Makkal Mugam
ShareChat
click to see wallet page
@epaper
epaper
Makkal Mugam
@epaper
Daily Updates
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 சாயர்புரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் தூத்துக்குடி, ஏப்.. 21 - தமிழக மக்கள் மீது அரசியலை விட ஆழமான நட்பு உள்ளது என தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இளம் தலைவர் ராகுல் காந்தி பேசினார். சாயர்புரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவரும் காங். முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி.பங்கேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை (தூத்துக்குடி) கீதாஜீவன், (திருச்செந்தூர்) அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் (ஸ்ரீவைகுண்டம்) ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், (விளாத்திகுளம்) மார்க்கண்டேயன்,(ஒட்டப்பிடாரம் ) ராமஜெயம், (கோவில்பட்டி) கருணாநிதி ஆகியோர்களை ஆதரித்து பேசியதாவது இந்த தேர்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக-காங்.கூட்டணிக்கும் அதிமுக-பாஜக கூட்டணிக்கும் இடையேயான கொள்கை போட்டி ஆர்.எஸ்.எஸ்.என்பது திராவிடத்துக்கும் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான இயக்கம் இந்தியா என்பது ஒரே மக்கள், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்று அவர்கள் நம்புகின்றனர் அத்தனைவைகளையும் தங்கள் மீது மண்டியிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் தமிழ்நாட்டில் திமுகவுக்கு என்று நீண்ட வரலாறு உண்டு திராவிடம் தமிழக மக்களுக்கு சேவை செய்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தமிழர்களில் கொள்கைகளை பாதுகாத்த சிறந்த தலைவர்கள் அக்கட்சியில் இருந்தனர் இப்போது இருக்கின்ற அதிமுக சரியில்லை இறந்துவிட்டது தற்போது இருக்கின்ற அதிமுக வெற்று அதிமுக தான்.அதனை பாஜக பயன்படுத்தி தமிழகத்தில் நுழைய முயற்சி செய்கிறது தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் அதிமுக தலைவர்கள் பாஜக விடம் சரணடைந்து விட்டனர்.அதிமுக இப்போது அமித்ஷா, மோடி கட்டுப்பாட்டிலுள்ளது பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் முழுமையாக கட்டுப்படுத்தி வைத்துள்ளார் இந்தியா அமெரிக்கா ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் வேளாண்மை, தொழில்துறை, இந்திய தரவுகள் போன்றவைகளை அமெரிக்காவிடம் விற்றுவிட்டனர். டிரம்பிடம்தான் இருப்பது போன்று தமிழ்நாடு முதலமைச்சர் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார். மோடியை முதலமைச்சர் ஒரு போதும் எழுந்து நின்று சார் என்று அழைக்கமாட்டோம் ஆனால் இதுவே அதிமுகவை சேர்ந்தவர் முதலமைச்சரானால் என்ன சொல்லுங்கள் சார் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என கேட்பார். நாட்டின் சமூகநீதி மேம்பாட்டுக்கு தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. அனைத்து சமுகத்தினரையும் எல்லா சாதியினரையும் முன்னேற்றுவதில் நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது. தமிழ்நாட்டில் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர் . காமராஜர் பொதுக்கல்விக்கு வித்திட்டவர் அதே வழியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்தோம். அதனை பாஜக அரசு சீர்குலைத்துள்ளது சமூகநீதி குறித்து இந்த தேர்தலில் பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளோம்.எனக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள உறவு ஆழமானது. இந்த உறவு எனது பாட்டி, அப்பா மீது தொடங்கி தற்போது என் மீதும் என் சகோதரி மீதும் தொடர்கிறது. இது அரசியல் உறவை விட ஆழமானது. டெல்லியில் உங்களது போர்வீரன் நான் தமிழக மக்களின் நலன் தமிழ்மொழியை பாதுகாக்க நான் போராடுவேன் என ராகுல் காந்தி பேசினார். கூட்டத்தில் அகில இந்திய காங்.பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழ்நாடு காங்.பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், தமிழ்நாடு காங். முன்னாள் தலைவர் தங்கபாலு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வடக்கு மாவட்ட காங்.தலைவர் பெருமாள்சாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்திகள் - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தூத்துக்குடி அனல்மின் நிலைய குடியிருப்பு பகுதிகளில் வேட்பாளர் கீதாஜீவன் அனல் பறக்கும் பிரச்சாரம் தூத்துக்குடி, ஏப்..21 -- மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் அனல்மின் நிலைய குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திமுக அரசின் சாதனைகளை கூறி பெண்கள், இளைஞர்கள், பெரியோர்கள் மற்றும் முதியவர்களிடம் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று இருகரம் கூப்பி வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு பகுதிகளிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து வரவேற்றனர். நிகழ்வில் அகில இந்திய காங்.கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ஏபிசிவீ சண்முகம், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைசெயலாளர் ராஜ்மோகன் செல்வின், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர்.
