||श्री:||ஸ்ரீ (969) #ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
ஆராய்ந்து பார்க்குங்கால் எம்பெருமான் இறைவன் ஒருவனே ! என்று ஞானிகள் அறிந்து உணர்ந்துரைப்பார்கள்.
அப்படிப்பட்ட எம்பெருமானின் பெருமையை ஒருவரும் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
வேதங்களைப் பயின்று ஆராய்ந்து கண்ட முடிவுகளும் இக்கருத்தினையே தெரிவிக்கின்றன.
எவ்வளவு தவங்கள் செய்தவர்களாக இருப்பினும், அவர்கள் மேற்கொண்ட தவங்களின் இறுதிப் பயன்களும் அத்தகதேயாகும்.
இவ்வகைப் பயன்களும் திருவாழியானைத் தம் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் ஸ்ரீமந் நாராயணனின் திருவருளாலேயே உண்டாவனவாகும்.
திருமழிசைப்பிரான் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


