ShareChat
click to see wallet page
search
நான் தவெகவுக்கு வாக்கு அளித்தேன். ஆனால், அனைத்துக் கணிப்புகளிலும் அவர்களுக்கு மூன்றாம் இடம்தான்.. அதுவும் ஒரு சில இடங்கள்தான் என்கிறார்களே? ஏன் அண்ணா? என்று ஒரு தங்கை கேட்டு இருக்கின்றார். அவரை அண்மையில் நேரில் சந்தித்தேன். அவருக்காக ஒரு சிறு விளக்கம். அன்புத் தங்கையே, ஒரு ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்கள் நினைப்பதற்குக் காரணங்கள் வேண்டும். அந்த ஆட்சி கொடூரமாக, மக்களுக்கு எதிராக அமைந்து, அதை எதிர்த்துப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று இருக்க வேண்டும். அண்மையில் நேபால் நாட்டில், ஆட்சிக்கு எதிரான புரட்சி ஏற்பட்டது. அது ஜென் தலைமுறை என்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோர், 2000 க்குப் பிறகு பிறந்தவர்கள். அவர்களுக்கு முந்தைய வரலாறு எதுவுமே தெரியவில்லை. நேபால் ஒரு இந்து நாடாக இருந்தது. அரசின் மதமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது அப்படி இல்லை என்றாலும் மக்களில் 100 க்குத் 95 விழுக்காட்டினர் இந்துக்கள். அது ஒரு மூட நம்பிக்கை நாடு. சமவெளி கிடையாது. இமயமலைச் சரிவுகளில் உள்ளது. சுற்றுப் புறச் சூழலைக் கெடுக்க முடியாது. எனவே அங்கே பெருந்தொழிற்கூடங்கள் கிடையாது. அதனால் முன்னேற்றம் இல்லை. மக்கள் வறுமையில் உழல்கின்றார்கள். சலிப்புற்று இருந்தார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் தமிழ்நாடு அப்படி அல்ல. அனைத்துத் துறைகளிலும் இந்தியாவில் முதல் இடம் தமிழ்நாடு என ஒன்றிய பாஜக அரசு அறிவித்துக் கொண்டே இருக்கின்றது. உலகத்திலேயே 1 இலட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்தில் 560 பொறிஇயல் கல்லூரிகள் ஏற்பட்டது தமிழ்நாட்டில்தான். இன்றைக்கு 100 கல்லூரிகளை மூடினாலும், 450 பொறிஇயல் கல்லூரிகள் உள்ளன. இப்படி அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பாவில் கூடக் கிடையாது. பல நூறு ஆண்டுகளாக உழவுத் தொழிலை மட்டுமே செய்து, ஒரு வேளைச் சாப்பாட்டுக்கும் வழி இல்லாமல் இருந்த, இலட்சக்கணக்கான உழவர்களின் பிள்ளைகள் 1990 களுக்குப் பிறகு பொறிஇயல் பட்டம் பெற்று, உலகம் முழுமையும் பறக்கின்றார்கள். சில இலட்சம் பேர் அமெரிக்காவில் குடி உரிமை பெற்று விட்டார்கள். அடுத்தது மருத்துவம். இன்று தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உயர்தர அறுவை மருத்துவம் ஒரு பைசா கட்டணம் இன்றி அனைத்துத் தரப்பு ஏழைகளுக்கும் கிடைக்கின்றது. இந்தியாவில் 81 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. இதைவிட இரண்டரை மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 40 கூடக் கிடையாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பொருள் வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கின்றது. இது 75 ஆண்டுக்கால இந்திய வரலாற்றில் முதன்முறை. வேறு எந்த மாநிலமும் சாதிக்காத ஒன்று. அன்புத் தங்கையே இப்படி ஆயிரக்கணக்கான புரட்சிகளை, திராவிட இயக்கம் நிகழ்த்தி இருக்கின்றது. உங்களுக்கு 28 வயது. திராவிட இயக்கத்தின் வரலாறு உங்களுக்கு அறவே தெரியவில்லை. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தத் தமிழ்நாடு எப்படி இருந்தது? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா நிகழ்த்திய சமூக நீதிப் புரட்சியை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். திரைப்பட நடிகனிடம் உங்கள் மூளையை அடகு வைக்கக்கூடாது. அது உங்கள் அறியாமையைக் காட்டுகின்றது. சொல்லப்போனால், நீங்கள் ஒரு பெண் என்பதால், ஒரு நடிகன் உங்களுக்குக் கனவு நாயகனாக இருக்கின்றான் என்பதே உண்மை. இப்படிச் சொல்வ்தற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது. அவரை அரசியல் தலைவராக நீங்கள் ஏன் ஏற்றுக் கொண்டீர்கள்? என்பதற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்ல முடியுமா? நீங்கள் பணக்காரர். நல்ல வசதி படைத்தவர். உங்களுக்கு மாதம் 1000 ரூபாய் தேவை இல்லை. ஆனால் சுமார் 1.5 கோடிப் பெண்களுக்கு மாதந்தோறும் அந்தத் தொகை கிடைக்கின்றது. . கட்டணம் இல்லாமல் பேருந்துகளில் போகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினருக்கு நன்றி உணர்வு உண்டு. அவர்கள் திமுகவுக்குத்தான் வாக்கு அளித்து இருக்கின்றார்கள். லஞ்சம், ஊழல் என்று சிலர் பேசுகிறார்கள். இப்போது தமிழ்நாட்டில் அது ஒரு பிரச்சினையே இல்லை. எனக்கு எவ்வளவு பணம் தருவாய்? என்றுதான் தமிழர்கள் கேட்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் எந்தக் கட்சிக்காரன் அழைத்தாலும், பணத்திற்காக அவர்கள் பின்னாலேயே வெயிலில் அலைகின்றார்கள். அவர்களுக்குப் பணம் கொடுத்துக் கொடுத்துத்தான் நிறைய கட்சிக்காரர்கள், தங்கள் சொத்துகளை விற்று, கடன்காரர்கள் ஆகி, தெருவுக்கு வந்து விட்டார்கள். அதுதான் தமிழ்நாட்டில் உண்மை நிலவரம். இதுபோல இன்னும் பல ஆயிரம் பக்கங்கள் எழுத என்னால் முடியும். தொடர்ந்து என் பதிவுகளைப் படியுங்கள். அறிவைக் கூர் தீட்டுங்கள். கொடைக்கானல் பயணத்தின்போதே அமைதியாக இருக்க என்ன வழி? என்று நீங்கள் கேட்டீர்கள். இந்த உலகம் 460 கோடி ஆண்டுகளாகச் சுற்றுகிறது. இந்து முஸ்லிம் கிறித்து என எல்லாக் கடவுளையும் மனிதன் படைத்து 2000 ஆண்டுகள்தான் ஆகின்றன. அப்படிக் கல்வி அறிவு அற்ற முன்னோர்கள் படைத்த கடவுளைக் காப்பாற்றத்தான் மக்கள் வெறிகொண்டு போராடுகின்றார்கள். அதனால்தான் இந்த உலகில் சண்டைகள் கடவுளின் பெயரால் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். கடவுள் பெயரைச் சொல்லி திருடர்கள் உங்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள். நீங்கள் ஏமாந்துகொண்டே இருக்கின்றீர்கள். அப்படி நீங்கள் கடவுள் இடம் மூளையை அடகு வைக்காதீர்கள். பெரியாரைப் படியுங்கள். குறிப்பாக பெரியார் இன்றும் என்றும் என்ற ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமாவது படியுங்கள். உங்களுக்கு என் மகள் வயது. அவருக்குக் கடவுளைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே, லண்டனில் படித்து ஆராய்ச்சியாளராக இருக்கின்றார். அவரைப் போல நீங்களும் கடவுளிடம் இருந்து மூளை விடுதலை பெறுங்கள். உலகம் சுற்றுங்கள். உலகப் பயணி, வரலாற்றுப் பதிவாளர் அருணகிரி 30 ஏப்ரல் 2026 முகநூல் மீள் பதிவு #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - Mhh hillf;li Mhh hillf;li - ShareChat