#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் தவிர்க்க முடியாத நிகழ்வுகள்..
நம்மால் தாங்க முடியாத சோகங்கள்..
விளக்க முடியாத ரகசியங்கள்..
கொட்டிவிடத் துடிக்கும் உண்மைகள்..
மறைக்கப்பட்ட கடந்த காலங்கள்..
நம்மால் அனுபவிக்க முடியாமல் போன சின்னச் சின்ன சந்தோஷங்கள்..
திட்டித்.. திட்டி.. வாழ வைக்கும் நட்புக்கள்..
சிரித்தபடி கழுத்தறுத்த துரோகிகள்.
தீராத வியாதிகள்... மீளாத கடன்கள்..
அவ்வப்போது தலை காட்டும் மகிழ்ச்சி..
எப்போதும் நம்மை விட்டு நீங்காமல் உடனிருக்கும் தன்னம்பிக்கை..
இவை எல்லாம் கலந்த உன்னதக் கலவையே மனித வாழ்க்கை..
தொலைந்த அத்தனையிலும் துரோகத்தின் சாயல்..!கிடைத்த அத்தனையிலும் நிம்மதியின் சாயல்..!!
மற்றவர்களிடம் ஆறுதல் தேடுவதை நிறுத்திக் கொண்டால்.. பெரும்பாலும் அடிமையாவதை நிறுத்திக் கொள்ளலாம்..!!
உங்களுக்கான இடத்தை யாரும் தட்டிப் பறிப்பதில்லை..! நீங்கள் தான் உங்கள் இடத்தைத் தவற விடுகிறீர்கள்..!!
வாழ்வில் பசியை அனுபவித்தவருக்கு பணிவைச் சொல்லித் தரத் தேவையிருக்காது...!!
கற்றுக் கொள்வதாக முடிவெடுத்து விட்டால்.. முதலில் கவலைகளை மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்..!!
பேசியே கொல்வதும், பேசாமல் கொல்வதும்.. மனதுக்குப் பிடித்தவர்களால் மட்டுமே முடியும்..!!
வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் சிறந்த பரிசு.. பிறர் நம் மீது வைக்கும் நம்பிக்கை தான்..
கவலைகளைக் கண்ணீரில் கரைப்பதை விட.. புன்னகையில் கலைத்து விடுவோம்..
எதுவுமே செய்யவில்லையென்றால் முட்டாள் என்பார்கள்.. ஏதாவது வித்தியாசமாக செய்தால் இது தேறாது என்பார்கள்..!அவர்களை விட்டுத் தள்ளுங்கள்..அது அவர்களுக்கு அவமானம்..! நீங்கள் செய்ய நினைத்ததை செய்து கொண்டே இருங்கள்..!அது உங்களுக்கு வெகுமானம்..!!
வாழ்க வளமுடன்.😊


