இச்சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரவுடியின் மனைவிக்கு கொரியர்..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி (வயது 31). கும்பகோணத்தில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
புகழேந்தி கொரியர் டெலிவரி செய்வதற்காக கும்பகோணம் மருதாநல்லூர் பகுதிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்போது கரிக்குளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான சிபி சக்கரவர்த்தியின் (வயது 33) மனைவியிடம், புகழேந்தி கொரியர் டெலிவரி செய்துள்ளார்.
'நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க.. ஐ லவ் யூ'
கொரியர் டெலிவரி செய்ய சென்ற இடத்தில் ரவுடி சிபி சக்கரவர்த்தியின் மனைவியின் அழகில் புகழேந்தி மயங்கினார். இதனால் அவரது மொபைல் எண்ணை எடுத்து வைத்துக்கொண்டு, புகழேந்தி அவருக்கு வாட்ஸ் அப்பில், 'நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க.. ஐ லவ் யூ' என்று அடிக்கடி காதல் மெசேஜ்களை அனுப்பி வந்து இருக்கிறார். இதுகுறித்து அந்தப் பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டவுடன் ரவுடி சிபி சக்கரவர்த்தி ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். 'என் மனைவிக்கே காதல் வலை வீசுகிறாயா' என கோபத்தில் சிபி சக்கரவர்த்தி இருந்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 8-ம் தேதி புகழேந்தி மீண்டும் கொரியர் டெலிவரி செய்வதற்காக மருதாநல்லூர் பகுதிக்கு வந்துள்ளார்.
இதை அறிந்த ரவுடி சிபி சக்கரவர்த்தி தனது நண்பர்களான கும்பகோணத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 26), கிருஷ்ணா (வயது 33), திருவாரூர் மாவட்டம் அனையமங்கலத்தைச் சேர்ந்த குபேரன் (வயது 27), மருதாநல்லூரைச் சேர்ந்த ஹரிஹரசுதன் (வயது 26) ஆகியோரை வரவழைத்து இருக்கிறார்.
புகழேந்தி கொரியர் நிறுவனத்தின் வேனை ஓட்டிச் செல்வதை பார்த்த சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட 5 பேரும் அவரை பின்தொடர்ந்து காரில் சென்றனர். சாக்கோட்டை அருகே உள்ள தீப்பாய்ந்த அம்மன் கோயில் பகுதியில் வழிமறித்து வேனில் இருந்த புகழேந்தி இழுத்து காருக்குள் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து அவரை கடத்திச் சென்றனர்.
மரத்தில் கட்டிவைத்து தாக்குதல்..
மருதாநல்லூர் பகுதியில் உள்ள சிபி சக்கரவர்த்தியின் பழைய வீட்டிற்கு புகழேந்தியை கொண்டு சென்று அங்குள்ள தென்னை மரத்தில் கட்டி வைத்து 5 பெரும் சரமாரியாக அடித்து உள்ளனர். இது குறித்து வெளியே சொல்ல கூடாது என மிரட்டி, பின்னர் அவரை விடுவித்துள்ளனர்.
சிபி சக்கரவர்த்தி கும்பலால் தாக்கப்பட்டதில் தலை மற்றும் உடலின் உள் உறுப்புகளில் பலத்த காயம் அடைந்த புகழேந்தி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வேனை ஓட்டிச் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து காயம் அடைந்ததாக அவர் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.
உடல்நிலை மோசமடைந்தது
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய புகழேந்தியின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. ரத்த வாந்தி எடுத்ததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் நடந்தது என்ன? என விசாரித்த போது டெலிவரி செய்ய சென்ற இடத்தில் 5 பேர் தன்னை தாக்கியதாக கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர், இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வந்த நிலையில் ரவுடி சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். #📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢 #தஞ்சாவூர் செய்திகள் #💏💏காதல் கலாட்டா💏💏 #😘😘😘காதல் செய்யும் கலாட்டா💕💕


