பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
ShareChat
click to see wallet page
@baskar3883
baskar3883
பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
@baskar3883
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
ஸ்ரீ (969)பங்கயற் பூவிற் பிறந்த பாவை நல்லாள் வாழியே! பங்குனியில் உத்தரநாள் பாருதித்தாள் வாழியே! மங்கையர்கள் திலகமென வந்தசெல்வி வாழியே! மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே! எங்களெழிற் சேனைமன்னர்க் கிதமுரைத்தாள் வாழியே! இருபத்தஞ்சுட்பொருள் மாலியம்புமவள் வாழியே! செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே! சீரங்கநாயகியார் திருவடிகள் வாழியே! #💵மகாலக்ஷ்மி
💵மகாலக்ஷ்மி - ShareChat
ஸ்ரீ (969) #💵மகாலக்ஷ்மி
💵மகாலக்ஷ்மி - மகாலீட்சுமியின் ஆசியோடு மகிழ்ச்சியான நாளாகடடநம்  இந்த நாள்மட்டுமல்ல இனி 060 எந்த நாளூம் இனிமையாகவே மலரும் இனிய வள்ளிக்கிழபை மகாலீட்சுமியின் ஆசியோடு மகிழ்ச்சியான நாளாகடடநம்  இந்த நாள்மட்டுமல்ல இனி 060 எந்த நாளூம் இனிமையாகவே மலரும் இனிய வள்ளிக்கிழபை - ShareChat
ஸ்ரீ (969) #💵மகாலக்ஷ்மி
💵மகாலக்ஷ்மி - ASHTA LAKSTTMT A LD Devodonaldee ASHTA LAKSTTMT A LD Devodonaldee - ShareChat
ஸ்ரீ (969) #💵மகாலக்ஷ்மி
💵மகாலக்ஷ்மி - ShareChat
ஸ்ரீ (969)வாழ்வில் வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்ய காலம். நாளை 13.02.2026 வெள்ளிக்கிழமை ( மாசி மாதம் முதல் தேதி ) இரவு 1.30 மணியில் இருந்து காலை 10:00 மணிக்குள். இந்த புண்ய கால நேரம் வருகிறது. கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா? வழிபடுங்கள் விஷ்ணு பதி புண்ய காலத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள். 27 சுற்று முடித்த பின்பு மீண்டும் கொடிமர நமஸ்காரம் செய்யுங்கள். பின்பு தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு தங்களின் பிராத்தனைகளை மனமுருகி சொல்லுங்கள். தங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறியே தீரும்.நிறைவேறியே தீரும் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்றால் என்ன? சூரியன் தனது பயணத்தில் ஸ்திர ராசிகளில் (Fixed Zodiac Signs) நுழையும் நேரமே விஷ்ணுபதி ஆகும். இந்த ராசிகள்: ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம். புராணப் பின்னணி: நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்த மகாவிஷ்ணு, மகாலட்சுமி தாயாரால் சாந்தமடைந்து 'லட்சுமி நரசிம்மராக' அருள் பாலித்த புனித நேரமே இது. இந்த நேரத்தில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாக நம்பப்படுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான முக்கிய தேதிகள் மாசி - பிப்ரவரி 13, 2026 வைகாசி - மே 15, 2026 ஆவணி - ஆகஸ்ட் 17, 2026 கார்த்திகை - நவம்பர் 16, 2026 தமிழ் மாத கணக்கின்படி வைகாசி , ஆவணி, கார்த்திகை , மாசி மாதங்களில் முதல் தேதி விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. பன்னிரண்டு தமிழ் மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை ஆகியவை மகாவிஷ்ணுவுக்கு உரியவை. பங்குனி, ஆனி, புரட்டாசி, மார்கழி ஆகியவை சிவனுக்குரியவை . சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும். விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம். பிரம்மாவுக்குரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும். பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது.ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும் ,அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன்தருவதாகவும் கூறுவர். ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லதுவிஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மகாவிஷ்ணுவின் அருளும்கருணையும் மிகவும்அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது. ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவது உண்டு. தமிழ் மாத கணக்கின்படி வைகாசி ,ஆவணி,கார்த்திகை,மாசி ,மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. இந்த புண்ய காலத்தில் நாம் மகாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபாட்டு நமது எல்லாதேவைகளையும் , வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை புரியலாம். ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவற செய்யலாம். முறைப்படி பூஜை செய்யத் தெரிந்தவர்கள் அவ்விதம் செய்யலாம். அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம். துளசி பூஜை , கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்குப்ப்ரீத்தியைத் தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்குத் தகுந்தவாறு செய்யலாம். அதே போன்று அன்றைய தினத்திலே, விரத நாட்களில் செய்யக்கூடாத செயல்களைத் தவிர்ப்பது நன்று. ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது , பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம்என சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் உலகாதாயமான தேவைகளையும் மகிழ்ச்சியான மற்றும் செல்வ செழிப்பு மிக்க வளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.மேலும் நமது அக வளர்ச்சி, ஆனந்தம் .ஆன்மிக முன்னேற்றம் , மன அமைதி மற்றும் மோக்ஷத்தையும் தர வல்லது இந்த புண்ய காலம் ஆகும். எல்லோரும் இந்த புண்ய காலத்தை முழுமையாகக் கடைப்பிடித்துஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெறுவோமாக! #பெருமாள்
பெருமாள் - சிங்கப்பெ ழகிய ஓடத்துறை சிங்கப்பெ ழகிய ஓடத்துறை - ShareChat
ஸ்ரீ (969) #ராமாநுஜர் எம்பெருமான் “அதிகாரத்தை” பார்க்கிறவன் 🙏🙇‍♂️✨ ஆனால் எம்பெருமானார் அதிகாரம் பார்க்காத கருணையின் அவதாரம் 🙏🙇‍♂️✨ அதனால் தான் “யதி ராஜன்” எல்லோருக்கும் பாதை 🙏🙇‍♂️✨ எம்பெருமானார் திருவடிகளே சரணம் 🙏🙇‍♂️✨
ராமாநுஜர் - NAMPERUMAL NAARTRUMA ೪ಖ172 013110995 NAMPERUMAL NAARTRUMA ೪ಖ172 013110995 - ShareChat