செய்திகள் - 3 3 - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 *மதுரை கிழக்கில் தவெக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு நடிகர் பொன்னம்பலம் தொகுதி முழுவதும் பிரச்சாரம்* மதுரை கிழக்கு தொகுதியில் தேர்தல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தவெக வேட்பாளர் சோ. கார்த்திகேயன் அவர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மதுரை கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளர் கார்த்திகேயன் அவர்களுக்கு ஆதரவாக நடிகர் பொன்னம்பலம் வண்டியூரில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தொகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு, தொடர் மின்வெட்டு மற்றும் அடிப்படை வசதிகளின் குறைபாடு குறித்து அவர் கடுமையாக விமர்சித்து, மாற்றத்திற்காக கார்த்திகேயனை ஆதரிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். தொகுதி முழுவதும் கார்த்திகேயன் எழுச்சி உரையாற்றி அவர் மேற்கொள்ளும் தீவிர பிரச்சாரம் மக்கள் மனதில் உற்சாக அலைகளை உருவாக்கியுள்ளது. வீதி வீதியாக சென்று மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வரும் கார்த்திகேயன் அவர்களுக்கு பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் விசில் சின்னத்தை வரைந்து ஆதரவை வெளிப்படுத்துவது, அவரது செல்வாக்கின் வலிமையை வெளிப்படுத்துகிறது. இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் தன்னார்வமாக கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பிரச்சாரத்தின் போது உரையாற்றிய அவர், “இந்த தொகுதியின் முன்னேற்றத்திற்காக முழுமையாக உழைப்பேன். வரும் 23ஆம் தேதி அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று விசில் சின்னத்தில் வாக்களித்து, உங்கள் ஆதரவை அமோக வெற்றியாக மாற்றுங்கள்” என வாக்காளர்களை கேட்டுக்கொண்டார். மேலும், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் அவர்களது தேவைகள், குறைகள் ஆகியவற்றை நேரடியாக கேட்டு அறிந்து தீர்வு காண உறுதியளித்து வரும் கார்த்திகேயன் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனால், மதுரை கிழக்கு தொகுதியில் சோ. கார்த்திகேயன் அவர்கள் வலுவான ஆதரவை பெற்று, வெற்றிக்கான முன்னணியில் உள்ள வேட்பாளராக உருவெடுத்துள்ளார் என்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
செய்திகள் - =-=: ~.-: 5= =-53ட தயிழு= வவற்றி=் =ச=E் ಗಗೆಗೆ =-=: ~.-: 5= =-53ட தயிழு= வவற்றி=் =ச=E் ಗಗೆಗೆ - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதம் ✍️🌹 வாக்குபதிவு இயந்திரங்கள் திரும்ப பெறும் பணிகள் குறித்த பயிற்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு தூத்துக்குடி, ஏப்.20 -- தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்குபதிவு முடிந்தவுடன் இயந்திரங்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப பெறும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் வரவேற்புரை பணியாளர்கள் கலந்து கொண்டனர் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி ஏப்.23 ஆம் தேதி வாக்குபதிவு நிறைவடைந்தவுடன் அனைத்து வாக்கு சாவடிகளிலிருந்தும் மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குபதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit) மற்றும் விவிபேட் (VVPAT ) இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்படும். வாக்குபதிவு இயந்திரங்களுடன், வாக்குசாவடி தலைமை அலுவரின் கையேடு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் கொண்டு வரப்படும். இவற்றை மண்டல அலுவலர்க ளிடமிருந்து வரவேற்பறையில் பணி அமர்த்தப்பட்டுள்ள பணியாளர்கள் முறையாக பெற்றுக் கொள்ள வேண்டும். வாக்குபதிவுக்கு பின்னர் இயந்திரங்களை சரியான முறையில் கையாளுதல் மற்றும் சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தல் குறித்து இந்த பயிற்சி கூட்டத்தில் விளக்கி சொல்லப்பட்டது. இப்பணிகளை எவ்வித தாமதுமுமின்றி மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உஷா (விளாத்திகுளம்) பிரபு (தூத்துக்குடி) கெளதம் (திருச்செந்தூர்) செந்தில்வேல் முருகன் (திருவைகுண்டம்) சுப்புலட்சுமி (ஓட்டப்பிடாரம்) ஹிமான்ஷு மங்கள் (கோவில்பட்டி) உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் - م EEIIERILEIEETIORS T0  TARUULIUADU LEGUSLATME ASSEMBLY : 20267 Ihru VISHU HAHAJAI LS 00 ~ [  م EEIIERILEIEETIORS T0  TARUULIUADU LEGUSLATME ASSEMBLY : 20267 Ihru VISHU HAHAJAI LS 00 ~ [ - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி சாத்தூர் தொகுதியில் இசக்கி ராஜா: “மக்களின் நம்பிக்கையை செயலால் நிரூபிப்பேன் உறுதியான வேண்டுகோள் சாத்தூர், ஏப்.20 - சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இசக்கி ராஜா, தொகுதி முழுவதும் மக்களிடையே உருவாகியுள்ள தன்னெழுச்சியான ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். மக்கள் அளித்து வரும் ஆதரவு தன்னை மேலும் பொறுப்புடன் செயல்பட தூண்டுவதாகவும், வெற்றி பெற்றால் தொகுதி வளர்ச்சிக்காக முழுமையாக உழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். சாத்தூர் தொகுதி மக்களின் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல முக்கிய திட்டங்களை முன்வைத்தார். குறிப்பாக, மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக தனித்துவமான ஆகாடமி ஒன்றை அமைத்து, இலவச கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தார். கல்வி மட்டுமின்றி இளைஞர்களின் வாழ்க்கை நலனும் தன்னுடைய முக்கிய குறிக்கோளாகும் என கூறிய அவர், இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவர்களுக்கு உடற்பயிற்சி நிலையங்கள் அமைத்து உடல் நலன் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துவேன் என வலியுறுத்தினார். மேலும், சமூக ஒற்றுமையை முன்னிறுத்திய இசக்கி ராஜா, “முக்குலத்தோர் சமூகத்தினருக்கு மட்டுமன்றி, அனைத்து சமுதாய மக்களுக்கும் சமமான பாதுகாப்பும் உரிமையும் வழங்குவது எனது கடமை” எனத் தெரிவித்தார். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்கள் தனக்கு மிகச் சிறந்த ஆதரவை தெரிவித்து வருகின்றனர் அவர்களது பாதுகாப்பை நலனை நான் பாதுகாப்பேன் இன்று உறுதியளித்தார். தொடர்ந்து, தொகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை அலட்சியம் செய்யாமல், அவற்றை நிறைவேற்றும் வரை போராடுவேன் எனவும், தேர்தலில் வெற்றி பெற்றால் மக்கள் என்னை தேர்ந்தெடுத்தாள் மக்களின் குரலாக செயல்படுவேன் எனவும் இசக்கி ராஜா கூறினார். இந்நிலையில், சாத்தூர் தொகுதியில் அவரது பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் கிடைக்கும் ஆதரவு தேர்தல் களத்தில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் - 5:46 pm 5:46 pm 5:46 pm 5:46 pm - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி ✍️🌹 மக்கள் முகம் நாளிதழ் 🌹✍️ ஈரோடு மாவட்டம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆய்த்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு மேற்கு தொகுதி உட்பட்ட நகர ஒன்றிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களுடன் தீவிர வாக்கு சேகரித்தார் உடன் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
செய்திகள் - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளில் அமமுக வேட்பாளர் ஆர்.சுந்தரராஜ் வாக்கு சேகரிப்பு தூத்துக்குடி, ஏப். 21 -- ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ஆர் சுந்தராஜ் தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளான குலையன்கரிசல், குமாரகிரி ஊராட்சி, சேர்வைகாரன்மடம் ஊராட்சி, கட்டாலங்குளம், முடிவைத்தானேந்தல், வர்த்தகரெட்டிபட்டி, திம்மராஜபுரம், அல்லிகுளம் ஊராட்சி, கூட்டுடன் காடு ஊராட்சி, தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் விவசாயிகள், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், வியாபாரிகள், முதியோர்களை சந்தித்து குக்கர் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். மேலும் பொதுமக்களிடம் நீண்டநாட்களாக