||श्री:||ஸ்ரீ (969) #ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை நன்கு உய்த்து உணர்ந்து கொள்ளுதல் என்னும் ஒளி விளக்கேற்றி, அவனைத் தேடிக் கண்டுபிடித்து, நன்கு ஆராய்ந்து பயின்று அடியேனுக்கு உரியவனாக ஆக்கிக் கொண்டேன்.
அத்தகைய மாயப்பிரானாகிய எம்பெருமான் திருமால் அடியேனுக்கு எவ்விதக் குறையும் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அடியேனின் உள்ளத்தினுள்ளே புகுந்து மெத்தென நின்றான்.
பின்பு அந்த என் உள்ளத்தினுள்ளேயே வீற்றிருந்தான்.
அதன் பிறகு அடியேனின் உள்ளத்தின் உள்ளேயே பள்ளிகொண்டருளினான்.
அத்தகைய எம்பெருமான் அடியேனிடம் அளவற்ற ஆவலும் அன்பும் கொண்டது என்னே !
பேயாழ்வார் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


