#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஒட்டப்பிடாரம் தொகுதியில் தொழிற்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க நடவடிக்கை
டி.டி.வி.தினகரன் பேச்சு
தூத்துக்குடி ஏப்.18
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.சுந்தர்ராஜை ஆதரித்து வல்லநாடு, புதுக்கோட்டை, தாளமுத்துநகரில் டிடிவி.தினகரன் தேர்தல் பரப்புரையாற்றினார். ஒட்டப்பிடாரம் தொகுதியில் அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்படும். ஒட்டப்பிடாரம் ஊராட்சியை நகர பஞ்சாயத்தாக உயர்த்த நடவடிக்கை, மணியாச்சி வாஞ்சிநாதன் நினைவு சின்னம் பராமரிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் பள்ளி அருகிலுள்ள மதுபான கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டப்பிடாரம் பெரியகுளம், புதியம்புத்தூர் மலர் குளம்,, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், வல்லநாடு பகுதி களிலுள்ள குளங்கள், கண்மாய்கள் தூர்வாரி நீர் சேமிப்பு திறன் அதிகரிக்கப்படும்., அனைத்து ஓடைகள் மற்றும் நீர்வழிகள் சீரமைத்து மழை நீர் சேமிப்பு மற்றும் தடுப்பணை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
புதியம்புத்தூரில் ஆடை தொழில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் தடையற்ற மின்சாரம் வழங்கும் வதையில் மின்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு சூரிய மின்சக்தி திட்டங்கள் ஊக்குவிக்கப்படும், பொட்டலூரணி பகுதியில் சுற்றுசூழல் மற்றும் சுகாதாரத்தை பாதிக்கும் மீன் கழிவு ஆலைகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் உட்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் கூறி வேட்பாளர் ஆர்.சுந்தர்ராஜிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குக்கர் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.
நிகழ்வில் அமமுக நெல்லை மண்டல பொறுப்பாளர் வி.பி.குமரேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பூலோக பாண்டியன், மாநகர மாவட்ட தலைவர் பி.ஜானியேல் சாலமோன் மணிராஜ், அமைப்பு செயலாளர்கள் பி.ஆர்.மனோகரன், சண்முககுமாரி, அம்மா பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும் திரைப்பட நடிகருமான எஸ்.ஏ.ராஜ்கபூர், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் பி மோகன், ஆர்.ஜவஹர், பி.சண்முகவேல், ஐ.லெட்சுமண பெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாக்சன்துரை மணி, மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் கோசல்ராம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர்கள் தங்கத்துரை, விக்னேஷ் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அல்லிகுளம் முத்துராமலிங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எம்.சிவமாடசாமி, குமாரகிரி கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் எம்.மாரிமுத்து பட்டன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் மதியழகன், பா.ஜ.க மாவட்ட தலைவர் கே.சரவண கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஒபி சி ஆர்.அம்பாள் ராஜா,பொதுச் செயலாளர்கள் ஏவீரமணி, கருங்குளம் வழக்கறிஞர் பிரபு, ஒன்றிய தலைவர்கள் டி.கேசவ செல்வன் (தூத்துக்குடி தெற்கு) மாரிமுத்து (தூத்துக்குடி மேற்கு) பொருளாளர் மாறன் சடகோபன், பாமக மாவட்ட செயலாளர் எல்.எம்.லெட்சுமணன், தலைவர் ஏ.அந்தோணி செல்வம், தமிழக மக்கள் முன்னேற் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் லாரன்ஸ் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
*சாத்தூர் தொகுதியில் இசக்கி ராஜாவுக்கு மக்கள் அலை – அனைத்து சமூகங்களின் தன்னெழுச்சி ஆதரவு*
வேகமெடுக்கும் தேர்தல் களம்
சாத்தூர் தொகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இசக்கி ராஜா தேவர் தீவிரமான மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தொகுதி முழுவதும் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு தீர்வு காணும் அவரது செயல்முறை, பொதுமக்களிடையே தனித்துவமான வரவேற்பை உருவாக்கியுள்ளது.
