#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
நெல்லை சட்டசபை தொகுதிக்குட்பட்ட தமிழக வெற்றிக் கழகம் பாக முகவர்கள் செயற்குழு கூட்டம் நடந்தது
நெல்லை.ஏப்.20
திருநெல்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட தமிழக வெற்றிக் கழகம் நெல்லை வடக்கு மாவட்ட சார்பில் பாக முகவர்கள் சிறப்பு செயற்குழு கூட்டம் த.வெ.க கட்சி அலுவலகத்தில் வைத்து நெல்லை வடக்கு மாவட்ட இணைச் செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான எஸ்.மரியஜாண் அவர்களின்
ஆலோசனைப்படி நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் இளைஞர் அணி. மகளிர் அணி நிர்வாகிகள் பாக முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
#செய்திகள் #தற்போது செய்தி
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு மேற்கு சட்ட மன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் சென்னிமலை ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு கழக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி விரிஞ்சிபுரம் ஏ.டி.காலனியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் த.வேலழகன் இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தார்.முன்னதாக அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து பொது மக்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்து பட்டாசு வெடித்து மேல தளத்துடன் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சி ஏற்பட்டினை பலராமன் முன்னாள் தலைவர் ஊர் நாட்டாமை கிளைச் செயலாளர், எஸ் விஜயகுமார் Ex Army ஊராட்சி மன்ற உறுப்பினர், அம்ரேஷ் கிளைச் செயலாளர், விஜி கிளைச் செயலாளர், ஆகியோர் சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்து இருந்தனர், மேலும் ஊர் பொதுமக்கள் கழக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
#செய்திகள் #தற்போது செய்தி
வெற்றிப் பாதையில் ராதாபுரம் தொகுதி வேட்பாளர் டாக்டர் S.K. கிறிஸ்டோபர் க்கு தொகுதி முழுவதும் உற்சாக வரவேற்பு
நெல்லை.ஏப்.19-
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் டாக்டர் S.K. கிறிஸ்டோபர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நேற்று
சுப்பிரமணியப்பேரி.செம்மண்குளம்.காரியாகுளம்.நெடுவாழி.
சந்தை.மாதாகோவில்தெரு.ராதாபுரம்கஸ்பா.தெற்குதெரு.
வல்லார்குளம்.
பண்ணையார்குளம்.
மகேந்திரபுரம்.
பட்டார்குளம்.
சமத்துவபுரம்.
பாவேரித்தோட்டம்.
பாவேந்தர்.
பாரதிதாசன்நகர்.
பாப்பான்குளம்.
பரமேஸ்வரபுரம்.
வாணியான்குளம்.
V.Nகுளம்.உதயத்தூர்.
உதயராஜபுரம்.
உதயத்தூர்கீழுர்.
வட்டவிளை.யாதவர்குடியிருப்பு.எறும்பிகாலணி.இளையநயினார்குளம்.வையகவுண்டன்பட்டி.இளையநயினார்குளம்தெற்கு.சிதம்பராபுரம்.பிரகாசபுரம்.அழகனாபுரம்.ஆத்துக்குறிச்சி.முடவன்குளம்.
கைலாசப்பேரி.
கஸ்தூரிரெங்கபுரம்.
கிட்டிநயினார்குளம்.பொன்னாத்தி.புத்துக்குறிச்சி.ஆமையடி.
பெருங்கண்ணங்குளம்உள்ளிட்டபகுதிகளில்பொதுமக்களிடம் விசில் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேட்பாளர்
டாக்டர்.S.K.
கிறிஸ்டோபர்
செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு ஆதரவை வெளிப்படுத்தி
வருகின்றனர் இளைஞர்கள்.
பெண்கள்.முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதோடு மாற்றத்திற்கான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகின்றனர்.இந்தபிரச்சாரத்தில் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள்
ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஒவ்வொரு பகுதிக்கும் தனித்திட்டங்களுடன் சென்று மக்களிடம் நேரடியாக கருத்துக்களை கேட்டு அவர்களின் பிரச்சனைகளை பதிவு செய்து வருகிறார்இந்நிகழ்ச்சியில் நெல்லை தெற்கு மாவட்ட கழக இணை செயலாளர் காட்வின் பிரசாத்.இராதாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்ட காங்கிரஸ் பணிக்குழு உறுப்பினராக நம்பிக்கை ராஜ் நியமனம்!
வேலூர், ஏப்.19-- காங்கிரஸ் மாநில தலைவர் செல்வம் பெருந்தகை நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 234 சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிற திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக் கூறிய பணிகளை ஒருங்கிணைக்கவும் பரப்புரைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக பணிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் வேலூர் மாவட்ட சட்ட மன்ற தொகுதிகளான வேலூர் காட்பாடி அணைகட்டு கே.வி.குப்பம்குடியாத்தம் ஆகியவற்றிற்கு தேர்தல் பணி குழு உறுப்பினராக நம்பிக்கை ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் கமிட்டி உள்பட்ட அனைத்துகட்சி நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.என அவர் தெரிவித்துள்ளார்.
