ShareChat
click to see wallet page
search
Solution made for crude oil by the PM modiji Govt.: ஈரான் போர் உக்கிரமாக 13ம் நாள் நடக்கின்றது, டிரம்பர் வழக்கம் போல் சாமியாடி கொண்டிருக்கின்றார் உப சாமியாடியான இஸ்ரேலுக்கு ஆட இன்னொரு இடம் கிடைத்திருக்கின்றது அது லெபனான் ஆக அமெரிக்க சுடலை சாமி ஈரானை மயனாமாக்கி ஆடிகொண்டிருக்க, லெபனான் பக்கம் ஆட ஆரம்பித்திருக்கின்றது நேதன்யாகு சாமி, அது தன்னால் லெபனான் முதல் ஈரான் வரை எங்கும் ஆடும் வல்லமை உண்டு என அருள்வாக்கு வேறு சொல்லி கொண்டிருக்கின்றது ஈரானில் இனி உச்சகொடை நடக்கும் என டிரம்பர் சாமி அறிவித்த நிலையில் அதிரடி தாக்குதல் தொடர்கின்றது, அங்கே இப்போது இன்னொரு வகையான உத்தியினை கையில் எடுக்கின்றது அமெரிக்கா அதாவது ஹொர்ம்ஸ் நீரிணை வழியாக எதிரி நாட்டு கப்பலை அனுமதிக்கமாட்டோம் என ஈரான் மல்லுகட்டும்போது அப்படியானால் ஈரானுக்கு செல்லும் கப்பலை அனுமதிக்காமட்டோம் என கிளம்பியிருக்கும் அமெரிக்கா சீனாவில் இருந்து ஈரான்க்கு செல்லும் கப்பல்களை எதிர்கொண்டு காத்திருக்கின்றது , இந்த கப்பல்களில்தான் ஈரானுக்கான ஆயுதம் முதல் பல உதவிகள் இருக்கின்றது என்பதால் டிரம்பர் சாமி ஆட்டம் முடிந்ததாகவே சந்தோஷமடைகின்றது அதாவது ஈரான் பல விஷயங்களில் இறக்குமதியினை நம்பும் நாடு, இதனால் முடிந்தவரை உள்ளே செல்லும் பல விஷயங்களை தடுத்தாலே குறிப்பாக ஆயுத பொருள், வெடிபொருள் , ரசாயாண மூட்டைகளை தடுத்தாலே போதும் யுத்தத்தை அது தொடரமுடியாமல் சரியும் என்பது இப்போது டிரம்பர் கணக்கு ஒரு பக்கம் ஈரானுக்கு கிடைக்கும் ஆயுதங்களை தடுப்பது இன்னொரு பக்கம் உள்ளே இருக்கும் ஆயுத குடோனை நொறுக்குவது என டிரம்பர் சாமி இருமுனை ஆட்டம் ஆடிகொண்டிருக்கின்றார் இந்நிலையில் இந்தியா ஈரானுக்கு மனிதநேய அடிப்படையில் உணவு மற்றும் சில அத்தியவாசிய பொருட்களை அனுப்பும் பதிலுக்கு ஈரான் இந்திய எண்ணெய் கப்பல்களை தடுக்காது என ஒரு முடிவின் அடிப்படையில் இந்தியாவுக்கு சலுகைகளை ஈரான் அறிவித்துள்ளது, இதனால் இந்தியாவில் எழுந்த பெரும் எண்ணெய் தட்டுபாடு அச்சமும் புரளியும் முடிவுக்கு வந்திருக்கின்றது உலகின் பல நாடுகளில் இருந்து மாற்றுவழியினை இந்தியா தேடிகொண்டே ஈரானிடமும் பேசியது ஈரானின் சபாஹர் துறைமுகம் முதல் பல இடங்களில் இந்திய முதலீடு உண்டு ரஷ்யா ஈரான் வழியாக இந்தியாவுக்கு வரம் சரக்குபாதை ஒப்பந்தம் உண்டு என்பதால் ஈரானும் இறங்கி வருகின்றது இந்தியகடல் மற்றும் அரபிகடலில் ஈரானின் கப்பல்களை அமெரிக்கா நொறுக்கும்போது , அபாயமற்ற ஈரானிய கப்பல்கள் ஒதுங்க வலுவான இடம் இந்தியா என்பதால் ஈரானுக்கும் வேறு தெரிவு இல்லை இந்தியாவில் இனி எரிபொருள், எரிவாயு தட்டுபாடு இல்லை, உணவக கும்பல் இனி டீ காபி எல்லாம் வழமைபோல் விற்கலாம் அவர்களின் பொய்பிரச்சாரம் முடிவுக்கு வந்திருக்கின்றது பாரத பிரதமர் மோடியும் அவர் அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்தியாவில் எரிபொருள் தட்டுபாடு எனும் பேச்சுக்கே இடமில்லை என சொல்லி ஆதாரங்களை காட்டி ஈரானின் அனுமதியும் இன்னும் பல நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எரிவாயு விவரத்தையும் காட்டியபின் எல்லாம் அமைதி வழக்கம்போல் அய்யா ஸ்டாலின் இங்கும் ஸ்டிக்கர் ஓட்ட வந்துவிட்டார், அவர் இதெல்லாம் விடவே மாட்டார், இப்போது எரிவாயு தட்டுபாடு இல்லை என அவரே ஏதோ ஈரானுக்கு சென்றது போல் பேச ஆரம்பித்துவிட்டார் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் இந்தியாவின் உணவுக்கு எண்ணெய் என்பது சதாம் காலத்திலே இருந்தது, ஆனால் காங்கிரசார் அதிலும் ஊழல் செய்து சதாமிடம் இருந்து பெரிய தொகை அடித்து கொள்ளையிட்டனர், அதை சர்வதேச குழு கண்டுபிடித்தபோது சோனியா குடும்பம் நட்வர்சிங்கை பலிகடா ஆக்கிற்று, நட்வர்சிங் தன் புத்தகத்தில் அந்த பணம் எங்கே போனது என்பதை சொல்லியிருந்தார் இப்படி உணவுக்கு தவித்த மக்களிடமும் ஊழல் செய்த கட்சி காங்கிரஸ், இப்போது மோடியின் ஈரானிடம் உணவுக்கு எண்ணெய் எனும் திட்டத்தில் துளியும் ஊழல் இல்லை , மாறாக ராஜதந்திரம் மற்றும் மோடியின் செல்வாக்குபடி ,இந்த போரில் ஈரான் பின்னால் நிற்கும் புட்டீனின் தனி உத்தரவுபடி ஈரான் இந்திய கப்பல்களை அனுமதிக்கின்றது, இது முழுக்க மோடி அரசின் வெற்றி பொதுவாக இம்மாதிரி எண்ணெய் கப்பல் போக்குவரத்து சிக்கலானது, அந்த கடல்வழி இன்னும் பிரிட்டன் அமெரிக்க கட்டுபாட்டில் இருப்பதால் பல நாடுகள் குட்டி நாடுகளான லைபீரியா, நமீபியா, பனாமா என யார் பெயரிலோ கப்பலை பதிவு செய்து அவர்கள் கொடிபறக்க அனுப்புவார்கள், இது பல குழப்பங்களை கொண்டது அதுபற்றி பின்னர் பார்க்கலாம் ரஷ்ய கப்பல் பனாமாவில் பதிவுசெய்யபட்டு பனாமா கொடிபறக்க வரும், சில சீன கப்பல்கள் ஆப்ரிக்க கொடியோடு வரும் இந்தியாவுக்கான கப்பல்கள் இன்னொரு நாட்டின் கொடியோடு வரும் இது வேறுவிஷயம் இப்போது அவசரநிலை காரணமாக இந்திய கொடியோடு வரும்படி இந்திய கப்பலை ஈரான் கேட்டுகொள்வதால் இனி இந்திய கொடியோடே கப்பல்கள் செல்லும் "அந்த மேலை கடல் முழுதும் கப்பல்விடுவோம்" என பாரதி பாடியது இப்போது நடக்கின்றது கோமேனியினை அமெரிக்கா கொன்றபோதும் தாக்கும்போதும் இங்கு மோடியினை கரித்து கொட்டிய இஸ்லாமிய கும்பல்களை, திருமா கோஷ்டியினை இப்போது காணவே இல்லை, இனி இந்த பிரச்சினையினை வைத்து அரசியல் செய்யமுடியாது என்பதால் எங்கோ வானம்பார்த்தபடி அமர்ந்துவிட்டார்கள், மிகுந்த மன உளைச்சலில் சிக்கிவிட்டார்கள் ஈரான் இந்தியாவுக்கு கட்டுபட்டு எண்ணெய் அனுப்புவது அவர்களுக்கு மிகுந்த மான பிரச்சினையாகிவிட்டது , ஆத்திரம் பொங்க அமர்ந்திருக்கின்றார்கள் வேண்டுமானால் ஈரானில் இருந்து வரும் எண்ணெயில் சில பீப்பாய்களை அவர்களுக்கு கொடுக்கலாம் , மானஸ்தர்களான அவர்கள் செய்யவேண்டியதை செய்ய தீபெட்டியும் இலவசமாகவே கொடுக்கலாம். #மதிய வணக்கம் #ரெங்கா! #renga-vamba! #🌏உலக அரசியல்🌏. #கற்றுது அரசியல்
மதிய வணக்கம் - ShareChat