தினசரி வீடு தோறும் சென்று மக்களுடன் கலந்துரையாடி, அடிப்படை வசதிகள் குறித்த குறைகளை பதிவு செய்து உடனடி நடவடிக்கைக்கு எடுத்துச் செல்லும் அவரது முயற்சிகள், ஒரு அரசியல் வேட்பாளராக மட்டுமன்றி மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் செயல்வீரராக அவரை உயர்த்தியுள்ளது.
இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் அவரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மருத்துவ உதவிகள் மற்றும் ஆதரவு உள்ளிட்ட அவசர உதவிகளை உடனடியாக ஏற்பாடு செய்தது மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மனிதநேய அணுகுமுறை, அவருக்கு கிடைக்கும் ஆதரவின் அளவை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும், நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், கிராமத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்த சம்பவம், பொதுமக்களிடையே பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. “பேசுவது மட்டும் அல்ல, செயலில் காட்டும் வேட்பாளர்” என்ற கருத்து மக்களிடையே வலுவாக உருவாகியுள்ளது.
இத்தகைய தொடர் செயற்பாடுகளின் விளைவாக, இசக்கி ராஜா தேவருக்கு சாத்தூர் தொகுதி முழுவதும் அனைத்து சமுதாய மக்களும் ஜாதி மதங்களைக் கடந்து தன்னெழுச்சியான மக்கள் ஆதரவை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறது.
அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அலைகடலாக திரண்டு வரவேற்பளித்து ஆதரவை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக இளைஞர் மற்றும் பெண்கள் ஆதரவு கணிசமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சாத்தூர் தொகுதியில் தேர்தல் கள நிலை தற்போது மிகுந்த போட்டி நிலையை எட்டியுள்ள நிலையில், இசக்கி ராஜா தேவரின் பிரச்சாரம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில், மக்கள் நலன், நேரடி தொடர்பு மற்றும் உடனடி நடவடிக்கை ஆகிய மூன்றையும் மையமாகக் கொண்டு நகரும் இந்த பிரச்சாரம், சாத்தூர் தொகுதியில் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
*மக்கள் ஆதரவை திரட்டும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கார்த்திகேயன்*
*வீடு தோறும் சென்று வாக்கு சேகரிக்கும் கார்த்திகேயன் தொகுதி முழுவதும் உற்சாக வரவேற்பு*
மதுரை கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கார்த்திகேயன் தீவிரமாக களத்தில் இறங்கி கடுமையாக உழைத்து வருகிறார்.
தொகுதி முழுவதும் தினசரி மக்கள் சந்திப்பு, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
பொதுமக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டு உடனடி தீர்வுகளை வாக்குறுதி அளித்து நம்பிக்கையை பெற்றுள்ளார்.
இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தொடர்ந்த உழைப்பால் தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை ஆதரவாளர்களிடையே அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து நீண்டகாலமாக நிலவி வரும் அடிப்படை வசதி குறைகள் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளன. குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால் மற்றும் பொது சுகாதாரம் போன்ற தேவைகள் இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலைமையில், மாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலையுடன் மக்கள் தவெக வேட்பாளருக்கு ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது. கார்த்திகேயன் பிரச்சாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் மக்கள் திரள் அதிகரித்து வருவது, தேர்தல் களத்தில் புதிய மாற்றத்தின் சாத்தியத்தை வெளிப்படுத்துகிறது.
