாா் - ShareChat
அசோக் பவார் (நீல நிற துண்டு அணிந்தவர்): "நான் ராமர் பக்தர்களுக்காக அந்த கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் காட்டினேன், ஆனால் இந்துத்துவாவினர் எனக்கு ஒருபோதும் உதவவில்லை. என்னால் எந்த முன்னேற்றமும் அடைய முடியவில்லை. இன்றும் நான் அகமதாபாத்தில் நடைபாதையில் சம்பாதிக்கிறேன், இரவில் ஒரு விடுதியில் (Hotel) சாப்பிடுகிறேன், ஒரு ஆட்டோவில் தூங்குகிறேன்." ​நேர்காணல் செய்பவர்: "இருப்பதற்கு வீடு இல்லை?" ​அசோக் பவார்: "இருப்பதற்கு வீடில்லை, தூங்குவதற்கு படுக்கை இல்லை. எனது கடவுள் தான் என்னைக் காக்கிறார், இதுவரை அவர் தான் என்னைப் பார்த்துக்கொள்கிறார். இதுதான் நிலைமை." ​நேர்காணல் செய்பவர்: "இருப்பதற்கு வீடில்லை, சாப்பிடுவதற்கு சரியான உணவு இல்லை." ​அசோக் பவார்: "ஆமாம், சாப்பிடுவதற்கு பணம் இல்லாத போது நான் 'லங்கரில்' (இலவச உணவு) சாப்பிடுவேன். இரவில் ஆட்டோவில் தூங்குகிறேன்." ​நேர்காணல் செய்பவர்: "பாருங்கள், 2002 கோத்ரா சம்பவத்தின் போது இவர்தான் இந்துத்துவா-வின் 'போஸ்டர் பாய்'-ஆக இருந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்துத்துவா-வின் முகமாக மாறும் போது அவர்களின் நிலைமை இப்படித்தான் இருக்கும்." ​அசோக் பவார்: "நான் தலித் என்று என்னை யாரும் மாற்றவில்லை, அந்த நேரத்தில் நான் என்னை ஒரு இந்துவாகவே கருதினேன்." ​நேர்காணல் செய்பவர்: "இப்போது நீங்கள் என்னவாக கருதுகிறீர்கள்?" ​அசோக் பவார்: "இப்போது நான் என்னை இந்துவாக கருதவில்லை. ஏனென்றால் இந்து மதத்தில் எங்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஊடகங்கள் என்னை ஒரு இந்துத்துவா 'போஸ்டர் பாய்'-ஆக மாற்றிவிட்டது. அதன் மூலம் நான் ஒரு இந்து முகமாகவோ அல்லது குஜராத்தின் முகமாகவோ மாறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குஜராத்தில் நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை." ​நேர்காணல் செய்பவர்: "பாபாசாகேப்பை (அம்பேத்கர்) மதிக்கிறீர்களா?" ​அசோக் பவார்: "நிச்சயமாக மதிக்கிறேன். பாபாசாகேப் தான் நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கினார், எங்களுக்கு உரிமைகளை வழங்கினார். ஆனால் இன்றும் பாபாசாகேப் வழங்கிய மத மற்றும் சமூக உரிமைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஊடகங்கள் என்னை இந்து முகமாக மாற்றியது, ஆனால் இந்து அமைப்புகள் என்னை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. ராமநவமிக்கோ அல்லது ஹனுமன் ஜெயந்திக்கோ என்னை ஒருபோதும் அழைத்ததில்லை." ​இந்த உரையாடல் மூலம் அசோக் பவார் தனது தற்போதைய வறுமை நிலை குறித்தும், இந்து அமைப்புகளால் தான் புறக்கணிக்கப்பட்டது குறித்தும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - JIS 8 B ? $ ೦ JIS 8 B ? $ ೦ - ShareChat
