*🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமேன்.🙏🏻🌹*
*ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.*
*அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.*
*உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.*
*யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.*
*ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.*
(திருப்பாடல்கள் 98: 1. 3b-4. 5-6)
*✝️ஜெபிப்போமாக :🛐*
*தூயவர்! தூயவர்! தூயவர்! மூவுலகின் இறைவனாம் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் புகழ்கிறோம். உம்மை ஆராதனை செய்கிறோம். உமக்கு நன்றி கூறுகின்றோம்.*
*தூய்மைமிகு இறைவா! இந்த ஆண்டில் எங்களின் பாவமற்ற வாழ்க்கையினால், நாங்களும் தூயவராக இருக்க அருள் புரிவீராக!*
*தூய வாழ்விற்கான உமது திருச்சட்டத்திலிருந்து, சிறுபொழுதும் நாங்கள் விலகாதிருக்க, தூய ஆவியின் துணையை எப்பொழுதும் உம்மிடம் வேண்டி நிற்கின்றோம்.*
*மாசில்லா மாமரியின் மாசற்ற மைந்தனே! இறைவனின் திரு செம்மறியே! தூய வாழ்விற்குத் தேவையான தூய எண்ணங்கள் மட்டுமே உதிக்கும், தூய உள்ளத்தினை எங்களுக்குத் தந்தருளும்.*
*இறைவா, இன்றைய நாளை நாங்கள் உமக்கு உகந்த முறையில் கழிக்கவும், உம் அன்பை பகிர்ந்தளிக்கும் அன்பின் கருவிகளாக நாங்கள் விளங்கவும் அருள்புரிவீராக!*
*ஆமென்.* #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்