மொத்தத்தில், மதுரை கிழக்குத் தொகுதியில் உருவாகியுள்ள இந்த உற்சாகமான சூழல், வரவிருக்கும் தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கும் என்பதில் அரசியல் வட்டாரங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஆற்காடு தொகுதி வேட்பாளர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் வாக்கு சேகரிப்பு
வேலூர், ஏப்.18-
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், கணியம்பாடி ஒன்றியம் சலமநத்தம், மோதகல் கம்மவான்பேட்டை, கம்மசமுத்திரம், மோட்டு பாளையம், வெல்லம் கீழ்பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். ஜி.வனிதா குணசேகரன் கம்மசமுத்திரம் ஒன்றிய கவுன்சிலர், ஜி.கே.கமல் கணியம்பாடி ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆகியோர் திமுக வேட்பாளர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். இதில் சிவக்குமார் திமுக கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️ #செய்திகள் #தற்போது செய்தி
வாக்குபதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் விவரங்கள் பொருத்தும் பணி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி ஏப்.17-
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குபதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வரும் இப் பணிகளின் போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களில் (EvM) வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது
மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. பெல் (BEL) நிறுவன பொறியாளர்கள் மூலம் VVPAT இயந்திரங்களில் குறியீடு ஏற்றுதல் மற்றும் Control unit (CU) வில் வேட்பாளர் தரவுகளை பதிவேற்றும் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் ஒதுக்கபடும் இயந்திரங்களின் எண்கள் (CU BU VVPAT numbers) இறுதி செய்யப்பட்டு தேர்தல் ஆணைய விதிமுறைகள்படி சீலிடப்படுகின்றன ஏதேனும் இயந்திரத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவை உடனடியாக மாற்றப்பட்டு தயார்நிலையில் வைக்கப்படும்.
வாக்காளர்களின் வசதிக்காக இந்த முறை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டார். மின்சாரம், குடிநீர், கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வாக்குசாவடிக்குள் கைபேசிகள் அனுமதி இல்லாததால் இந்த முறை புதிய வசதியான டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வாக்காளர்கள் தங்கள் கைப்பேசிகளை வெளியே ஒப்படைத்துவிட்டு வாக்களித்த பின் பெற்றுக் கொள்ளலாம்.
பாகம் எண் மற்றும் வரிசை எண் தெரியாதவர்களுக்கு உதவ வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் "Booth Facilitation Desk" அமைக்கப் பட்டுள்ளது .தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய ரிசர்வ் போலிஸ் படை (CRPF) மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் தலைமையில் பாதுகாப்பு திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
*வெற்றிப் பாதையில் மதுரை கிழக்குத் தொகுதி தவெக வேட்பாளர்* ,
*மாற்றத்தின் முகமாக கார்த்திகேயன்*
*மக்கள் மனதில் பதிந்த நம்பிக்கை மாற்றத்தை நோக்கும் மதுரை கிழக்கு*
*தொகுதி முழுவதும் உற்சாக வரவேற்பு*
மதுரை கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கார்த்திகேயன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தொகுதி முழுவதும் தினந்தோறும் மக்கள் சந்திப்புகள், வீடு தோறும் வாக்கு சேகரிப்பு, தெரு கூட்டங்கள் என பரபரப்பான தேர்தல் பணிகளில் அவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகேயன் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதோடு, மாற்றத்திற்கான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகின்றனர்.
இந்த பிரச்சாரத்தில் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்திட்டங்களுடன் சென்று மக்களிடம் நேரடியாக கருத்துக்களை கேட்டு, அவர்களின் பிரச்சினைகளை பதிவு செய்து வருகிறார் வேட்பாளர்.
இதற்கிடையில், தொகுதி மக்களிடம் நீண்டகாலமாக நிலவி வரும் குறைகள் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிகள் தொகுதி வளர்ச்சிக்காக போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்து தரப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால், பொது சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த முறை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மனநிலையுடன் பொதுமக்கள் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கார்த்திகேயன் செல்லும் பகுதிகளில் மக்கள் திரள் அதிகரித்து, அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்படுவது தேர்தல் களத்தில் புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது.
மொத்தத்தில், மதுரை கிழக்குத் தொகுதியில் தேர்தல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், மக்கள் ஆதரவு மற்றும் தொண்டர்களின் ஒருங்கிணைந்த பணிகள் வேட்பாளர் கார்த்திகேயனின் பிரச்சாரத்திற்கு வலுசேர்த்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பீடு செய்து வருகின்றன.
