||श्री:||ஸ்ரீ (969) #பெருமாள்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
அறிவற்ற மக்களே ! எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் தானாகவே அடியேனின் உள்ளத்தில் புகுந்திருக்கப் பெற்ற என் பணிவான நெஞ்சினைவிட வேறோர் தெய்வத்தை அடைவதை ஒரு பேறாகக் கருதமாட்டேன்.
நீறுபூசிய சிவபெருமானாலும் கண்டு வணங்கிச் சேவித்துக் கொள்ள இயலாத எம்பெருமான் திருமாலின் அகன்ற திருவடிகளை மலர்களால் அர்ச்சித்துச் சேவிக்கும்படியானதோர் பெரும்பேற்றினை அடியேன் பெற்றிருக்கின்றேனே !
திருமழிசைப்பிரான் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


