ShareChat
click to see wallet page
search
பொதுவாக - ஞாயித்துக்கிழமை பதிந்தால் அவ்வளவாக ரீச் ஆகாது. இருந்தும் துணிந்து .... 😅 உண்மையில் மத்தியில் ஆளுபவர்கள் மந்திரிப் பதவிக்கு மட்டுமல்ல- மனிதர்களுக்கே தகுதியானவர்களா தெரியவில்லை. என்னவொரு பொய்! எப்படியெல்லாம் கதையளக்கிறார்கள் ! “கச்சா எண்ணெய்… எரிவாயு என்று நாட்டில் எந்தப் பிரச்னையும் கிடையாது” எப்ஸ்டீன் ஃபைல்ஸ் புகழ் மந்திரி ஹர்தீப் சிங் புரி அடித்து விடுகிறார். எப்போது? தேர்தல் முடிந்த கையோடு வணிக எல்பிஜி (19 கிலோ) சிலிண்டர் விலையை ஒரு யூனிட்டுக்கு 993 ரூபாய் அளவுக்கு உயர்த்திவிட்டு வாயாடுகிறார் மந்திரி. கடந்த இரண்டு மாதங்களில் இது மூன்றாவது விலை ஏற்றம். வெறும் 60 நாட்களில் ரூ.1,300க்கும் அதிக உயர்வு. மே 1, 2026 நிலவரப்படி, புது தில்லியில் ஒரு 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை 3,071 ரூபாய்.50 காசுகள். சென்னையில் 3,237 ரூபாய். காசுகள். எரிபொருள் தட்டுப்பாடு என்று தன் விமான சேவை பலவற்றை ரத்து செய்வதாக ஏர் இண்டியா நேற்று அறிவித்திருக்கிறது. ஒரு சாதாரண டீயின் விலை 15 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. சிங்கிள் ரூம் டபுள் ரூம் ஏஸி ரூம் வாடகை எரிவாயு தட்டுப்பாட்டால் உயர்த்தப்படுவதாக தனியார் விடுதி உரிமையாளர்கள் சங்கம் நேற்று சொல்லிவிட்டது. உயர்தர உணவுக் கடைகளில் 80 ருபாய் பொங்கல் 115 ரூபாய் 150 ரூபாய் தோசை 210 ரூபாய் உயர்த்தப்படும் என்றிருக்கிறார்கள் ஓட்டல் சங்கத்தார். பாஜக மந்திரி எந்த உலகத்திலிருக்கிறார்? எந்த நாட்டைக் குறித்து கதைக்கிறார்? நேற்று டிவி பார்த்துக்கொண்டிருக்கிறேன். “என்ன எலெக்சன் முடிந்த கையோடு சிலிண்டர் விலையை ஏற்றிவிட்டீர்கள்” என்று கேட்ட பத்திரிகையாளரிடம் "பாஜக எது செய்தாலும் மக்கள் நன்மைக்குத்தான்" என்கிறார் பாஜக நயினார் நாகேந்திரன். மக்கள் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறார்கள் முட்டாள்கள் என்று நினைக்கும் ஆணவம் எங்கிருந்து வந்தது? எண்ணெய்க் கையிருப்பிலும் பொய் சொல்லுகிறது அரசு. ஒவ்வொரு நாடும் 90 நாளுக்கு கச்சா எண்ணெயைக் கையிருப்பு வைத்திருக்க வேண்டுமென்று பரிந்துரைக்கிறது IEA - சர்வதேச எரிசக்தி முகமை. ஆனால், அதை விட மிக மிகக் குறைவாக, 10 நாள்கூட போதாத அளவுக்குத்தான் கையிருப்பு வைத்திருக்கிறது இந்தியா. "சீனா தனது சேமிப்புக் கிடங்குகளை கச்சா எண்ணெயால் நிரப்புகிறது. இந்தியாவின் எண்ணெய்க் கிடங்குகளோ வெறும் வாய்ச்சவடால் அறிக்கைகளால் நிரம்பிக் கிடக்கிறது" இப்படிச் சொல்லியிருக்கிறார் உலக வங்கியின் ஆலோசகர் சல்மான் அனீஸ் சோஸ். இனி - வீட்டு சிலிண்டர் கதி என்ன? திருப்பரங்குன்றத்துப் பெருமானைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்! 😞 படங்களில் - சல்மான் சோஸும் நாமும். #highlight #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - e e - ShareChat