மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரை விடுவித்து ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் (பிப்ரவரி 27) அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் மதுபானக் கொள்கையில் சதி நடந்திருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மணீஷ் சிசோடியா தரப்பில் எந்தவொரு ‘குற்ற நோக்கமும்’ இருந்ததற்கான ஆதாரம் இல்லை எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
அத்துடன், “ஒரு முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுக்கும் அரசு முடிவுகளை, போதிய ஆதாரங்கள் இல்லாமல் வெறும் ‘சதித் திட்டம்’ என்று முத்திரை குத்திவிட முடியாது,” என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளை, போதிய சான்றுகள் இல்லாமல் ‘இது ஒரு சதி திட்டம்’ என்று அழைப்பது சட்டப்படி செல்லாது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். சிபிஐ -க்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
இங்கேயும் டாஸ்மார்க் ஊழலை பத்தி சொல்லிக்கிட்டே இருக்காங்க அது என்ன உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.
தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன், நீதிமன்ற அறையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டார். தனது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்த்தவுடன் அவர் கண்கலங்கி அழுதார். இரண்டு ஆண்டுகால சிறைவாசம், அரசியல் பழிவாங்கல் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட 'ஊழல்வாதி' என்ற முத்திரை அகன்ற நிம்மதியில் அவர் சில நிமிடங்கள் மௌனமாக கண்ணீர் படித்தார் என்று விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.
இனி அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? அவர்கள் செய்ய வேண்டியது செய்து ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.
#Politics2025 #highlightsviralpost #👨மோடி அரசாங்கம்