#செய்திகள் #தற்போது செய்தி
*வாடிபட்டி தனிச்சியம் கிழக்குத்தெருவில் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது*
மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே உள்ள தாழுக தனிச்சியம் கிழக்குத்தெருவில் நேற்று கோவில் திருவிழா சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. விழாவையொட்டி காலை முதலே பக்தர்கள் திரளாகக் கூடிவந்து சாமி தரிசனம் செய்து கொண்டனர்.
திருவிழா நிகழ்வுகளை கோவில் பூசாரி முத்துமுருகன் சிறப்பாக நடத்தினர்.
விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் முணியான்டி மற்றும் சண்முகம் ஒருங்கிணைத்து செய்திருந்தனர். ஊர்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உற்சாகமாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிவசக்தி கலைக்குழுவினரின் பக்தி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகள் பக்தர்களை உற்சாகப்படுத்தி, திருவிழாவுக்கு கூடுதல் சிறப்பை ஏற்படுத்தின.
மொத்தத்தில், இந்த திருவிழா ஊர்மக்களின் ஒற்றுமையையும் பக்தி உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
காட்பாடி தொகுதி- தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளர் வி.ராமு, கடும் வெயிலிலும் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேண்பாக்கம், முள்ளிபாளையம், கஸ்பா பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் போட்டியிடும் காட்பாடி தொகுதி வேட்பாளர் வி.ராமு, கடும் வெயிலிலும், இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரி தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீதி வீதியாக, ஒரு வீடு விடாமல் சென்று பொதுமக்கள், இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களை நேரில் சந்தித்து கனிவுடன் உரையாடி நோட்டீஸ் வழங்கி இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு ஆதரவு கேட்டுக் கொண்டார். இவருக்கு பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மலர் தூவி, மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, திருஷ்டி ஆலங்கள் எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேலும், “இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்போம்” என பொதுமக்கள் ஆங்காங்கே வாக்குறுதி அளித்து வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமுவுக்கு உற்சாகம் அளித்து வருகின்றனர். இதில் பகுதி செயலாளர் நாராயணன், வட்டச் செயலாளர் ராணி மேகநாதன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பில், கடந்த திமுக ஆட்சியின் அவல நிலைகள் மற்றும் தற்போதைய திமுக ஆட்சியின் பொய்யான வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய ஆதரவு தொந்தரவு கோரி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
பண்டாரவிளை - ஏரலில்
ஸ்ரீவைகுண்டம் காங். தொகுதி வேட்பாளர் ஊர்வசி எஸ் அமிர்தராஜை ஆதிரித்து கனிமொழி எம்.பி.தேர்தல் பரப்புரை
தூத்துக்குடி ஏப்17
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்க்கு கை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என பண்டாரவிளை மற்றும் ஏரலில் கனிமொழி எம்.பி . தேர்தல் பரப்புரையாற்றினார். ஏரல், சாத்தான்குளம் பகுதியில் இளைஞர் மற்றும் பெண்களுக்கு தனது சொந்த செலவில் இலவசமாக ஊர்வசி அகடமி நடத்தி வருகிறார். இதில் பயின்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு துறையில் பணிபுரிந்து வருகின்றனர். விரைவில் சாயர்புரத்திலும் இலவச அகடமி தொடங்க உள்ளார் எனவும் தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். எனவே வாக்காள பெருமக்களே நீங்கள் கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.