நான் தவெகவுக்கு வாக்கு அளித்தேன். ஆனால், அனைத்துக் கணிப்புகளிலும் அவர்களுக்கு மூன்றாம் இடம்தான்.. அதுவும் ஒரு சில இடங்கள்தான் என்கிறார்களே? ஏன் அண்ணா? என்று ஒரு தங்கை கேட்டு இருக்கின்றார். அவரை அண்மையில் நேரில் சந்தித்தேன். அவருக்காக ஒரு சிறு விளக்கம். அன்புத் தங்கையே, ஒரு ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்கள் நினைப்பதற்குக் காரணங்கள் வேண்டும். அந்த ஆட்சி கொடூரமாக, மக்களுக்கு எதிராக அமைந்து, அதை எதிர்த்துப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று இருக்க வேண்டும். அண்மையில் நேபால் நாட்டில், ஆட்சிக்கு எதிரான புரட்சி ஏற்பட்டது. அது ஜென் தலைமுறை என்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோர், 2000 க்குப் பிறகு பிறந்தவர்கள். அவர்களுக்கு முந்தைய வரலாறு எதுவுமே தெரியவில்லை. நேபால் ஒரு இந்து நாடாக இருந்தது. அரசின் மதமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது அப்படி இல்லை என்றாலும் மக்களில் 100 க்குத் 95 விழுக்காட்டினர் இந்துக்கள். அது ஒரு மூட நம்பிக்கை நாடு. சமவெளி கிடையாது. இமயமலைச் சரிவுகளில் உள்ளது. சுற்றுப் புறச் சூழலைக் கெடுக்க முடியாது. எனவே அங்கே பெருந்தொழிற்கூடங்கள் கிடையாது. அதனால் முன்னேற்றம் இல்லை. மக்கள் வறுமையில் உழல்கின்றார்கள். சலிப்புற்று இருந்தார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் தமிழ்நாடு அப்படி அல்ல. அனைத்துத் துறைகளிலும் இந்தியாவில் முதல் இடம் தமிழ்நாடு என ஒன்றிய பாஜக அரசு அறிவித்துக் கொண்டே இருக்கின்றது. உலகத்திலேயே 1 இலட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்தில் 560 பொறிஇயல் கல்லூரிகள் ஏற்பட்டது தமிழ்நாட்டில்தான். இன்றைக்கு 100 கல்லூரிகளை மூடினாலும், 450 பொறிஇயல் கல்லூரிகள் உள்ளன. இப்படி அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பாவில் கூடக் கிடையாது. பல நூறு ஆண்டுகளாக உழவுத் தொழிலை மட்டுமே செய்து, ஒரு வேளைச் சாப்பாட்டுக்கும் வழி இல்லாமல் இருந்த, இலட்சக்கணக்கான உழவர்களின் பிள்ளைகள் 1990 களுக்குப் பிறகு பொறிஇயல் பட்டம் பெற்று, உலகம் முழுமையும் பறக்கின்றார்கள். சில இலட்சம் பேர் அமெரிக்காவில் குடி உரிமை பெற்று விட்டார்கள். அடுத்தது மருத்துவம். இன்று தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உயர்தர அறுவை மருத்துவம் ஒரு பைசா கட்டணம் இன்றி அனைத்துத் தரப்பு ஏழைகளுக்கும் கிடைக்கின்றது. இந்தியாவில் 81 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. இதைவிட இரண்டரை மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 40 கூடக் கிடையாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பொருள் வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கின்றது. இது 75 ஆண்டுக்கால இந்திய வரலாற்றில் முதன்முறை. வேறு எந்த மாநிலமும் சாதிக்காத ஒன்று. அன்புத் தங்கையே இப்படி ஆயிரக்கணக்கான புரட்சிகளை, திராவிட இயக்கம் நிகழ்த்தி இருக்கின்றது. உங்களுக்கு 28 வயது. திராவிட இயக்கத்தின் வரலாறு உங்களுக்கு அறவே தெரியவில்லை. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தத் தமிழ்நாடு எப்படி இருந்தது? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா நிகழ்த்திய சமூக நீதிப் புரட்சியை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். திரைப்பட நடிகனிடம் உங்கள் மூளையை அடகு வைக்கக்கூடாது. அது உங்கள் அறியாமையைக் காட்டுகின்றது. சொல்லப்போனால், நீங்கள் ஒரு பெண் என்பதால், ஒரு நடிகன் உங்களுக்குக் கனவு நாயகனாக இருக்கின்றான் என்பதே உண்மை. இப்படிச் சொல்வ்தற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது. அவரை அரசியல் தலைவராக நீங்கள் ஏன் ஏற்றுக் கொண்டீர்கள்? என்பதற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்ல முடியுமா? நீங்கள் பணக்காரர். நல்ல வசதி படைத்தவர். உங்களுக்கு மாதம் 1000 ரூபாய் தேவை இல்லை. ஆனால் சுமார் 1.5 கோடிப் பெண்களுக்கு மாதந்தோறும் அந்தத் தொகை கிடைக்கின்றது. . கட்டணம் இல்லாமல் பேருந்துகளில் போகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினருக்கு நன்றி உணர்வு உண்டு. அவர்கள் திமுகவுக்குத்தான் வாக்கு அளித்து இருக்கின்றார்கள். லஞ்சம், ஊழல் என்று சிலர் பேசுகிறார்கள். இப்போது தமிழ்நாட்டில் அது ஒரு பிரச்சினையே இல்லை. எனக்கு எவ்வளவு பணம் தருவாய்? என்றுதான் தமிழர்கள் கேட்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் எந்தக் கட்சிக்காரன் அழைத்தாலும், பணத்திற்காக அவர்கள் பின்னாலேயே வெயிலில் அலைகின்றார்கள். அவர்களுக்குப் பணம் கொடுத்துக் கொடுத்துத்தான் நிறைய கட்சிக்காரர்கள், தங்கள் சொத்துகளை விற்று, கடன்காரர்கள் ஆகி, தெருவுக்கு வந்து விட்டார்கள். அதுதான் தமிழ்நாட்டில் உண்மை நிலவரம். இதுபோல இன்னும் பல ஆயிரம் பக்கங்கள் எழுத என்னால் முடியும். தொடர்ந்து என் பதிவுகளைப் படியுங்கள். அறிவைக் கூர் தீட்டுங்கள். கொடைக்கானல் பயணத்தின்போதே அமைதியாக இருக்க என்ன வழி? என்று நீங்கள் கேட்டீர்கள். இந்த உலகம் 460 கோடி ஆண்டுகளாகச் சுற்றுகிறது. இந்து முஸ்லிம் கிறித்து என எல்லாக் கடவுளையும் மனிதன் படைத்து 2000 ஆண்டுகள்தான் ஆகின்றன. அப்படிக் கல்வி அறிவு அற்ற முன்னோர்கள் படைத்த கடவுளைக் காப்பாற்றத்தான் மக்கள் வெறிகொண்டு போராடுகின்றார்கள். அதனால்தான் இந்த உலகில் சண்டைகள் கடவுளின் பெயரால் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். கடவுள் பெயரைச் சொல்லி திருடர்கள் உங்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள். நீங்கள் ஏமாந்துகொண்டே இருக்கின்றீர்கள். அப்படி நீங்கள் கடவுள் இடம் மூளையை அடகு வைக்காதீர்கள். பெரியாரைப் படியுங்கள். குறிப்பாக பெரியார் இன்றும் என்றும் என்ற ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமாவது படியுங்கள். உங்களுக்கு என் மகள் வயது. அவருக்குக் கடவுளைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே, லண்டனில் படித்து ஆராய்ச்சியாளராக இருக்கின்றார். அவரைப் போல நீங்களும் கடவுளிடம் இருந்து மூளை விடுதலை பெறுங்கள். உலகம் சுற்றுங்கள். உலகப் பயணி, வரலாற்றுப் பதிவாளர் அருணகிரி 30 ஏப்ரல் 2026 முகநூல் மீள் பதிவு #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - Mhh hillf;li Mhh hillf;li - ShareChat