#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதி வள்ளிமலை கோயில் அருகே மக்களிடம் அமைச்சர் துரைமுருகன் தொகுதி மக்களுக்கு செய்த சாதனை எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்தார் அருகில் வேலூரில் எம்பி கதிர் ஆனந்த் காட்பாடி யூனியன் சேர்மன் வேல்முருகன் ஒன்றிய செயலாளர் கருணாகரன் கலந்து கொண்டனர் காட்பாடி சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் துரைமுருகன் வள்ளி மலை மற்றும் மேல்பாடி பஞ்சாயத்து கிராம மக்களிடம் காட்பாடி தொகுதியில் செயல்பட்ட திட்டங்களை குறித்து போட்டு சேகரித்தார் முன்னதாக காட்பாடி யூனியன் சேர்மன் வேல்முருகன் பழங்காலமான மாலைகளை கிரேன்கள் மூலம் வேட்பாளருக்கு மாலை அணிவித்த இந்த பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ராதாபுரம் தொகுதியில்
த.வெ.க வேட்பாளர் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு
பணகுடி.ஏப்.12
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் த.வெ.க வேட்பாளர் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்
த.வெ.க வேட்பாளர்
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி த.வெ.க வேட்பாளர் டாக்டர் எஸ்.கே கிறிஸ்டோபர் தீவிர வாக்கு சேகரிப்பில்
ஈடுபட்டு வருகிறார் இந்நிகழ்ச்சியின் முன்பு அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
அதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார
பகுதியான நந்தன்குளம்.
செல்வமருதூர்.
சிவன்கோவில்.
பள்ளிவாசல்.
மணலிவிளை.போஸ்ட் ஆபிஸ்.மன்னராஜா.கோவில்தெரு.எம்.எல்.மருத்துவமனை
பஞ்சாயத்து அலுவலகம்.
திசையன்விளை மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்காள பெருமக்களிடம்
விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் இந்நிகழ்வில். திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ராஜகோபால்.
மாவட்ட கழக இணை செயலாளர் காட்வின் பிரசாத்.ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ராதாபுரம் தொகுதி மக்களின் ஆதரவு பெற்ற த.வெ.க வெற்றி வேட்பாளர் எஸ்.கே.கிறிஸ்டோபர் தீவிர வாக்கு சேகரிப்பு
வள்ளியூர்.ஏப்.12
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ராதாபுரம் மக்களின் ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர் விசில் சின்னத்திற்கு ஓட்டுகளை சேகரிக்க ராதாபுரம் கிழக்கு பகுதியான குமாரபுரம்.
அணைக்கரை. உருமன்குளம.கரைசுத்துபுதூர்.முதுமொத்தன்மொழி.ஆணைகுடி.
இடையன்குடி.
அப்புவிளை அப்பகுதி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரித்தார்
அப்போது அவருடன் திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ராஜகோபால்.
மாவட்ட கழக இணை செயலாளர் காட்வின் பிரசாத்.ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார். மற்றும் த.வெ.க கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தெற்கு கள்ளிகுளம் பகுதி பொதுமக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வெற்றி வேட்பாளர் எஸ்.பி பாலகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு
பணகுடி. ஏப். 12
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேரைகுளம். தெற்கு கள்ளிகுளம் சுற்றுவட்டார பொதுமக்களிடம் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது ராதாபுரம் தொகுதியில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவரது சிலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார் இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தொழில் பிரிவு செயலாளர் அம்மா செல்வகுமார்.அ.தி.மு.க.மாநில ஜெ.பேரவை இனை செயலாளர் மைக்கேல் ராயப்பன்.
அ.தி.மு.க.ஒன்றிய.
செயலாளர்கள் அந்தோணி அமல ராஜா மற்றும் கூட்டணி
கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருநெல்வேலி.
பாளையங்கோட்டை.
நாங்குநேரி.இராதாபுரம்.ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்வதற்கான பணிகள் பொது பார்வையாளர்கள் மரு.ரிஷிகேஷ் பாஸ்கர் யாசோத்.திருமதி அனுபா ஸ்ரீவஷ்தவா.மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் இரா.சுகுமார்.
