மகாபாரத பாண்டவர்களுக்கும் அரியலூர் மாவட்டத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு
பாண்டவர்கள் வனவாசத்தின் போது தாகத்தால் தவித்தனர் அர்ஜுனன் விநாயகரை வேண்ட அவர் அர்ஜுனனின் கண்டீப வில்லை வாங்கி நிலத்தில் அழுத்தி ஒரு ஏரியை உண்டாக்கினார் இன்றும் இந்த திருக்குளம் வில் வடிவில் இருப்பது ஆச்சரியமே விநாயக உருவாக்கிய இந்த காண்டீப தீர்த்தம் பல நூற்றாண்டுகளை கடந்த போதும் பற்றியதே கிடையாது
வணிகர் ஒருவரின் பயிர் மூட்டைகள் கல்லாக மாறிய போது ஈசன் அவற்றை மீண்டும் பயிர்களாக மாற்றி அருளினால் அதனால் இங்கே பயற்றீஸ்வரர் என்ற பெயர்
இன்றும் இங்கே பயிறு சுண்டல்தான் நைய்வேத்தியமாகும் பிரதோசகாலத்தில் இங்கே நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட திருமணங்கள் கைகூடும்
பதினெட்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் கோயில்கள் மீது படையெடுப்பு நடந்தபோது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் சிலைகள் இங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டன அதனால்தான் உடையார் பாலத்திற்கு சென்றால் பயம் இல்லை என்ற வாக்கு ஏற்பட்டது #ஆன்மீகம்


