ShareChat
click to see wallet page
search
*🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹* *ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.* *என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுற விடாதேயும்; என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்.* *உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை; காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்.* *ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.* *உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்;* (திருப்பாடல்கள் 25:1-5) *✝️ஜெபிப்போமாக :🛐* *விண்ணுலகில் வாழும் எங்கள் அன்பு தந்தையே! உமது சிலுவைப் பாடுகளை தியானித்து கொண்டிருக்கும் இந்த தவநாட்களில், இதோ இந்த காலை வேளையில் உம்மோடு பேசவும், உமது குரலை கேட்கவும் வந்துள்ளேன். என்னை ஆசிர்வதித்து, என் குற்றங்களை மன்னித்து என்னோடு பேச வாரும்.* *ஆண்டவரே! இவ்வுலகப் பார்வையில் நான் ஏழையாக (பாவியாக) இருந்தாலும் உமது மன்னிப்பால், நான் அனைத்திலும் விடுதலை பெற்று, சுதந்திர மனிதனாகவும், இவ்வுலகில் மிகப்பெரும் அருட்செல்வம் பெற்றவனாகவும் வாழ்வேன். ஆண்டவரே! உமது இரக்கமும், உமது மன்னிப்பும் மட்டுமே எனக்கு போதும். இவ்வுலக பார்வையில் ஏழையாக இருப்பவர்கள், விண்ணுலகில் செல்வராக இருப்பார்கள் என்பது எத்துணை உறுதியானது.* *ஆண்டவரே, உம்முன் நாங்கள் நிற்க கூட தகுதியற்றவர்களாக இருந்தும், நீர் எங்களிடம் வந்து, எங்களோடு வாழ்ந்ததன் மூலம், இப்பொழுது நாங்கள் உம்மிடம் வருவதற்கும், உம் திருமுன் நிற்பதற்கும் தகுதி உள்ளவனாக மாற்றப்பட்டுள்ளோம். உமது இரக்கத்திற்கும், அன்பிற்கும் நாங்கள் தகுதியற்றவர்களாய் இருந்தும், எங்களுக்கு உமது பிள்ளைகள் ஆகும் தகுதியை கொடுத்தீர். நன்றி அப்பா.* *ஆண்டவரே! இனிவரும் நாட்களில் நாங்கள், இவ்வுலக காரியங்களில் அதிக ஈடுபாடு செலுத்துவதை நிறுத்திவிட்டு, விண்ணுலக காரியங்களில் அதிக ஈடுபாடு செலுத்தவும், உம்மிடம் வந்து சேர தேவையான தகுதியை, மேலும் வளர்த்துக் கொள்ளவும் எங்களுக்கு உதவி புரியும்.* *ஆமென்.* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - உற் கூபாரத்தில் அமைதியைக் காண்பீர் யோபு 624 உற் கூபாரத்தில் அமைதியைக் காண்பீர் யோபு 624 - ShareChat