முதலமைச்சர் தேர்தல் அறிக்கை படி மகளிர் உதவிக்தொகை ரூ 2000/- உயர்த்தி வழங்கப்படும். விடுபட்டவர்களுக்குமகளிர் உரிமை தொகை வழங்கப்படும். தேர்தல் அறிக்கை படி பெண்களுக்கு "சூப்பர்ஸ்டார்" ரூ.8000/- மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். கூப்பனை கொடுத்து எந்த பொருட்களையும் வாங்கி கொள்ளலாம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிவாரணநிதி ஒன்றும் இதுவரை தரவில்லை மகளிர் கான இடஒதுக்கீட்டை வரவேற்கிறோம். ஆனால் இருக்கக் கூடிய தொகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் குறைக்க கூடாது. மாநில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.100 நாட்கள் வேலை முடக்கப்பட்டுள்ளன சம்பளம் கிடைப்பதில்லை. 42% பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டை குழந்தைகளின் எதிர்காலம் மொழிகளை பாதுகாக்க திராவிட விடியல் ஆட்சி மீண்டும் மலர்ந்திட வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்க்கு "கை" சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என பேசினார்.
நிகழ்வில் மாவட்ட திமுக துணை செயலாளர்கள் ஜெப தங்கம் பிரேமா,வக்கில் ஆறுமுகபெருமாள், ஸ்ரீவை ஒன்றிய கழக செயலாளர்கள் பி.ஜி.ரவி, கோட்டாளம், மகளிரணி அமைப்பாளர் சாரதா பொன் இசக்கி, பேரூர் கழக செயலாளர்கள் ராயப்பன், கண்ணன், நவநீத முத்துக்குமார், சாயர்புரம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் த.அறவாழி, மாவட்ட அயலக துணை அமைப்பாளர் ராஜேஷ் ரவிச்சந்தர், பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ஆறுமுகம், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் துணைத்தலைவர் மணிவண்ணன், மாவட்ட காங்.துணை தலைவர் சங்கர், காங்கிரஸ் பொருளாளர் எடிசன், வட்டார தலைவர்கள் ஜெயராஜ், ஜெயசீலன்துரை, தாசன், மாவட்ட பொது செயலாளர் சிவகளை பிச்சையா, சாயர்புரம் நகர காங்.தலைவர் இசை சங்கர் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
நான்குநேரி தொகுதி சுயேட்சை வேட்பாளர் ஏழையின் ஒருவன் எம்.குமார் பொதுமக்களிடம் முதல் வாக்கு சேகரிப்பு பணியை தொடங்கினார்
நெல்லை .ஏப்.16
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் ஏழையின் ஒருவன் டாக்டர் எம்.குமார் சுயேட்சை வேட்பாளராக மிக்சி சின்னத்திற்கு போட்டியிடுகிறார் அவர் திருநெல்வேலி மாவட்டம் மறுகால் தலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பூலுடையார் சாஸ்தா வை வணங்கி தனது முதல் பிரச்சாரத்தை துவங்கினார் அதன் ஒரு பகுதியாக நேற்று மறுகால் தலை. சீவலப்பேரி.அவனா
பேரி.தோனிதுறை.மருதூர்.திருத்து.கீழபாட்டம்.புதுபனை.நடுவகுறிச்சி.வாகைக்குளம்.மேலபாட்டம்.திருமலை கொழுந்துபுரம்.
மணபடை.வீடு.கீழநத்தம்.(மேலூர்) கீழநத்தம்( வடக்கூர்) கீழநத்தம்.( தெற்கூர்)கிருபாநகர். கே.டி.சி.நகர்.அரிகுளம்.நொச்சிகுளம்.உத்தமபாண்டியகுளம்.வேலவன்குளம் மேல் புத்தநேரி.மேட்டுகுடி.
கிருஷ்ணாபுரம்.கொடிகுளம்.சிவத்திபட்டி.முத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது கிராமங்களில் சாலை வசதி.சுகாதாரம்.குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்துவேன் அனைத்து முக்கிய பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
முன்னதாகஅப்பகுதிக்கு வந்த அவருக்கு பொதுமக்கள் மேளதாளம் முழங்க ஆர்த்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர் இந்நிகழ்ச்சியில்
சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்













