பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
ShareChat
click to see wallet page
@baskar3883
baskar3883
பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
@baskar3883
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
ஸ்ரீ (969) #கிருஷ்ணன் 06/02/26 Udupi Shree Krishna Mukhyaprana Darshana. . 6.2.26
கிருஷ்ணன் - ಚ೦dಯu ಶೀರೂರು _ aಯಾEಯ ಗರ್ಯಾಯ ಶೀರೂರು ಪರ್ಯಾಯ ೌರೂರು O0 paಯ9 ದೀಗೂರು PIoUUDSO { J009 ಚ೦dಯu ಶೀರೂರು _ aಯಾEಯ ಗರ್ಯಾಯ ಶೀರೂರು ಪರ್ಯಾಯ ೌರೂರು O0 paಯ9 ದೀಗೂರು PIoUUDSO { J009 - ShareChat
ஸ்ரீ (969)ஸ்ரீ தேவ்யை நம: #💵மகாலக்ஷ்மி
💵மகாலக்ஷ்மி - ShareChat
00:39
ஸ்ரீ (969)ஶ்ரீ: ஶ்ரீ மஹாபூர்ண குரவே நம: ஶ்ரீ மதே ராமானுஜாய நம: *தை* மாதம் *ஹஸ்தம்* நக்க்ஷசத்திரம் இன்று ஸ்வாமி எம்பெருமானார் சிஷ்யர்களுள் முதன்மையானவர் ஸ்வாமி *ஶ்ரீ கூரத்தாழ்வான்* அவதார திருநக்க்ஷத்திரம். வாழி எதிராஜன் வாழி எதிராஜன்.. *மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் "நம் கூரத்தாழ்வான்" திருநக்ஷத்ரம் தை - ஹஸ்தம் இன்று* ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதி மஹே யதுக்த்யஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம் ஸ்ரீ மத் கூர குலாதீசம் ஸ்ரீ வத் சாங்கம் உபாஸ்மஹே அக்ரயம் யதீந்திர சிஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதிநாம் இன்று ஜகதாசார்யர் ஸ்ரீ ராமானுஜரின் முக்யமான சீடரான கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரம். நம் ஆசார்யர்களில் வேறு ஒருவருக்கும் இல்லாத வைபவம் ஆழ்வானுக்கு உண்டு. அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்யாந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு: | ஸோயம் ராமாநுஜ முநிர் அபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் யத் ஸம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூரநாத: II பூர்வாச்சாரியர்கள் அருளிய மேற்கண்ட ஸ்லோகத்தின் திரண்ட கருத்து, "நம் சம்பிரதாயத்தில் எம்பெருமானாருக்கு பிற்பட்ட (காலத்தலால்) ஆசார்யர்கள் அவர் திருவடி சம்பந்தத்தினால் உயர்ந்த பேற்றை (முக்தி) அடைந்தார்கள். எம்பெருமானாருக்கு முற்பட்ட ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தினால் முக்தி அடைந்தார்கள்". ஆனால் "உடையவரோ தாம் ஆழ்வானின் சம்பந்தம் பெற்றதனால் தான் தமக்கு உயர்ந்த பேறு கிடைத்து என்று உறுதி கொண்டிருந்தார். அப்படிப்பட்ட வைபவம் வாய்ந்த ஆழ்வானின் பெருமையை நாம் எப்படி சொல்லி முடிக்க முடியும்" இதே கருத்தை இராமானுச நூற்றந்தாதி பாசுரத்திலும் "மொழியை கடக்கும் பெரும் புகழான்" என்று அமுதனார் தெரிவித்தார். "மொழியை கடக்கும் பெரும் புகழான் என்கிற சந்தையை வடமொழியில் மொழிபெயற்கும் விதமாக "வாசாம் அகோசர மஹா குண தேசிக அக்ர்ய கூராதி நாத" என்று யதிராஜ விம்சதியில் மாமுனிகளும் அருளிச் செய்தார். ஆக இப்படி எல்லா ஆசார்யர்களும் ஆழ்வானின் பெருமையை பேசி தலைக்கட்ட முடியாது என்றே திருவுள்ளமானார்கள். சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தான் வாழியே தென்னரங்கர் சீரருளை சேருமவன் வாழியே பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே நாலூரான் தனக்கு முக்தி நல்கினான் வாழியே ஏராரும் தையில் அத்தத்திங்கு உதித்தான் வாழியே எழில் கூரத் தாழ்வான் தன் இணையடிகள் வாழியே பொருள் விரிக்கும் எதிராசர் பொன்னடியோன் வாழியே பொன் வட்டில் தனை எறிந்த புகழுடையோன் வாழியே மருள் விரிக்கும் முக் குறும்பை மாற்ற வந்தான் வாழியே மயர்வறவே மெய்ஞ் ஞானம் விளங்கிடுவான் வாழியே இருள் விரிக்கும் சிவம் எதிரிட்டு எழுத்திட்டோன் வாழியே ஏதமற வெவ்வுயிர்க்கும் இதமளித்தோன் வாழியே அருள் விரிக்கும் அரங்கத்தான் அடியிணைகள் வாழியே அழகாரும் கூரத் தாழ்வான் அடியிணைகள் வாழியே மட்டவிழும் பொழில் சூழ் குருகேசர் மறைத் தமிழ் வாழ்ந்திடு நாள் மண்ணுலகில் ஸ்ரீ பாஷ்யம் விளங்கிட வந்து பிறந்தவர் நாள் எட்டும் இரண்டும் இசைந்த சுலோகம் இசைத்திட வந்தவர் நாள் இல்லை எனச் சிவமென்றே எதிரிட்டு எழுத்திட வந்தவர் நாள் துட்ட குதிர்ட்டிகள் மாயிகள் வாழ்வைத் துரத்திட வந்தவர் நாள் சூரிய பூமியர் ஆரியர் என்று துதித்திட வந்தவர் நாள் அட்ட திசைக்கும் நிறைந்த புகழ் அந்தணர் வாழ கூரத் ஆழ்வான் வந்தருளிய தையில் விளங்கிடு அத்தமது நன்னாளே - அத்தமது எனு நாளே கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம் பெரிய நம்பிகள் திருவடிகளே சரணம் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் -அடியேன் கோபிநாத் ராமானுஜதாஸன் (சாம்பு) #ராமாநுஜர்
ராமாநுஜர் - ShareChat
ஸ்ரீ (969)திரு கூரத்தாழ்வார் திரு கூரத்தாழ்வார் அவதார திருநட்சத்திரம் (1016ஆவது) தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரம் இன்று. கூரத்தாழ்வார் இராமானுசரின் மாணாக்கருள் முதன்மையானவர். தேசத்தின் பிறப்பகுதிகளில் இருந்து காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளை வழிபட வரும் அடியார்களுக்குத் தினமும் அன்னதானம் செய்வதையே பெரும்பேறாய்ச் செய்துவந்தவர். ஒருமுறை திருக்கச்சி நம்பிகளிடம் பெருந்தேவி தாயார் (காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளின் மனையாள் - லட்சுமிதேவி) கூரத்தாழ்வாரின் செல்வம் மற்றும் அன்னதானம் குறித்து வியப்பு மேலிட உரையாடியமைக் கேட்டு அதனால் தனக்கு அகங்காரம் உண்டாகிவிடுமோ என அஞ்சித் தன்னுடைய பெருஞ்செல்வமனைத்தும் அறச்செயல்களுக்குத் தானமாக வழங்கித் தன் குருவாகிய இராமானுசரையே அடிப்பணிந்தார். இராமானுசரைவிட 8 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வியாசப்பட்டர், பராசரப்பட்டர் எனும் இவருடைய இரண்டு குமாரர்களில் பராசரப்பட்டர் பிற்காலத்தில் புகழ்பெற்ற வைணவ ஆச்சாரியனாகி ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு இன்றும் புகழப்படும்படியான ஓர் உரை எழுதியுள்ளார். புகழ்பெற்ற இராமானுச நூற்றந்தாதி இயற்றிய திருவரங்கத்தமுதனார் கூரத்தாழ்வாரின் மாணாக்கருள் ஒருவர். திருவரங்கத்தில் இருந்த இராமானுசருக்கு மாணாக்கனாகும் பொருட்டு, கூரத்திலிருந்து தன் மனைவியை அழைத்துக்கொண்டு திருவரங்கம் செல்லும் வழியில் காட்டிடையே திருடர் பற்றிய அச்சத்தில் வந்த மனையாளை நோக்கி "மடியில் கனம் இருந்தாலன்றோ வழியில் பயம். ஏதாவது வைத்திருக்கிறாயா" என்றார். அதற்குச் சிறுவயது