ShareChat
click to see wallet page
search
அவரவர் தகுதி, தராதரத்திற்கு ஏற்பத் தான் பேச்சும் வெளிப்படும். பதவிகள் இவர் போன்றோரை பாதுகாக்க உதவிடலாம். பக்குவமும், பண்பாடான வாழ்வியலும் சிறு வயதில் இருந்தே படிப்படியாக வர வேண்டும். நெல்லை மாவட்ட எல்லையில் உள்ள பனங்குடி தண்டையார்குளம் இவரது சாராயப் பரம்பரைக்கு சான்று பகரும். வள்ளியூரில் ஓயின் ஷாப் நடத்தி வந்த காலகட்டத்தில் இருந்தே இவரது பாலியல் திருவிளையாடல்கள் பிரசித்தமானது. அடுத்து அதிமுகவில் சேர்ந்து சாதியப் பின்னணியில் அடித்த சான்சில் பல முக்கிய பதவிகள் கிடைத்தன. போக்குவரத்து அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த பேருந்து நிறுத்த ஹோட்டல்களுக்காக பல இடங்களில் நில ஆக்கிரமிப்பு…! அன்று தொடங்கி இன்று வரை நெல்லையில் நில அபகரிப்பில் அசகாய சூரன்…! எத்தனையெத்தனையோ வழக்குகள்! கட்சியில் உள்ள பெண்களே இவரைக் கண்டால், 'எட்டி நின்று பேசினால் தப்பிக்க முடியும்' என்று ஓடி ஒளிவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஒளிவுமறைவற்ற பாலியல் வக்கிர வெளிப்பாடுள்ள மனிதரான இவர் மீது தனிப்பட்ட வாழ்க்கையில் கணக்கு வழக்கற்ற பாலியல் குற்றச்சாட்டுகள் உண்டு. நடிகர் விஜய் குறிப்பிட்ட நடிகை வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும் என்றார், ஆனால், இவரை வெளியே வரச் சொல்வதற்கான வீடுகளின் லிஸ்ட் ரொம்ப பெரிசு என்கிறார்கள், அந்த கட்சியினரே….! இதை மேற்கொண்டு எழுதவே கூசுகிறது. ஆகவே, தவிர்க்கிறேன். இப்படி தன் முதுகு முழுக்க அழுக்கை சுமந்து கொண்டு, வாய் நீளும் என்றால், ''நான் ஆம்பிளை, அதுவும் தேசியக் கட்சியின் தலைவர், யார் என்னைச் சொல்ல முடியும்? என்ற தைரியம் தானே’’. அதென்ன..? ''கரூரில் 41 பேர் இறந்தார்கள்..! இப்போது கூட சேலத்தில் ஒருவர் இறந்துள்ளார், இப்படி விஜய்யின் அனைத்துக் கூட்டங்களிலும் யாராவது ஒருவர் உயிரிழப்பது, அவர்களுக்கு நல்ல சகுனம் தானே…?’’ என்கிறீர்களே நயினார்? மனித உயிர்களை இவ்வளவு மலினமாகப் பார்க்க முடிவது எப்படி? இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலையோ..? சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat