#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி விரிஞ்சிபுரம் ஏ.டி.காலனியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் த.வேலழகன் இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தார்.முன்னதாக அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து பொது மக்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்து பட்டாசு வெடித்து மேல தளத்துடன் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சி ஏற்பட்டினை பலராமன் முன்னாள் தலைவர் ஊர் நாட்டாமை கிளைச் செயலாளர், எஸ் விஜயகுமார் Ex Army ஊராட்சி மன்ற உறுப்பினர், அம்ரேஷ் கிளைச் செயலாளர், விஜி கிளைச் செயலாளர், ஆகியோர் சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்து இருந்தனர், மேலும் ஊர் பொதுமக்கள் கழக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