முதலே கூரத்தாழ்வார் உண்பதற்குப் பயன்படுத்திய தங்கவட்டிலைத் திருவரங்கத்தில் கணவருக்குப் (கூரத்தாழ்வாருக்காக) பயன்படுத்துவதற்காக வைத்திருப்பதாகச் சொல்லவே அதனை வாங்கி விட்டெறிந்துவிட்டுச் சென்றாராம். குருபக்தி: திருவரங்கத்தில் யாசகம் பெற்று வாழ்ந்த கூரத்தாழ்வார் தம்பதிகள் ஒருநாள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்தனர். மனைவி ஆண்டாள் இறைவன் அரங்கநாதனிடம் வேண்டிட, அரங்கநாதன் கோயில் ஊழியர்கள் மூலம் உணவு தந்தருளினார். நாலூரான் என்னும் அமைச்சரின் தந்திரத்தால் மதியிழந்த உறையூர்ச் சோழன், இராமானுசரைக் கைது செய்ய ஆணையிட்டான். கூரத்தாழ்வார் தம் குருவைப்போல் வேடம் தரித்துக்கொண்டு அரசனிடம் சென்று முடிவில், அரசன் ஆணையால் கூரத்தாழ்வாரின் கண்கள் தோண்டப்பட்டன. 12 ஆண்டுகள் இதே நிலையிலேயே திருமாலிருஞ்சோலை மலையில் வாழ்ந்துவந்தார். இயற்றிய நூல்கள்: ஸ்ரீ அதிமாநுஷ ஸ்தவம் சுந்தரபாஹூ ஸ்தவம் வரதராஜ ஸ்தவம் வைகுண்ட ஸ்தவம் ஸ்ரீ ஸ்தவம், தாடீபஞ்சகம் ப்ரார்தனபஞ்சகம் என ஏழு வடமொழி நூல்களை இயற்றியுள்ளார். சாதனைகள்: இவரின் உதவியினாலேயே சுவாமி இராமானுசர் தன் குருவாகிய ஆளவந்தாருக்குச் செய்துகொடுத்த மூன்று சபதங்களை நிறைவேற்றினார்.அன்னமிடுவதோடு நில்லாது, இராமானுசருக்காகவும் வைணவத்திற்காகவும் தன் இரு கண்களையும் இழந்தார். திருமங்கையாழ்வார் பாடல்களில் 'பெரிய திருமொழி'க்கு இவர் தனியன் பாடிய புலவர். கட்டளைக் கலித்துறையால் அமைந்துள்ள அந்தப் பாடல் copy and Pasted in wall.... #ராமாநுஜர்
ராமாநுஜர் - ShareChat
ஸ்ரீ (969)Sriperumbudur Sri Koorathalwan Sigguthadai Sevai. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ கூரத்தாழ்வான் சிக்குத்தாடை சேவை. #ராமாநுஜர்
ராமாநுஜர் - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீ (969)🚩அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்🛕 ஸ்ரீரங்கம் ஸ்ரீகூரத்தாழ்வான் வருட திருநக்ஷத்திரம் திருவீதி புறப்பாடு சிறப்பு uHD படங்கள் ஜெய் ஸ்ரீமந் நாராயணாய! 🦉🦉🦉🦉🦜🦜🦜🦜🌷🌷🌷🌷 #ராமாநுஜர்
ராமாநுஜர் - (@ (@ - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீ (969)🚩அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்🛕 ஸ்ரீரங்கம் ஸ்ரீகூரத்தாழ்வான் வருட திருநக்ஷத்திரம் திருவீதி புறப்பாடு சிறப்பு uHD படங்கள் ஜெய் ஸ்ரீமந் நாராயணாய! 🦉🦉🦉🦉🦜🦜🦜🦜🌷🌷🌷🌷 #ராமாநுஜர்
ராமாநுஜர் - ஆடுபயபடாள் வாசல் ஆடுபயபடாள் வாசல் - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீ (969)🚩அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்🛕 ஸ்ரீரங்கம் ஸ்ரீகூரத்தாழ்வான் வருட திருநக்ஷத்திரம் திருவீதி புறப்பாடு சிறப்பு uHD படங்கள் ஜெய் ஸ்ரீமந் நாராயணாய! 🦉🦉🦉🦉🦜🦜🦜🦜🌷🌷🌷🌷 #ராமாநுஜர்
ராமாநுஜர் - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீ (969)🚩அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்🛕 ஸ்ரீரங்கம் ஸ்ரீகூரத்தாழ்வான் வருட திருநக்ஷத்திரம் திருவீதி புறப்பாடு சிறப்பு uHD படங்கள் ஜெய் ஸ்ரீமந் நாராயணாய! 🦉🦉🦉🦉🦜🦜🦜🦜🌷🌷🌷🌷 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - ShareChat