#செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
*சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க முடியும்! சுடுகாட்டையும் கோவில் தீபத்துணையும் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கந்திலி காவல் நிலையத்தில் புகார்*
மதுரையில் சட்டதுறை அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க முடியும் அதேபோல கண்ட இடத்தில் பிணத்தை எரிக்க முடியாது அதேபோல தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு சுடுகாட்டையும் தீபத்தூணையும் ஒப்பிட்டு பேசி ஒட்டுமொத்த இந்துக்களின் மனதை புண்படுத்தியதாகவும் மேலும் மதுரை நீதி அரசர்கள் வழங்கிய தீர்ப்பினை விமர்சிப்பது சட்ட விதிகளை மீறிய செயல் எனவே எனவே சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த காக்கங்கரை பகுதியை சார்ந்த பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சுரேஷ்குமார் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