நிவர்த்தி செய்யப்படாத கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். முன்னதாக குலையன்கரிசலில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு கிராமங்களிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். விநாயகபுரம், பாண்டியாபுரம், ரத்தினபுரி, திரவியபுரம், குலையன்கரிசல் பகுதிகளில் பிரச்சாரத்தை துவங்கி வேதமாணிக்கபுரம், போடம்மாள்புரம், கூட்டாம்புளி, சிலுவைபுரம், திருமலையாபுரம், அல்லிகுளம், மேல கூட்டுடன்காடு, மங்களகிரி, புதுக்கோட்டை பஜார், சவேரியார்புரம், தெற்கு சிலுக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குக்கர் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரித்தார். பொதுமக்களிடம் தங்கள் பகுதிகளில் தரமான சாலைகள், குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் செய்து தர தயாராக உள்ளேன். விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க குளங்களை தூர்வாரி நீர்நிலைகளை கட்டமைப்பேன். தொழிற்சாலைகளை பெருக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன். நான் சட்டமன்றத்தில் உங்கள் குறைகளை எடுத்து கூற எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என பேசினார். நிகழ்வில் தூத்துக்குடி ஒன்றிய செயலாளர்கள் ஜவஹர், சண்முகவேல், மாவட்ட சிறுபான்மை அணி ஜாக்சன் துரைமணி, குமாரகிரி கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் மாரிமுத்து பட்டன், முடிவை முன்னாள் ஊராட்சி தலைவர் ரம்யா, குலையன்கரிசல் முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் சரவணவேல், தங்கம் முருகேசன், பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர்.
செய்திகள் - 7 7 - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரிப்பு தூத்துக்குடி, ஏப்.20 தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் 51வது வார்டு இந்திராநகர், திரு.வி.க.நகர் ஆகிய பகுதிகளில் வீடுவீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக நெல்லை மண்டல அதிமுக தகவல் தொழிற்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் சி. மந்திரமூர்த்தி சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தார். பெண்களும் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வர வேற்றனர். நிகழ்வில் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் உடன் சென்றனர்.
செய்திகள் - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்கால கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் வாக்கு சேகரிப்பு தூத்துக்குடி, ஏப்.20- ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்கால கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அருணாதேவி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று மைக் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளான குலையன்கரிசல், கூட்டாம்புளி,போடம்மாள்புரம், திருமலையாபுரம், புதுக்கோட்டை பஜார், ராமச்சந்திராபுரம், திருவனந்தபுரம், முருகன் நகர், அயனடப்பு, அல்லிகுளம், பேரூரணி, திம்மராஜபுரம், மேலக்கூட்டுடன் காடு, கீழக்கூட்டுடன் காடு,. தெற்குசிலுக்கன்பட்டி உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் மைக் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். ஒவ்வொரு கிராமங்களிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர் முன்னதாக குலையன்கரிசல் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில் பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இலவச கல்வி சிறந்த மருத்துவம், வளமான விவசாயம், அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன் எனவே 23.4.26 அன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என பேசினார். நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மகளிரணியினர் உட்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.
செய்திகள் - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
செய்திகள் - ShareChat