ஆகியோர் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
செட்டிநாடு, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு
சிவகங்கை, ஏப்.12-
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026ஐ முன்னிட்டு, பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிநாடு, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி, தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல்-23 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் தங்களது வாக்கினை பதிவு செய்திடும் பொருட்டும், இளம் வாக்காளர்களை ஊக்குவித்திடும் வகையிலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்களர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிநாடு, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணாக்கர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் பங்கேற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளான ஆதன் முகமூடி வெளியீடு, வாக்காளர் உறுதிமொழி ஏற்பு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த கலை நிகழ்ச்சிகள், வாக்கு செலுத்துவது குறித்த உரையாடல், மைம், நாடகம், வில்லுப்பாட்டு போன்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பிரமிடு, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 மாதிரி வடிவமைப்பு, குழுபுகைப்படம் போன்ற பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியானது, தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்களாகிய நாம் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றி, சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயல்படும் பொருட்டு, இவ்வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றி, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், வாக்காளர்களாகிய நாம் ஒவ்வொரு வரும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து, ஏப்ரல் 23 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் சிவகங்கை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களித்து, தங்களது வாக்குரிமையை நிலைநாட்டிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி சத்யா, செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர், கல்லூரி பேராசிரியர்கள், மாணாக்கர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
✍️🌹 மக்கள் முகம் நாளிதழ் 🌹✍️
வேலூர் மாவட்டம் வேலூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் கார்த்திகேயன் ஓல்டு டவுன் பகுதியில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்த போது எடுத்த படம் உடன் மாமன்ற உறுப்பினர் கங்கா பகுதி செயலாளர் சுந்தர் ஜி மற்றும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
*77 ஆண்டு அரசியலுக்கு முதுகுளத்தூரில் முற்றுப்புள்ளி? ராம்குமாருக்காக களமிறங்கும் சசிகலா*
முதுகுளத்தூர் ஏப் 12,
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில்
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்
டாக்டர் ராம்குமார் அவர்கள், ஏர்வாடி, முத்தரையர் நகர், எம்.கே. வலசை, சேரந்தை, கிருஷ்ணாபுரம், தனிச்சியம், கொத்தங்குளம், ஆய்க்குடி, குசவன்குளம், திருவரங்கை, பாப்பாகுளம், கீழக்கிடாரம், சாயல்குடி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோரிய அவர், குறிப்பாக சாயல்குடியில் இஸ்லாமியர்களை நேரில் சந்தித்து, அங்குள்ள பள்ளிவாசலுக்கு சென்று மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை நேரில் கேட்டறிந்தார். இதன் மூலம் அனைத்து தரப்பினரிடமும் இணைந்து செயல்படும் வேட்பாளராக அவர் கவனம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, சாயல்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள கர்மவீரர் காமராஜர் சிலைக்கும், சுதந்திரப் போராட்ட தியாகியும் ஆன்மீகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், டாக்டர் ராம்குமார் அவர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா அவர்கள் ஏப்ரல் 13 ஆம் தேதி முதுகுளத்தூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில், அவர் நேரடியாக பொதுமக்களிடம் உரையாற்றி ஆதரவை திரட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் தொகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் தேர்தல் சூழலில், இந்த கூட்டம் முக்கிய திருப்புமுனையாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவில் திரளவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த பிரசாரம் மூலம் டாக்டர் ராம்குமார் அவர்களின் வெற்றிக்கான மக்கள் ஆதரவு மேலும் வலுப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 77 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளின் அரசியலை முதுகுளத்தூர் தொகுதியில் முடிவுக்கு கொண்டு வரக்கூடிய மாற்ற வேட்பாளராக, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டாக்டர் ராம்குமார் திகழ்கிறார் என அவரது ஆதரவாளர்களும் அரசியல் பார்வையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 - முன்னிட்டு வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பாடி கிராமத்தில் நடைபெற்ற100% வாக்களிப்போம், என் ஓட்டு, என் உரிமை" தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் பேரணி சென்று வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
அருப்புக்கோட்டை புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் பங்குனி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.