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
பணகுடி குதிரபாஞ்சான் கன்னிமாரா தோப்பு பகுதிகளை சுற்றுலா தளமாக்குவேன் பா.ஜ.க வேட்பாளர் எஸ்.பி.பாலகிருஷ்ணன் வாக்குறுதி
பணகுடி, ஏப்.20 --
பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகத்தில் எடப்பாடி யார் ஆட்சி அமைந்ததும் ஆடு, மாடுகளை மேய்க்க அனுமதி வழங்கப்படும். பாஜக வேட்பாளர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் வாக்குறுதி நெல்லை மாவட்டம் ராதாபுரம், சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.பி.பால கிருஷ்ணன் ராதாபுரம் தொகுதியில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
பணகுடி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளான சிவகாமிபுரம், அண்ணாநகர், தளவாய்புரம் உட்பட 20 க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.குதிரபாஞ்சான் கன்னிமாரா தோப்பு பகுதிகளை சுற்றுலா தளமாக்குவேன் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்கு எடப்பாடி அரசு அமைந்த உடன் அனுமதி பெற்று தருவேன் அனுமன் நிதி கால்வாயை சீரமைத்து விவசாயிகளுக்கு பயன்பட செய்வேன் போன்ற வாக்குறுதிகளை அளித்து பகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு மாலை சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பாஜக நிர்வாகி பாபு தாஸ் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பால் துரை பணகுடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லாரன்ஸ் வழக்கறிஞர் ராஜா.பணகுடி நகர அ.தி.மு.க பொருளாளர் இசக்கியப்பன்.உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
#செய்திகள் #தற்போது செய்தி
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026, வாக்குப்பதிவு நாளான 23.04.2026 - யையொட்டி ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் உட்பட பலர் உள்ளனர்
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
எடப்பாடியார் முதலமைச்சரானால்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்படும்
ஸ்ரீவை அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேச்சு
தூத்துக்குடி ஏப்.18 -
திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பண்டாரவிளையை சேர்ந்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி சண்முகநாதன் தொகுதி முழுவதும் தீவிரமாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இவர் சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை பகுதி தேர்தல் பரப்புரையில்
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை போதை பழக்கத்தில் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனை தடுக்க அரசு தவறிவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்கள் ஆங்காங்கே அதிகரித்து வருகிறது.எடப்பாடியார் முதலமைச்சர் ஆவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். எடப்பாடியார் முதல் அமைச்சரானால் தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குநிலை நிறுத்தப்படும். இத்தேர்தலில் எதிரிகளை வீழ்த்தி அதிமுக கூட்டணி கட்சிகள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி. அதிமுக அறிவித்த தேர்தல் அறிக்கை சிறப்பான அறிக்கையாகும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000/- வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அனைத்து ரேஷன் அட்டை குடும்பத்தார் களுக்கும் குளிர்சாதன பெட்டி இலவசமாக வழங்கப்படும். மாணவர்களின் கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு 7.5% லிருந்து 10.5% வரை உயர்த்தி வழங்கப்படும். ஜெ வளர்த்த அதிமுக கட்சி மக்களுக்கான கட்சியாகும்.நான் 24 மணி நேரமும் இந்த தொகுதியில் தான் இருப்பேன். நான் உங்களுடன் ஒருவராக இருந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். எனவே நீங்கள் 23.4.2026 அன்று வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை சின்னம் என்பதை மறந்துவிடாதீர். நீங்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் தான் உங்கள் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியும் எனவே மறவாமல் இரட்டை இலைக்கு அதிக வாக்குகள் அளித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என பேசினார்.
நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர், மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வாக்குபதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் விவரங்கள் பொருத்தும் பணி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி ஏப்.18
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குபதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வரும் இப் பணிகளின் போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களில் (EvM) வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது
மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. பெல் (BEL) நிறுவன பொறியாளர்கள் மூலம் VVPAT இயந்திரங்களில் குறியீடு ஏற்றுதல் மற்றும் Control unit (CU) வில் வேட்பாளர் தரவுகளை பதிவேற்றும் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் ஒதுக்கபடும் இயந்திரங்களின் எண்கள் (CU BU VVPAT numbers) இறுதி செய்யப்பட்டு தேர்தல் ஆணைய விதிமுறைகள்படி சீலிடப்படுகின்றன ஏதேனும் இயந்திரத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவை உடனடியாக மாற்றப்பட்டு தயார்நிலையில் வைக்கப்படும்.
வாக்காளர்களின் வசதிக்காக இந்த முறை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டார். மின்சாரம், குடிநீர், கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வாக்குசாவடிக்குள் கைபேசிகள் அனுமதி இல்லாததால் இந்த முறை புதிய வசதியான டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வாக்காளர்கள் தங்கள் கைப்பேசிகளை வெளியே ஒப்படைத்துவிட்டு வாக்களித்த பின் பெற்றுக் கொள்ளலாம்.
பாகம் எண் மற்றும் வரிசை எண் தெரியாதவர்களுக்கு உதவ வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் "Booth Facilitation Desk" அமைக்கப் பட்டுள்ளது .தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய ரிசர்வ் போலிஸ் படை (CRPF) மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் தலைமையில் பாதுகாப்பு திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.













